கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் "சொல்லச் சொல்ல இனிக்குதடா - முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை...' அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்த பாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம். "முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று...'' "வாங்க சார் !''- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்.. "என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?'' ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் வீ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கயிறு! இயற்கை எழில் மிகுந்த அந்த கிராமத்தில், மரத்தின் நிழலில் உட்கார்ந்து, தேனீர் அருந்திக் கொண்டிருந்தான், ரகு. உடலை தழுவிச் செல்லும் தென்றல், பறவைகளின் இசை தாலாட்டில் சொக்கிப் போனான். 'எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதையெல்லாம் அனுபவித்து...' என்று எண்ணியவனுக்கு, 'இனி, மறுபடியும் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் அமையப் போவதில்லை...' என்பதை நினைக்கும் போது, பயமாக இருந்தது. தேனீர் கடையில் உட்கார்ந்திருந்த இருவர், அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து எழுந்து, நடந்தான், ரகு. அவர்களும் அவனை பின் தொடர்ந்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல், எதிரே இருந்த பெட்டிக் கடையில், பீடி வாங்கி பற்ற வைத்தபடி, கடைக்காரரிடம் பத்மினிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
அந்திமத் தேடல் செத்துப் போய் விடுவோமோ என முதல் முறையாக எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. என்னுடைய வயது, அனுபவம், தேசாந்திரியாக ஊர் சுற்றியது, மழை, வெள்ளம், நெருப்பு...இப்படி இயற்கையை மூர்க்கமாக எதிர் கொண்ட போதெல்லாம் கூட, இறப்பு என்னைத் தழுவி விடுமோ என நான் எப்போதும் அஞ்சியதில்லை. கேவலம், பசியால் செத்து விடுவோமோ...? பசியின் கோரத்தால் குடல் மேலெழுந்து, மூச்சே கழுத்தை நெறிக்கிறது. என்னுடைய வயசு என்ன இருக்கும்? தோற்றத்தைக் கொண்டு கணிப்பவர்கள் எனக்கு 70, 80 வயது இருக்கும் எனச் சொல்வார்கள். வயிறு என்று ஒன்று இருந்தால்தானே பசி எடுப்பதில் நியாயமிருக்கும்?! கடைசியாக எப்போது, என்ன சாப்பிட்டேன…
-
- 2 replies
- 1k views
-
-
நான்காம் தோட்டா - சிறுகதை “பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.” பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை. டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள். நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி. ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி க…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பேரம் காரிலிருந்தபடியே நடமாடும் காய்கற…
-
- 1 reply
- 4.1k views
-
-
பால்ய பொழுதொன்றில் - குலசிங்கம் வசீகரன் பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன…
-
- 4 replies
- 1.7k views
-
-
திருக்கார்த்தியல் - சிறுகதை இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்கக் கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில் இருக்கும் மன்னத்தேவன் கோயிலின் பின்புறம் இருந்தது. செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, சாலையூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க வந்தான். மெலிந்த தேகம்,…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு இனிய உதயம்! – சிறுகதை ''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க?'' ''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.'' ''நான் என்ன கேட்கிறேன்? நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன?'' ''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.'' ''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...'' ''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம…
-
- 1 reply
- 2.2k views
-
-
கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! ம.காமுத்துரை ‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’ புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாச…
-
- 1 reply
- 915 views
-
-
. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு ப…
-
- 0 replies
- 923 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பயம்! பு றப்படும்போதுதான் கடிகாரத்தைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுமித்ரா - சிறுகதை மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத வயசாச்சு. இன்னும் மனசுக்குள்ளயே படிச்சி பாடத்தைப் புடிச்சி வச்சிக்கத் தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டே இரண்டாவது மகளின் - வாணிக்கு நேர் மூத்தவளின் - கூந்தலில் ஈருளியைவிட்டு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசம். “வயசுக்கு வந்து ஆறேழு வருஷம் ஆச்சு...…
-
- 0 replies
- 3.1k views
-
-
காத்திருப்பு தமிழ்நதி ஓவியம் : ஜீவா புகைப்படங்கள் ; அனாமிகா வெயில் எரிக்கும் ஜூலை மாதத்தின் பின்மதியப் பொழுதொன்றில், அப்போதுதான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிடவென்று குசினிக்குள் அமர்ந்த கோகுலனை, அம்மாவிடமிருந்து பிரித்து ஜீப்பினுள் இராணுவம் எறிந்தபோது அவனுக்கு வயது பதினேழு. உள்ளங்கைக் குழி கொள்ளுமளவு எண்ணெய் வைத்து வாரினாலும் அடங்காத அடர்ந்த தலைமயிரில் ஒருவனும் கால்களில் இருவருமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் எறிந்தார்கள். அப்போது கோகுலனின் அப்பா வயலுக்குப் போயிருந்தார். கதறியபடி ஜீப்பினருகில் ஓடிச்சென்ற ஞானம்மாவை ஒருவன் ஓங்கி அறைந்தான். உலர்ந்த சருகொன்று கிளையிலிருந்து மண்ணில் வீழ்வதென அவர் ஓசையெழுப்பாது புழுதியில் சரிந்தார். ஜீப்பின…
-
- 0 replies
- 2k views
-
-
குதிரை வண்டி! சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் - பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ரசிப்பேன். சக பயணியரின் நடை, உடை பாவனை, பேச்சுகளை ஆராய்வேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார்; பயணச் சீட்டையும், ஆதார் அட்டையையும் ஒரு சேர நீட்டினேன். பயணம் செய்வோர் பட்டியலில் என் பெயரை, 'ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பய…
-
- 1 reply
- 1.5k views
-
-
முப்பது லட்சம்! புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி. அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். 'இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா...' என்று எண்ணியவள், ''அன்பு... உங்கப்பா என்னை ஏத்துப்பாரா...'' என்று சிறு பயத்துடன் கேட்டாள். ''இதையே எத்தனை முறை கேட்ப...'' என்றவன், ''நீ இங்கேயே இரு... நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்,'' என்றான். அவன் கூறுவது சரியென்று படவே, ''சரி சரி... அங்கிளோட சம்மதத்தோடயே என்னை அழைச்சுட்டுப் போ,'' என்றாள், சிரித்தபடி! அவள்…
-
- 1 reply
- 701 views
-
-
குறையொன்றுமில்லை! பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஆயிற்று கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓட்டமாய் ஓடிவிட்டது. ரிடையர்டு ஆன பிறகு பென்ஷன் பணம் அருகில் உள்ள வங்கிக் கணக்கில் சேர்வதற்கான என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி ஒரு வேலையும் கிடையாது. காலையில் எழுந்தவுடன் காப்பி சாப்பிட வேண்டியது, தினசரிகளைப் படிக்க வேண்டியது, குளிக்க வேண்டியது. சில ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டியது. பிறகு சாப்பிட வேண்டியது. மீண்டும் சாப்பிட வேண்டியது. தூங்க வேண்டியது. மாலையில் நடைப்பயிற்சி, பிறகு வீடு, சாப்பாடு, தூக்கம்....மூன்…
-
- 2 replies
- 676 views
-
-
