Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளைமோர் தாக்குதல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் கைது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல் மேற்கொண்டவர்களின் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புளொட் உறுப்பினர்கள் என்றும் மட்டக்களப்பு பல்பொடி கம்பனி இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி முக்கியஸ்த்தர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இத்தாக்குலில் எவ்விதமா…

  2. தமிழர் புனர்வாழ்வுக் கழத்தின் களஞ்சியறையில் கருணா குழுவினர் திருட்டு. மட்டக்களப்பு பழைய வீதியில் அமைந்துள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலக காரியலய களஞ்சிய நிலையம் நேற்றிரவு 10.30 மணியளவில் கருணா அணியினரால் களவாடப்பட்டுள்ளது. இதில் தளபாடங்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்கான உலர் உணவுப்பொருள்கள் மருந்து பொருள்களையும் எடுத்து சென்று கோவிந்த வீதியில் அமைந்துள்ள கருணா குழுவின் அலுவலகத்தில் இறக்கியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பிட்டட அலுவலகம் இரு தடவைகள் கைகுண்டு தாக்குதலின் போது ஒரு காவலாளி கொல்லப்பட்டமையால் எவரும் இங்கு இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்து. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&…

    • 2 replies
    • 1.8k views
  3. கிளேமோர் தாக்குதலில் பயணிகள் பஸ் தப்பியது; கனகராயன்குளம் பகுதியில் சம்பவம் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கனகராயன்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை ஆழ ஊடுருவும் படையணியினர் பயணிகள் பஸ் ஒன்றின் மீது கிளேமோர் தாக்குதலை நடத்திய போதும் அந்த பஸ் மயிரிழையில் தப்பியுள்ளது. முகமாலையிலிருந்து புளியங்குளம் நோக்கி `ஏ 9' வீதியில் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ் மீதே காலை 8.30 மணியளவில் இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனகராயன் குளத்திற்கும் மன்னார் குளத்திற்குமிடையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குறித்த இடத்தை பஸ் தாண்டிய பின்பே கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பஸ் மயிரிழையில் தப்பியுள்ளது. இதனால் …

  4. இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி! கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online முழுப்பதிவிற்கும் http://bhaarathi.net/sundara/?p=273

    • 3 replies
    • 3k views
  5. 2 ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இராணுவத்தை மீட்க வந்தோர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு தாக்குதலை நடத்தியோர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியோரை மீட்க வந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலுப்பையடிச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இரவு போக்குவரத்தில் ஈடுபட்டோரை இலக்குவைத்து கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் ஈடுபட்டனர். அவர்களை விடுதலைப் புலிகள் துரத்திச்சென்ற போது வாவிக்கரை காட்டுக்குள் தப்பி நுழைந்துள்ளனர். அப்பகுதி விடுதலைப் புலிகளால் சுற்றி…

  6. யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து ஒரு கடிதம் மாசிலான் அன்புக்குரிய தென் தமிழீழ மக்களுக்கு! மீண்டும் மனிதப்புதைகுழி கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ளது. 1995இல் யாழ்ப்பாணத்தைச் சிங்களப் படையினர் முற்றாக கைப்பற்றியவுடன் ஒட்டுமொத்தத் தமிழினமும் வெளியேறிய வரலாறு மறக்க முடியாதது. அவ்வாறு வெளியேறிய மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாக அன்றைய சனாதிபதி சந்திரிக்கா கூறி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பும் படி அழைத்தார். 1996இல் சந்திக்காவை நம்பித் திரும்பிய மக்களில் பலநூற்றுக் கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டனர். அதன் பின்புதான் செம்மணிப் புதைகுழி அம்பலமாகியது. அதே போன்று யாழ்ப்பாணம் நகருக்குள்ளே இருக்கும் விளையாட்டரங்கிலும் மனிதப்பு…

  7. http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2023.pdf

  8. தேர்தல் மூலம் காய்நகர்த்த முயலும் ஜனாதிபதி மஹிந்தர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்தப் புறக் கணிப்புக் காரணமாக, தென்னிலங்கைத் தீவிரவாத பௌத்த, சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுபெற்ற மஹிந்த ராஜபக்ஷ, எதிர்பாராத வகையில் ஜனாதிபதியாகி விட்டார். நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்து விட்டாலும் கூட, தம்மை அரியணை ஏற்றப் பக்க பலமாக அமைந்த தென்னிலங்கை பௌத்த, சிங்களத் தீவிரவாத சக்திகளின் பிடி யிலிருந்து மீளமுடியாதவராக அச்சக்திகளின் கைப்பொம் மையாக சிக்கித் திண்டாடி வருகின்றார் அவர். நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தால் எதுவும் செய்ய வக்கற்றவராக அவரது ஆட்சி நிர்வாகம் நகருகின்றது. நாட்களைக் கடத்துகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.த…

