ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு: இந்திய எழுத்தாளர் கமலாதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் ப…
-
- 8 replies
- 2.7k views
-
-
¿£Ã¡Å¢ÂÊ¢ø ¨Åò¾¢Â÷ Å£ðÊø ¦¸¡û¨Ç. ¡úôÀ¡½õ ¿£Ã¡Å¢ÂÊ¢ø À¢ÃÀÄ ¨Åò¾¢Â÷ ´ÕÅ¡¢ý ţΠ§¿üÚ ¿ûÇ¢Ã× ¬Ô¾À¡½¢¸Ç¡ø ¦¸¡û¨Ç¢¼ôÀðÎûÇÐ. ÐôÀ¡ì¸¢, ¸ò¾¢¸Ù¼ý ÒÌó¾ ¦¸¡û¨ÇÂ÷¸û ÐôÀ¡ì¸¢ôÀ¢Ã§Â¡¸ò¨¾ §Áü¦¸¡ñ¼Ð¼ý ÍÁ¡÷ ãýÚ Á½¢§¿Ãõ Å£ðÊÛû ¾¡¢ò¾¢ÕóÐ ¦ÀÕ󦾡¨¸ôÀ½ò¨¾Ôõ ¿¨¸¸¨ÇÔõ «À¸¡¢òÐî ¦ºýÚûÇÉ÷. þÅÃРţðÊø þÕóÐ áÚ Á¢üÈ÷ àÃò¾¢ø þáÏÅì ¸¡ÅÄÃñ þÕó¾§À¡Ðõ þÅÃРţðÊø ÐôÀ¡ì¸¢î ºò¾õ §¸ð¼ ¿¢¨Ä¢Öõ ¦¸¡û¨ÇÂ÷¸û «í¸¢ÕóÐ ¦ÅÇ¢§ÂÈ¢ ãýÚ Á½¢§¿Ãò¾¢ý À¢ýɧà À¨¼Â¢É÷ «íÌ ¦ºýÈ¢Õó¾É÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.
-
- 2 replies
- 1.4k views
-
-
அஞ்சலி அரசியல் இவ்வாரம் பாராளுமன்றம் கூடிய முதல் இரு நாட்களிலும் அண்மைய வன்முறைகளின் போது படுகொலையுண்ட அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஒவ்வொரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சபை கூடிய போது கடந்த வாரம் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹெப்பித்திக்கொல்லாவையில் பயணிகள் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டுத்தாக்குதலைக் கண்டனம் செய்து விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச, அச்சம்பவத்தில் பலியான அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக முறையிடவுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பின்லாந்துக்கு பயணமாகி…
-
- 1 reply
- 1.4k views
-
-
தந்திரோபாய நகர்வுகளுக்கான மிக முக்கிய காலம் நெருங்குகிறது அமைதி முயற்சிகள் தோற்று செயலிழந்து போய், நாட்டில் மீண்டும் ஒரு பயங்கர யுத்தம் வெடிக்கும் ஆபத்து ஏது நிலை உருவாகி வருவதை இந்த நாட்டின் சாதாரண பிரஜை வரை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். விரும்பியோ, விரும்பாமலோ இந்த இலங்கைத்தீவு ஒரு கொடூர யுத்தத்துக்கு முகம் கொடுக்கும் அவலம் தவிர்க்க முடியாததாகி வருகிறது. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. இலங்கைத் தீவில் அகோர யுத்தம் நிலவும்போது முன்னரைப் போல சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு அதனைக் கைகட்டிப் பார்த்திருக்குமா என்ற வினாவும் எழுகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் சற்றுமுன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றது...! மேலதிக தகவல் தொடர்ந்து வரும்..
