Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மதுரை அயிரை மீன் குழம்பு மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியாக ஸ்பெஷான ஒன்று என்றால் அது அயிரை மீன் குழம்பு தான். இந்த மீன் குழம்பு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். உங்களுங்கு இந்த மீன் குழம்பை சுவைக்க ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அந்த மதுரை அயிரை மீன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து விடுமுறை நாளில் செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: அயிரை மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 250 கிராம் (தோலுரித்தது) தக்காளி- 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீ…

  2. காரைக்குடி முட்டை குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரைக்குடி முட்டை குழம்பு காரமாக இருப்பதோடு, நல்ல ருசியோடு இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது காரைக்குடி முட்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 5 சின்ன வெங்காயம் - 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு …

  3. உருளைக்கிழங்கு தயிர் கிரேவி இதுவரை உருளைக்கிழங்கைக் கொண்டு குழம்பு, பொரியல், வறுவல், பஜ்ஜி என்று சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கை தயிருடன் சேர்த்து கிரேவி செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், அதனை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தயிர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பிரியாணி இலை - 1 கடலை மாவு - 2 டீஸ்பூன் தயிர் - 4 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் ம…

  4. தினை லாடு (தினம் ஒரு சிறுதானியம்-17) உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றோ தவிடு நீக்கி, பாலீஷ் செய்த அரிசியை மட்டுமே சாப்பிட்டுவருவதால், உடலில் போதிய வலுவின்றி, நோய்களுக்கு ஆளாகித் தவிக்கிறோம். தெவிட்டாத தேனும் தினை மாவும் கலந்து செய்யும் இந்த லாடுவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்; ஆரோக்கியம் கூடும். பலன்கள் அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்த…

  5. சிம்பிளான... கோவைக்காய் ப்ரை பலருக்கும் கோவைக்காய் பிடிக்காது. இதற்கு காரணம் அதனை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் இருப்பது தான். ஆனால் உண்மையில் கோவைக்காய் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒருமுறை சமைத்து சாப்பிட்டால், அடிக்கடி சமைத்து சாப்பிடத் தோன்றும். அதிலும் கோவைக்காயை சிம்பிளாக ப்ரை செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இந்த கோவைக்காய் ப்ரை, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த கோவைக்காய் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோவைக்காய் - 250 கிராம் சீரகம் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1/2 டேபிள…

  6. கேழ்வரகு மிச்சர் (தினம் ஒரு சிறுதானியம்-16) இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து! பலன்கள் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு …

  7. சிறுதானியக் கஞ்சி (தினம் ஒரு சிறுதானியம்-14) ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. பலன்கள் அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அள…

  8. சாமைக் காரப் புட்டு (தினம் ஒரு சிறுதானியம்-13) சத்தான சிறுதானியங்களில் தினமும் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு சாமை. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ட்ரைகிளசரைடு என்ற கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளது. பலன்கள் சாமையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால், செல் சிதைவடைவது கட்டுப்படுத்தப்படும். பொதுவாக வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைதான் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. உடலிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணியாக அமைந்துவிடும். சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள், மலச்சிக்கலைத் தடுப்பதுடன் வலுவைக் கூட்டும் உணவாகவும் இருக்கிறது. வயிறு …

  9. கம்பு வெஜிடபிள் கஞ்சி (தினம் ஒரு சிறுதானியம்-11) உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கும் தானியம் கம்பு. இதில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், பீட்டாகரோட்டின், நியாசின், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. தினமும் கம்பை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் மற்றும் சத்துக்குறைப்பாட்டைப் போக்கலாம். ஆரோக்கியத்தைக் கூட்டலாம். பலன்கள் ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். டீன் ஏஜ் பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரை…

  10. சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில், சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்.. பெரும்பாலான மக்கள் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் வீட்டு ரசாயன ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். சில சமையல் பாத்திரங்களும் எவ்வாறு நம் உடலை பாதுகாக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் காட்டுகின்றன. சில "பாரம்பரிய " சமையல் பாத்திரங்கள் எவ்வாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கின்றது என்பதை காண்போம். ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்! இங்கு சமையல் பாத்திரங்களின் வகைகளும், அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (STAINLESS STEEL) ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல தரங்கள் உள்ளன. வழக்கமாக பயன்படுத்தும் ஸ்டெ…

  11. குதிரைவாலி கேப்பைக் கூழ் (தினம் ஒரு சிறுதானியம்-10) வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது. குதிரைவாலி கேப்பைக் கூழ் செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். 50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும். தண்ணீரில் கையை நனைத்துவ…

