கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அதிர்ஷ்டம் ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத் தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன். ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார். ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன். ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என்…
-
- 1 reply
- 1k views
-
-
ஏமாற்றம் தன் காதலி மல்லிகாவின் அப்பாவுக்கு தன் நண்பனை விட்டே போன் போடச் சொன்னான் சீனு. ‘‘உங்க பொண்ணு ஒரு பையனோட கேவலமா ஊர் சுத்துறா!’’ என்று சொல்லச் சொன்னவன், இவர்கள் வெளியிடங்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டான். ‘‘எந்த அப்பனுக்கும் கோவம் வரும். நிச்சயமா வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவார்!’’ - சீனு சொல்லிச் சிரித்தான். ‘‘டேய், மல்லிகாவைப் பிடிச்சுதானே காதலிச்சே? அப்புறம் ஏன்டா இப்படி கழட்டி விடறே?’’ - நண்பன் கேட்டான். ‘‘காதலிக்கப் பிடிச்சுதுடா. கல்யாணம்னா அது பணக்காரப் பொண்ணா இருக்க வேண்டாமா? இந்த அயிரை மீனை ஆத்துலயே விட்டுருவோம். கண்டிப்பா ஒரு விலாங்கு மீன் மாட்டும்!’’ என்றான் வில்லத்தனமாக. அன்று மாலை... சீனு …
-
- 1 reply
- 1.3k views
-
-
பயணங்களின் முடிவில்! சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன. உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று! உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கண…
-
- 0 replies
- 922 views
-
-
ஏ.டி.எம் இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன் மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான். ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின் கண்ணில…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொழுதுபோக்கு இனி பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தாமச, ராட்சஸ குணங்களைத் தூண்டும் உறைப்பு, புளிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். ஞானிகள் எல்லோரும் இந்திரியங்களை அடக்கி ஆளச் சொல்கிறார்கள். எனவே, இறுதி நிலையான பேரின்பத்தை அடைவதற்கு மனதை... & இதற்கு மேல் ஹரியால் சபதங்களை மேற்கொள்ள முடியவில்லை. மனதுள் துக்கம் பரவியது. தான் சிக்கியிருப்பது எப்பேர்பட்ட பொறி. விஷயம் வெளியே தெரிந்துவிட்டால் மானம், மரியாதை எல்லாம் கடந்தகால விஷயங்களாகிவிடும். பயத்தினாலும் கவலையாலும் அவனது உடல் …
-
- 1 reply
- 1.4k views
-
-
எங்க ஊர் -கலைச்செல்வி ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ‘‘நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ் பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்...’’ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரப் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம் ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!” அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள். “அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா. சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்ட…
-
- 1 reply
- 3.7k views
-
-
காட்டில் ஒரு மான் அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