  9. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சிறிலங்கா முடிவு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான அரசியல் மற்றும் இராணுவ அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றார் -புதினம்

  10. அழுத்தம் மூலம் தமிழர் தரப்பை அடிபணிய வைக்க முடிந்ததா? நோர்வே சந்திப்புக்களை முடித்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு திரும்பிய கையோடு பலரும் எதிர்பார்த்தபடி இலங்கைத் தீவில் வன்முறை மோசமாக வெடித்தி ருக்கின்றது. தீவிரமடைந்து வரும் வன்முறைகள், தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் மென்தீவிர யுத்தத்தை ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வைக்கப் போகின்றன என்பதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கள யதார்த்த நிலைகளை நிலைமைகளை கவனத்தில் எடுக் காமல் இவ்விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் கையாள்வதே நாடு இத்தகைய மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முக் கிய காரணமாகும். தமது இனத்தின் இருப்புக்காகவும், வாழ்வியல் உரிம…

  11. புலிச் சீருடையில் சிறிலங்கா இராணுவத்தினர்: கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு- ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 19:27 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் கிளைமோர்த் தாக்குதலை நடத்துவதற்குத் விடுதலைப் புலிகளின் சீருடையில் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவ அணியினர் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வவுனியா புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் பெரியதொரு தாக்குதலுக்காக சிறிலங்கா இராணுவ அணி ஒன்று 3 கிளைமோர்களைப் பொருத்தி தயாராக இருந்துள்ளனர். அப்பகுதியில் வீதிச் சோதனையை மேற்கொண்டு சென்ற விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இன்று முற்பகல் 9.30 மணியளவில் …

  12. இலங்கை விவகாரம்: கைகோர்க்கும் ராமதாஸ், வைகோ.திருமாவளவன் மேலும் வாசிக்க.................................................... http://thatstamil.oneindia.in/news/2006/06...6/13/lanka.html

  13. உயிரிழந்த படைவீரரின் சடலத்தை இராணுவம் கையேற்க முன்வந்ததாக புலிகள் தெரிவிப்பு [15 - June - 2006] [Font Size - A - A - A] -பொய்ப் பிரசாரமென கூறுகிறது பாதுகாப்பு அமைச்சு வன்னியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்ட போது இடம் பெற்ற மோதலில் உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலத்தை கையேற்க படையினர் முன்வந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தச் சடலத்தை பொறுப்பேற்க படையினர் முன் வந்துள்ளதாகவும், முதலில் சடலத்தை ஏற்க மறுத்த படையினர் பின்னர் அதற்கு இணங்கியதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலத்தை ஓமந்தை சோதனை நிலையத்த…

  14. ஜோசப் பரராஜசிங்கம் கொலையாளிகள் யார்?: சிறிலங்காவுக்கு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பு கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பல மாதங்களான நிலையிலும் கொலையாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை கொண்டு ஜெனீவாவில் இயங்கும் சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பு பரராஜசிங்கத்தின் படுகொலையை தமது 178 ஆவது கூட்டத் தொடரில் வன்மையாக கண்டித்துள்ளது. இக்கண்டனத் தீர்மானம் பற்றிய அறிக்கையை சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச…

    • 2 replies
    • 1.4k views
  15. பலாலியில் 300 படையினருக்கு பரசூட் தரையிறங்கித் தாக்கும் சிறப்புப் பயிற்சிகள். பலாலி படைத்தளத்தில் சிறீலங்காவின் சிறப்புப் படையணிகளுக்கு பரசூட் தரையிறக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கனரக உலங்குவானூர்த்திகள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை 300 சிறீலங்காப் படையினர் பெற்றுவருகின்றனர். இப்பயிற்சியில் தீடிரென கடலில் தரையிறங்குதல், காட்டுப் புறங்களில் தரையிறங்குதல், அதிரடிப் தாக்குதலுக்கான தரையிறக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பதிவு.

    • 8 replies
    • 2.5k views
  16. தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேசம் கொச்சைப்படுத்தினால் வரலாறு பாடம் படிப்பிக்கும் [15 - June - 2006] [Font Size - A - A - A] -கஜேந்திரகுமார் சபையில் தெரிவிப்பு விடுதலைப் புலிகளை தடை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தலாமென சர்வதேச நாடுகள் கருதுமேயானால், அவர்கள் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வார்களென தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "இலங்கையில் ஜனநாயக அரசு நடக்கிறது. இது சட்ட ரீதியான அரசு எ…

    • 0 replies
    • 968 views
  17. மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல் மட்டக்களப்பு மாங்கேணிப் பிரதேசத்தில் நேற்று காலை சிறிலங்கா இராணுவத்தினரும், மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரும் சேர்ந்து திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். இச் சுற்றிவளைப்பின் போது பாம்படி என்னும் கிராமத்தில் 14 வயதுக்குட்பட்ட 15 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு இளைஞர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை என்னும் இடத்தில் நேற்று இரவு 30 இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் செயற்பாடு தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் கு…