-
- 16 replies
- 4.7k views
-
-
சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் ராஜபக்ச: ஆய்வாளர் திருநாவுக்கரசு சாடல் எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு சாடியுள்ளார். விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ராஜ்பக்சவின் கதிரை இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. யார் ராஜபக்சவை கதிரையில் உட்கார வைத்தார்களோ அவர்களே கதிரையை ஆட்டவும் தொடங்கிவிட்டனர். உண்மையான செயல்பூர்வ அர்த்தத்தில் ராஜபக்சவை கதிரையில் அமர்த்திய முதலாவது அணியின…
-
- 0 replies
- 850 views
-
-
ஜேவிபி யுடனான வரதர் அணியினரின் நெருங்கிய தொடர்பு அம்பலம். மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறீலங்கா துணை இராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியினர் ஜேவிபி நெருங்கிய தொடர்புகளை பேணிவருவது அம்பலமாகியுள்ளது. அண்மையில் கொழும்பு சென்ற வரதர் அணியைச் சேர்ந்த ஆயுததாரிகள் சிலர் ஜேவிபி தலைவர் சோமவன்சவையும், கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டதில் விடுதலைப் புலிளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியினர் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவினை வழங்குவதற்கு சோமவன்ச இணங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. -பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தமிழர் பிரதிநித்துவத்தை குறைக்க கோரிக்கை சிறிலங்கா நாடளுமன்றத்துக்கான தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து சிங்களவர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது: நாட்டின் சட்டப்படி வடபகுதிக்கு 10 நாடாளுமன்ற ஆசனங்களே ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் 15 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையைக் குறைத்து இதர பகுதிகளினது எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். யாழ். மாவட்டத்தில் மொத்தல் 6,44,279 வாக்களர்கள் இருப்பதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. இந்த வாக்களர்களுக்கு 9 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னி மாவட்டத்தில் 2,26,604…
-
- 0 replies
- 882 views
-
-
ஐரோப்பியத் தடையால் பேச்சுக்களுக்கு இடையூறு: சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினால் அமைதிப் பேச்சுக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்த கேகலிய ரம்புக்வெல, ஜே.வி.பி.யினர் கூறுவது போல் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்க முடியாது. நாட்டினது பாரிய இனப்பிரச்சனைக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய எதனையும் நாம் செய்ய மாட்டோம் என்றார் அவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதிப் பேச்சுக்களுக்கு இடையூறாக உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கேகலிய ரம…
-
- 0 replies
- 903 views
-
-
துணை இராணுவக் குழுவினரின் சிறார் கடத்தலைத் தடுக்க யூனிசெஃப் வலியுறுத்தல் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் சிறார் கடத்திச் செல்லப்படுதலைத் தடுக்க வேண்டும் என்று யூனிசெஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. யூனிசெஃப் அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் சிறார்களை கடத்திச் சென்று தங்களது குழுக்களில் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்தில் இது தொடர்பில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 18 வயதுக்குறைவானோர் கடத்தப்படுவதும் கட்டாயமாக குழ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு [வியாழக்கிழமை, 22 யூன் 2006, 17:00 ஈழம்] [ம.சேரமான்] இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்…
-
- 0 replies
- 956 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு சந்திரகாந்தன் தெரிவு. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் அவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடிதாவும் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சந்திரகாந்தன் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டலின் வசிக்கும் சந்திரகாந்தனை ஐரோப்பிய நாடுகளுக்கான பரப்புரைகளை மேற்கொள் வரவிருக்கும் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் வட்டுக்கோட்டையில் தாக்குதல் படைச் சிப்பாய் இருவர் பலி! மேலும் இருவர் படுகாயம். யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு கைக்குண்ட வீச்சு சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் பலியாகியுள்ளதுடன் இரண்டு இராணுவத்தினர் படு காயங்களுக்கு உள்ளாகி பலாலி இராணுவ வையித்திய சாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளார்கள். இன்று காலை 8.45 மணியளவில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீ;து இனம் தெரியாதவர்கள் மறைந்திருந்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள.; இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் ஒரு இராணுவம் பலியானதுடன் மற்றொரு இராணுவத்தினர் ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வட்டுக் கோட்டை …
-
- 2 replies
- 1.5k views
-
-
சிந்தனையையும், யதார்த்தத்தையும் கொண்ட தமிழீழ அரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம். சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் யுP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரச…
-
- 6 replies
- 2.2k views
-
-