கவனம் வங்கியில் ரொம்பவே கூட்டம்... நெரிசல் குறையட்டும் என்று ஓரமாக நின்ற மைதிலியை நெருங்கினார் ஒரு டிப் டாப் ஆசாமி. ‘‘என் மூக்குக் கண்ணாடியை கார்ல விட்டுட்டு வந்துட்டேன்... கொஞ்சம் இந்த சலானை பூர்த்தி செய்து தர முடியுமா?’’ என பணிவாகக் கேட்டார். ‘‘சாரி சார்! நான் பேங்க்ல பணம் கட்ட வந்திருக்கேன். இப்ப உங்களுக்காக செலான் எழுதிக்கிட்டிருந்தா என் கவனம் சிதறும். அதைப் பயன்படுத்தி யாராவது பணத்தை அடிச்சிடலாம். மன்னிச்சிடுங்க... என்னால முடியாது!’’ - உறுதியான குரலில் மறுத்தாள். மறுநாள்... இன்டர்வியூ ஹால்... தன்னுடைய முறை வந்தவுடன் உள்ளே நுழைந்த மைதிலி, வங்கியில் சந்தித்த அதே டிப் டாப் ஆசாமி இன்டர்வியூ குழுவில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். நிச்சயம் தனக்கு வேலை …
-
- 0 replies
- 1.6k views
-
-
முதலிரவு கலா பால் சொம்பை ஸ்டூல் மீது வைத்துவிட்டு, கணவன் சிவாவின் காலில் விழப்போனாள். பதறித் தடுத்தான் சிவா! ‘‘வேண்டாம் கலா... எந்தத் தப்புமே செய்யாம நீ ஏன் என் கால்ல விழணும்?’’ கலாவுக்குப் புரியவில்லை!‘‘இனிமே எனக்கு எல்லாமே நீங்கதான். உங்க கால்ல விழறது தப்பில்லைனு எங்க அம்மா அப்பாதான் சொன்னாங்க!’’ - கலா சொல்ல, ‘‘சரி, உங்க அம்மா, அப்பா என்னவெல்லாம் சொல்லி அனுப்பினாங்க?’’ எனக் கேட்டான் சிவா. ‘‘உங்களை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... பொறுமையா, விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்... அப்புறம்...’’ - தொடர்ந்த கலாவைத் தடுத்தான் சிவா. ‘‘என்கிட்ட உண்மையா இருக்கச் சொல்லலியா?’’ ‘‘சொன்னாங்க. எப்பவும் உங்ககிட்ட உண்மையச் சொல்லணும்னு...’’ ‘‘உண்மையச் சொல்றதில்ல... உண்மைய…
-
- 4 replies
- 5.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: தடுமாற்றம் சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று இ…
-
- 1 reply
- 1.6k views
-
-
மாட்டன்.. மாட்டன்.. பிரின்ட்.. அடிக்கமாட்டன்.. என்று அடம்பிடிக்கிறான்.. என்னடா இவனுக்கு பிரச்சனை. ஒருவேளை 8 வருசப் பழசாகிட்டான்.. எறிய வேண்டிய கேஸ் ஆகிட்டானோ.. மனசுக்குள் ஒரு எண்ணம். ச்சா.. இவ்வளவு காலம்.. எத்தனையோ வின்டோஸ்களை கண்டு கடந்தும் வேலை செய்யுறவனுக்கு என்னாச்சு.... பிடிச்சு பிடரியில் தட்டினன்.. அஃறிணையாயினும்.. அவன் செய்த சேவைக்கு.. அவனை பிடரியில் தட்டினது.. மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருந்தது. திரும்ப திரும்ப.. பிழை உன்னிலை தான்.. பரிசோதித்துத் துலையடா.. என்ற கணக்கா அவனும்.. எரர் சம்கிக்கை காட்டுக் கொண்டே இருந்தான்.. சரிதான் என்ன தான் நடந்து என்று.. உள்ள திறந்து பார்த்தால்.. உள்ளுறுப்புகள் எல்லாம் நல்லாக் கிடக்கு.. என்ன …
-
- 8 replies
- 1.4k views
-
-
நாயகி - சிறுகதை ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம் டிப்பியை ஸ்டீபன் அண்ணன் ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ``சாதி நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது. `பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு வ…
-
- 1 reply
- 3.2k views
-
-
கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க! - சூர்யபுத்திரன் அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்! காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது. அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியத…
-
- 1 reply
- 2.6k views
-
-
அனிதா தற்கொலையில் உள்ள அரசியல் பின்னணி சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதாவின் உயிரும், அவரது கனவும்.
