ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142427 topics in this forum
-
எரிக்கும் இனவாத நெருப்பிலிருந்து தப்ப இளைஞர், யுவதிகளே ஆயுதம் ஏந்துங்கள்! பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு அறிவிக்கப்படாத பெரும் யுத்தம் ஒன்றை சிங்கள இனவாத அரசும், அதன் கூலிப் படைகளும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன. இனவாதத் தீ யாழ். மண்ணி லும் நாளை எம் உயிர்களைக் கருக்கலாம். நெருப்பில் எரிக்கப்படும் எம் மக்களைப் பாதுகாக்க இளைஞர், யுவதிகளே அணி அணியாக வந்து தாயக விடுதலைப் போரில் இணையுங்கள். இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்தி ருக்கிறது யாழ்.மாவட்ட பொங்கி எழும் மக் கள் படை. "பொங்கி எழும் மக்கள் படை யாழ். மாவட்டம்' என்ற பெயரில் நேற்று ஊடகங் களுக்கு விடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பதாவது: திருகோணமலையில் இன்று இனவாதத் தீ பற்றி எரிகிறது.…
-
- 0 replies
- 952 views
-
-
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர். இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலை…
-
- 6 replies
- 1.5k views
-
-
சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே.. ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான…
-
- 42 replies
- 5.5k views
-
-
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் இணைந்து பதுங்கித்தாக்குதல் இன்று காலை 8.45 மணியளவில் மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் விடுதலைப் புலிகள் மீது பதுங்கித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படைமுகாம்களிலிருந்து மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிக்கப்படுகிறது. இத் தாக்குதலின் போது ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளதாகவும் அறியமுடிகினறது. வீரச்சாவடைந்தவர் இதயவேந்தன் என்ற போராளியாவார். இத் தாக்குதலானது அப்பட்டமான போர் நிறுத்த மீறல் எனக் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் துறையினர் இச் சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பதுங்கித் தாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஊர்காவற்துறையில் இளைஞரின் சடலம் மீட்பு யாழ் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுடன் இந்த இளைஞர் சடலம் மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் பருத்திடைப்பு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 24 அகவையுடைய தம்பு கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல்:சங்கதி
-
- 24 replies
- 3.9k views
-
-
ஒரு பேப்பரில் வந்த 'உண்மைகளினை எழுதுங்கள்' என்ற கட்டுரையினை இங்கே பார்க்கவும். http://www.orupaper.com/issue44/pages_K__7.pdf
-
- 0 replies
- 971 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார். அந்த கடிதத்தில் சரத்குமார் கூறி இருப்பதாவது:- அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு. நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம். சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் ஹசூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்.... திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போஇ வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்…
-
- 0 replies
- 821 views
-
-
வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க ரோந்து நடவடிக்கையில் 20 டோரா படகுகள். திருகோணமலை புல்மோட்டை கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடற்படையினரின் சுமார் 20 ரோரா படகுகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தவிர குச்சவெளி மற்றும் இறக்கக்கண்டி கடல் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கிழக்கு பிராந்திய வன்னி பயணத்தினை எந்த வேளையிலும் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், கடற்புலிகளின் போக்குவரவுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் …
-
- 8 replies
- 1.5k views
-
-
புதன் 12-04-2006 21:18 மணி தமிழீழம் [நிருபர் மகான்] வாளைச்சேனை மாஞ்சோலையில் மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. வாழைச்சேனை மாஞ்சோலை முஸ்ஸிம் பகுதியில் இராணுவ உயர் அதிகாரி மீது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஞ்சோலையில் உள்ள முஸ்ஸிம் வீடு ஒன்றுக்கு இன்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 38 அகவையுடைய மேஜர் குமாரசம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளார். 48 அகவையுடைய கஜனலி என்ற இன்னொரு படைவீரரும் காயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக சிறீலங்கா உலங்கு வானூர்தி மூலம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாளை அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைவர் உல்ப்ஹென் றிக்சன் பௌயர் சந்தித்து பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தவுள்ளனர். இன்று காலை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களுடன் சந்திப்பை நடத்திவிட்டு கொழும்பு சென்றிருக்கும் அவர், சிறிலங்கா அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துவார் என நம்பப்படுகின்றது. இந்நிலையில் நாளை மீண்டும் காலை 11 மணிக்கு புலிகள் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பேசவிருக்கின்றார் உல்ப்ஹென் றிக்சன் பௌயர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு அரசியல்து…
