ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 22 ஆம் நாள் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தலையங்கம் குறித்த தமிழகத் தமிழர்களின் கருத்துகளின் தொகுப்பு: "இலங்கைத் தமிழர் பிரச்சினை" - தலையங்கம் (22-08-06) படித்தேன். மிக நேர்மையாகவும், நியாயமாகவும், நடைமுறைக்கு உகந்த முறையிலும் எழுதப் பெற்றுள்ள இந்தத் தலையங்கத்தின் கருத்துகள், இன்றைய இலங்கை அரசின் இனவெறி மண்டையில் ஏறாது. ஏனெனில், போர் நிறுத்தத்தை விரும்புவதுபோல் அது நாடகமாடுகிறது. சர்வதேச சமுதாயத்தைக் குழப்பவும், ஏமாற்றவும் முயல்கிறது. - தி.க.சி., நெல்லை. இந்திய அரசு சாமர்த்தியமாகச் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை அனுப்பிவிட்டால், சமரச உடன்பாடு ஏற்பட்டு …
-
- 0 replies
- 955 views
-
-
பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது: கவிஞர் வைரமுத்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் தனது உரையில், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்திய அரசாங்கம் அனுப்பி வைத்த உணவுப் பொருட்களை சிங்கள அரசாங்கம் தடுத்துள்ளது என்று கேள்விப்பட்டோம். தமிழக முதல்வர் …
-
- 6 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள்…
-
- 4 replies
- 2k views
-
-
முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் 3பொதுமக்கள் படுகாயம். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 29 யுரபரளவ 2006 23:01 வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்த சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான கிபீர் விமானமொன்று இன்று முற்பகல் முல்லைத்தீவுப் பகுதிகளில் குண்வீச்சுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளது இதில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு கடற்பரப்பினுடாக பறந்து வந்த விமானங்கள் இவ்வாறு குண்டுவிச்சுக்களை மேற்கொண்டு விட்டு சென்றுள்ளது. sankathi.com
-
- 0 replies
- 917 views
-
-
பலாலி படைத்தளம் அருகே இரவு 11:30 இருந்து 12:00 மணி வரை மோதல் சம்பவம் இடம் பெற்றதாக தமிழ்நெற் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்கதலை தொடர்ந்து படையினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19406
-
- 4 replies
- 3.2k views
-
-
தமிழகம் செல்லும் தமிழீழ அகதிகள் பற்றிய CNN விபரணம் (அழுத்துங்கள்)
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பூரை நோக்கி படையினர் தாக்குதல். சம்ப+ரிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகைளை நோக்கி இன்று காலை முதல் ஸ்ரீலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.last update 10:01 பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறி எறிகணைகள் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நோக்கி ஏவப்படுவதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குலை மேற் கொண்டிருப்பதாக தெரியவருகிறது http://www.athirvu.com/index.php?option=co...id=409&Itemid=1
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்குமாறு மலேசியத் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஐனநாயக செயல் கட்சி சார்பில் மலேசியாவில் முல்லைப் படுகொலையில் பலியெடுக்கப்பட்ட சிறுமிகளுக்கான கண்ணீர் அகவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. மலேசிய எதிர்க்கட்சி தலைவரின் மகன் லிம் குவான் எங் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. அக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: - சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிப்பது. - சிறிலங்காவின…
-
- 1 reply
- 926 views
-
-
ஒட்டுப்படைக்குழுக்களைச்சேர
-
- 6 replies
- 2.8k views
-
-
புலிகளால் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் இன்று விடுதலை தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட உள்ளார் என்று தமிழ்நெட் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தலைவராக உள்ள உல்ப் ஹென்றிக்சன் வேண்டுகோளுக்கமைய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள்தாக தெரிகிறது. மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அத்துமீறி நுழைந்ததாக மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தமிழீழ நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இருவேறு சந்தர்ப்பங்களில் இர…
-
- 10 replies
- 2.3k views
-
-
மாவிலாறு இடம்: திருகோணமலை நன்றி: ஈழவிசன் சிறப்புச் செய்திகள் இந்தியா நிராகரித்ததால் பாகிஸ்தானிடம் 2 கப்பல் ஆயுதங்களை வாங்கியது சிறிலங்கா சிறிலங்காவுக்கு கனரக இராணுவ உதவிகளை செய்ய இந்தியா நிராகரித்தமையால் பாகிஸ்தானிடமிருந்து 2 கப்பல் ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது. [விரிவு] முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது கொடூர விமானத் தாக்குதல்: 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை- 129 பேர் படுகாயம் முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர். [விரிவு] விமானக் குண்டுவீச்சின் எதிர்விளைவை அரசு ச…
-
- 0 replies
- 794 views
