ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142887 topics in this forum
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசம்! பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர். தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்”என்ற கோரிக்கையினை முன்வைத்து கையெழுத்துப்போராட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது. வாலி…
-
- 1 reply
- 334 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டடத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சி தனியோட்டம் ? தமிழரசுக்கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக ஒரு கையெழுத்து வேட்டைப் போராட்டத்தை நடத்திவருகிறது.இப்போராட்டத்திற்கு மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது.தமிழ் பகுதிகள் எங்கும் தமிழரசுக்கட்சியினர் பொது இடங்களில் நின்று கையெழுத்துக்களை வாங்கிவருகிறார்கள். சுமந்திரன் தென்னிலங்கையில் உள்ள பிரமுகர்களைத் தேடிச்சென்று கையெழுத்து வாங்கிவருகிறார். அவருடைய இம்முயற்சிக்கு விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஆதரவைக் காட்டியுள்ளன. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் பயங்கரவாதத் தடைச்ச…
-
- 0 replies
- 313 views
-
-
நாட்டின் சவால்களை ராஜபக்சக்களால் வெற்றிகொள்ள முடியும் இலங்கையின் முதலாவது பாலமான பாமன்கடை சந்தியில் நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு, ஹொரணை 120 வீதியில் நிர்மாணிக்கப்படும் புதிய பாமன்கடை பாலத்தின் நிர்மாணப் பணிகளால் வீடுகளை இழக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய வீடுகளின் சாவியை ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கையளித்தார். பாமாங்கடையில் புதிய பாலம் கட்டுவதற்காக வீடுகள் அகற்றப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக நகர அபிவிருத்தி அதிகார…
-
- 0 replies
- 222 views
-
-
இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) பிற்பகல் தெரிவித்தார். கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒஸ்திரிய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கிரம-கடுவான நீர் வழங்கல் …
-
- 0 replies
- 225 views
-
-
மீண்டும் அதிகரிக்கப் படுகின்றது.... பேருந்து கட்டணம்! நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளுக்கு விசேட மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அவ்வாறு மானியம் வழங்கப்படாவிட்டால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1269388
-
- 1 reply
- 225 views
-
-
மூன்று வருடங்களாக.... இடைநிறுத்தப் பட்டிருந்த, மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்! மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவையடுத்து பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் மீண்டும் விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர். எனினும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மன்னார் நீதவானிடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது 90 சதுர அடி பரப்பளவில் புதைகுழி உள்ள பகுதி பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பில்…
-
- 0 replies
- 121 views
-
-
எரிபொருள் பிரச்சினை காரணமாக.... பேருந்து சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்க வேண்டிய நிலை! எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டீசல் இல்லாவிட்டால், பெரும்பாலும் நாளை(திங்கட்கிழமை) முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். http…
-
- 0 replies
- 179 views
-
-
ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைதான விவகாரம் : குற்றவாளிகளுக்கு இலங்கை தண்டிக்காவிடின் வேறு தெரிவுகள் இருப்பதைக் காண்பிக்கிறது - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் (நா.தனுஜா) ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது, குற்றங்களைப்புரிந்தவர்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்பதையும் அத்தகைய குற்றங்களுக்கு இலங்கைபோன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால், அதனைச் செய்வதற்கான வேறு தெரிவுகள் உள்ளன என்பதையும் காண்பிக்கின்றது என்று சர்வதேச மனித உரிமைசார் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. பி.பி.சி செய்திச்சேவையின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய சந்தே…
-
- 0 replies
- 139 views
-
-
மக்களின் சுதந்திரம், எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை - ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, நேற்று (26) முற்பகல், எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத…
-
- 0 replies
- 247 views
-
-
ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கின்றோம் - சுமந்திரன் (ஆர்.ராம்) அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்புக்கான தேவையை வலியுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கையில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய பலவிடயங்களை சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை முழுமையாக வரவேற்கின்றது என்று அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய, ‘இலங்கையில் …
-
- 1 reply
- 163 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துங்கள் - ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியது த.தே.ம. மு (ஆர்.ராம்) தமிழர்களின் தாயகத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்களுக்கான பொறுப்புக்கூறலைச செய்வதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்லெட் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமைப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது. http://media.webdunia.com/_media/ta/img/article/2015-10/30/full/1446191799-869.jpg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற …
-
- 0 replies
- 97 views
-
-