  12. மல்டி கிரெய்ன் ரொட்டி (தினம் ஒரு சிறுதானியம்-9) இன்று பெரும்பாலான வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்திதான் உணவாக இருக்கிறது. இதயநோய், சர்க்கரை நோய், ஒபிசிட்டி என நோயின் பாதிப்புகள் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம். கோதுமையைப் பயன்படுத்தி மட்டுமே சப்பாத்தி செய்யாமல், சிறுதானியங்கள், பயறு வகைகளையும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி செய்வது உடலுக்கு வலுவைக் கூட்டும். இதனுடன் காய்கறி கலவைச் சேர்த்துக்கொண்டால், ஒட்டுமொத்த சத்தும் உடலில் சேரும். மல்டி கிரெய்ன் ரொட்டி தேவையானவை: முழு கோதுமை, மக்காச்சோளம், முளைக்கட்டி காயவைத்த கேழ்வரகு, தோல் நீக்காத கறுப்புக் கொண்டைக்கடலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கொடுத்துள்ள தானியங்களை சம அளவு எடுத்து, நைஸாக அரைத்து மாவாக்கவும். இதை ந…

  13. கேழ்வரகு இட்லி (தினம் ஒரு சிறுதானியம்-8) ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கேழ்வரகு இட்லி செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் …

  14. வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் வாழைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய வாழைக்காய் வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் என்று பலரும் இதனை அதிகம் உணவில் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவற்றை சேர்க்க வேண்டியது அவசியம். இதனால் வாய்வு தொல்லை ஏற்படாமல் இருக்க, சமைக்கும் போது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டால் போதும். இங்கு வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 …

  15. [size=4]வெண்டைக்காய் அடிக்கடி வாங்கி, நன்கு சுவையாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, பி உயிர்ச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இது உடலில் சிறுநீரைப் பெருக்கும், நாள்பட்ட கழிச்சல் நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். அதிலும் அந்த வெய்டைக்காயை மசாலா போல் செய்து, சாதத்தோடு போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு அளவே இருக்காது. அத்தகைய வெண்டைக்காயை வைத்து எப்படி மசாலா செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் …

  16. ராகி வேர்க்கடலை அல்வா (தினம் ஒரு சிறுதானியம்-7) ஒரு கிலோ கேழ்வரகை நீரில் ஊறவைத்து, வடித்து, முளைக்கட்டிய பின் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளைச் செய்யலாம். முழுமையான சத்துக்கள் சேர்ந்து, உடலுக்கு வலுவைக் கூட்டும். ராகி வேர்க்கடலை அல்வா 100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ சர்க்கரை, கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்ய…

  17. சோளம் ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-6) அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோளத்துக்கு முக்கிய இடம் உண்டு. சோளத்தை முழுதாக அல்லது உடைத்து, வேகவைத்து சாதமாகச் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி, சப்பாத்தியாகவும் செய்யலாம். அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதச்சத்து நிறைந்து இருப்பதால், வெளிநாடுகளில் சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர். உடலுக்கு உறுதியைத் தந்து, ஆரோக்கியத்தைத் தக்கவைக்கும் சோள உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது. சோள ரவை கொழுக்கட்டை செய்முறை: கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், கறிவேப்பிலைச் சேர்த்து, மூன்று கப் தண்ணீரை விடவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் க…

  18. சிறுதானிய கார அடை (தினம் ஒரு சிறுதானியம்-5) குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்…

  19. வரகு ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-4) பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம். பலன்கள் நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத…

  20. என்னென்ன தேவை? பாகற்காய் - 5, சாதம் - தேவையான அளவு. தாளிக்க... கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., மெலியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, நறுக்கிய தேங்காய் - 1/4 மூடி. சேர்க்க வேண்டியவை... மஞ்சள் தூள் - சிறிது, தனி வத்தல் பொடி - சிறிது, உப்பு - தேவையான அளவு, கொத்த மல்லி இலை - சிறிது. எப்படிச் செய்வது? பாகற்காயை நன்றாகக் கழுவி விதையெடுத்து பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது எண்ணெயில் வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கியதும் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் பாகற்காய், மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, உப்பு …

    • 0 replies
    • 357 views
  21. தினை ரெசிபி ( தினம் ஒரு சிறுதானியம் - 2) தினைக்கு ஆங்கிலத்தில், 'இத்தாலியன் மில்லட்' என்று பெயர். உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானிய வகைகளில் ஒன்று. இனிப்புச் சுவைகொண்டது. பலன்கள் தினையோடு, எள் சேர்ப்பதால், கால்சியம் நிறைவாகக் கிடைக்கும். இதனால், எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும். தினை, எள் சாதம் ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத் த…

  22. குதிரைவாலி ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-3) சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பலன்கள் குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி 300 கிராம் - பீன்ஸ், கேரட், 100 கிராம் - வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர…

  23. தினம் ஒரு சிறுதானியம்... சாமை ரெசிபி! இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன. உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி. சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினம் ஒரு சிறுதானியம் பற்றிய …

  24. இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….? June 19, 20151:29 pm இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும். ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு. ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்…

  25. சிம்பிளான... வெஜிடேபிள் தம் பிரியாணி உங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வெஜிடேபிள் தம் பிரியாணி செய்ய சற்று நேரம் ஆனாலும், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தம் பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை- 2 மிளகு - 5 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.