    • 5 replies
    • 2.3k views
  18. இலங்கை வன்முறைகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை - எம்.ஆர்.நாராயணன். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளதாக இந்திய ஊடகவியலாளர் எம் ஆர் நாராயணன் தமது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில தற்சமயம் ஒரு சிறிய யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளினால் அதிகமாக பாதிப்படுவது இந்தியாவே என ஊடகவியலாளர் நாராயணன் தெரிவித்துள்ளார் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வு முனைப்புகள் உரிய முறையில் செல்வதையே அந்த நாடு விரும்புகிறது. தற்போதைய நிலையில் நோர்வேயின் சமாதான முனைப்புகள் தோல்வியடையுமானாhல் அது பாரிய பாதிப்புக்கு உள்ளாகும். எந்த ஒர…

    • 1 reply
    • 1.2k views
  19. இன்று மதியம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் ஜெற் விமானங்கள். தமிழீழ வான்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியதாக வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான முல்லைத்தீவிலே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டதினால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என் அறியப்படுகின்றது. இருப்பினும் இவ்விமானத்தாக்குதலால் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டதாக இதுவரை கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கவில்லை.

  20. பிரபாகரன் நான்காவது ஈழப்போரை ஆரம்பித்துவிட்டார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நான்காவது ஈழப் போரை திட்டமிட்ட முறையில் மெதுவாக ஆரம்பித்துவிட்டார் என்பது இரகசியமல்ல. சர்வதேச சமூகத்தின் காதுக்குள் நுழைந்து போக்குக் காட்டி விட்டு பிரபாகரன் மெல்ல மெல்ல தனது இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறார். தினமும் ஐந்து முதல் பத்து வரையான பாதுகாப்பு படையினரைக் கொல்லும் நோக்கில் நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரதும் பொதுமக்களினதும் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. முல்லைத்தீவு, கிளிநொச்சி,…

    • 4 replies
    • 2.4k views
  21. அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எதிரிக்கு காத்திருக்கின்றன: க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 20:54 ஈழம்] [ம.சேரமான்] எமது எதிரிக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (10.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக வருகின்ற செய்திகள் எல்லாம் அதிர்ச்சி, அதிர்ச்சி என்று கூறுகின்றது. சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சி, நோர்வேத் தரப்பிற்கு அதிர்ச்சி சர்வேதசத்திற்கு அதிர்ச்சி என்ற…

    • 10 replies
    • 2.3k views
  22. இருதரப்பு சமநிலையை ஏற்காவிட்டால் அந்நிலையை உருவாக்குவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன் [புதன்கிழமை, 14 யூன் 2006, 16:27 ஈழம்] [ம.சேரமான்] இருதரப்பு சமநிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்காவிட்டால் அந்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். நோர்வேக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்தனர். தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.…

  23. ஐயோ இதென்ன கொடுமயடா??????? உலகம் இப்படி கீழ்த்தனமாவா போய்விட்டது???????? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447

    • 32 replies
    • 7.4k views
  24. டென்மார்க் ஊடகங்கள் தமிழீழ மக்கள் மீது தொடரும் வன்முறைகள் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் அரச தரப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதைக் கண்டித்து இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு நடைபெறுகிறது. இந்த ஊடகங்களினது பக்கசார்பான செய்திகள் விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதை ஊக்கப்படுத்தியதும், ஐரோப்பிய ஒன்றிய தடையால் சமாதான முயற்சிகள் முற்றாக தற்பொழுது தடைபட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கையொப்பம் இடுவதற்கான இணையத்தளம் : http://www.tamilernessag.underskrifter.dk/ அல்லது http://www.tamilvoice.dk/ ஆகவே இவர்கள் தொடர்ந்து இப்படியான பக்கசார்பான செய்திகளை வெளியிடுவதை டென்மார்க்கில் வாழும் 10.500 க்கு மேற்ப்பட்ட புலம்பெயர்ந்த தமிழீழமக்கள் ஏற்றுக்கொள்ள மாட…

    • 0 replies
    • 846 views
  25. சமதரப்பு நிலையில் இருந்து புலிகளை அரசு நிராகரிப்பு! நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் பிரபாவுக்கு சமதையாக கையெழுத்திடாராம் ஜனாதிபதி அரசுக்குச் சமதையான ஒரு தரப்பாக விடுதலைப் புலிகள் கருதப்படுவதை முற்றாக நிராகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த விடயத்தை அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும் அது தயாராகிவிட்டது. இந்த விடயத்தில் இலங்கை அரசின் எதிர்ப்பை உடனடியாகத் தெரிவிக்கும் முகமாக, சமாதான முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் இனிமேல் கையெழுத்திடுவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய் துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை நேற்றுத் தெரிவித்தன. எனினும், அரசின் இந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.