நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
639 topics in this forum
-
இன்று சர்வதேச மகளிர் தினம் Mar 8, 2026 - 06:55 AM பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. முதலாவது மகளிர் தினம் 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், 1910 ஆம் ஆண்டில் ஜேர்மனிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் என்பவரால் இது சர்வதேச தினமாக முன்மொழியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. பின்னர் 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக மா…
-
- 3 replies
- 184 views
- 1 follower
-
-
மகா சிவராத்திரி விரதம் இன்று Feb 15, 2026 - 06:15 AM இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது. சிவராத்திரி கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் "யார் பெரியவர்?" என்ற போட்டி எழுந்தபோது, சிவன் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாகத் தோன்றினார். அதன் அடி மற்றும் முடியைக் காண முடியாதபடி நின்ற அந்த நாளை 'சிவராத்திரி' என்கிறோம். அதேநேரம் சிவபெருமானும் அன்னை பார்…
-
- 2 replies
- 168 views
- 1 follower
-
-
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்ற…
-
- 0 replies
- 148 views
-
-
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல். கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு…
-
- 1 reply
- 153 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 Jan, 2026 | 05:55 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (10) இடம்பெற்றது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின…
-
-
- 2 replies
- 236 views
- 1 follower
-
-
அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா Dec 21, 2025 - 08:44 AM உலகப்புகழ் பெற்ற கவித்துவக் கலைஞர் அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா நேற்று (20) மாலை இணுவில் அறிவாலயத்தில், இணுவில் கலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வாகீஸ்பரன், அவரது பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன்போது, இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து வாகீஸ்பரனுக்கு வேல் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து இணுவில் அறிவாலயத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த கௌரவிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! 🎂 இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருணன்! லண்டன் மண்ணில் உதித்த அழகன் கண்களில் மின்னும் புன்னகை நதி ஆண்டுகள் பறந்தாலும் மங்காத பாசம் விண்மீனாய் எங்கள் குடும்பத்தின் ஒளி!🌸 காழ்ப்புணர் வில்லா வாழ்க்கை கொண்டவனே ஆழ்ந்த அன்பின் மறு உருவமே தாழ்ந்த எண்ணம் அற்ற சுடரே யாழ்ப்பான வேரின் செடியே நீடூழிவாழ்க!🌸 அறிவும் ஆற்றலும் இணைந்து என்றும் அழகு தெய்வமாய் பிரகாசிக்கும் அருணனே அடக்கமும் பணிவும் இரண்டையும் கொண்டு அருமையான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!🌸 பன்னிரண்டு ஆண்டுகள் சென்றது போலவே இன்பம் என்றும் உன்னச் சூழ சின்ன அனிகா சேர்ந்து விளையாட வான் எங்கும் பிறந்தநாள் ஒலிக்க…
-
-
- 2 replies
- 251 views
-
-
மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து இந்திரா லோகத்தை கனடாவில் அமைத்து இதயங்கள் இணைந்த நல்ல நாள் இன்பம் பொழியும் திருமணநாள் மகளே! நடனத்தின் நயம் இசையின் இனிமை அன்பின் அலை நீயே மதுரா! அமைதியின் ஆழம் உள்ளத்தில் பலம் பாசத்தின் கடல் நீயே ஹரி! ஆண்டுகள் கடந்தாலும் அன்பு நிலைக்கும் ஆயிரம் நடந்தாலும் உண்மை வாழும் முடிவில்லா ஒளியால் வாழ்வை நிரப்ப பெற்றோரின் வாழ்த்து ஆறாய் பாயட்டும்! புன்னகை விடியலை ஒளிரச் செய்ய அமைதி என்றும் உங்களைத் தழுவ உரிமைக்கு இடமளித்து உணர்வினை மதிக்க இனிதாய் வாழ்ந்திடுக அகிலம் போற்ற !💖 "இன்று போல் என்றும் இணைபிரியாம…
-
-
- 2 replies
- 343 views
-
-
"என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] இன்று இன்னுமொரு அகவை நாள் மெழுகுவர்த்தி தவிர்த்து தெளிவைத் தேடுகிறேன் மனதில் ஒளியை ஏற்றி உண்மை தேடுகிறேன் கடந்த பாதையை மீண்டும் பார்க்கிறேன்! சில நேரங்களில் நான் சிரித்துக்கொண்டே சில நேரங்களில் நான் அமைதியாக அதிகம் பேசும் நண்பனைப் போல வாழ்வு எனக்கு துணையாய் வந்தது! அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய நாட்களும் உண்டு அறிவுகொண்டு உணர்ந்த இரவும் உண்டு! ஆரம்பித்த எதுவும் முடிவு காணும் ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்கும் ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்! இன்பம் துன்பம் சம பங்கே இரண்டு…
