விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட அலாஸ்டர் குக்கின் இடத்துக்கு ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பல சிரேஷ்ட வீரர்கள் இருக்கின்ற போதும் இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அலாஸ்டர் குக். 2012ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற குக் 59 போட்டிகளில் தலைவராக இருந்துள்ளார். இந்த காலப் பகுதியில் 2 ஆஷஸ் தொடர்கள் உட்பட பல தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் வி…
-
- 0 replies
- 378 views
-
-
கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 'சனுஷ் சூர்யா தேவ்' என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை, கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது. பால்மணம் மறா அந்தக் குழந்தையின் கிரிக்கெட் முயற்சியை கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருகின்றனர் பெற்றோர் முருகன் ராஜ் - சுபத்ரா. இதுகுறித்து அவர்களிடம் பேசியபோது... "நான் இயல்பாகவே கிரிக்கெட்டர். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற என் ஆசை பல காரணங்களால் நிறைவேறலை. அதனால்தான் இன்னிக்கு கிரிக்கெட் பயிற்சியாளரா இருக்கிறேன். என் மனைவி சுபத்ரா, ஒரு டாக்டர். என் மகன் சனுஷ், மகேந்திர சிங் தோனி பிறந்த தேதியிலதான் பிறந்தான். அது…
-
- 0 replies
- 420 views
-
-
டோக்யோ ஒலிம்பிக்: மேரி கோமின் தோல்விக்காக இந்தியா ஏன் வருந்துகிறது? இது இவரது கடைசி ஒலிம்பிக்கா? வந்தனா பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேரி கோமுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. இரண்டு முறை குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற வேண்டும். 2012, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு டோக்யோவிலும் வெல்ல அவர் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால் இன்று அவர் கொலம்பியாவைச் சேர்ந்த போட்டியாளரிடம் தோற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார். இந்த ஒலிம்பிக் தோல்வி அ…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு எட்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக, 88 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாம் இடத்தினைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றிகள் மூலம் 5 மேலதிக புள்ளிகளைப் பெற்றது. இதன் காரணமாக, தற்போது இலங்கை அணி பெற்றுள்ள 93 புள்ளிகளுடன் பாகிஸ்தான் சமநிலையில் இருக்கின்றது. எனின…
-
- 0 replies
- 355 views
-
-
முதல்தரப் போட்டிகளில் புதிய சாதனை படைத்த சங்கக்கார Image Courtesy - Sports24hour கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் ஜமெய்க்கா தலாவாஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார முதல்தரப் போட்டி, முதல்தர ஒருநாள் போட்டி (List A) மற்றும் டி20 போட்டிகளில் ஆசியாவிலேயே அதிக ஓட்டங்களைக் குவித்த கிரிக்கெட் வீரர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கின் 7ஆவது லீக் போட்டியில், ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகளால் வீழ்த்தி ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் 47 ஓட்டங்களைக் க…
-
- 0 replies
- 445 views
-
-
துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG கிரிக்கெட்டை ரசிக்கும் எவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பிடிக்கும். எதிராளிகளை வீழ்த்தும்போதெல்லாம் பகடி செய்வார்கள்; ஆக்ரோஷம் கூட்டுவார்கள்; நடனமாடுவார்கள்; ஜெயிக்கும்போதெல்லாம் 'நாங்க தாண்டா கெத்து' எனக்காட்டும் அவர்களது ஆர்ப்பாட்டம் நிச்சயம் நம்மைக் கோபப்படுத்தாது. நாமும் அவர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவோம் அல்லது அந்தக் கொண்டாட்டத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவோம். ஏனெனில் விளையாட்டை நேசிக்கும்... வீரர்களை மதிக்கும் பண்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தானது. போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் போட்டி முடிந்த பின்னர் எதிரணி வீரர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர…
-
- 0 replies
- 407 views
-
-
பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா Image courtesy - Getty Images எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது முறையாகவும் தகுதி பெற்ற பெருமையை அவ்வணி கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஜப்பான் அணியை 1-௦ எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே சவூதி அரேபிய அணி இந்த தகுதியைப் பெற்றது. இதன்படி, ஆசியாவில் இருந்து சவூதியுடன் சேர்த்து ஜப்பான், ஈரான் மற்றும் கொரியா ஆகிய அணிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி …
