Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Published By: VISHNU 20 JUL, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார். இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள…

  2. இங்கிலாந்தின் சசெக்ஸ் அணியில் குலசேகர இங்கிலாந்தின் நெட் வெஸ்ட டி20 தொடரில் சசெக்ஸ் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அழைக்கப்பட்டுள்ளார். சசெக்ஸ் அணி பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ{மானை ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும் ஐ.பி.எல் போட்டியின்போது அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக அணிக்கு திரும்ப முடியவில்லை. இதனால் இலங்கை அணியின் குலசேகர சசெக்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 4 பந்து ஓவர்களில் 28 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.vir…

  3. இலங்கை அணியில் அதிரடி மாற்றம் : இலங்கை டி20 குழாமில் ரமித் ரம்புக்வெல்ல இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியான டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த இறுதிப் போட்டிக்காக இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் ரமித் ரம்புக்வெல்ல இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரம்புக்வெல்ல இலங்கை ஏ அணிக்காக 2013 ஆம் அண்டு ஒரு டி20 போட்டியில் நியுஸிலாந்து அணிக்கெதிராக விளையாடியுள்ளார். இந்த போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியுள்ளார். இதேவேளை ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட உபுள் தரங்கவையும…

  4. இலங்கையுடன் இணையும் இந்தியா ; ஐ.சி.சிக்கு எதிர்ப்பு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் “டு டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் முடிவினை வரவேற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி இருக்கும் அணிகளுக்கு தீங்கு ஏற்படுவதோடு, ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்ற காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை குறித்த “டு டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. …

  5. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சீக்கிய வீரர் தேர்வு! கராச்சி: பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு முதல் முறையாக மகேந்தர் பால் சிங் என்ற என்ற சீக்கிய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சிக்கு சீக்கியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமி வளாகத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் பயின்று வரும் மகேந்தர் பால் சிங் (21) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

  6. U-19 இந்திய அணி துணை பயிற்சியாளர் மரணம்! இந்திய கிரிக்கெட் (19 வயதுக்குபட்ட) அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவாந்த் மும்பையில் உள்ள ஹோட்டலில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் பயிற்சிக்கு வராததால், சந்தேகமடைந்து, அறையை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராகுல் டிராவிட்டுக்கு கீழ் உள்ள பயிற்சிக் குழுவில் இவரும் ஒருவர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/india/79078-indian-cricket-u-19-trainer-rajesh-sawant-died-in-hotel.art

  7. “கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம் “ஒரு முறை எனக்கு ஏற்பட்ட கோபத்தினால், களத்தில் இருந்த ஸ்டம்ப் ஒன்றைப் பிடுங்கி கோலியைக் குத்தவும் விரும்பினேன்” என்று கூறியுள்ளார் அவுஸ்திரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எட் கோவன். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகளும், அதைச் சார்ந்து எழுந்த சர்ச்சைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில், அதை மீண்டும் கிளப்பியுள்ளார் எட் கோவன். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றின்போது, தனக்கு ஏற்பட்ட கோபத்தினால் கோலியை ஸ்டம்ப்பால் குத்த விரும்பியதாகத் தெரிவித்தார். “ஒரு போட்டியின் நடுவே நான் கடுமையாக சுகவீனமுற்றேன். அப்போது என்னைப் பார்த்து ம…

  8. இந்திய வீரர்களுக்கு விருந்து அளித்து உபசரித்த வெயின் பிராவோ ஐ.பி.எல். தொடரில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் வெயின் பிராவோ, இந்திய அணிக்கு விருந்து அளித்து உபசரித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது அவருக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. டோனியின் தலைமையின் கீழ் அவர் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடினார். டோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் இந்திய வீரர்களை தனது சகோதரர்கள் போல்தான் நினைத்து வருகிறார். இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிர…

  9. இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். சிறப்பு நேர்காணல் – பாகம் 01 தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். http://www.thepapare.com

  10. பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், இலங்கையிலிருந்து 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற பங்…

  11. பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா அதிரடி நீக்கம் புதன்கிழமை, ஜூலை 28, 2010, 14:07[iST] பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்…

  12. கோலியின் பிரச்சனை என்ன? விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்: 1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை ) 2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்) 3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நர…

  13. ``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்…

  14. ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி Image courtesy - Getty Image பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட் பெரும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதில் இந்த ஐரோப்பிய பருவத்தில் போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறை ஒரு கோல் கூட போட தவறியுள்ளார். ஜெர்மனி கழகமான பயென் முனிச்சின் சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரேனாவில் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணியினால் ஆதிக்கம் செலுத்த முடிந்தபோத…