-
- 0 replies
- 902 views
-
-
திருமலையில் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். நண்பகல் திருகோணமலை சந்தைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கின்றது. இதில் அகப்பட்டு ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கடைகள் படையினரின் உதவியுடன் சிங்களக் காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தொடர்ந்து பிற்பகல் 3:45 மணிக்கு மேலும் ஒரு கைக்குண்டு நகர்ப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சிறிலங்கா படையினர்ää பொலிசார் நிற்கும் நகர்ப்பகுதியில் தமிழர்களின் கடைகள் தீ வைக்கப்படுகின்றன@ தீ வைக்கப்பட்டவை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் பாதுகாப்பு…
-
- 63 replies
- 7k views
-
-
-
பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் [12 - April - 2006] [Font Size - A - A - A] சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே விருப்பமென அறிவிப்பு விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் கனடா இணைத்திருக்கின்றபோதும் சமாதான நடவடிக்கை களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்பின் பேரிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அர சாங்கம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடவசதியை அளிப்பதற்கு தயாரெனவும் அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாக திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கனடிய பொதுமக்கள் பா…
-
- 11 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்வதற்கு முன்னின்று உழைத்த டி.பி யெயராஜ் அவர்களிடம் விடுதலைப்புலிகளின் தடைபற்றி தமிழோசை பேட்டி எடுத்து ஒலிபரப்பியதை கேட்டீர்களா?
-
- 12 replies
- 2.4k views
-
-
சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் மோசடி மிக்கவர் - விக்கிரமசிங்கா. இலங்கை அரசாங்கத்தின் சமூச சேவைகள் அமைச்சராக இருக்கும் டக்களஸ் தேவானந்த பல மோசடிகள் மிக்கவரே.தென்னிலங்கை பிரதேச சபையான திக்வெலைப் பிரதேச சபையின் உறுப்பினரான விக்கிரமசிங்கா தெரிவித்தார் வடக்கு கிழக்கில் இருந்து சென்ற ஊடகவியலாளர்களுக்கும் திக்வெலப் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி பொதுசன மக்கள ஐக்கிய முன்னனி கட்சிகளின் பிரதி நிதிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் மக்கள் விடுதலை முன்னனிக்கு அபைப் பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் கலந்து கொள்ள வில்லையென ஏற்பாட்டாளர்களான தேசிய சமாதானப் பேரவையினர் தெரிவித்தார்கள் இதில் உரையாற்றிய பொதுசன மக்கள் ஐக்கிய முன்ணனியின் உறுப்பினரான விக்க…
-
- 1 reply
- 961 views
-
-
கட்டுநாயக்க தாக்குதலில் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பாரிய பங்களிப்பு செய்தது: பொட்டம்மான் [செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2006, 20:28 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலில் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பாரிய பங்களிப்பு செய்தது என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் பாராட்டியுள்ளார். சார்ள்ஸ் அன்ரனி படையணியின் 15 ஆம் ஆண்டு நிறைவையொட்டி விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலில் நேற்று திங்கட்கிழமை பொட்டு அம்மான் ஆற்றிய உரை: சார்ள்ஸ் அன்ரனி படையணி உருவான வரலாறும் சார்ள்ஸ் அன்ரனி என்ற மகத்தான போர் வீரன் தலைவரின் மனதில் இடம்பிடித்த வரலாறும் எல்லோருக்கும் தெரிந்தது. சார்ள்ஸ்…
-
- 1 reply
- 1.1k views
-
-
The Norwegian Foreign Ministry, in a press statement on Tuesday condemned the latest acts of violence in Sri Lanka. Noting heavy loss of life in Tuesday's Claymore attack in Trincomalee, the statement said that the assassination of a prominent Tamil civil society representative in Trincomalee, Mr V. Vigneswaran, and other serious incidents are adding to the vortex of violence that could eventually create a situation similar to that in December 2005 and January this year. Full text of the press release issued by the Norwegian Foreign Ministry follows: Norway condemns the latest acts of violence in Sri Lanka The Government of Norway condemns, in the strongest po…