-
- 0 replies
- 146 views
-
-
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] பிறந்தநாளில் என்னை திரும்பிப் பார்த்தேன் ஆண்டுகளை அல்ல, அனுபவங்களைக் கண்டேன்! பனைமரக் காடுகளின் மண்ணிலே பிறந்தேன் இன்னும் கடல்கள் என்பெயரை கிசுகிசுக்குது! வேலை முடித்து ஓய்வு எடுக்கிறேன் கடிகாரத்தின் கட்டளை மறந்து போனேன்! ஓய்வூதியம் அல்ல, நினைவுகளே என்செல்வம் அன்பும் இழப்பும் சேர்ந்தது என்ஊதியம்! தந்தையின் குரலும் தாயின் வருடலும் அக்காவின் புன்னகையும் மனதில் தெரியுது! மூன்று சகோதரர்கள் வாழ்வை முடித்தாலும் அவர்களின் நினைவுகள் இதயத்தில் ஒளிருது! காலங்கள் எல்லாம் ஆதரவளித்த மனையாள் காத்திருக்காமல் இடையில் மறைந்தது எனோ! ஒவ்வொரு விடியலிலும் அவள் புன்னகை உண்டு ஒவ்வொரு …
-
-
- 3 replies
- 189 views
- 1 follower
-
-
💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்…
-
-
- 2 replies
- 206 views
-
-
கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று! படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது இதன்போது சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பொது நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். https://athavannews.com/20…
-
- 3 replies
- 288 views
- 2 followers
-
-
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகல…
-
-
- 4 replies
- 356 views
- 1 follower
-
-
கிருஷாந்தி நினைவேந்தல் சனி, 06 செப்டம்பர் 2025 01:43 AM 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது. நிகழ்ச்சி நிரல்: காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் காலை 9.30 – நினைவுப் பகிர்வு காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல் மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினை…
-
- 7 replies
- 285 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகனின், தேர்த் திருவிழா இன்று 06.09.2025
-
- 1 reply
- 155 views
-
-
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பஞ்ச கோபுரங்களைக் கொண்ட தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 மகோற்சவ பெருவிழாவில் இன்று காலை பக்தர்கள் புடை சூழ இனிதே இடம்பெற்றது. இதன்போது அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரிலே ஆரோகணித்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்களுக்கு அருள் க…
-
- 1 reply
- 137 views
-
-
Published By: Vishnu 29 Aug, 2025 | 03:39 AM தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம். https://www.virakesari.lk/article/223647
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
"அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] ஆகஸ்ட் 6, 1945 அன்று, இரண்டாம் உலகப் போரின் போது (1939-45), ஒரு அமெரிக்க B-29 குண்டுவீச்சு விமானம் உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது B-29 நாகசாகியின் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. ஒரு ஆகஸ்ட் 6, மற்றும் ஆகஸ்ட் 9, ஆகிய தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு நான் சென்ற போது, அங்கு முன்பு ஏற்பட்ட பேரழிவை என் கண்களால் நேரடியாக பார்த்த பிறகு, முன்பு அறிவும் உண்மையான விளக்கமும் வர நீண்ட காலமாக இருந்ததாக உணர்ந்த நான், இப்போது, அது எனக்கு வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல …
-
- 0 replies
- 144 views
-
-
"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு] எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய பார்வையால் சிதைந்து பிரிந்து போகாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து வார்த்தைகள் பிறக்கிறதோ எங்கே அயராத முயற்சி சோர்வுயின்றி முழுமை நோக்கி கரங்களை நீட்டுதோ எங்கே பகுத்தறிவின் தெளிவான நீரோடை பாலைவன மணலில் வழி தவறிப் போகவில்லையோ எங்கே எப்பொழுதும் விரியும் சிந்தனையும் செயலும் மனதை முன்னோக்கிச் செலுத்துகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என் தந்தையே என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள்! [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] “Where the mind is with…
