Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்படும் அறிகுறிகள் -CEB பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை -சி.எல்.சிசில்- நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டாலும், அந்த நேரம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடு கட்டுவது நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர் மின…

    • 0 replies
    • 98 views
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை கூறப்போனால் கவலையாக உள்ளது. அவர்கள் மக்களை பற்றி கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை . மக்கள் எழுச்சி போராட்டத்தை பற்றி சிந்தியுங்கள். ஆட்சியாளர்களின் டீல்களை பற்றி சிந்திக்க வேண்டாம். இவ்வாறான டீல்களை பேசுவதை உடனடியாக கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் இவ்வாறான டீல்களை செய்தவர் என்பது எமக்கு தெரியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்…

  3. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு... பொலிஸாரின், விசேட அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலிலேயே அந்தப்ப பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஹர்த்தால் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்றைய தினம், நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்க…

    • 1 reply
    • 236 views
  4. நாடளாவிய ரீதியில்... இன்று ஹர்த்தால் – 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு! அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன. இதேநேரம், இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. ஹர்த்தால் போராட்டத்திற்கு 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய த…

  5. இலங்கை மக்களுக்கு... உதவும், தமிழக முதலமைச்சர் – நன்றி தெரிவித்தார் மஹிந்த..! இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் கையொப்பத்துடன், தமிழக முதலமைச்சருக்கு நேற்றைய தினம் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தத்தில், தமிழக சட்டப் பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை தங்களது நல்…

  6. நல்லூர் கோவில் குறித்து... அண்ணாமலை, புகழாரம். யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் பார்வையிட்டிருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நல்லூர் கந்தசுவாமி கோயில் 13 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும். இவ்வாலயமானது தனிஒரு அற…

  7. மாவனெல்லையில்... புத்தர் சிலை உடைப்பு – 3 வருடங்களின் பின்னர், சந்தேகநபர்கள் விடுதலை மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, விடுவிக்கப்படும் 14 சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறியப்படுத்தியுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனையின…

  8. நாடாளுமன்ற வளாகத்தில், உருவானது... “ஹொரு கோ கம“ பல்கலைக்கழக மாணவர்களினால் நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தினை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று(வியாழக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியிருந்தனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது ‘ஹொரு கோ கம“ என்ற பெயரிலான மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280351

  9. அம்பாறை மாவட்டத்தில்... பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில்... மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்! பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 .30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கி…

  10. பல்கலைக்கழக மாணவர்களின், போராட்டத்தினை கலைக்கும் வகையில்... பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், தடைகளை தகர்த்து முன்னேற முயற்சித்த நிலையில் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1280346

  11. நடேசனின் வீட்டில்... சஜித்தின் தாயார், யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் நடேசனின் இல்லத்தில் யாரை சந்தித்தார் என்பதை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1280312

    • 1 reply
    • 406 views
  12. மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன் 5 மே 2022, 04:50 GMT பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB (இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்ப…

  13. 65 பேர் மட்டுமே... மக்களுக்காக, நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர்... ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன் நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்தார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போக…

    • 3 replies
    • 534 views
  14. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை... ஏற்றிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளது. இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இதுவரை 4 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளினை வழங்கியுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280208

    • 5 replies
    • 408 views
  15. பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான... மாணவர் சம்மேளனத்தின், எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பு ஊர்வலம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. https://athavannews.com/2022/1280323

  16. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளித்தால்... என்ன நடக்கும்? – எதிர்க்கட்சியிடம்... அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் கேள்வி ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால் என்ன நடக்கும் என, அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர், சர்வகட்சி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையுமா, அல்லது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. https://athavannews.com/202…

  17. எரிபொருளுக்கான... வெளிப்படையான விலைச் சூத்திரம், அடுத்தவாரம் – எரிசக்தி அமைச்சு எரிபொருளுக்கான வெளிப்படையான விலைச் சூத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவது இலாபம் ஈட்டுவதற்காக அல்ல என்றும் நட்டத்தைக் குறைப்பதற்காகவே என்றும் அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான எரிபொருளை ரயிலில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது இலங்கையில் போதியளவு பெற்றோல் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மூன்று நாட்களில் பெற்றோல் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் எ…

  18. இன்று, நள்ளிரவு முதல்... சேவையில் இருந்து விலகுவதற்கு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானம்! இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280239

  19. கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்... தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரை, சந்தித்தனர் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எந்த வகையான நடவடிக்கை அல்லது தலையீட்டை எடுக்கலாம் என்பது குறித்து இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர். தற்போதைய நிலைமை தொடர்பாக மக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு தேர்தல்கள்…

  20. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்…

  21. புதிய விமானங்களை... கொள்வனவு செய்வதற்கான முடிவை. ஒத்திவைக்குமாறு... ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது – சரித ஹேரத்! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இதனை சமர்பித்தார். இதேநேரம், புதிய விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலளித்த அவர், புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கான தனது முடிவை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹேரத் கூறினார். 2022-2025 காலப்பகுதிக்கு 21 விமானங்களை குத்தகைக்கு எடு…

  22. நாளாந்த மின் துண்டிப்பை... 5 மணி நேரமாக, அதிகரிக்கும் நிலை? நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்படும் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280201

  23. சபாநாயகரின் அறிவிப்பினால்... பிரதி சபாநாயகர் தெரிவில், குழப்பம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், கேள்வி நேரத்தினைத் தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறித்த அறிவிப்பினை சபாநாயகர் வெளியிட்டார். இதன்போது கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவளிப்…

  24. 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு! சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரி…

  25. இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை தேவை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழகத்திலிருந்து பொருள்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.