ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
கிழக்குப் பத்திரிகையாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம். சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறுவது தற்பொழுது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மீது சிறீலங்காப் படைத்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது கொலைத் தாக்குதல்களும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. 31.05.2004ம் திகதி மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான திரு ஐயாத்துரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும்…
-
- 33 replies
- 6.9k views
-
-
AIR FORCE • Two UAVs • Cluster and fuel air bombs for Kfirs (50 each) • 20 laser/precision guided bomb kits • 30 deep penetration bombs • 500 80mm rockets with fuel air explosive warhead ARMY • 10 Bakhtar Shiken anti-tank guided missile launcher • 300 Tandem warhead missiles • 1000 radio sets NAVY • 5000 mortar bombs • 250 night vision goggles http://www.indianexpress.com/story/3678.html
-
- 0 replies
- 929 views
-
-
எங்கே குண்டை கிண்டை வைக்கிறாங்களோ என்ற அச்சத்தில் தலை தெறிக்க ஓடி வாகனம் கவிண்டு போனதில் குண்டு தான் வெடித்து விட்டது என்று நினைத்த படுகாயமடைந்து (ஒருவர் வைற்றாலடித்தும் விட்டார்) குற்றுயிராய் கிடந்த படையினர் உண்மையை அறிந்து மெல்ல எழுந்து வாகன ஓட்டுனரை நையப்புடைத்தனர். http://www.eelampage.com/?cn=25924
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்கள மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்குக ஐனாதிபதி உத்தரவு. விடுதலைப் புலிகளால் தீவுச்சேனையில் துணை ஆயுதக்குழுக்கள் மீதான தாக்குதலை அடுத்து பொலநறுவையில் உள்ள மக்களுக்கு சிறீலங்கா படையினரால் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளது. இதேபோல் புல்மோட்டை கடற்கரையில் நடந்த தாக்குதல்களை அடுத்தும் சிங்கள் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்ட இடங்களில் சிங்களவரைக் காப்பாற்றும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக புல்மோட்டை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து சிங்கள் மக்களைக் காப்பாற்றவே இந்த ஆயுதங்…
-
- 4 replies
- 1.4k views
-
-
சம்பூர் குண்டுத் தாக்குதல் சேதம் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு முன் பிரிட்டிஷ் அமைச்சருக்கு விவரம் தெரிந்தது! சம்பூர் கிராமத்தின் மீது சரமாரியான குண்டுத் தாக்குதல்களைக் கடந்த செவ் வாய்க்கிழமை நடத்திய இலங்கை விமானப் படையின் இஸ்ரேலியத் தயாரிப்பு "கிபிர்' யுத்த விமானங்கள் இரண்டும் தாக்குதலை முடித்துக்கொண்டு கட்டுநாயக்கவிலுள்ள தமது தளத்துக்குத் திரும்புவதற்கிடையில் அந்த விமானத் தாக்குதல் தொடர்பான பாதிப்புகள் குறித்து பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வுடன் தொடர்புகொண்டு பிரிட்டிஷ் அரசின் கவலையைத் தெரியப்படுத்தினார் எனச் செய்திகள் கூறுகின்றன. பிரிட்டிஷ் அரசின் இந்தச் செயல், மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விஷயத்தில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையில் உள்ள பலரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விலைக்கு வாங்கிவிட்டனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலோசகர் எச்.எம்.ஜி.பி.கொட்டகதெனியா கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: அவிசாவளையில் ஐந்து தமிழர்களின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பலரும்தான் காவல்துறையுடனான மோதலில் கொல்லப்படுகின்றனர். தடய அறிவியல் சோதனை முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் அந்த உடல்கள் தமிழர்களினதுதான் என்று எப்படி முடிவுக்கு வரமுடியும்? சிறிலங்கா அரச படைகள் மிகுந்த ஒழுக்கத்தோடு இயங்குகின்றன. விடுதலைப் புலிகளால் ஆத்திரமூட்டும் நட…
-
- 3 replies
- 1.3k views
-
-
படம்: தமிழ்நெற் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளில் பிரம்மாண்டமாக இயங்கும் விடுதலைப் புலிகள்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி தகவல் [திங்கட்கிழமை, 1 மே 2006, 20:04 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் கடல்சார் வர்த்த நடவடிக்கையில் செயற்படுவதற்கான பிரம்மாண்ட கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியும் ஆய்வு மையம் ஒன்றைச் சேர்ந்தவருமான விஜய் சகுஜா தெரிவித்துள்ளார். "செயலூக்கம் உள்ள விடுதலைப் புலிகளின் கடல் வர்த்தக கட்டமைப்பு" என்ற தலைப்பில் 14 பக்க ஆய்வு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் வடக்கு கிழக்கில் பெருமளவிலான பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்துள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு - பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44 இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது. இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது இதுவரை சேதவ…
-
- 42 replies
- 6.8k views
-
-
புலிகளின் சொந்தக் கடற்கலங்களில் போராளிகள் வெற்றிகரமாக பயணம்!! [திங்கட்கிழமை, 1 மே 2006, 02:23 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கலங்களில் விடுதலைப் புலிகள் தளபதிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமையன்று பயணித்தனர். திருமலையிலிருந்து முல்லைத் தீவுக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் அடங்கிய முதல் குழுவினர் இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தனர். போராளிகளுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை. முல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு போராளிகள் கடற்கலங்களில் பயணித்த போது சிறிலங்கா கடற்படையினரது தாக்குதல்களுக்கு பதில்கொடுத்தபடியே வெற்றிகரமாக திருகோணமலையைச் சென்றடைந்தனர். திருகோணமலையிலிருந்து திரும்பும் போது சிறிலங்கா கடற்படையினர் எதுவித தலைய…
