Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஒலிம்­பிக்கில் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட பிரெஞ்சு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு தடை! 2016-08-31 11:51:29 ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வின்­போது ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட கார­ணத்­துக்­காக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவ­ருக்கு தற்­கா­லிக தடை விதித்­துள்­ளது. டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்­க­னை­க­ளான கிறிஸ்­டினா மிலா­டே­னோவிக், கரோலின் கார்­சியா ஆகிய மூவரே தடைக்­குள்­ளா­ன­வர்­க­ளாவர். இந்த மூவ­ரி­னதும் நடத்தை சம்­மே­ள­னத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. …

  2. வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா! வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா! லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த ஐசாக் மக்வாலா தனிச் சுவட்டில் ஓடி போட்டியை நிறைவு செய்து மெய்வல்லுனர் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார். 16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் லண்டன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றிருந்த ஒரு சில வீரர்கள் உணவு நஞ்சானமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதன் கார…

  3. பாகிஸ்தான் சென்று இலங்கை ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளைய…

  4. 'பூஜ்ஜியத்துடன் துவங்கிய ராஜ்ஜியம்' டிசம்பர் 23, 2004-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் மைதானத்தில் நீளமான தலைமுடியுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞன் களமிறங்குகிறான். சந்தித்த முதல் பந்திலேயே ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறுகிறான். ஆனால், அதன்பிறகான காலகட்டங்களில் மைதானத்தில் அவனது நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் இருந்தன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சச்சின் டெண்டுல்கரால் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்க, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரால் கால்பந்தில் இருந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு மாற, மற…

  5. விராத் கோஹ்லி நம்பர்–1 , ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய விராத் கோஹ்லி, ‘டுவென்டி–20’ தரவரிசைப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டில் மொத்தம் 134 ரன்கள்(சராசரி 13.40) தான் எடுத்தார். நான்கு ஒருநாள் போட்டிகளில் வெறும் 54 ரன்கள்(சராசரி 26.00) எடுத்தார். இந்நிலையில், நேற்று ஐ.சி.சி., வெளியிட்ட சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசை பட்டியலில் முதன் முறையாக முதலிடம் பெற்று வியப்பு அளித்துள்ளார் கோஹ்லி. சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், இவர், 41 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 8 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற கோ…

  6. இங்கு பவுண்டரிகள் சிக்சர்களைத்தான் விரும்புகிறார்கள்; அங்கு அப்படியல்ல: இங்கிலாந்து ரசிகர்களுடன் ஒப்பிட்டு இந்திய ரசிகர்களை குறைத்து மதிப்பிடுகிறரா புஜாரா? புஜாரா. - படம். | கேவிஎஸ். கிரி ஐபிஎல் கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்ட புஜாரா, இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அனுபவம் குறித்து பேசும் போது நல்ல பந்துகளை ஆடாமல் விடும் கலையைப் பற்றி குறிப்பிடுகிறார். யார்க்‌ஷயர் அணிக்கு புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: யார்க்‌ஷயரில் கடந்த இரண்டு சீசன்களில் பேட்ஸ்மென்கள் அதிகமான ஷாட்க…

  7. 150வது ஆண்டு விழா - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஈடன் கார்டன்ஸ்! கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கவுரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி நாளை (வியாழன்) இங்கு நடக்கிறது. மைதானமான பூந்தோட்டம் ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும்…

  8. தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக ஈரான் தனது முதல் போட்டியில் ஆடியபோது அந்த அணியின் கோல்காப்பாளர் அலிரேசா ஹகிகி தனது அழகான தோற்றத்தால் அனைவரது பார்வையையும் வென்றது நினைவிருக்கும். ஆனால், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற ஈரான் அணியின் கோல்காப்பாளர் அலிரேசா பெய்ரண்ட்வாண்ட் அத்தனை அழகான தோற்றம் கொண்டவரல்ல. ஆனால், அவரது பின்புலத்தை தெரிந்தவர்கள் அவர் மீது அலாதிப் பிரியம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். லோரஸ்தான் மாகாணத்தின் சரபியாஸ் என்ற கிராமத்தில் ஒரு நாடோடி குடும்பத்திலேயே பெய்ரண்ட்வாண்ட் பிறந்தார். தமது ஆடுகள…

