Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை 02 JUN, 2023 | 08:48 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வியுற்று பெரும் ஏமாற்றம் அடைந்தது. ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைவிட துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இலங்கையினால் நிர்ணயிக்…

  2. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார். https://www.bbc.com/ws/av-embeds/articles/cn015erel0vo/p0fqz9sj/ta https://www.bbc.com/tamil/articles/cn015erel0vo

  3. சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா! கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசி…

  4. Published By: VISHNU 26 MAY, 2023 | 03:50 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணிக்கு 48 கோடியே 37 இலட்சத்து 31,040 பணப்பரிசாக கிடைக்கவுள்ளது. அப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இந்தந் தொகையில் சரிபாதி பணப்பரிசு (241,865,520 ரூபா) கிடைக்கும். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய 9 அணிகளுக்கும் மொத்தமாக (3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 114 கோடியே 88 இலட்சத்து 61,220 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும். இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்காக நியூஸிலாந்துடன் 2…

  5. உலக சிலம்பம் சம்பியன்ஸிப் போட்டி இந்தியா பெங்களூரில் மே 12ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, சுவீட்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகள் பங்குப்பற்றின. சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு, வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன்,ராம்குமார்,தினேஸ்குமார் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/254363

  6. Published By: DIGITAL DESK 3 18 MAY, 2023 | 11:07 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) சர்வதேச றக்பி சம்மேளனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை றக்பிக்கு சர்வதேச தடை விதித்துள்ளது. இலங்கையில் றக்பி விளையாட்டுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக சர்வதேச றக்பி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச றக்பி சம்மேளனம் இந்த தடையை விதித்துள்ளது. இதற்கு முன்னர் ஆசிய றக்பி சம்மேளனத்தினாலும் இலங்கை றக்பி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த தடை காலப்பகுதியில் இலங்கை ரக்பி வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போது பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்நிலைய…

  7. Published By: SETHU 15 MAY, 2023 | 12:06 PM 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்­டி­களை ஜேர்­ம­னியின் பேர்லின் நடத்­து­வது குறித்து கற்­பனை செய்ய முடியும் என அந்­நாட்டின் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரி­வித்­துள்ளார். '1936 பேர்லின்' ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெற்று 100 வரு­டங்கள் பூர்த்­தி­யாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்­கால ஒலிம்பிக் போட்­டி­களை நடத்­து­வது குறித்து ஆரா­யப்­ப­டு­கி­றது. 1936 ஆம் ஆண்டின் கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா பேர்லின் நகரில் நடை­பெற்­றது. அவ்­வ­ருட குளிர்­கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்­ம­னியின்; ஜேர்மிஷ் பார்­டேன்­கேர்சென் நகரில் நடை­பெற்­றன. சர்­வா­தி­காரி அடோல்வ் ஹிட்லர் தல…

  8. Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…

  9. நடுநிலையான உலகக்கிண்ண மைதானம் தேவை - பாகிஸ்தான் Published By: NANTHINI 13 MAY, 2023 | 10:18 AM (நெவில் அன்தனி) செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தமது பரம வைரிகள் பாகிஸ்தானுக்கு வருகை தர மறுத்தால், தமது அணியின் உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடான இந்தியாவுக்கு வெளியே நடுநிலையான விளையாட்டரங்குகளில் நடத்த வெண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் கோரியுள்ளார். அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்காக அட்டவணை, மைதானங்கள் ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிடத் தவறியுள்ளது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட…

  10. கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்.. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா நாளை (09.05.2023) இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பற்றிய குற்றச்சாட்டு குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அரசியல் தலையீடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான மூவர் கொண்ட குழுவை ஐ.சி.சி நியமித்ததாக கூறப்படுகிறது. …

  11. Published By: NANTHINI 07 MAY, 2023 | 04:42 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பமான 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த துஷேன் சில்வா, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை நிலைநாட்டினார். இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல், 20 வயதுக்குட்பட்ட 5000 மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் பிற மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலை வீரர்கள் வெற்றிபெற்று வரலாறு படைத்தனர். உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் ச…

  12. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது. தற்போது வரை ஒருநாள் தொடரை 4-0 என முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது. ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், நியூசிலாந்து 107 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. 6 முதல் 10 இடங்களில் முறையே தென்னாபிரிக்கா (101 புள்ளி)…

  13. Published By: SETHU 04 MAY, 2023 | 12:00 PM பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸி 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரஸ்ரீழிவித்துள்ளன. கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவரான லயனல் மெஸி, பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காகவும் 2021 ஆகஸ்ட்டிலிருந்து விளையாடி வருகிறார். 7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்ற மெஸி பிஎஸ்ஜி கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். …