  15. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது December 15, 2018 1 Min Read பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 2-வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில்…

  16. நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய செரீனா 2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோன ஹாலெப்பை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வரும் இப் போட்டியில், பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 16 ஆம் நிலை வீராங்கனையான செரீனா உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார். இப்போட்டியில் செரீனா முதல் செட்டை 1-6 என்ற இழந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். http://www.virakesari.lk/article/48454

  17. மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து Editorial / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, மு.ப. 08:12 Comments - 0 மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள்: 360/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 135 (129), ஷே ஹோப் 64 (65), டரன் பிராவோ 40 (30), ஜோன் கம்பெல் 30 (28), அஷ்லி நேர்ஸ் ஆ.இ 25 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/37 [8], அடில் ரஷீட் 3/74 [9], கிறிஸ் வோக்ஸ் 2/59 [10]) இங்கிலாந்து: 364/4 (48.4 ஓவ. ) (துடுப்…

  18. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் ஏ.பி.டி முதலிடம்! டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐ.சி.சி. வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டியில் 908 புள்ளிகளையும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 902 புள்ளிகளையும் பெற்று ஒரே சமயத்தில் டி வில்லியர்ஸ் இந்த சாதனையை புரிந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 755 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர். இதிலும் விராட் கோலி 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் இந்திய அணியின் கேப்டன் த…

  19. கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக்கைதி! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும், அவரது தந்தைக்கும் சிறைக்கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மீரட்டில் இவரது குடும்பம் வசிக்கிறது. இவரது தந்தை கிரண்பால் சிங், நிலம் வாங்க 80 லட்ச ரூபாயை ரன்வீர் சிங் என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். பணம் இன்டர்நெட் வழியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வாங்கிய ரன்வீர் சிங், நிலத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். பணத்தையும் திருப்பித் தரவில்லை.இது தொடர்பாக கிரண்பால் சிங்குக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.…

  20. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமை…

  21. 10 நாடுகள் களத்தில் ; இன்று ஆரம்பமாகிறது உலகக் கிண்ண சமர்! உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது நாளைய தினம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து, மற்றும் வேல்ஸில் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் நடப்புச் சம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா, ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா, விராட் கோலி தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான…

  22. '' இந்திய அணிக்கு தோனி பாரமாக இருக்கிறார் ! ''அஜித் அகர்கர் 'தைரிய 'கருத்து இந்திய அணிக்கு தோனி பாரமாக இருப்பதாகவும் அவரது இடத்திற்கு வேறு ஒருவரை பரீசிலிக்க வேண்டுமென்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து கூறியுள்ளார். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து இரு டி20 போட்டிகளில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் மழையால் கை விடப்பட்டது.இந்த தோல்வியால் தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தைரியமாக கருத்து கூறியுள்ளார். '' தோனி இந்திய அணியின் மிகப்பெரிய வீரர் என்பதை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக தற்போதைய த…

  23. பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு மத்­திய ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள 16 இலங்கை வீரர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. மாறாக இங்கு நடை­பெ­ற­வுள்ள ப்றீமியர் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­டு­மாறு குறிப்­பிட்ட வீரர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்­பாட்டு அதி­காரி கார்ல்டன் பேர்­னாடஸ் குறிப்­பிட்­டுள்ளார். பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகும் அதே …

  24. படுமோசமான பேட்டிங்: ஷான் மார்ஷை கிளென் மெக்ராவுடன் ஒப்பிட்ட இயன் சாப்பல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல். நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ். ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற…

  25. திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்! கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஆயிரம் ரன்களை அடித்து மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர் பிரணவ் தாணவாடே சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகர் வரை இன்று பிரணவ் பற்றிதான் பேச்சு. பிரணவ் படைத்த இந்த சாதனை பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே... கிரிக்கெட் உலகில் ஒரே இன்னிங்சில் 4 இலக்க ரன்களை எட்டிய முதல் வீரர் பிரணவ். ஆயிரம் ரன்களை அடித்த தகவல் மும்பையில் பரவியதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி நடந்த மைதானத்திற்கு சென்றுள்ளனர். பல அரசியல்வாதிகள் கையில் பூங்கொத்துடன் மைதானத்தில் திரண்டனர். பொதுமக்களும் பரிசுளை வழங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.