-
- 0 replies
- 868 views
-
-
பாடம் ‘‘எதிர் வீட்டுல இருக்கறவங்க நம்மகிட்ட தாயா புள்ளையா பழகுறாங்க. அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி நடந்துக்கலாமா?’’ - மனைவி கடுகடுத்தாள். ‘‘விஷயத்தைச் சொல்லு?’’ ‘‘அவங்க பையன் நாலு நாளைக்கு முன்னாடி உங்ககிட்ட சைக்கிள் இரவல் வாங்கிப் போனானாம். போன இடத்துல சாவியைத் தொலைச்சுட்டு பூட்டை உடைச்சி எடுத்துக்கிட்டு வந்தானாம். ‘புதுப் பூட்டு வாங்கி சைக்கிளை சரி பண்ணிக் கொடுத்துட்டுப் போ’ன்னு கறாரா சொன்னீங்களாமே! வேலைக்குப் போகாத பையன்கிட்ட பணம் ஏது? வீட்ல காசு வாங்கி புதுப் பூட்டு போட்டிருக்கான். அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே சொல்லி வருத்தப்பட்டாங்க...’’ ‘‘அப்படியா? நான் போய் மன்னிப்புக் கேட்டு வர்றேன்’’ எனக் கிளம்பினேன். ‘‘வாங்க சார்’…
-
- 0 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் http://www.vikatan.com
-
- 0 replies
- 887 views
-
-
காளி - சிறுகதை ச.விசயலட்சுமி - ஓவியங்கள்: செந்தில் விடியக் காத்திருக்கும் வானத்தின் ஒளிக்கீற்றுகள், மெல்லிய நிழலைப் படரவைத்தபடி எட்டிப்பார்க்கக் காத்திருக்கின்றன. இந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கைவிடப்போகும் மக்களில் சிலர் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தனர். கடற்கரை, கூடைகளோடும் மூன்று சக்கர வண்டி வைத்திருப்பவர்களோடும் கல்யாணக்கோலம் பூண்டிருந்தது. ஏமாந்தவர்களிடமிருந்து தனக்கான உணவை அபகரிக்கக் காத்திருந்தன காகங்கள். அவை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச்செய்தது. ``அட சனியனே, ஏன்டா இப்படி என் உயிர எடுக்குற?’’ பட்டென அறைந்தாள். இன்னும் வேகமாக …
-
- 1 reply
- 3.3k views
-
-
லவ் ‘‘என்னடா, தரணி! நீ லதாவை ஒன் சைடா லவ் பண்றதா சொன்னே... ஆனா, எப்பவும் ஸ்கூல், படிப்புன்னே சுத்திட்டு இருக்கே? அவ பின்னாடியே சுத்தினாதானே சரியான சமயத்துல ‘ஐ லவ் யூ’ சொல்ல முடியும்?’’ - என் அட்வைஸைக் கேட்டு தரணி ஒன்றுமே சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான். நாங்கள் +2 முடித்தபோது தரணி நல்ல மார்க் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அப்போது லதா அவள் வகுப்புத் தோழன் ஒருவனைக் காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை தரணியிடம் சொன்னபோதும் சிரிப்புதான் பதில். கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான் தரணி. சில மாதங்களிலேயே கல்யாணப் பத்திரிகையோடு வந்தான். கூடவே லதாவும். அவள்தான் மணப்பெண்ணாம். ‘‘எப்படிடா?’’ - ரகசியமாய்க் கேட்டே…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒத்தக் கம்மல் காது - அல்லிநகரம் தாமோதரன் ‘‘ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்...’’ சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன. கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே அரட்டைக் கச்சேரிதான் மிரட்டிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கும் இந்தச் சம்பவம் ஆச்சரியத்திற…
-
- 0 replies
- 765 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஆசி பெண் குழந்தையுடன் அம்மன் கோயிலுக்கு சந்தோஷமாக வந்த கணவன் மனைவியிடம் ``அடுத்தமுறை ஆண் குழந்தையுடன் வரணும்’’ என ஆசி வழங்கினார் கோயில் பூசாரி! - கே.மணிகண்டன் ஓய்வு “நாளைக்கு சண்டே. கொஞ்சம்கூட ரெஸ்ட் கிடைக்காது’’ என்றார் சலூன் கடைக்காரர்! - பிரகாஷ் ஷர்மா நாடகம் ‘தடியடி’ நடத்திவிட்டுக் காவல்துறையினர் நான்கு பேர் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகினர்! - இரா.இரவிக்குமார் ஸ்டேட்டஸ் நண்பனின் பெருமைகளைக் கவிதைகளாக எழுதி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினான், அவனின் சாவுக்குப்போக நேரமில்லாத வரதன்! - பெ.பாண்டியன் சண்டை “வாய்ல வைக்க முடியல... என்னடி சமைச்சிருக்கே…
