கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வெண்டி மாப்பிள்ளை சிறுகதை:எஸ்.செந்தில்குமார்ஓவியங்கள்: செந்தில் வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து...பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது. வெண்டி கடையைவிட்டுப் போனதும் 'செல்லம் அப்பச்சி... நீங்க உங்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் நெருக்கடி நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்! - கே.சதீஷ் புரிதல் ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா! - கி.ரவிக்குமார் சுறுசுறுப்பு “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்! - சி.சாமிநாதன் பிரார்த்தனை படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை! - பெ.பாண்டியன் தனிமை ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி …
-
- 0 replies
- 1.4k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story ஆனந்த விகடன் வார இதழில் எனது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ சிறுகதை பிரசுரமானபோது இளையராஜாவின் இசைக்குழுவில் 12 ஆண்டுகள் வாத்தியக்கருவி வாசித்த ஒரு இசைக்கலைஞர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கதையைப் பாராட்டிக்கொண்டிருந்தவர், இடையில் தொண்டை அடைத்து, குரல் கம்ம பேச்சை நிறுத்தி, ஃபோனை கட் செய்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசியவர், “என்னால முடியல சார்….” என்றார். உண்மையில் அவர் எதுவும் பேசாத அந்த இரண்டு நிமிடங்கள்தான் அந்தக் கதைக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இக்கதையை பிரசுரித்த விகடன் இதழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நண்பர்களுக்காக அக்கதை: ஒரு சிறந்த இசைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
மம்மூதன் - சிறுகதை வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம் பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன். ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.…
-
- 0 replies
- 3.3k views
-
-
சகோதரர்கள் செய்த கொடூரம்! பார்வதி ஷா வழக்கு! | பாண்டிச்சேரி வைர வியாபாரி மனைவி பார்வதி ஷா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா? தொடரும்...
-
- 1 reply
- 3.6k views
-
-
ஓலைக் கிளி எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம் அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
ஒரு எலிய காதல் கதை கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ஒரே அறைதான். ஓரத்தில் பாத்ரூம், டாய்லெட். பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பொங்கித் தின்ன ஏற்பட்ட சமையல் மேடை. ஒட்டியிருக்கும் சின்ன பால்கனி. அந்த வீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பார்த்து வந்த வேலை போய்விட, ராமச்சந்திரனுக்கு இது ராசி இல்லாத வீடு என்று பட்டது. ஆனால், இந்த வீட்டை விட்டால், நேரே மெரினா பீச…
-
- 0 replies
- 3.3k views
-
-
நிபந்தனை ‘‘இந்த வீட்டு லொகேஷனுக்கும் இருக்கிற வசதிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய்கூட வாடகை கொடுக்கலாம். சுவற்றில் ஆணி அடிக்கிற பழக்கமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. நானும் என் மனைவியும் வேலைக்குப் போறதால, குழாய்த் தண்ணீர் அதிகம் செலவாகாது. கரென்ட் யூனிட்டுக்கு நீங்க இரண்டு ரூபாய் அதிகமா வசூலிச்சுக்கலாம். எங்க உறவுக்காரங்க யாரும் இங்க வந்து தங்கமாட்டாங்க. லேட் நைட் வந்து பெல் அடிக்கிற பழக்கமே எங்களுக்கு இல்ல. ஓகேன்னா, இப்பவே ஒரு வருஷ அட்வான்ஸை கொடுத்துடறேன்!’’ - வீட்டுக்காரர் கோபாலிடம் சொல்லி முடித்தான் பாலு.மனைவி காட்டிய சைகையைப் புரிந்துகொண்டு, யோசித்து பதில் சொல்வதாகச் சொல்லி பாலுவை…
-
- 0 replies
- 1k views
-
-
தந்திரம் ‘‘மாப்பிள்ளையோட லேட்டஸ்ட் தனி போட்டோ இல்லையாம். ஃபிரண்ட்ஸோட இருக்கிற குரூப் போட்டோதான் இருக்காம். கொடுத்தாங்க. இதுல நடுவில இருக்கிறவர்தான் மாப்பிள்ளை... ஓகேயானு சொல்லுங்க!’’ என்று தரகர் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்தார் வெங்கட். நண்பர்கள் மத்தியில் பார்க்கிறார் போல் இருந்தார் மாப்பிள்ளை. ஓகே சொல்லி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. உள்ளேயிருந்து ‘விர்’ரென வந்த ஜா போட்டோவை வெடுக்கெனப் பிடுங்கிப் பார்த்தாள். அவள் உதடு பிதுங்கியது. ‘‘இது ஒரு தந்திரம் டாட்! ரொம்ப குள்ளமா வத்தலும் தொத்தலுமா கன்னம் ஒட்டி இருக்கிறவங்க மத்தியில நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா, சுமார் மூஞ்சி குமாருகூட பார்க்கிறாப்புலதான் தெரிவான்! அதான் தனி போட்டோ தராம, இப்பிடி ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
காக்கைச் சிறகினிலே அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர். சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிரு…
-
- 0 replies
- 898 views
-
-
