Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு …

  2. நடேசனின் வீட்டில்... சஜித்தின் தாயார், யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் நடேசனின் இல்லத்தில் யாரை சந்தித்தார் என்பதை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1280312

    • 1 reply
    • 405 views
  3. 65 பேர் மட்டுமே... மக்களுக்காக, நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர்... ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன் நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்தார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போக…

    • 3 replies
    • 529 views
  4. பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான... மாணவர் சம்மேளனத்தின், எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பு ஊர்வலம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. https://athavannews.com/2022/1280323

  5. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளித்தால்... என்ன நடக்கும்? – எதிர்க்கட்சியிடம்... அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் கேள்வி ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால் என்ன நடக்கும் என, அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர், சர்வகட்சி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையுமா, அல்லது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. https://athavannews.com/202…

  6. எரிபொருளுக்கான... வெளிப்படையான விலைச் சூத்திரம், அடுத்தவாரம் – எரிசக்தி அமைச்சு எரிபொருளுக்கான வெளிப்படையான விலைச் சூத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவது இலாபம் ஈட்டுவதற்காக அல்ல என்றும் நட்டத்தைக் குறைப்பதற்காகவே என்றும் அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான எரிபொருளை ரயிலில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது இலங்கையில் போதியளவு பெற்றோல் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மூன்று நாட்களில் பெற்றோல் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் எ…

  7. இன்று, நள்ளிரவு முதல்... சேவையில் இருந்து விலகுவதற்கு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானம்! இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280239

  8. கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்... தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரை, சந்தித்தனர் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எந்த வகையான நடவடிக்கை அல்லது தலையீட்டை எடுக்கலாம் என்பது குறித்து இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர். தற்போதைய நிலைமை தொடர்பாக மக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு தேர்தல்கள்…

  9. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை... ஏற்றிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளது. இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இதுவரை 4 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளினை வழங்கியுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280208

    • 5 replies
    • 402 views
  10. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்…

  11. புதிய விமானங்களை... கொள்வனவு செய்வதற்கான முடிவை. ஒத்திவைக்குமாறு... ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது – சரித ஹேரத்! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இதனை சமர்பித்தார். இதேநேரம், புதிய விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலளித்த அவர், புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கான தனது முடிவை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹேரத் கூறினார். 2022-2025 காலப்பகுதிக்கு 21 விமானங்களை குத்தகைக்கு எடு…

  12. நாளாந்த மின் துண்டிப்பை... 5 மணி நேரமாக, அதிகரிக்கும் நிலை? நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்படும் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280201

  13. சபாநாயகரின் அறிவிப்பினால்... பிரதி சபாநாயகர் தெரிவில், குழப்பம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், கேள்வி நேரத்தினைத் தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறித்த அறிவிப்பினை சபாநாயகர் வெளியிட்டார். இதன்போது கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவளிப்…

  14. அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரில்லை - சரத் பொன்சேகா ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை. அவ்வாறு இடம்பெற்றால் அது புதிய போத்தலில் பழைய சாராயம் போன்றாகும். அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது. ஏனெனில் ஜோன்ஸ்டன், மஹிந்தானந்தவை ஜனாதிபதி, பிரதமராக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொ…

  15. வரவு - செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி வருமானம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் - அலி சப்ரி (எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. வரிக்குறைப்பு செய்தமை தவறான தீர்மானமாகும். சமூக கட்டமைப்பில் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்னராவது தீர்வு காண முடியுமா என குறிப்பிட முடியாது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நடைமுறையில் உள்ள வரவு - செலவு திட்டம் யதார்த்த நிலைமைக்கு பொருந்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி …

  16. யாழ்.பல்கலைக்கு... இந்தியத்துணை தூதுவர், விஜயம்! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280170

    • 6 replies
    • 541 views
  17. நாடாளுமன்ற... நுழைவு வீதிகளுக்கு, பூட்டு – மாற்று வீதிகளை... பயன்படுத்துமாறு அறிவிப்பு நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,நாடாளுமன்றத்தை அண்மித்த தியத்த உயன பொல்தூவ சந்திமுதல் ஜயந்திபுர சந்திவரையான வீதியும் ஜயந்திபுர சந்தி முதல் கியங்ஹேன் சந்திவரையான வீதியும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத…

  18. போராட்டக்காரர்களை கைது செய்த.. பொலிஸ் அதிகாரிகளுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு! போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), குடிமகனின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அமைதியான போராட்டங்களை நசுக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 14(1) (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பது பேச்…

  19. கோட்டா – மைனா கோ கமவில்.. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், தொடர்ந்தும் முன்னெடுப்பு அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 27ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அதேநேரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தி…

  20. நாடாளுமன்றில்.... யாருக்கு, பெரும்பான்மை உள்ளது – முக்கிய வாக்கெடுப்பு இன்று! புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார். அதற்கு ஜனாதிபதியினால் பதிலளிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்…

    • 16 replies
    • 932 views
  21. 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு! சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரி…

  22. நாடாளுமன்ற வளாகத்தில்... கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானவர்களுக்கு... அமோக வரவேற்பு! நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 பேரும் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று மாலை இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதனையடுத்து, வெளியில் வந்த அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலங்கம பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். 10 ஆண்களும் இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ச…

  23. ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஏற்றவாறு... சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது – கொழும்பு பேராயர்! ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்றவாறு சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரை சந்தித்ததன் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தலைவர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மகாநாயக்க தேரர்கள் கூறும் விடயத்தை நிராகரிப்பது நல்லதல்ல எனவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டும் …

  24. அலரி மாளிகைக்கு... முன்பாக அமைக்கப்பட்ட, அனைத்து கொட்டகைகளும்... அகற்றம் !! அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட அனைத்து கொட்டகைகளும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவுக்கு அமைய போராட்டக்கார்கள் குறித்த கொட்டகைகள் மற்றும் கூடாரங்களை அகற்றியுள்ளனர். அலரிமாளிகைக்கு முன்பாக மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280101

    • 2 replies
    • 497 views
  25. அலரி மாளிகைக்கு அருகில்... ஆர்ப்பாட்டம் செய்பவர்களை, வெளியேற்றுமாறு... நீதிமன்றம் உத்தரவு! கொழும்பு, கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களையும், அவர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து அவர்களை வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத் தளத்தில் நடைபாதையில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.