இது கதை போல் நிஜம்.....(1) ---------------------------------------------- (எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்) "அண்ணே.. மாமா நாளைக்கு எயாப்போட்டுக்கு வாறார் என்ர நிலமை தெரியும்தானே போய்க் கூப்பிட ஏலாது ஒருக்கா நீங்கள் போய் கூட்டிக் கொண்டு வாறீங்களா டீசல் காசு தாறன்" என்று கேட்ட எங்கள் பக்கத்து வீட்டுக்காற சகோதரியிடம். "இல்லையம்மா நீங்கள் காசு தரவேண்டாம் உங்கட நிலமை எனக்குத் தெரியும் தானே.. போய்க் கூட்டிக்கொண்டு வாறன் விபரங்கள மட்டும் தாங்கோ" என்றேன். ஒரு தாளில எல்லா விபரத்தையும் எழுதித் தந்த அவரிடம்... "மாமாவின்ர படம் ஒண்டு தந்தா ஆளக் கண்டுபிடிக்க சுகமாக இருக்கும்" என்றேன். "அவற்ர போட்டோ ஒண்டும் இல்ல அண்ணே... ஆள் சரியான கறுப்பு…
-
- 9 replies
- 2k views
-
-
சக்கைக் குழி - சிறுகதை சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில் மலைப்பாதையில் பேருந்து வளைந்து திரும்பி மெதுவாக நகர்ந்துசென்றது. பேருந்தின் முன்விளக்கின் வெளிச்சம் விழுந்த இடத்தைச் சக்திவேல் பார்த்தான். தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு காட்டுப்பன்றிகள் பாதையின் குறுக்கே ஓடி, சரிவிலிருந்து தோட்டத்துக்குள் நுழைந்தன. பன்றிகள் உறுமிய ஓசையும் தேயிலைச் செடியின் ஊடே ஓடிய சலசலப்பும் கேட்டன. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விடிவதற்கு இன்னமும் நேரம் இருந்தது. பனிக்காற்றுடன் தேயிலையின் மணமும் காற்றில் பரவியிருந்தது. பின்னிருக்கைப் பயணிகள் சிகரெட்டைப் பற்றவைக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து புகையிலை கருகும் வாசமும் பேருந்து முழுக்க நிறைந்…
-
- 1 reply
- 3.5k views
-
-
படிச்ச பொண்ணு! ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள். பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும். ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் …
-
- 0 replies
- 828 views
-
-
வழிகாட்டிய வா(ரி)சு அது ஒரு தனியார் தொழிலகம். அந்த நிறுவனத்தில் பேண்ட் ஜிப், லெதர் பேக் ஜிப் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்காட் தொழில் வளாகத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஐநூறு தொழிலாளர்கள் ஜிப் ஆலையில் வேலை பார்க்கிறார்கள். ஐம்பது பேர் நிர்வாகப் பிரிவில் மேனேஜர், உதவி மேனேஜர், உதவி அலுவலர், உதவியாட்கள், கணக்காளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களில் முக்கியமானவர்களை அழைத்து தலைமை அலுவலகம் அவ்வப்போது பயிற்சிகள் தரும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா..? என்று எல்லோருமே ஆவலாய் எதிர்பார்ப்பார்கள். "ஆபீஸில் உள்ள உதவி மேன…
-
- 1 reply
- 664 views
-
-
அந்தரங்கம் புனிதமானது கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். “ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”- அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”“இல்லே… அதைப்பத்தி… வ…
-
- 0 replies
- 1k views
-
-
தீர்ப்பு! ஒரு நிமிடக் கதை தீர்ப்பு! அவசரமாகக் கிளம்பிக்கொண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
வராத பதில்! வராத பதில்! வாஸந்தி வா க்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘யீக்ஷீமீமீக்ஷ்மீ!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது. முதலில், அது ஏதோ வேடிக்கை போல் இருந்தது அவளுக்கு. அது ஒ…
-
- 0 replies
- 1.5k views
-
-
காதல் சொல்ல… வா… – சிறுகதை கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் சந்தித்தான் வளவன். வழக்கமாய் சினிமாக்களிலும், கதைகளிலும் வருவது போல் மோதல் இல்லை. அந்த மழை நாளில், நனைந்து விடாமலிருக்க கல்லூரி பேருந்துக்குள்ளே நெருக்கியடித்து ஏறிக் கொண்டிருந்தனர் மாணவர்களும் மாணவிகளும். கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் நின்று கொண்டிருந்தாள் குழலி. மழைத்தண்ணீரின் ஈரத்தில் செருப்பு நழுவ, கீழே விழவிருந்தவளை, பின்னால் நின்று கொண்டிருந்த வளவன்தான் கைகொடுத்து நிலை நிறுத்தினான். உடனே, பாரதிராஜா படத்தில் வருவது போல் தேவதைகள் புடைசூழ “தந்தன.. தந்தன தாளம் வரும் வரும்..” என்றெல்லாம அவன் மனம் பாட்டு படிக்கவில்லை. அவளைத் தேடி அலையவில்லை. நண்பர்கள் மூலம் இருப்பிடம் அறிய முய…
-
- 0 replies
- 2.3k views
-