விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
இருபதுக்கு - 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 30 ஓவர்கள் நீக்கப்பட்டு இருபதுக்கு-20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது. எனினும் அடுத்தவருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கு முன்னாயத்தமாகவே இந்த போட்டித் தொடர் …
-
- 0 replies
- 310 views
-
-
பந்துவீச்சு பயிற்சிக்காக தினமும் 40 கி.மீ பயணம் செய்த முஸ்தாபீகுர் ரக்மான்! வங்கதேச அணியின் இடது கை பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான் விசுவரூபம் எடுத்துள்ளார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற இவர் தனது இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு பிறந்த ரக்மானுக்கு தற்போது வயது 19. அதாவது வங்கதேச அணி முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது இவருக்கு மூன்றரை வயதுதான். பேட்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தினார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சட்கீரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாபீகுர் ரக்மான் தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கிர…
-
- 0 replies
- 235 views
-
-
சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!! அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார். இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன…
-
- 0 replies
- 355 views
-
-
சச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியாதை! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவுக்கு இந்தியாவுக்கு எதிரான இந்த 2வது டெஸ்ட் போட்டியோடு தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் சொந்த மண்ணில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சங்கக்காரா, தனது சொந்த மண்ணிலே உறவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுகிறார். போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கொழும்புவுக்கு நேரில் சென்று சிறப்பு பரிசு வழங்கி சங்ககாராவை கவுரவப…
-
- 0 replies
- 360 views
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கு மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது 2015-09-28 12:58:42 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக ஷஷான்க் மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ஜெக்மோன் டால்மியாவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார். இந்நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள ஷஷான்க் மனோகர் இப்பதவிக்கு பொருத்தமானவராகக் கருதப்படுகின்றார். இவர் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக பதவ…
-
- 0 replies
- 296 views
-
-
கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து மேஜிக் செய்த கால்பந்து வீரர் ( வீடியோ) கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து கால்பந்து வீரர் ஒருவர் வெற்றியை கொண்டாடியது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. வெனிசூலா பிரிமீயல் லீக்கில் கரகாஸ் அணிக்கு எதிராக கோல் அடித்த சமோரா அணி வீரர் சீசர் மார்ட்டினஸ் கோல் அடித்த உற்சாகத்தில் பந்தை சில வினாடிகள் அந்தரத்தில் மிதக்க வைத்தார். அப்போது அவரது அணியை சேர்ந்த சக வீரர்கள் அவரை சுற்றி நின்றனர். இந்த சமயத்தில் சீசர் மார்ட்டினஸ் ஏதோ ஒரு வித்தியாசமான டெக்னிக்கை கையாண்டு பந்தை அந்தரத்தில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தினார். ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவரது டெக்னிக் தென்படவில்லை. http://www.vikat…
-
- 0 replies
- 340 views
-
-
விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண ரி 20 ஆரம்பப் போட்டியில் இலங்கை வெற்றி 2016-01-20 11:31:30 விழிப்புலனற்றோருக்கான அங்குரார்ப்பண ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை விழிப்புலனற்றோர் அணி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷை 9 விக்கெட்களால் வெற்றிகொண்டது. கொச்சின், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இப் போட்டியில் சகலதுறைகளில் பிரகாசித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்புலனற்றோர் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினர். எண்ணிக்கை சுருக்கம் பங்களாதேஷ் விழிப்புலனற்றோர் 20 ஓவர்களில் 129 க்கு 8 விக். (சுரங்க சம…
-
- 0 replies
- 339 views
-
-
30 JUL, 2025 | 10:46 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றை நிருமாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இதுவரை உள்ளக விளையாட்டரங்குகள் நிர்மானிக்கப்படாத பகுதிகளில் தரமான உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். 'யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ளக அரங்கு இல்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் அதுதான் உண்மை. எனவே, இந்த வருடம் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் உள்ளக விளையாட்டு அரங்குகளை நிருமானிப்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை இந்த வருடம் நிருமாணிக்…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
