விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம் 16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல…
-
- 0 replies
- 543 views
-
-
கிளார்க் தலைமையில் ‘நச்சுக் கலாச்சாரம்’ பரவியது: மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார். தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவு…
-
- 0 replies
- 305 views
-
-
11 சொதப்பல் வீரர்கள்... பட்டியலில் யார் யார்? #INDvsNZ இந்தியா - நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் யார் என கேட்டால், சட்டென விராட் கோலி, ரவிச்சந்திர அஷ்வின் என பொட்டில் அடித்தார் போல பதில் வரும். ஆனால் சொதப்பல் மன்னர்கள் யார் எனக்கேட்டால் கொஞ்சம் ரசிகர்கள் தடுமாறுவார்கள். இந்திய அணியிலும் சரி, நியூசிலாந்து அணியிலும் சரி இந்தத் தொடரில் எக்கச்சக்க சொதப்பல் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து சொதப்பல் வீரர்கள் பதினோரு பேரைத் தேர்வு செய்திருக்கிறோம். இரண்டு தொடக்க வீரர்கள், இரண்டு நடு வரிசை பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலர்கள் என பக்கா பேக்கேஜாக அணி…
-
- 0 replies
- 457 views
-
-
ஜயசூரிய - தரங்கவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி! அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில் உபு…
-
- 0 replies
- 366 views
-
-
தோனி செய்ய முடிந்ததை மற்ற பேட்ஸ்மென்கள் செய்ய முடியவில்லை: கவாஸ்கர் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மீண்டும் இங்கிலாந்து பந்து வீச்சிடம் சரணடைந்தது பற்றி கவாஸ்கர் தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது குறைவுபட்ட உத்தியிலும் கூட அடிப்படையான பேட்டிங் பொறுமையையும், புத்தி கூர்மையையும் காண்பித்து 82 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மென்களோ செய்த தவறையே திரும்பவும் செய்ததாக சுனில் கவாஸ்கர் மற்றும் விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் கருதுகின்றனர். சுனில் கவாஸ்கர் இது பற்றி தனியார் சானலில் கூறும்போது: "முக்கிய விக்கெட்டுகள் விழுந்த விதத்தைப் பாருங்கள், அவையெல்லாம் அபாரமான பந்துகளில் விழுந்த விக்…
-
- 0 replies
- 406 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களின் ‘மெனு கார்டு’ இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயா…
-
- 0 replies
- 711 views
-
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட். தொடக்க வீரரான இவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இவர் அனல் பறக்கும் வகையில் விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலிருந்து கில்கிறிஸ்ட் ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது; தனிப்பட்ட முறையில் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன். டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கவனம் செலுத்துவேன் என்றார். 36 வயதான கில்கிறிஸ்ட் 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9038 ஓட்டங்கள் எடுத்துள்ள…
-
- 0 replies
- 725 views
-
-
சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அழைக்கப்படுபவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் மனோகர் கவாஸ்கர் (Sunil Manohar Gavaskar) பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1949) பிறந்தவர். சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது மாமா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அவர்தான் இவரது முதல் பயிற்சியாளரும்கூட. l மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். பள்ளி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு ‘இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்’ என்று பெயர் எடுத்தவர். l முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 1966-67ல் விளையாடத் தொடங்க…
-
- 0 replies
- 243 views
-
-
உலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் : பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்) ஹாசிம் அம்லா குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்) ஜெ.பி. டுமினி ஐடென் மார்க்ராம் டேவிட் மில்லர் லுங்கி நிகிடி அன்ரிச் நோர்ட்ச் அன்டைல் பெஹ்லுக்வாயோ டிவைன் பிரிடோரியஸ் …
-
- 0 replies
- 691 views
-
-
அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 தொடர்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயராக அந்த அணி மற்ற தொடர்களில் பங்கேற்பதை குறைத்து கொண்…
-
- 0 replies
- 308 views
-
-
கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவ…
-
- 0 replies
- 564 views
-
-
அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி By Mohamed Azarudeen - சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது நேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது. …
-
- 0 replies
- 516 views
-
-
முரளியின் தமிழர் என்ற அடையாளத்தை பகடையாக வைத்து தமிழர்களுக்கு எதிராக முரளியை பாவித்து வரும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னால் அணித் தலைவர் அர்யுனா ரணதுங்கா ஒரு பௌத்த பேரினவாதியாவர். இது சிறீலங்கா கிரிக்கெட் அணியின் அரசியல் முகத்தை வெளிகாட்டியது. தற்போது, அதே கிரிக்கெட் அணி மேலும் அரசியல் மயமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகஇ தற்போது, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திறன்குறைவான மகன் அணிக்குள் நுழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள 20-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அ…
-
- 0 replies
- 515 views
-
-
ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, தனஞ்செயா... கிரிக்கெட்டின் ரிஸ்ட் ஸ்பின் கலைஞர்கள்! இந்திய அணியின் இலக்கு 231. ஓபனிங் ஜோடி குவித்தது 109 ரன்கள். விக்கெட் இல்லை. இந்தியா எளிதில் வெற்றிபெறும் என்பது ரசிகர்கள் கணிப்பு. காரணம், இலங்கையிடம் அனுபவம் வாய்ந்த மலிங்கா தவிர சிறப்பான பந்து வீச்சாளர்கள் இல்லை. ரோஹித்தின் அரை சதத்துக்குப் பிறகு நம்பிக்கை இழந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த நேரத்தில் நிகழ்ந்தது ஒரு மாயாஜாலம். ஆஃப் பிரேக் பௌலர் அகில தனஞ்செயா, ரிஸ்ட் ஸ்பின்னராக அவதாரம் எடுத்து திறமையான பேட்ஸ்மேன்கள்கொண்ட இந்திய பேட்டிங் வரிசையைத் திணறடித்தார். கோலி, ராகுல், கேதார் விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. அனைத்தும் தனஞ்செயாவி…
-
- 0 replies
- 312 views
-
-
முதல் 46 பந்துகளுக்கு ரன் கொடுக்காத சுரங்கா லக்மல்: சாதனை விவரங்கள்! இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் ஒரு சாதனை புரிந்துள்ளார். * நேற்று ஒரு ரன்னும் கொடுக்காமல் பந்துவீசிய 30 வயது சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார். 2001க்குப் பிறகு தொடர்ந்து 7 ஓவர்கள் மெயிடனாக வீசி, 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்த ஒரே வீரர் - லக்மல் என்கிற பெரு…
-
- 0 replies
- 301 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வுபெற்றார் சயீத் அஜ்மல் - AFP சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல் (வயது 40). 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 178 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்களையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். 2014-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் …
-
- 0 replies
- 187 views
-
-
கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.
-
- 0 replies
- 1.4k views
-
-
`விடைபெறுகிறது தென்னாப்பிரிக்க வேகம்' - மோர்னே மார்கல் அதிர்ச்சி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல். 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், பிற்காலத்தில் ஸ்டெய்னுடன் கூட்டணி அமைத்து எதிரணிகளைத் திணறடித்தார். கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமான பௌலராக இருந்த இவர், இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 529 வீழ்த்தியுள்ள இவர் தற்போது தனது ஓய்…
-
- 0 replies
- 418 views
-
-
இருமுறை 300 ரன்கள் அடித்தும் எனக்கு மதிப்பில்லை: கிறிஸ் கெய்ல் காட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 300 ரன்களை எடுத்திருந்த போதும், ஜமைக்காவிற்காக நிறைய செய்தும் அந்த அரசு தன்னை மதிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடுமையாகச் சாடியுள்ளார். வரிவிலக்கு கேட்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல், ஆனால் ஜமைக்கா அரசு தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது என்று அவர் 'தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “ஜமைக்கா அரசு மீது நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். நான் கேட்பதெல்லாம் கொஞ்சம் நாகரிகம், சிறு அங்கீகாரம் அவ்வளவே. 2 முறை முச்சதங்கள் அடித்துள்ளேன், ஆனால் விமான நிலையத்தில் ஒரு கேமரா கூட என்னை புகைப்படம் எடுக்க வரவில்…