-
- 2 replies
- 1.2k views
-
-
அபயபுரத்தில் ரவிராஜ் எம்.பி மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் மாமனிதர் வ.விக்னேஸ்வரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகளில் கலந்து விட்டு திருமலையில் இருந்து திரும்பிய தமிழ்த்தேசியக் கூட்ட மப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரவிராஜ் அவர்கள் அபயபுரம் பகுதியில் வைத்து சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இவர் பயணித்த வாகனத்தை சிங்களக் காடையர்கள் அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த நிலையில் கந்தளாய் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் முறைப்பாடு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை. தகவல்:சங்கதி
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு யாழ். பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2006, 04:01 ஈழம்] [யாழ். நிருபர்] மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவித்து அறிக்கையொன்றினை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கை: பொங்கியெழும் மக்கள் படை யாழ். மாவட்டம், 10.04.2006 அன்பார்ந்த தமிழீழ உறவுகளே மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு வருந்துகின்றோம். இன்று மாலை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின்…
-
- 1 reply
- 890 views
-
-
திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் இன்று 1.15 மணியளவில்திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கிளைமோரத் தாக்குல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 12கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை கபறன வீதியில ;தம்பலகாமத்திற்கு 9 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்நெற்
-
- 6 replies
- 1.7k views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் 15 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் http://www.eezhanatham.com/Daily%20photos/...tony/index.html
-
- 0 replies
- 921 views
-
-
தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்: அரசியல்துறை பொறுப்பாளர் கிழக்குத் தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும் என்று அரசியல்துறை பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். இன்று இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தளபதிகளின் போக்குவரத்து தொடர்பாகவோ, கள நிலவரம் தொடர்பாகவோ சாதகமான வெளிப்பாடுகள் எவையும் அரசினால் காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசில்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்…
-
- 0 replies
- 815 views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - பாண்டியன் - Monday, 10 April 2006 16:51 யாழ். தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கிளைமோர் கண்ணிவெ டித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ-9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ ஊர்தி ஒன்றை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்தியில் பயணித்த படையினரில் நால்வர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்கு வானு}ர்திகளில் படுகாயமட…
-
- 3 replies
- 1.5k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் து}துவர்கள் - விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் சந்திப்பு! இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காலை 10:15 மணிக்கு சமாதான செயலகத்தில் ஆரம்பமாகியிருக்கும் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பாறுப்பாளர் திரு பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகளின் சார்பில் நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் து}துவர்கள் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 881 views
-
-
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்! (கிளிநொச்சி) மாமனிதர் வ.விக்கினேஸ்வரனின் இறுதி வணக்க நகழ்வு கிளிநொச்சியில் துயரவெள்ளம் பெருக்கெடுக்க இடம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து அவரது புகழுடல் முல்லைத்தீவக்கு இறுதி வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. கிளிநொச்சி தேசிய எழுச்சிச் செயலணியின் செயலாளர் திரு த.பிரபாகரன் தலைமையில் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அலையெனத் திரண்டிருந்தனர் பாண்ட் வாத்திய இசையுடன் அணிவகுப்பு மரியாதையுடன் பண்பாட்டு மண்டபத்துக்கு புகழுடல் எடுத்துவ…
-
- 0 replies
- 829 views
-