மன்னாரை சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு. February 27, 2022 இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இ…
-
- 11 replies
- 788 views
- 1 follower
-
-
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாட்டில் தளர்வு! வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாட்டுக்கு வருகை தருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்…
-
- 1 reply
- 252 views
-
-
யாழில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள் February 26, 2022 பொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முண்டியடித்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை. அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரி பொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு ஏனைய பதுக்கல்,சேமித்து வைக்கும் முகமான கொள்வனவிற்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 125 views
-
-
உக்ரைனில் உள்ள இலங்கையர்களை, போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்! இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது 59 இலங்கையர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 20 பேர் தலைநகர் கியுவ்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1269331
-
- 1 reply
- 290 views
-
-
சுரங்கப் பாதையில் இருந்து இலங்கை மாணவன் வௌியிட்டுள்ள வீடியோ! ரஷ்ய இராணுவ படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கை இளைஞன் ஒருவர் ´அத தெரண´விற்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ரஷ்ய தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தானும் உக்ரேனியர்களுடன் ரயில் சுரங்கப்பாதைக்கு வந்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாத பலர் நேற்று முதல் நிலத்தடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். "நான் உக்ரைனில் படிக்கும் இலங்கை மருத்துவ மாணவன். நான் தற்போது கியூவில் இருக்கிறேன். இலங்கை செல்ல நாம் போலந்து செல்ல வேண்டும்." "அதற்கு, நாம் போலந்து எல்லைக்கு அருக…
-
- 3 replies
- 431 views
-
-
நெருக்கடிக்கு தீர்வாக... மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை, நாட அரசாங்கம் தீர்மானம்! மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். தற்போதைய நாணயமாற்று நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2022/1269261
-
- 4 replies
- 498 views
-
-
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!! இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலாத்துறையின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்பார்த்தபடி, இலங்கைக்கு வரும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2022/126…
-
- 0 replies
- 203 views
-
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை ! இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் காணப்படும் அசமந்தப்போக்கே தமது விசனத்திற்கு காரணம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். 49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இராணுவமயமாக்கல், இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார். இருப்பினும் பயங்…
-
- 1 reply
- 222 views
-
-
இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது! February 26, 2022 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் நட்டாங்கண்டல் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமான முறையில் முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு …
-
- 1 reply
- 353 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி, EPDPபியும் பிரேரனை! February 26, 2022 இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் 48வது அமர்வு நேற்றைய தினம் காலை 9 மணிக்கு சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பிடி.பி) பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய பிரேணையொன்று சபைக்கு கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணை சபை உறுப்பினர்களால் …
-
- 1 reply
- 216 views
-
-
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் தொலைபேசியில் ,இலக்கம் இருந்தமையால் 20 மாதங்கள் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் February 26, 2022 இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் தமது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை மற்றும் அவரது தொலைபேசியில் தமது திருமண அழைப்பிதழ் இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக தான் தமது கணவன்மார் கைது செய்யப்பட்டனர் என சிறையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர். யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களின…
-
- 0 replies
- 260 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு எதிராக போராட தீர்மானம்! February 25, 2022 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். வலி தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. அதன் போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இடை…
-
- 0 replies
- 281 views
-
-
(நா.தனுஜா) உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்றும் ஏனைய நாடுகள் இதனைப் பின்பற்றுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு அளவிலான படையெடுப்பிற்கு சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பொது கட்டமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் இணக்கப்பாட்டுடன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள …
-
- 3 replies
- 419 views
-
-
தற்போது இலங்கை வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0032.jpg உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0031.jpg ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனியர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
- 4 replies
- 555 views
-