-
- 1 reply
- 1.2k views
-
-
புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது தகவல்: கள உறவு
-
- 2 replies
- 1.4k views
-
-
போதனை வேண்டாம் திருமலை மாவட்டம் கோமரங்கடவலையில் ஆறு சிங்கள விவசாயிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குற்றம் சாட்டியுள் ;ளார். அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலி களே இப்படுகொலைகளைப் புரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வினோதம் என்னவெனில் இக்கொலைகள் குறித்து அவர் முதலில் தெரிவிக்கும் போது இத்தகைய சம்பவம் இடம் பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து உறுதி செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது அப்பேட்டி வழங்கப்படும் போது இக்கொலைகள் குறித்த தகவலை அவரால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. ஆனால் இக்கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தா…
-
- 4 replies
- 1.7k views
-
-
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்: 20 பேர் பலி ஏப்ரல் 30, 2006 கொழும்பு: ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கருணாவின் முகாம்களின் மீது விடுதலைப் புலிகள் அதிரடி ரெய்ட் நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத் தகவலை விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகப் பிரிவின் தலைவர் பூலித் தேவன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். கருணாவின் முகாம்களை தீ வைத்து எரித்ததோடு, ராணுவம் அவர்களுக்கு வழங்கிய ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக பூலித் தேவன் கூறியுள்ளார். கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோத…
-
- 0 replies
- 982 views
-
-
செய்தியறிக்கையில் கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது தமிழோசை இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர். தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார். ஆ…
-
- 2 replies
- 1.4k views
-
-
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்க==> மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு. அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்…
-
- 0 replies
- 834 views
-
-
உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை. http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17950 கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார…
-
- 0 replies
- 909 views
-
-
பழிவாங்கும் படலத்தைத் தொடருவோம் - திருமலை பொங்கியெழும் மக்கள் படை. திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியர்களால் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து பெருநிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத்தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஓரளவு நிலைகளை மாற்றியிருந்த போது மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புத் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழ் பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறீலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலைப…
-
- 6 replies
- 1.8k views
-
-
(2 ஆம் இணைப்பு) திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை [புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 08:58 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் இன்று புதன்கிழமையும் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள் தாக்குதல்களில் மொத்தம் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூதூர் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விமானப் படையினரின் கிபீர் - மிக் 29 ரக விமானங்கள், குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. சுங்கன்குழியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திருமலை மூதூர் கிழக்கில் …
-
- 6 replies
- 1.5k views
-
-
கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக சி…
-
- 1 reply
- 1.3k views
-
-
கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா? எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது. புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களைப் பார்வையிடும் உல்ப் ஹென்றிக்சன்
-
- 2 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்ததற்கு பதிலாக மகிந்தர் தமது போர் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிட்ட முறையில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பன வெளிப்படுத்துகின்றன. சிறிலங்கா படைத்தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக அதற்கான பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதவை. லக்ஸ்மன் கதிர்காமர் அதியுயர் பாதுகாப்புக்களுடன் இருந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியிருந்தனர். ஆனால் இதுவர…
-
- 0 replies
- 757 views
-
-
சிறிலங்கா அரசும், சிங்களப் படைகளும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கை விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தமது கவனத்தைச் செலுத்தியுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் தேசவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் மக்களுக்குக் கவலையளிக்கின்றது. ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாயிலை மூடியிருக்கும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஜே.ஆர். பிரேமதாஸா, விஜயதுங்கா, சந்திரிகா காலத்தை விட மகிந்தரின் ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களுக்கு தமிழ் மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செயற்பட்…
-
- 0 replies
- 716 views
-
-
இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி
-
- 28 replies
- 5.3k views
-