கட்சிக்காரன் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய் தடவி தலை சீவினார். தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் துண்டைத் தேடினார். இல்லை. அடுத்தடுத்த இடங்களில் தேடினார். துண்டு கிடைக்கவில்லை. மீனாட்சியின் துணிகளுக்கிடையே கிடந்த இரண்டு துண்டுகள் அழுக்காக இருந்தன. அதை எடுத்துக் கோபத்தில் எறிந்துவிட்டு வந்து மீண்டும் தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் தேடினார். இருந்த சால்வைகளும் உருப்படியாக இல்லை. உடம்பு சரியில்லாத நிலையில் படுத்திருந்த மீனாட்சி “என்னாத்தத் தேடுறீங்க?” என்று கேட்டாள். “துண்டு.” “வேட்டி சட்டதான் போட்ட…
-
- 0 replies
- 2.6k views
-
-
2 ஆண்டுகளில் 9 கொலைகள்! விஷ ஊசி வழக்கு! தொடரும்
-
- 1 reply
- 1.9k views
-
-
துரோகம் தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன். பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர். ‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காக…
-
- 0 replies
- 2.1k views
-
-
‘என் பெயர் அகதி!’ - வலிகளைச் சுமந்தலையும் தமிழ்நதியின் சிறுகதை #WorldRefugeeDay வி.எஸ்.சரவணன் ஜூன் 20: உலக அகதிகள் நாள். ஆப்பிரிக்காவில் ஜூன் 20 அன்று அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, அந்த நாளையே ஐ.நா அவை உலக அகதிகள் தினமாக அறிவித்தது. தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு ஒருவர் வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு ஒப்பான துயர் வேறில்லை. அதுவும் போரால் தம் உறவுகளைப் பிரிந்து, கிடைக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டிய சூழல் கொடுமையானது. ஆனால், உலகின் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அந்த வலியை மற்றவர்களால் உணர்ந்துகொள்ள வைக்கச் செய்பவை கலைப் படைப்புக…
-
- 0 replies
- 1.4k views
-
-
குலசாமியைக் கொன்றவன் சிறுகதை: கணேசகுமாரன்ஓவியங்கள்: ஸ்யாம் திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை 'கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு 'க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி 'கி’ இடைவெளி 'ரா’ இடைவெளி 'ம’ இடைவெளி 'ம்’... அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் அய்யனார் கோயில் வாசலில் குழுமியிருப்பதன் காரணம் நமக்கு முக்கியம். பூட்டப்பட்ட கோயில் வாசலில் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்ட…
-
- 0 replies
- 3.3k views
-
-
டேஸ்ட் இதுவரை நன்றாக வியாபாரம் நடந்துகொண்டு இருந்த ஸ்வீட் ஸ்டால், திடீரென சரிவு நிலைக்கு வந்தது எப்படி எனக் குழம்பினார் ஆறுமுகம்.பல வருடங்களாக அங்கே மாஸ்டராக இருப்பவர் மாசிலாமணிதான். ஒரே ஆள். அவரது கைப்பக்குவம்தான் கடையின் வியாபார வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. இப்பொழுதும் அவர்தான் மாஸ்டர். ஆனால் முன்பு இருந்த ஓட்டம், இப்போது இல்லை. இதை மகன் சந்துருவிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, ‘‘நீங்க வீட்ல இருங்கப்பா, நான் பார்த்துக்கிறேன்!’’ என்றான்.அதே மாஸ்டர்தான். ஒரே மாதம்தான். பழைய வியாபாரத்தைவிட அதிகமாகவே கொண்டு வந்துவிட்டான் சந்துரு. ஆறுமுகம் தன் மகனிடம் காரணத்தை கேட்டார். ‘‘அப்பா, நான் மாஸ்டர்கிட்ட பேசினேன். அவருக்கு இப்ப சுகர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பலி அனோஜன் பாலகிருஷ்ணன் ரத்னசிங்க உணவுப் பொதிகளை எண்ணினான். எல்லாம் சரியாக இருந்தன. பேப்பரால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்ட உணவுப் பொதிகளை அகண்ட வாளிக்குள் வைத்து டிரக்டரில் ஏற்றினான். முகாமிலுள்ளவர்கள் இனிமேல்தான் சாப்பிடுவார்கள். வீதியில் காவல் பணியில் நிற்கும் சிப்பாய்களுக்கு உணவுப் பொதியை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு வர வேண்டும். வெயில் சுள்ளிட்டது. துவக்கை முதுகுப்பக்கம் தொங்கவிட்டவாறு டிரக்டரில் பாய்ந்து ஏறினான். தலையில் கொழுவியிருந்த இரும்புத் தொப்பி இடறியது. சரிப்படுத்திக்கொண்டு டிரக்டர் பெட்டிக் கரையில் அமர்ந்தான். இன்னும் நான்கு சிப்பாய்களும் அவனுடன் ஏறினார்கள். வரும் வழியில் தென்னம் குற்றிகளை ஏற்ற வேண்டும். குலுங்கிக்கொண்டு டிரக்டர் போனது. வீதிக்கரையில் க…
-
- 0 replies
- 1k views
-
-
திருவையாறு -எஸ். சங்கரநாராயணன் கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள். மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. …
-
- 0 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேச்சு ``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி. - கே.சதீஷ் இங்கிதம் சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு. - ராம்ஆதிநாராயணன் சிரிப்பு முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர். - கிணத்துக்கடவு ரவி சமையல் ``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம், ``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்! - சி.சாமிநாதன் பில்டப் ``கார் பார்க்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் தா.கிருட்டிணன் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொன்றது யார்? தா.கி ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? குற்றவாளிகள் யார்? தொடரும்..
