Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி By VISHNU 25 SEP, 2022 | 11:25 AM நேர்காணல்: ஆர்.ராம் “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று அன்ரன் பாலசிங்கம் 2002இல் என்னை சந்தித்தபோது கூறினார்” “ரஜீவ்-மேனன் பாடசாலையின் இராஜதந்திர அணுகுமுறை பின்னடைவுகளைச் சந்தித்துவிட்ட நிலையில் தொப்புள்கொடி உறவு என்ற விடயத்தினை இந்தியா தனது வெளிவிவகார மூலோபாயத்தினுள் உள்ளீர்க்க வேண்டும்” “தமிழ் பேசும் மக்கள் என்ற மாலையில் மூன்று மணிகளான தமிழர்கள், முஸ்லிம்கள், மலைய மக்…

  2. 24 Sep, 2022 | 09:27 PM தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் ந…

  3. கொழும்பின் பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு By Digital Desk 5 24 Sep, 2022 | 09:28 PM (நா.தனுஜா) கொழும்பின் பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவு பரந்தளவிலான பொது இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிக…

  4. யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம் - மடு பிரதேசத்தில் சம்பவம் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 05:00 PM விறகு சேகரிப்பதற்காக வீட்டிலிருந்து சிறிது தூரம் காட்டுக்குள் சென்றவர் யானை தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் மன்னார் மடுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான பபா என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் ஸ்ரான்லி (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் மாலையாகியும் வீடு வராததால், மனைவி தேடிச் சென்றதாகவும் பின் அயலவர…

  5. தாய்ப்பால் புரைக்கேறியதில் 10 மாதக்குழந்தை உயிரிழப்பு 24 SEP, 2022 | 08:36 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தய்ப்பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை (23) குழந்தைக்கு பால் கொடுத்த போது பால் புரைக்கேறியதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து பெற்றோர் அம்பன் வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டுசென்ற போது , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/136371

  6. சீனாவிடமிருந்து 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 02:06 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு , 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக சீனா வழங்கியுள்ளது. குறித்த நன்கொடை பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. மேலும் 5 பில்லியன் ரூபா பெறுமதியான மருத்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டு , அவை வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சிரமங்களில் மக்களுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்காக சீனா இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என்று இலங்கையிலுள்ள சீன தூ…

  7. கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 84 பேர் கைது: கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் - இலங்கை நெருக்கடி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு - நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல…

  8. வடி கானிலிருந்து சிசு உயிருடன் மீட்பு By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 01:04 PM தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை 5.30 மணியளவில் நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக சென்ற சிலர் வடிகானில் சிசுவொன்று இருப்பதை அவதானித்த நிலையில், பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். பின்னர் சிசு பொலிஸாரினால் மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிசுவை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிசு உயிருடன் இருப்பதாகவும் வைத்தியசாலையின் அதிகா…

  9. https://www.youtube.com/watch?v=w9Wduu0P1WE உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு... எதிராக, போராட்டம் : பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல். உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301055

  10. ஐ.நா.வில்... இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் அதிருப்தியை அளிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது முந்தைய அறிக்கையில் பரிந்துரைத்ததை இந்த வரைவுத் தீர்மானமும் இன்னமும் உள்ளடக்கவில்லை என்பதை நாங்கள் சுட்…

  11. கஞ்சா ஏற்றுமதியை... சட்ட பூர்வமாக்கும் நடவடிக்கையை, ஆரம்பித்தது... இலங்கை ! கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் இதற்கான ஆவணத்தை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம்; இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெர…

  12. நந்திக்கடல், சாம்பல்தீவு, நாயாறு... உள்ளிட்ட பகுதிகளை, வனப் பாதுகாப்பு வலயமாக மாற்ற நடவடிக்கை. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, நந்திக்கடல் குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், கிராமிய பொருளாதாரம் மற்றும் அரச அமைச்சுகள் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1300951

  13. யாழ்ப்பாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில்... பொருளாதார நெருக்கடியால், சிறுவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு. பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோர் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் 2021ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 1…

  14. மின் துண்டிப்பு காலத்தை நீடிக்க இடமளிக்கப்படமாட்டாது - அரசாங்கம் By VISHNU 23 SEP, 2022 | 03:07 PM (எம்.மனோசித்ரா) நிலக்கரியை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாமல் செய்து , மின்துண்டிப்பு நேரத்தை நீடிக்கச் செய்வதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுகிறது. இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அவசர தேவையாக நிலக்கரியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , …

  15. ரோயல் பார்க் கொலையாளி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் இடைக்கால தடை By DIGITAL DESK 5 23 SEP, 2022 | 03:52 PM ரோயல் பார்க் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அன்டனி ஜெயமக நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ரோயல்; பார்க் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அன்டனி ஜெயமக நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இடைக்கால தடை விதிக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோயல்பார்க் கொலையாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியதை இடைநிறுத்தவேண்டும் உத்தரவிடவேண்டும்என கோரி பெண்கள் மற்றும் ஊடகவியலாளர் கூட்டமைப்பு தாக்க…

  16. கொழும்பில் பல பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் 23 SEP, 2022 | 08:06 PM கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம், பிரதமர் அலுவலகம், அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்த…

  17. இலங்கையில்... இந்திய இராணுவத்தின், முறைகேடுகள் குறித்து... விசாரிக்கப்பட வேண்டும் – மீனாக்ஷி கங்குலி! ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்தியபோது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. மோதலின்போது இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி …

  18. புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது? எஸ்.கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது? என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வா…

    • 13 replies
    • 1.2k views
  19. ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் கலந்துக்கொள்ளவுள்ளார். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இந்த நோக்குடன் இன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளார். அவர் அங்கு பிரதான கூட்டத்திற்கு சமாந்தரமாக இடம்பெறும் உப கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாக எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/210560

  20. அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த அலி சப்ரி! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை முன்வைக்க உள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=165905

  21. யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது By T. SARANYA 23 SEP, 2022 | 11:19 AM உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ். நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/136258

  22. தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது - சுமந்திரன் By T. Saranya 23 Sep, 2022 | 09:02 AM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து நீதியை பாதுகாக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன…

  23. அமரகீர்த்தி எம்.பி.யின் படுகொலை 39 பேர் இதுவரை சி.ஐ.டி.யால் கைது By T. Saranya 23 Sep, 2022 | 09:20 AM (எம்.எப்.எம்.பஸீர்) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் குணவர்தன ஆகியோர் நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இது வரை 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அடித்து கொலை செய்யப்பட்டிர…

  24. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு வெளிநாடு செல்ல கட்டுப்பாடு! அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வாறு பயணங்களை மேற்கொள்ளும் போது, அவசிய தேவைகளுக்காக அழைத்துச் செல்லும் அதிகாரிகளின் எண்ணிக…

  25. யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது! யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.