  14. Published By: SETHU 04 MAY, 2023 | 10:47 AM 2027 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் உரிமையை கத்தார் பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டின் பெண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை ஜேர்மனி நடத்தும் எனவும் சர்வதேச கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திய கத்தார். 2027 முதல் முதல் தடவையாக கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ளது. தலைநகர் தோஹாவில் தற்போதுள்ள அரங்குகளில் இப்போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகள் எ…

  15. Published By: DIGITAL DESK 5 29 APR, 2023 | 02:03 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 500 ஆவது வெற்றியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்தது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் (27) பகலிரவுப் போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து…

  16. அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4ஆவது நாளான இன்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கொண்டுவந்தது. இந்தநிலையில், இலங்கை அணி, அயர்லாந்தை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக நால்வர் சதங்களை பெற்றதுடன், அவர்களில் இருவர் இரட்டை சதங்களை பெற்றனர். அதன்படி, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 245 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த நிலையில், அயர்லாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை காலி மைதானத்தில் த…

  17. விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் 24 ஏப்ரல் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIKLAS HALLE'N (ஏப்ரல் 24, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, சச்சின் பிறந்தநாளையொட்டி இன்று மறுபகிர்வு செய்யப்படுகிறது.) 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர்…

  18. Published By: SETHU 23 APR, 2023 | 09:42 AM போர்த்­துகல் கால்­பந்­தாட்ட வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவை கைது செய்து சவூதி அரே­பி­யா­வி­வி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்டும் என சவூதி அரே­பிய சட்­டத்­த­ரணி ஒருவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். மைதா­னத்தில் அநா­க­ரி­க­மான முறையில் ரொனால்டோ நடந்­து­கொண்­டா­ரென்ற குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்ளா நிலையில் அச்­சட்­டத்­த­ரணி இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார். 38 வய­தான ரொனால்டோ, சவூதி அரே­பி­யாவின் அல் நாசர் கழ­கத்­துக்­காக விளை­யாடி வரு­கிறார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற அல் ஹிலால் கழ­கத்­து­ட­னான, சவூதி ப்ரோ லீக் போட்­டியில் ரொனால்டோ தலை­மை­யி­லான அல் நாசர் அணி 2:0 கோல்­களால் …

  19. Published By: VISHNU 18 APR, 2023 | 04:59 PM (நெவில் அன்தனி) மசாசூசெட்ஸில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இவான்ஸ் செபெட்டும் பெண்கள் பிரிவில் ஹெலன் ஒபிரியும் வெற்றிபெற்றனர். பொஸ்டன் மரதன் போட்டியில் கென்யர்கள் இருவர் முதலிடங்களைப் பெற்றது இது மூன்றாவது தொடர்ச்சியான தடவையாகும். 127ஆவது தடவையாக நடைபெற்ற ஆண்களுக்கான பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் 05 நிமிடங்கள், 54 செக்கன்களில் நிறைவு செய்து இவான்ஸ் செபெட் வெற்றிபெற்றார். பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி வரலாற்றில் 2006 - 2008க்குப் பின்னர் சம்பியன் பட்டத்தை …

  20. Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 09:06 AM யாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்றது. சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்படுகின்ற குறித்த சுற்றுப்போட்டி இரண்டு தினங்கள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் 6,8,10,12,14,16,16 வயதுப் …

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஏப்ரல் 2023, 15:03 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கால்பந்தாட்ட ஆண்கள் அணி, முக்கிய இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இதனை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதிக்குட்பட்ட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றுக்கு பங்குபெறுவ…

  22. Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 02:42 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள 2023 வலைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 12 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 வீராங்கனைகளின் பெயர்களும் 4 தயார்நிலை வீராங்கனைகளின் பெயர்களும் விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்தது. வலைபந்தாட்ட இறுதிக் குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார். அவுஸ்திரேலியாவில் விக்டோரியா வலைபந்தாட்ட லீக் போட்டியில் பெல்கன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை வலைபந்தாட்ட அணியில் இணை…

  23. பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை! கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு இம்மாதம் 27ஆம் திகதி சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந…

  24. சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி Published By: SETHU 29 MAR, 2023 | 11:35 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார். கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் …

  25. சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் யூரோ 2024 தகுதிச் சுற்றில் லக்சம்பர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து உலகிற்கு தனது மீள் வருகையை அவர் மீண்டும் அழுத்தமாக உரைத்துள்ளார். கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரொனால்டோவுக்கு மிகுந்த ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. ரொனால்டோ தலைமை தாங்கிச் சென்ற போர்ச்சுகல் அணி காலிறுதியுடன் வெளியேறியதுடன், அந்த அணி விளையாடிய கடைசி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.