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுவுள்ளது. யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும்,ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்துள்ள இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது .பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி20 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து படுதோல்வியை தழுவியது. யாழ்ப்பாணத்தில் கிரி…
-
- 0 replies
- 460 views
-
-
வெற்றி பெற்ற பிறகும் கேப்டன்சியில் தடுமாறும் தோனி ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. கேரி பாலன்ஸ் 104 ரன்களுடனும், இயன் பெல் 16 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் முன் முதல் நாள் ஆட்டத்தில் தோனி கேப்டன்சியின் சில வினோதங்களைப் பார்ப்போம். இஷாந்த் சர்மா காயத்தினால் விளையாடவில்லை என்ற போதே தோனி நிச்சயம் தனது பாதுகாப்பு உத்திகளுக்கே செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கக் கூடும். அதுதான் நடந்தது. டெஸ்ட் போட்டியை ஆட்டம் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அலுப்பூட்டுவதாக மாற்றி விடுகிறார் தோனி. அணித் தேர்வில் மீண்ட…
-
- 0 replies
- 671 views
-
-
Published By: VISHNU 17 NOV, 2023 | 11:05 AM (எம். எம். சில்வெஸ்டர் ) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்றைய தினம் சாம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிறு வரை நடைபெறவுள்ள இப்போட்டி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 15 வயது முதல் 29 வயது வரையான 3000 க்கும் அதிகமான வீ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் செல்வது ஆபத்து சிம்பாப்வேயை எச்சரிக்கிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானுக்கு செல்வது ஆபத்தானது என்றும் அங்கு போதியளவு பாதுகாப்பு இல்லை என்றும் சிம்பாப்வே அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் சென்று விளையாட சிம்பாப்வே அணி அண்மையில் ஒப்புதல் கொடுத்தது. ஆனால், இந்த ஒப்புதலை மீள் பரிசீலனை செய்யுங்கள் என்று சிம்பாப்வேக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம்…
-
- 0 replies
- 281 views
-
-
டெஸ்ட் தரவரிசை பேட்டிங், பந்துவீச்சு :முதல் பத்தில் ஒரு இந்தியர் கூட இல்லை...! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஒரு ரன்னில் இரட்டை சதத்தை கோட்டை விட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஐ.சி.சி. லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 913 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு பிறகு இப்போதுதான் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் சங்கக்காரா 909 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தென்ஆப்ரிக்க அணியின் கேப…
-
- 0 replies
- 371 views
-
-
3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000 மீற்றரில் மாத்தளை துதிதர்ஷிதன் தங்கம் வென்று அசத்தல்! : இன்று பகல் வரை 5 புதிய சாதனைகள் Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 01:27 PM (நெவில் அன்தனி) தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர். அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படு…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
செல்சியில் நகைச்சுவை, கேலிக்குத் தடை இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களாக செல்சி அணி, இப்பருவகாலத்தில் மோசமான தொடக்கமொன்றைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியின் பயிற்சிகளின் போது நகைச்சுவையான கேலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த 29 வருடங்களில், செல்சி அணி சந்தித்த மிக மோசமான பருவகால ஆரம்பத்தையடுத்தே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் 5 போட்டிகளில், வெறுமனே 4 புள்ளிகளை மாத்திரமே செல்சி அணி பெற்றுள்ள போதிலும், நெருக்கடி நிலைக் கூட்டங்களுக்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் அக்கழக வட்டாரங்கள் அறிவிக்கின்றன. செல்சியின் முகாமையாளராக மொரின்கோ பதவியேற்றுக் கொண்ட பின்னர், பயிற்சிகளின் போது …
-
- 0 replies
- 371 views
-
-
விராட் கோலி : "ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை" 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும…
-
- 0 replies
- 726 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …
-
- 0 replies
- 442 views
-
-
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை வென்றது பிரிட்டன் உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. வெற்றிக் களிப்பில் பிரிட்டிஷ் அணியினர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் அணி பெல்ஜியத்தை வென்றது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில் பேசு…