-
- 1 reply
- 968 views
-
-
தேக வலை - சிறுகதை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம் அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஜோக் மகள் காயத்ரியின் குரல் போனில் உற்சாகமாய் ஒலித்தது.‘‘அம்மா... நான் எழுதுன ஜோக் ஒண்ணு பத்திரிகையில வந்துருக்கும்மா. படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லேன்!’’ - போனை வைத்துவிட்டாள். கமலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘‘இது எவ்வளவு பெரிய பெருமை. இதுக்காகவே அவ புகுந்த வீட்டுல அவளைக் கொண்டாடுவாங்க. எனக்குத்தான் மருமகளா ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே... ஒண்ணும் தெரியாது!’’ - எரிச்சலாய் சொல்லிக்கொண்டே சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள். மருமகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லி, தெருமுனைக் கடையில் அந்தப் பத்திரிகையை வாங்கி வரச் செய்தாள். ‘‘என் மகளைப் பார்த்து நீயும் இது மாதிரி விஷயத்தை எல்லாம் கத்துக்க. புரியுதா? எங்கே அந்த ஜோக்கை சட்டுன்னு உரக்கப் படி பா…
-
- 0 replies
- 2k views
-
-
வேலை ‘பேசாம வி.ஆர்.எஸ் கொடுத்துடப் போறேன்!’’ - வசந்தன் சொன்னான்.‘‘உங்களுக்கு இன்னும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கே?’’‘‘இருந்துட்டுப் போவுது. அந்த நாலு வருஷ சம்பளத்தையும் கம்பெனில மொத்தமா கொடுத்துடுவாங்க. நமக்கு லாபம்தானே?’’‘‘பெரிய தொகையா வருமே! அப்படியே சேமிப்பில போட்டா வட்டி வரும். இல்லீங்களா?’’‘‘அது மட்டுமில்ல... பென்ஷனும் வரும்!’’‘‘கேட்கவே சந்தோஷமா இருக்குங்க. நாளைக்கே வி.ஆர்.எஸ் கொடுத்துடுங்க!’’ என்றாள் வசந்தனின் மனைவி. சொன்னபடியே செய்தான் வசந்தன். கை நிறைய பணம் வந்தது. ‘‘அப்பாடா! இனிமே அதிகாலை எழுந்து அவசர அவசரமா கம்பெனிக்குப் போக வேண்டாம். ஜாலியா தூங்கலாம், டி.வி பார்க்கலாம்’’ என மகிழ்ச்சியாகத் தூங்கிப் போனான் வசந்தன்.‘‘என்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதுப்பித்தல் ‘‘பரமு! நம்ம ரெண்டு பேர் பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்கணும். ஆன்லைன்ல அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்!’’ - வீட்டுக்குள் நுழைந்தபடி சொன்னார் சதாசிவம்.‘‘சரிங்க!’’‘‘அடுத்த மாசத்தோட என்னோட டிரைவிங் லைசென்ஸ் முடியப் போகுது. அதையும் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’‘‘பரமு! டி.டி.ஹெச்சுக்கு பணம் கட்டாம விட்டுட்டோம். ஒரு சேனலும் தெரியலை. பணத்தைக் கட்டி கணக்கைப் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’ ‘‘நான் ரிட்டயர் ஆனப்போ கிடைச்ச ஆறு லட்ச ரூபாயை ஒரு வருஷத்துக்குனு நிரந்தர சேமிப்பா பேங்க்ல போட்டேன் இல்லையா? வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும்!’’‘‘சரிங்க!’’‘‘என்கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்சானே ராமசாமி... ஏதோ காரணத்துக்காக கோவிச்சுகிட்டுப் போனவனை ம…
-
- 1 reply
- 892 views
-
-
இனுமு கொறடு... ‘‘ஒரேய் ஸ்ரீதர்! தோ ஒஸ்தானு. எக்கட... ஆ விசறக்கோலு! (விசிறிக்கம்பு) அப்படியே மண்டைல போட்டேனா பாரு...’’ அடிக்க வரும் சின்ன அம்மம்மாவிடமிருந்து தப்பித்து ஓடுவோம் நானும் தம்பி விஜயராகவனும். அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டியின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் ரயில்வேயில் இருந்த கணவர் அப்பாய் நாயுடு மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவ…
-
- 1 reply
- 1.3k views
-