-
- 0 replies
- 114 views
-
-
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை] அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாண…
-
- 0 replies
- 127 views
-
-
"பத்து வயதில் பிரகாசிக்கும் எங்கள் நட்சத்திரம், திரெனுக்கு" [18 / 07/ 2025] பத்து அகவையில் காலெடுத்து வைப்பவனே பக்குவமாய் பழகும் பண்பாட்டு நட்சத்திரமே பரந்த இங்கிலாந்தில் பிறந்த திரனே [Dhiran] பந்தாடும் அழகில் பரவசம் அடைகிறேனே! ஆர்சனல் வீரன்போல் ஆட்டத்தில் ஆடுபவனே ஆர்வமாய் பாய்ந்து தடுக்கும் புலியே ஆகாயத்தை ஒளிரவைக்கு மைக்கல் ஜாக்சனே ஆச்சரியம் கொள்கிறேன் உன் திறமையிலே! இனிய தம்பிகள் நிலன் மற்றும் ஆரினுடன் இரவியின் மூன்று குதிரைகளாக பயணிப்பவனே இன்றும் என்றும் பெற்றோரின் ஆசிகளுடன் இல்லமும் நாடும் மகிழ வாழ்கவாழ்கவே! தேர்வுகள் கடந்து வலிமைகளை பெற்று தேசத்தின் வீரனாய் எழுந்து வருபவனே தேவதை ஆன அம்மம்மாவின் வாழ்த்து தேய்ந்து போகாமல் உன்னை வழிநடத்துமே! மே…
-
- 0 replies
- 140 views
-
-
🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025) பதினெட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் உன் நினைவுகள் நெஞ்சில் என்றும் வாழுமே! கந்தர்மடம் ஆத்திசூடியில் அவதரித்த தேவதையே ஆசிரியரின் பாசத்தில் உருவான அழகு ஓவியமே! வேம்படி பள்ளியின் அறிவு விளக்கே உயிரியல் பாடத்தில் ஒளிர்ந்த பெதுமையே! இருபத்தாறு வயதில் மணமகளாய் மலர்ந்து அத்தியடியின் மருமகளாய் வலதுகால் பதித்தாயே! யாழின் நினைவுடன் இங்கிலாந்து சென்றாய் விதியை வென்று, வாழ்வை வளமாக அமைத்தாய்! தமிழும் ஆங்கிலமும் சமநிலையில் போற்றினாய் பழமை புதுமையைச் சேர்த்து பூந்தோட்டமானாய்! மூன்று மழலைகளின் அன்புப் பாசத்தாயே கருணையும் அறிவும் வாரி அளித்த குருவே! நடனம், இசை, விளையாட்டு அனைத்தையும…
-
-
- 9 replies
- 510 views
- 2 followers
-
-
திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும் முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான "இலங்கை வரலாறு" எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார். நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந…
-
- 1 reply
- 181 views
-
-
பிறந்த நாள் நினைவு கூறல்: 'திரு வீரகத்திப்பிள்ளை கணபதிப்பிள்ளை கந்தையா' (11/06/1907 – 18/02/2000) பிறந்த நாள் இன்று உங்களுக்கு அப்பா நெஞ்சினாலே உங்கள் நினைவு மலர்கிறதே! பிறந்தாலும் மறைந்தாலும் நீங்கள் வாழ்கிறீர்கள் எங்களுள் எப்போதும் தீபமாய் ஒளிர்கிறீர்களே! சாமக்கோழி கூவும் போது எழுந்தீர்கள் நல்லூர் கந்தனை வணங்க சென்றீர்களே! வெள்ளைவேட்டி கட்டி சால்வை அணிந்து நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடந்தீர்களே! சாவும் வரை சளைக்காமல் உழைத்தீர்கள் சாதாரண வாழ்க்கையையும் இனிமை ஆக்கினீர்களே! உண்மையைச் சொன்னீர் உன்னதமாய் வாழ்ந்தீர் ஒப்பில்லா மகத்துவம் உங்களிடம் இருந்ததே! சான்றோரை மதித்தீர் கற்றோரை போற்றினீர் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறீர்களே! உங்கள் பெயரில் புகழு…
-
- 0 replies
- 170 views
-
-
"சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்" 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோடையின் ஈரப்பதமான அரவணைப்பில், ஆனந்த் என்ற கூச்ச சுபாவமுள்ள, கண்ணாடி அணிந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பிரமாண்டமான யாழ்ப்பாண பொது நூலகத்தின் சாளரத்தின் அருகில் நின்று, வெளியே, தான் படித்த பாடசாலை, யாழ் மத்திய கல்லூரியையும், தான் விளையாடிய அதன் மைதானத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால், அவன் விரல்கள் நீலத் துணியால் கட்டப்பட்ட, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில், எழுதப்பட்ட, சிங்கள மற்றும் தமிழர் வரலாற்றின் நெருங்கிய தொடர்புகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் அதன் பாரம்பரியத்தையும் வரலாற்று ரீதியாக கூறும் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்ற புத்தகத்தின்…
-
-
- 3 replies
- 771 views
- 1 follower
-