விவ் ரிச்சர்ட்சை ஒத்திருக்கிறது விராட் கோலியின் மனநிலை: ரவி சாஸ்திரி விராட் கோலி. | படம்: ஜி.பி.சம்பத் குமார். இந்திய அணியின் இயக்குநரான ரவிசாஸ்திரி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது விராட் கோலியின் மனநிலையை விவ் ரிச்சர்ட்ஸின் மனநிலைக்குச் சமமானது என்று புகழாரம் சூட்டினார். விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய ஆளுமை எப்படியெனில் எந்த ஒரு சவாலையும் நான் விட்டு விட மாட்டேன். நான் அனைத்துத் தடைகளையும் கடந்து நேராக பணிக்கு வருபவன். அதாவது தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை என்ற புள்ளிக்கு நேராக வருவதுதான் என்னுடைய அணுகுமுறை. இதுதான் எனது முதல் பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்திய அணி …
-
- 0 replies
- 339 views
-
-
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ரொனால்டோ அசத்தலில் போர்ச்சுக்கல் வெற்றி அன்டோரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ | படம்: ராய்ட்டர்ஸ். உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல் -அன்டோரா அணிகள் பாரிஸ் நகரில் மோதின. இதில் போர்ச்சுக்கல் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனல்டோ 4 கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கிய முதல் நான்கு நிமிடங்களுக்குள் அவர் இரு கோல்கள் அடித்து அன்டோரா அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். யுரோ உலகக் கோப்பை இறுதி ப்போட்டியில் காயம் அடைந்த ரொனால்டோ அதன் பின்னர் 3 மாதங்களுக்கு ப…
-
- 0 replies
- 401 views
-
-
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/201210173131-covid-19-vaccinations-live-video-1-720x450.jpg 2020-21ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித்தின் முன்னைய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இந்த நியமனம் அமைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளநிலையில், இத்தொடரில் விளையாடும் தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், சரேல் எர்வி…
-
- 0 replies
- 485 views
-
-
அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!! International Triangular Series: Australia v Sri Lanka 14-02-2006 at Brisbane Australia beat Sri Lanka by 9 wickets Sri Lanka won the toss and decided to bat Sri Lanka Innings 266 for 9 (50.0 overs) Australia Innings 267 for 1 (45.3 overs) இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்கள்! தொடர்ந்து இதே மாதிரியான தோல்விகளை சந்திக்க எல்லா வல்ல ஈழ்பதீஸானை பிராத்திக்கிறேன்! :smile2:
-
- 0 replies
- 1.3k views
-
-
2019 உலகக்கோப்பைக்கு முன் 30 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது இந்தியா இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா 30 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. #TeamIndia #BCCI இந்திய அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் (இந்தியா, இலங்கை, வங்காள தேசம்) தொடரில் விளையாடுகிறது. இத்துடன் இந்தியாவின் 2017-18 சீசன் முடிவடைகிறது. அதன்பின் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். ப…
-
- 0 replies
- 246 views
-
-
'அதுதான் கிரிக்கெட்' - பங்கஜ் சிங் விரக்தியில் தெளிவு இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகப் பெயர் பெற்று போராடி இந்திய அணிக்குள் நுழைந்த ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அருமையாக வீசியும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதுதான் அறிமுக பவுலர் ஒருவரின் முதல் டெஸ்ட்டின் மோசமான பந்து வீச்சு என்ற அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 1.98மீ உயரமுடைய நல்ல உடற்கட்டு கொண்ட இந்த வேகப்பந்து வீச்சாளர் பேட்டி ஒன்றில் இந்தியாவுக்கு விளையாட முடியவில்லையெனில் நான் இனி ராஜஸ்தானுக்கும் ஆடப்போவதில்லை. எனக்கு பணம் முக்கியமல்ல, நிறைய சம்பாதித்து விட்டேன், கிரிக்கெட் எனது மூச்சு, இந்தியாவுக்கு விளையாடாமல் எனது கனவு சிதைந்து போய்விடும். என்று கூறியுள்ளார். மேலும் இவர் ஒரு…
-
- 0 replies
- 543 views
-
-
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் அறிமுகம் By DIGITAL DESK 3 16 NOV, 2022 | 12:31 PM அடுத்த ஒலிம்பிக். மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவும் மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் விளையாட்டு விழாவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன. இப்போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சின்னங்களை, பாரிஸ் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற வைபவத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டது. பிரிஜியன் கெப் (Phrygian cap) எனும் பழங்கால தொப்பிகளின் அடிப்படையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
மங்கிய நட்சத்திரங்கள் தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது. தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக…
-
- 0 replies