-
- 0 replies
- 1.6k views
-
-
சில வித்தியாசங்கள்... - சுஜாதா 1969-ல் ஆனந்தவிகடனில் வெளியான சிறுகதை நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டென்ட்டாக 210-10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க் கார் என்னும் மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித் தது எம்.ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந் தைக்கு பால், விடமின் சொட்டுக்கள், 'ஃபாரெக்ஸ்' வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும்..…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: அவமானம் “குமரேசா! ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கே. சமையல் பண்ற பொண்ணு இப்ப வந்துடுவா. உனக்கும் சேர்த்து சமைக்கச் சொல்றேன். சாப்பிட் டுட்டுத்தான் போகணும்!” தன் மகள் சவும்யா இருக்கும் ஊரிலிருந்து வந்த நண்பனிடம் சொன்னார் சாந்தப்பன். “அதுக்கெல்லாம் நேரமில்லப்பா. அவசர வேலையா வந்தேன். கூடவே உன் பொண்ணு சவும்யா இந்த வேட்டி சட்டைத் துணியை உங்கிட்டே கொடுக்கச் சொன்னா. அதைக் கொடுத் துட்டுப் போகத்தான் வந்தேன்…” என்றபடி தன் கையிலிருந்த பையை சாந்தப்பனிடம் கொடுத்தார் குமரேசன். “ஏம்பா.. என் மக கொடுத்த துணியைக் கொடுக்க மட்டுந்தான் என்னைப் பார்க்க வந்தியா? ஒரு…
-
- 0 replies
- 1.9k views
-
-
எமோஜி - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் வாட்ஸ்அப் சிணுங்கலில் விழித்துக்கொண்டு எழுந்தேன். மதுவைச் சந்தித்த நொடியிலிருந்து இன்றுவரை என் அத்தனை நாள்களும் அவளின் செய்தியில்தான் விடிகின்றன. இது இன்று நேற்று அல்ல... குறுஞ்செய்தி காலத்திலிருந்தே இப்படித்தான். “ I am not feeling well, இன்னிக்கு லீவு, don’t call me.” உடனே பதில் அனுப்பினேன். “You are not feeling well, OR your feelings are not well?” எனக்குத் தெரியும், பதில் வராது என்று. வரவில்லை. பல் துலக்கிக் குளித்து, சீருடை உடுத்தி, கிளம்பும் வரை 40, 50 முறை மொபைலைப் பார்த்திருப்பேன். பதில் வரவில்லை. ஆனால், நீல வண்ணத்தில் டிக் மார்க்குகள். உதாசீனம் செய்கிறாள் என எட…
-
- 0 replies
- 3.7k views
-
-
அப்பா அம்மா மகள் - நா.கோகிலன் வேலை அதிகமாக இருந்த போது காயத்ரியின் செல்ஃபோனிற்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்தது. மாதத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகம். இந்த நேரத்தில் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தால் மேனேஜர் திட்டுவார். ஓயாமல் அழைப்பு வரவே எடுத்து “ஹலோ!” என்றாள். “அக்கா! எவ்ளோ நேரம் ட்ரை பண்றது?” மறுமுனையில் அழுகை சத்தம் கேட்டது. “அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாங்க...” பணிப்பெண் திவ்யாவின் குரல். அம்மா இறந்து விட்டாள் என்பது நெஞ்சில் அறைந்தது. அதன்பிறகு எப்படி இயங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவளின் முகத்தில் எழுந்த திடீர் அதிர்ச்சியைப் பார்த்தே ‘துயரமான செய்தி’ என்பதை வங்கியிலிருந்த அனைவரும் அறிந்தார்கள். கால் டாக்ஸி வரவழைத்து காயத்ரியை…
-
- 0 replies
- 25.9k views
-