தமிழகத்தின் அக்கறை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டுவதில் ஒரு தணிவு நிலையைக் கடைப்பிடித்து வந்த தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் துடிப்புடன் குரல் கொடுக்கும் சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்திருக்கும் வன்முறை நிகழ்வுப் போக்குகள் காரணமாக தமிழகத்தில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை அவதானித்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் , மாநில முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைவரங்கள் குறித்து ஆராய்வதற்காக தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கிறார். இன்று புதுடில்லி செல்லும் இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழ்க் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலுள்ள கடப்பாட்டை நிறைவேற்றும்படி இலங்கை அரசை சர்வதேச சமூகம் நிர்ப்பந்திக்க வேண்டும்' * வடக்கு, கிழக்கில் அப்பாவிக் குடிமக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை காலை சபையில் விடுத்த விசேட அறிக்கை கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலான கொடூரமான யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளார்கள்; கணிசமான எண்ணிக்கையானவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். டிசம்பர்௨004 கடல்கோளினாலும் வடக்கு, கிழக்கு தம…
-
- 2 replies
- 1.3k views
-
-
யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க புலிகள் திட்டவட்டமான நிபந்தனை அரசுப் படைகள் செம்மையாகப் பின்பற்றினால் தாங்களும் அதே மாதிரிச் செயற்படுவார்களாம் நோர்வேக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிப்பு யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டவட்டமான நிபந்தனை ஒன்றை விதித்திருக்கின்றார்கள். யுத்த நிறுத்த ஏற்பாடுகளை அரசுப் படைகள் செம்øமாயாக முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே தாங்களும் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை எழுத்து மூலம் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு விடுதலைப் புலிகள் தெரியப்படுத்தியிருக்கின்றன
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்துக்கு சந்திரநேருவின் மகன் நியமனம்? மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் நியமனம் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இது தொடர்பாக தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திரநேருவின் மகனை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள சந்திரகாந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து இலங்கைக்கு அழைத்து வர உள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் த…
-
- 0 replies
- 906 views
-
-
'பேசாலை கொலைகள்; கடற்படை, போலிசார் மீது நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு'-- போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழு இலங்கையில் மன்னார் மாவட்டம் பேசாலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர். இது குறித்து தமிழோசையிடம் பேட்டியளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்காகப் பேசவல்ல அதிகாரி, தோர்ஃபினூர் ஒமார்சன் , மன்னார் அருகே பேசாலை தேவாலயத்தில் கையெறிகுண்டை வீசியவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் போலத்தான் தெரிகிறது என்றும் இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார் ராணுவத்தின் மீது எந்த அடிப்படையில் நீங்கள் குற்றம…
-
- 18 replies
- 3.9k views
-
-
யாழ் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் எரியூட்டு. சிறிலங்கா புலனாய்வுத் துறையிரால் யாழ் கோப்பாய்த் மாவீரர் துயிலுமில்லம் எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் மாவீரர் துயிலுமில்லைத்தை எரியூட்டியிருந்தனர். இது குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன் [புதன்கிழமை, 21 யூன் 2006, 14:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பையடுத்து…
-
- 1 reply
- 1k views
-
-
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க வேண்டும்: தமிழக 'தினமணி' நாளேடு வலியுறுத்தல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. தினமணி நாளேட்டில் இன்று புதன்கிழமை எழுதப்பட்டுள்ள தலையங்கம்: நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணி வெடித் தாக்குதலில் பலர் பலி... தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் குண்ட…
-
- 4 replies
- 2.4k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களை நாடாளுமன்றுக்குள் தாக்க முயற்சி! ஆளுந்தரப்பினர் ஆவேசம் சபையில் நேற்று அமளிதுமளி அரச படைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களினால் வடக்கு கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஆட்சேபித்து நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பமுற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆளுங்கட்சியி னரால் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறிந்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தமையால், ஏற்படவிருந்த பெரும் விபரீதமொன்று தவிர்க்கப்பட்டது. நாடாளுமன்றம் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை கூடியது. கெப்பிட்டிக்கொல் லாவவில் கிளைமோர் தாக்குதலில் பலியான மக்கள் தொடர்பில் விசேட அறிக்கை …
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் தஞ்சமடைந்தோரில் இலங்கை அகதிகளே அதிகம்பேர் பிற நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளில் அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களே என்று தமிழகப் பத்திரிகையான "தினமலர்' தெரிவிக்கின்றது. நேற்று கடைப்பிடிக்கப்பட்ட அகதிகள் தினத்தையொட்டி "தினமலர்' நாளேடு வெளி யிட்ட ஆக்கம் ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்ட போதுதான் அகதிகள் இந்தியாவிற்கு வரத்தொடங்கினர். இந்தியாவில் உள்ள அகதிகளில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். 1983முதல் 1987வரை ஒருலட்சத்து 34ஆயிரத்து 53 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி 25ஆயிரத்து 885 அகதிகள் மீண்ட…
-
- 1 reply
- 1.2k views
-