- 335 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரானத் தொடர் : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி! தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தரம்சாலாவில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியா - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர், அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக தென்ஆப்ரிக்க அணி, இந்தியாவில் 72 நாட்கள் முகாமிடுகிறது. தென்ஆப்ரிக்க அணி வீரர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இந்த தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய வீரர்கள் பெங்களுருவிவில் பயிற்சி பெற்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு உடல்ரீதியான திறனையும், மனோபலத்தையும் அதிகரிக்…
-
- 0 replies
- 292 views
-
-
நியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து! நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது. 306 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 45 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை ம…
-
- 0 replies
- 579 views
-
-
யூரோ 2020 காற்பந்து – நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவில் சாதனை! ‘யூரோ 2020’ காற்பந்துப் போட்டிகளுக்காக 14 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த போட்டிகளை விட சாதனை படைத்துள்ளதாக UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனை ஆரம்பித்த முதல் மூன்று வாரங்களில் நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவு 14 மில்லியனை தாண்டியது. முதற்கட்ட விற்பனை கடந்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்ததுடன், 1.5 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டன. ‘யூரோ 2020’ காற்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி தொடங்கம் ஒரு மாதத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஐரோப்பாவின…
-
- 0 replies
- 630 views
-
-
பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரக்கெட் அணியுடன் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60629
-
- 0 replies
- 534 views
-
-
தப்புமா சென்னை அணி புதுடில்லி: பிரிமியர் தொடரிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த 2013ல் நடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முத்கல் குழு விசாரித்தது. இக்குழு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. பிரிமியர் லீக் தொடரிலிருந்து இந்த இரு அணிகளும் நீக்கப்படும் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் மும்பையில் நாளை பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்படலாம். இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. அடுத்த தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்த்…
-
- 0 replies
- 449 views
-
-
ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..! அக்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.? கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அ…
-
- 0 replies
- 362 views
-
-
தலைவராக அசத்துகிறார் மத்தியூஸ்- அரவிந்த டி சில்வா November 30, 2015 மத்தியூஸ் மூன்று வகையிலான கிரிக்கெட் தொடர்களையும் வழிநடத்த தகுதியானவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் இளம் வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக செயற்பட்டுவரும் சில்வா, தற்போது துபாயிலும் கிரிக்கெட் அக்கடமியை ஆரம்பித்திருக்கிறார். மத்தியூஸ் தொடர்பாக சில்வா தெரிவிக்கையில் – ‘மலிங்கவின் ஓய்வுக்கு பிறகு ரி-20 தலைவராகவும் மத்தியூஸ் செயல்பட வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். அவர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக இளம் வீரராக அனைத்தையும் அற்புதமாக கையாள்கிறார். அனுபவம் கைகொடுக்க மத்தியூஸ் இன்றும் சிறப்ப…
-
- 0 replies
- 797 views
-
-
10,000 ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்தார் டிராவிட் [31 - March - 2008] இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 6 ஆவது சர்வதேச வீரர் என்ற சிறப்பை நேற்று முன்தினம் பெற்றார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 80 ஓட்டங்கள் எடுத்த போது 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டார். தனது 120 ஆவது டெஸ்டில் புதிய மைல்கல்லை அவர் எட்டியிருக்கிறார். டிராவிட் இறுதியில் 111 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் டெண்டுல்கர், லாராவுக்கு அடுத்ததாக 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தவர் என்ற பெருமையும் டிராவிட்டுக்குக் கிடைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி; 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த சானியா- ஹிங்கிஸ் ஜோடி! இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 29 வெற்றிகளை பெற்று, 22 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் நம்பர் ஒன் ஜோடியான சானியா மற்றும் ஹிங்கிஸ் இணை, கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த வாரம் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பட்டதை வென்ற இந்த இணை, தற்போது சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில் கலக்கி வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீன ஜோடியை எதிர்கொண்ட சானியா ஹிங்கிஸ் இணை, 6-2,6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. …
-
- 0 replies
- 390 views
-