Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் 17 Dec, 2025 | 04:11 PM டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை…

  2. மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை 17 Dec, 2025 | 02:58 PM யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின், கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர். வீட்டில் இருந்த…

  3. யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணமலை, பலாலி விமானநிலையம், யாழ் கடல்வழி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதைகளை பயன்படுத்தவும், கண்காணிக்கவும் மிக திடமான இடங்களாக அமெரிக்காவால் உணரப்படுகின்றது. அமெரிக்கா அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளும் போட்டிப் போடும் இடங்களாக பலாலி மாறியுள்ளமை தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை மற்றும் Port City Colombo போன்ற இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றம் பெற்றுள்ளது அவதானிக்ககூடியதாக உள்ளது. எனினும் சீனா வடபகுதி மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாது. எனவே …

  4. புதிய இணைப்பு கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அதன் விமானி சாமர்த்தியமாக கையாண்டுள்ளார். பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் (Landing Gear) சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார். அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார். இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனட…

  5. இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி ! Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 04:50 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது. அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இரவு முதல் (18) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க…

  6. 17 Dec, 2025 | 03:24 PM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார். இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் மு…

  7. மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு நிதர்ஷன் வினோத் மண்டைதீவு புதைகுழி வழக்கு அறிக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், செவ்வாய்க்கிழமை (16) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்,மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதாக திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16) அன்று குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன…

  8. நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 11:19 AM டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு ச…

  9. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்! 17 Dec, 2025 | 11:07 AM அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (16) தீர்மானித்துள்ளது. சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தால் இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படும். அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளுவதற்காக இலங்கைக்கு இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படவுள்ளது…

  10. குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல் 17 Dec, 2025 | 09:31 AM குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய முத்திரையிட்டு (சீல் வைத்து) மூடப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத்தலைவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று புதன்கிழமை (17) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார். இந்த சூழலில் வழக்கு விசாரணை முழு…

  11. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு! 17 Dec, 2025 | 10:54 AM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். எழுவைதீவு ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்ற…

  12. யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்! Published By: Vishnu 15 Dec, 2025 | 09:13 PM யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த கட்டடம் அமைப்பதன் மூலம் பயணிகளின் எதிர்நோக்கும் சிரமங்களை தீர்க்க முடியும் என எதிராபார்க்கப்படுதாறது. https://www.virakesari.lk/article/233449

  13. நெடுந்தீவில் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த சிறிதரன் எம்.பி செவ்வாய், 16 டிசம்பர் 2025 05:18 AM டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவுகடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்தொழிலாளர் சங்க கட்டடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினரால் , திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினருடன், கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள், தேவைகள் குறித்து கலந்துரையாடி…

  14. லட்சக் கணக்கான பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிவு டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திருமதி. சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார். அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்த முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அத்திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட…

  15. அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு Dec 9, 2025 - 09:37 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்ட…

  16. மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் Published By: Vishnu 15 Dec, 2025 | 09:32 PM மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது. குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கைய…

  17. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி! 15 Dec, 2025 | 05:47 PM இலங்கையில் 'திட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி குழுமம் ஆழ்ந்த துயரம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தின் போது, இலங்கையர்கள் காட்டிய குறிப்பிடத்தக்க மீள்தன்மைக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மீட்பு முயற்சிகளைத் தொடங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளுக்கும் உலக வங்கி பாராட்டுத் தெரிவிக்கிறது. உலக வங்கியின் 120 மில்லியன் அமெர…

  18. நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு ; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை 15 Dec, 2025 | 05:35 PM (இராஜதுரை ஹஷான்) பண்டிகைக் காலம் மற்றும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி விட…

  19. 15 Dec, 2025 | 02:50 AM சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார். இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான…

  20. மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல் 15 Dec, 2025 | 04:42 PM பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் (TVTC) 2026ம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட பாடசாலை கல்வியினை நிறைவு செய்து இளைஞர், யுவதிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/233427

  21. 5 Dec, 2025 | 12:50 PM அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பினர் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் முத்து ஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய அமைப்பின் முறையீட்டையடுத்து, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நன்னீர் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுட…

  22. பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு! 15 Dec, 2025 | 03:52 PM பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது. மேலும், 'தித்வா' புயலின் போது,…

  23. 15 Dec, 2025 | 02:30 PM பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை இயக்கம் அவசர கடிதம் எழுதியுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் இந்திரானந்த டி சில்வாவின் கையொப்பத்துடனான குறித்த கடிதம் இன்று திங்கட்கிழமை (15) ஜனாதிபதி செயலத்தில் சம உரிமை இயக்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் மக்கள் தொகையில் 25 சத வீதமானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண…

  24. Published By: Digital Desk 3 15 Dec, 2025 | 04:53 PM நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தங்களில் சிக்கி 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டியில் 237 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 88 பேரும், குருநாகலையில் 61 பேரும், புத்தளத்தில் 36 பேரும், கேகாலையில் 32 பேரும், மாத்தளையில் 29 பேரும், கம்பளையில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறையில் 08 பேரும், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் தலா 4 பேரும், யாழ்ப்பாணம், பொலன்னறுவையில் தலா மூவரும், இரத்தினபுரியில் இருவரும், அம்பாந்தோட்டை மற்றும் காலியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளை,…

  25. 15 Dec, 2025 | 03:52 PM 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும். மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.