  9. எப்போதும் இம்ரான் கேப்டன்தான் பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான ரேஸில் பாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் முந்திச் செல்லும் நிலையில் உள்ளார். கிரிக்கெட் உலகில் அவர் எப்போதும் முதன்மையான மற்றும் புதிரான கேப்டனாகவே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கிரிக்கெட் வாழ்க்கை யில் இருந்து விடுபட்ட பின்னர் அரசியல் பாதையில் சாத்தியமற்ற சூழ்நிலையில் தன்னை பொது வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டார். 1980-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் பல்வேறு கேப்டன்கள் இருந்தனர். ஆனால் களத்தில் தலைவராக செயல்பட்டது இம்ரான்கான் மட்டுமே. ஷார்ஜாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. அப்ப…

  10. ரஸல் போராட்டம் வீண்: லிட்டன் தாஸின் ‘காட்டடி பேட்டிங்கில்’ டி20 தொடரை வென்றது வங்கதேசம் வங்கதேசம் சார்பில் அதிரடியாக அரை சதம் அடித்த லிட்டன் தாஸ் - படம் உதவி: ட்விட்டர் லிட்டன் தாஸின் ’காட்டடி பேட்டிங்’, முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு ஆகியவற்றால் புளோரிடாவில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் அணி வென்றது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றிய நிலையில், இப்போது டி20 தொரையும் தனதாக்கியுள்ளது. வங்கதேசத்தின் தொடக்க ஆட்…

  11. புவனேஷ்வருக்கு யோகம்! * யுவராஜ் சிங் புறக்கணிப்பு டிசம்பர் 22, 2014. மும்பை: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தத்தில் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தார். இவருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். வரும் ஆண்டுக்கான 32 பேர் கொண்ட ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியானது. இதில் தோனி, அஷ்வின், கோஹ்லி, ரெய்னா ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றார். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து, இவர் ‘ஏ’ பிரிவில் இருந்து நீக்கப்…

  12. கூட்­டாக திற­மையை வெளிப்­ப­டுத்­தினால் சவா­ல­ளிக்­கலாம்: மைக்கேல் திசர அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்தில் நடை­பெற உள்ள உலகக் கிண்ணத் தொட ரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் கூட்­டாக சேர்ந்து திற­மையை வெளிப்­ப­டுத்­து­வார்­க­ளாயின் எதி­ரணி வீரர்­க­ளுக்கு சக்த்­தி­வாய்ந்த அணி­யாக திக­ழலாம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் திசர நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார். உலகக் கிண்ணத் தொடரில் பங்­கேற்க உள்ள இலங்கை அணி தொடர்பில் கருத்து தெரி­வித்த அவர், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்­பாட் டம் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக சந்­தே­கங்கள் நிலவி வந்­தன. உலகக் கிண்ணத் தொடரில் டில்­சா­னுடன் சேர்ந்து யார் கள­மி­றங்­குவார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனா…

  13. செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருண்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாத தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி சார்பில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரில் இமாம்-உல்-ஹக் ஓட்டங்களை பெறாமலும் பகர் சமான் 12 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்தனர். அத்தோடு பக…

  14. இந்தியா - வங்கதேச தொடரில் டிஆர்எஸ் கிடையாது! டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையே, வங்கதேசத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ஜூன் 10ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தொடங்கவுல்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் இடம் பெறுகின்றன. ஜூன் 10ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. Read more at: http://tamil.one…

  15. FacebookTwitterGoogle+Email ViberWhatsApp யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட்ட கொண்டாட்ட விழாவை முன்னீட்டு வடக்கு மாகாண ரீதியாக நடத்திய கபடித் தொடரில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்றலில் மின் ஒளியில் நேற்று இடம் பெற்ற இறுதியாட்டத்தில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து, முல்லைத்தீவு உதய தாரகை விளையாட்டுக் கழக அணி மோதியது. முதற்பாதி ஆட்ட நேர முடிவில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழ…

  16. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தமிழ் பேசும் வீரர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆறு பேரில் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்தும் , மட்டக்களப்பு, கண்டி மற்றும் கொழும்பிலிருந்து தலா ஒருவருமாக அடங்குகின்றனர். யாழ் மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், கமலாராசா இயலரசன், யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் தினோசன் ஆகியோர் தம்புள்ளை அணிக்காகவும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் கொழும்பு அணிக்காகவும், கண்டி திரித்துவ கல்லூரியின் அபிஷேக் ஆனந்த குமார், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் எஸ்.ஷகிர்தன் ஆகியோர் …

    • 0 replies
    • 690 views
  17. கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சாதனை (நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3.25 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே நிகழ்ச்சியில் பங்குபற்றிய அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி (2.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காம் நாளான இன்றைய தினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீப்பிகா நிலைநாட்டிய புதிய சாதனையுடன் மேலும் 4 சாத…