-
- 0 replies
- 354 views
-
-
ரஸ்யாவின் அதிர்ச்சி வைத்தியம் http://www.youtube.com/watch?v=iu8GS3unBcY
-
- 0 replies
- 1.5k views
-
-
மும்மூர்த்திகளுக்கு மகத்தான பிரியாவிடை வழங்க உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் அணிதிரள வேண்டும்: லஹிரு திரிமான்ன 2014-11-27 10:12:00 இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் 'மும்மூர்த்தி'களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, திலக்கரட்ன டில்ஷான் ஆகியோர் தங்களது தாய்நாட்டில் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின்போது இரசிகர்கள் அவர்களுக்கு கௌரவமானதும் மகத்தானதுமான பிரியாவிடை அளிப்பர் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக இங்க நடைபெறும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவர்கள் மூவரும் சொந்த மண்ணில் விளையாடும் கடைசி தொடராக அமையும் எனக் கருதப்படுகின்றது. ஷஷஅவர்கள் மூவரும் இங்கு விளையாடும் கடைசி தொடராக இங்கிலாந்துடா…
-
- 0 replies
- 494 views
-
-
பவுன்சரைப் போட்டு சேவாகை காலி செய்து விடுவார்கள் என்று கேலி பேசினர்: சேவாக், தோனியை செதுக்கி வளர்த்தது பற்றி கங்குலி ருசிகரப் பதிவு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்தியக் கிரிக்கெட்டில் இரு பெரும் சாதனையாளர்களான வீரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டமைத்ததிலும், செதுக்கியதிலும் முன்னாள் கேப்டன், வீரர் சவுரவ் கங்குலிக்கு முக்கியப்பங்கு உண்டு இந்தியக் கிரிக்கெட்டில் கேப்டன்களாக இருந்தவர்களில் கங்குலியின் காலம் என்பது மிக அற்புதமான காலமாகும். இளைஞர்கள் அதிகமானோர் வெளிக்கொண்டு வரப்பட்டனர். அதிகமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறத் தொடங்கி இருந்த காலம். …
-
- 0 replies
- 299 views
-
-
Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 02:42 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள 2023 வலைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 12 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 வீராங்கனைகளின் பெயர்களும் 4 தயார்நிலை வீராங்கனைகளின் பெயர்களும் விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்தது. வலைபந்தாட்ட இறுதிக் குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார். அவுஸ்திரேலியாவில் விக்டோரியா வலைபந்தாட்ட லீக் போட்டியில் பெல்கன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை வலைபந்தாட்ட அணியில் இணை…
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
நடையை கட்டினார் நடால் *அரையிறுதியில் ஷரபோவா ஜனவரி 26, 2015. மெல்போர்ன்: ஆஸ்திரலேிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ வீரரான நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயினின் நடால், தரவரிசையில் 7வது இடத்திலுள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். முதல் செட்டை 2–6 என நடால் இழந்தார். தொடர்ந்து சொதப்பிய இவர் அடுத்த இரண்டு செட்டையும் 0–6, 6–7 என பறிகொடுத்தார். இரண்டு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், நடால் 2–6, 0–6, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோ…
-
- 0 replies
- 569 views
-
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் கேப்டன் டோனி தடை பெறும் அபாயத்தில் உள்ளார். மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணி மீது இந்த ஆண்டில் கூறப்பட்ட 2-வது குற்றச்சாட்டு ஆகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஆண்டு தொடக்கத்தில் கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணி மெதுவாக பந்து வீசி இருந்தது. டொமினிக்காவில் வருகிற 6-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் இந்திய அணி மீது மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டு எழுந்தால் டோனிக்கு தடை விதிக்கப்படும். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட முடியாத நிலை ஏற்படும். 12 மாதத்தில் ஒரு அ…
-
- 0 replies
- 955 views
-