-
- 0 replies
- 1k views
-
-
கெயிலுக்கு பொண்டிங் கண்டனம் January 13, 2016 கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் நிரூபருடன் தகார வார்த்தையில் ஈடுபட்ட கெயில் தற்பொழுது மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ஓட்டத்தை பெறுவதுக்கு ஓடமறுத்து நின்றமையே அந்தச் சர்ச்சை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணி சிட்னி தண்டரை எதிர்த்து நேற்றுமுன்தினம் விளையாடியது. இதில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணியின் சார்பாக கெயில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் ரொம் கூப்பரும் தொடக்க வீரராக களம் இறங்கினார். அப்போது கெயில் ஒரு ஓட்டத்தைப் பெற (சிங்கிள்) விருப்பம் இல்லாமல் இருந்தார். 8 முதல் 10 வரையான வாய்ப்புக்களை கெயில் வீணடித்தார். பொதுவா…
-
- 0 replies
- 483 views
-
-
பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் அபார பந்துவீச்சின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டன் அபிஷேக் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல். http://www.thepapare.com/video-jaffna-st-johns-college-fast-bowler-anton-abishek-interview-tamil/
-
- 0 replies
- 588 views
-
-
2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் சன்ரைசர்ஸ்; அணியின் தலைமை பொறுப்பிலிருந்து நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு டேவிட் வோர்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஹைதராபாத் அணியின் தலைவராக வில்லியம்சனே நீடித்திருக்கவேண்டும் என பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேன் வில்லியம்சன் என்ன தவறு செய்தார் என யாராவது தெரிவிக்க முடியுமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது கேலிக்குரிய விடயம் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். தலைமைப்பதவிக்கு கேனே வோர்னரை விட பொருத்தமான…
-
- 0 replies
- 482 views
-
-
மே. தீவுகளை வெல்லுமா இலங்கை? இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை வெள்ளையடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அவ்வணியின் தலைவர் கெரான் பொலார்ட்டுடன், டுவைன் …
-
- 0 replies
- 639 views
-
-
'2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன?' சுயசரிதையில் டி வில்லியர்ஸின் ஃப்ரீ ஹிட் ஒருமுறை இயக்குநர் சிகரம் பாலசந்தர், ரஜினியிடம் சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா என கேட்டார். அதற்கு ரஜினி ‘நான் மகாத்மா காந்தி சுயசரிதை படிச்சிருக்கேன். சுயசரிதைன்னா உண்மை இருக்கனும். உண்மையை எழுதுனா பல பேரோட பகையை சம்பாதிக்க வேண்டி இருக்கும். ஸோ.. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை’ என பதிலளித்திருப்பார். ரஜினி சொல்வது போல, சுயசரிதை என்பது சுயதம்பட்டமாக இல்லாமல், உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும்படி இருக்க வேண்டும். இல்லையேல் பெரிதாகப் பேசப்படாது. எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’, கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ இந்த மூன்று சுயசரிதையில் எது பெஸ்ட…
-
- 0 replies
- 482 views
-
-
ரியோ 2016 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்; மீட்பர் கிறிஸ்து அடிவாரத்தில் பிரமாண்டமான சமாதானக் கொடி 2016-09-07 09:50:25 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31ஆவது அத்தியாயத்தை கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ, மாற்றுத் திறனாளிகளுக்கான 15 ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவை இன்று நடைபெறவுள்ள தொடக்கவிழாவுடன் ஆரம்பிக்கின்றது. பிரேஸில் தேசத்தின் பண்பாடுகள் உலகம் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் கொண்டாட்டங்களுடன் மிகச் சிறப்பான பராலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ரியோ 2016 ஏற்பாட்டுக் குழுவினர் உறுதிபூண்டுள்ளனர். …
-
- 0 replies
- 340 views
-
-
டெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் சாதிப்பது கடினம்: கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்பு போல் டெஸ்ட் போட்டியில் சாதிப்பது கடினம் என்று முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட ஊதிய பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணி முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது சாதிப்பது கடினம். தற்போது இளம் வீரர்கள் 20 ஓ…
-
- 0 replies
- 431 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பே…
-
- 0 replies
- 386 views
-