  18. மென்செஸ்டர் யுனைட்டட் கழக பஸ்ஸை தாக்கியவர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மென்­செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்­றுநர் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இர­சி­கர்­க­ளுக்கு வாழ் நாள் தடை விதிக்­கப்­படும் என வெஸ்ட் ஹாம் கழகம் எச்­ச­ரித்­துள்­ளது. மென்­செஸ்டர் யுனைட்டட் அணி­யினர் பயணம் செய்த பஸ் வண்­டியின் யன்னல் ஒன்றும் தாக்கி நொறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மாக மென்­செஸ்டர் யூனைட்டட் அணிக்கும் வெஸ்ட் ஹாம் அணிக்கும் இடை­யி­லான போட்டி 45 நிமி­டங்கள் தாம­தித்தே ஆரம்­ப­மா­னது. ‘‘பொலியென் மைதா­னத்­திற்கு வெளியில் சில ஆத­ர­வா­ளர்கள் அடா­வ­டித்­த­னத்தில் ஈடு­பட…

  19. கங்குலிக்கு புதிய பதவி கிடைத்தது [22 - November - 2008] சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இந்தியா அணியின் முன்னாள் கப்டன் சௌரவ் கங்குலிக்கு கிரிக்கெட் சபையில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய கப்டன் சௌரவ் கங்குலி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவாதக அறிவித்தார்.ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கங்குலி கூறியிருந்தார். அவர் வர்ணனையாளராக மாறலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், கங்குலிக்கு கிரிக்கெட் சபையில் பதவியளிக்கப்பட்டுள்ளது. சுனில் கவாஸ்கர் தலைமையிலான தொழில்நுட்ப குழு…

    • 0 replies
    • 1.2k views
  20. தோனியின் கேப்டன் பொறுப்பை பறிக்க பலமுறை விவாதித்தோம்: மனம் திறக்கும் சந்தீப் பாட்டீல் தோனி, பாட்டீல். | கோப்புப் படம். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி திடீரென ஓய்வு அறிவித்ததால் அவரது ஒருநாள் கிரிக்கட் வாழ்வு பற்றியும் கேப்டன்சி பற்றியும் விவாதித்து அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கவும் சில வேளைகளில் ஆலோசனை நடத்தியுள்ளதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலியா தொடரின் நடுவில் தோனி திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இது பெரிய ‘அதிர்ச்சி’ அலைகளை ஏற்படுத்தியதாகக் கூறிய சந்தீப் பாட்டீல், “உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்ததால் தோனியின் ஒருநாள் அணி கேப்டன் பொ…

  21. ஆட்டநிர்ணய மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கை; சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் தொலை­பே­சிகள், இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் ஒப்­ப­டைக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டுவர் மோச­டி­களைத் தடுக்கும் நட­வ­டிக்­கை­யாக ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­படும் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் கைய­டக்க தொலை­பே­சி­க­ளையும் இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் கட்­டாயம் ஒப்­ப­டைக்­க­வேண்டும் என நிர்ப்­பந்­திக்­கப்­ப­ட­வுள்­ளனர். வட்ஸ்அப், ஸ்னப்சட் ஆகி­ய­வற்றின் மூலம் அனுப்­பப்­படும் தனிப்­பட்ட தக­வல்­களை இறக்கம் செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் மோசடி தடுப்புப் பிரிவு பெற­வுள்­ளது. இதற்­கான பிரே­ரணை முன்­மொ­ழி­யப்­ப…

  22. சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில் அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந…

  23. என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து, வளர்ந்த இடத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதையே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனது பெரிய இலக்காகக் கொண்டுள்ளனர். அதுபோன்றே, இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனூஜன். ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடர் ஒன்று மார்ச் மாத…

  24. மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குறித்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற போது இருந்த இலங்கை அணியை விட தற்போது சிறந்த அணியொன்று உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு (adaderana.lk)

  25. ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல் தனது காரில் காணப்பட்ட பிரச்சினைகள், இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது வைரியான, மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநர் லூயிஸ் ஹமில்டனின் தாக்குதலொன்றுக்கு மத்தியிலும் பதற்றம் நிறைந்த ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸை, ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வென்றார். வெட்டலுக்குப் பின்னால், பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்ற அவரின் சக ஃபெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் மிக வேகமாகச் செல்லக் கூடியதாக இருந்தபோதும், ஹமில்டனை முந்த விடாமல் செய்வதற்கான தடையாக ஃபெராரி அணியால் பயன்படுத்தப்பட்டிருந்தார். குறித்த பந்தயத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.