-
-
மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடி மோதல்கள் படையினரின் தாக்குதலிற்கு பதிலடி. மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடிமோதல்கள் நடைபெற்றுள்ளன.நேற்று மாலை ஆணைமுனையில் இருந்து பனிச்சம்கேணியை நோக்கி சென்ற இருபடகுகளை நோக்கி மாங்கேணி சிறீலங்கா படைமுகாமிலிருந்து எறிகணைத்தாக்குதலும் கனரக துப்பாக்கி தாக்குதலும் நடைபெற்று உள்ளது. இதற்கு பதிலடியாக படகில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மேலதிக 6 படகுகள் மாங்கேணி படைமுகாமை நோக்கி பாரிய தாக்குதலை தொடுத்தது. இதனை அடுத்து படகுகள் அணைத்தும் பாதுகாப்பாக பனிச்சம்கேணியை சென்றடைந்தது. படகில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் படையினர் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 1.8k views
-
-
பருத்தித்துறை இறங்குதுறைப் பகுதியில் கடற்கரையோரமாக புதிய பாதையொன்றினை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். இதுவரை பருத்தித்துறை 1 ஆம் குறுக்குத்தெருவூடாக பாரவூர்திகள் மற்றும் இறங்குதுறையில் பணியாற்றும் பணியாளர்கள் சென்று வந்தனர். எனினும், நேற்று முதல் சுப்பர்மடம் வீதியூடாகவே இறங்குதுறைப் பணியாளர்கள் மற்றும் பாரவூர்திகள் சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் தரித்து நிற்கும் கப்பலிலிருந்து பொருட்களை இறக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என்றும் இதுவரை சுமார் 1000 மெற்றிக்தொன் பொருட்கள் இறக்கப்பட்டுள்ளன என்றும்- ஏனைய பொருட்கள் இன்னும் ஓரிரு தினங்களில் இறக்கப்பட்டு விடும் என்றும் துறைமுகத் தகவல்கள் தெரிவித்தன. …
-
- 0 replies
- 890 views
-
-
பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல- இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்கள் வாங்கியுள்ளோம்: மகிந்த ராஜபக்ச பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்ல இந்தியாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். "இந்தியா டுடே" வார இதழுக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். விடுதலைப் புலிகளுடன் போரிட வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். நிர்ப்பந்தங்களுக்கு நாங்கள் பணிந்து விடமாட்டோம். இலங்கை இன பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த …
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமராட்சி கிழக்கில் இராணுவ சுற்றிவளைப்பில் 300 குடும்பங்கள் யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பால் 300 குடும்பங்கள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மனித கேடயங்களாக சிக்கியுள்ளனர். வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காடு கிராமத்தில் புனித அந்தோனியார் தேவாலயப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நாகர்கோவில் சிறிலங்கா இராணுவ தளத்தைப் பாதுகாப்பதற்காக தாங்கள் மனித கேடயங்களாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நாகர்கோவில் மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிக்கு இடையே மணற்காடு கிராமம் உள்ளது. தங்களது கிராமத்தை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 748 views
-
-
தற்கொலை முடிவில் தமிழ் விவசாயிகள்": ஒரு இடப்பெயர்வு கிராமத்தின் அவலம் இலங்கையின் வடக்கு-கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்களின் அவலத்தை விவரிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி கிராம மக்களின் அவலம் அமைந்துள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலினால் நெற்செய்கைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் இப்போது பட்டினிக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு நகரிலிருந்து 24 தென்கிழக்குப் பகுதியில் வெல்லாவெளி கிராமம் அமைந்துள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வெல்லாவெளியிலிருந்து தென்கிழக்கில் மண்டூர் கிராமம் 3 கிலோ மீற்றர் தொலைவ…
-
- 0 replies
- 840 views
-
-
கனேடிய இஸ்ரேலியர்கள்- சீக்கியர்கள்- ஐரிஸ் நாட்டவர் செய்ததையேதான் தமிழர்களும் செய்கிறார்கள்: "ரொறன்ரோ சண்": ஏடு கனடாவில் உள்ள இஸ்ரேலியர்கள்-சீக்கியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டவர்கள் தங்களது நாடுகளின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பைத்தான் கனேடியத் தமிழர்களும் செய்கிறார்கள் என்று கனடாவிலிருந்து வெளியாகும் "ரொறன்ரோ சண்" என்ற ஏடு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஏட்டில் எறிக் மார்க்கோலிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஆறு கனேடியத் தமிழர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமையானது எனக்கு சேர் பீற்றர் உஸ்டினோவின் அறிவார்ந்த் வரிகளை நினைவூட்டியது. அந்த வரிகள்: "ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்க…
-
- 0 replies
- 705 views
-
-
மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்றை துண்டித்திருக்கிறது சிறிலங்கா அரசு: சி. எழிலன் "மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் முற்றாக திருகோணமலையிலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன" என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து சி.எழிலன் கூறியதாவது: "மூதூர் மக்களின் இடம்பெயர்வு அவலங்கள், நிவாரணம் அளிப்பு மற்றும் மீள்குடியமர்வு என்று செய்யப்படும் பரப்புரைகள் மூதூர் கிழக்குக்கு ஆனவை அல்ல. அவை மூதூர் நகர் சார்ந்த பகுதிகளுக்கானவை மட்டுமே. "திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு விட்ட நிலைமையே தற்போது உள்ளது. இப்பகு…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கள நாட்டில் எமது விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்: எஸ்.ஜெயானந்தமூர்த்தி "சிங்கள நாட்டில் எமது தமிழீழ விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (21.08.06) சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்று எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது: "56 ஆண்டுகாலமாக தமிழர்களுடன் சிங்களவர்கள் பேச்சு நடத்தலாம்- தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடத்தி ஏமாற்றலாம்- பேச்சுக்கள் நடாத்தி காலத்தை கடத்தி தமிழ் …
-
- 0 replies
- 1.3k views
-
-
திருகோணமலை மாவட்டம், மூது}ரில் இன்று காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மூது}ர் கிழக்கிற்கான நுழைவாயில் பகுதியான செல்வநகர் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை திருமலையின் புறநகர் பகுதியான விஜிதபுரவில் உள்ள ஏகாம்பரம் வீதியில் சேதமடைந்த நிலையில் இராணுவ ஊர்தி ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை தகவல் : சங்கதி
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் உத்திகளும் விடைதேடும் சிறிலங்கா-சர்வதேச புலனாய்வு அமைப்புக்களும்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 27 ஓகஸ்ட் 2006, 08:11 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். "சண்டே ரைம்ஸ்" வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை …
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பு புறநகர் பமுனுகமவில் வெடிபொருட்கள் மீட்பு ; 17 பேர் கைது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்த பெருமளவிளான வெடிபொருட்கள் கிரனேட் குண்டுகள் , மறைத்து வைக்கப்பட்ட வீடு ஒன்றை இன்று நண்பகல் சிறிலங்கா பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர் . . கொழும்பு புறநகர் பகுதியான பமுனுகம என்ற இடத்தில் பெருமளவிளான பொலிஸார் சுற்றி வளைப்பு இன்று தேடுதல் நடத்தியுள்ளனர் தேடுதல் நடவெடிக்கையின் போது சந்தேகத்திற்க்கு இடமான வீடு ஒன்றினை சோதனையிட்ட பொழுது பொருமளவிளான ஆயுதங்கள் டிபொருட்கள் கைப்பற்றபட்டன என்றும் சந்தேகத்தின் பேரில் 17 பேர் வரை கைதுசெய்யப்பட்டு பொலிஸார் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளனர் . எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .. கைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலையில் குண்டுதாக்குதல் சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலை தொண்டு பகுதியில் புலிகளின் முகாம் என இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது இன்று பிற்பகல் முதல் தாக்குதல் நடத்தி வருவதாக பாதுகாப்பு ஊடக அமைச்சு தெரிவித்த்து .. இனங்காணப்பட்ட புலிகள் சிறிய முகாம்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து தான் மோட்டார் எறிகனை தாக்குதல் படையினர் மீது மேற்கொள்வதாகவும் பாதுகாப்பு ஊடக செய்தி தெரிவிக்கிறது.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக நீளும் குற்றச்சாட்டு ` இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி, அமைதிப் பேச் சுக்களை உடன் ஆரம்பியுங்கள் என்று அடிக்கடி வற்புறுத்தி வருகின்ற இணைத் தலைமை அமைப்புக்களில் ஐரோப் பிய ஒன்றியமும் பிரதானமானது. இலங்கையில் இன்று அமைதி கேள்விக் குறியாகி யுத் தம் நிதர்சனமாகும் சூழ்நிலையில் அந்நிலைமையை ஏற் படுத்தியதற்கான பொறுப்பு குற்றச்சாட்டு சம்பந்தப் பட்ட இரு தரப்புகளான விடுதலைப் புலிகள் மீதும், இலங்கை அரசு மீதும் இணைத் தலைமைகளால் சுமத்தப்பட்டு வருகையில் அதே குற்றச்சாட்டு இணைத் தலைமைகளில் இடம் பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக் கின்றது. http://www.uthayan.com/editor.html
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறீலங்கா சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை அடுத்து மைத்தானத்தில் நின்ற இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற படையினர்..அவர்களைப் புலிகள் என்று கூறுகின்றனர்..! மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் 5 இளைஞர்கள் அதிரடிப் படையிரால் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்ட பாலமீன்மடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் 5 தமிழ் இளைஞகள் நேற்று வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாலமீன்மடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் நின்ற போது இவர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா ஆனந்தராஜா வயது 28 மற்றும் மட்டக்கள்பபு புண்ணச்சோலையைச் சேர்ந்…
-
- 7 replies
- 4.5k views
-