விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கை அயர்லாந்து ஒருநாள் போட்டி: அணி விபரம் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நாளை டப்ளினில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இலங்கை அணி பல மாற்றங்களுடன் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் விபரம் பின்வருமாறு இலங்கை அணி - அஞ்சலோ மெத்தியுஸ், (அணித்தலைவர்) தினேஸ் சந்திமால் (உப தலைவர்) குசல் பெரேரா, உபுள் தரங்க,தனஞ்சய டி சில்வா, சமிந்த எரங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தசுன் சானக, பர்விஸ் மஹ{ருப், சுராஜ் ரந்திவ், சீக்குகே பிரசன்ன. அயர்லாந…
-
- 7 replies
- 946 views
-
-
பதவிக்கு அலைபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்! கடந்த உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததில் இருந்தே, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் இல்லாமல்தான் விளையாடி வருகிறது. ரவி சாஸ்திரி தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்திய அணிக்கு சரியான திறமையான பயிற்சியாளரைத் தேர்வு செய்ய, பிசிசிஐ முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் , வி.வி.எஸ். லக்ஷ்மண் அடங்கிய குழுவை அறிவுரையாளர்களாக நியமித்திருந்தது. ஒரு ஆண்டு காலமாக காலியாகவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் அப்ளை செய்திருந்தனர். இதில் ஒரு கேலிக் கூத்தும் நடந்தது. இதுவரை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்து வந்த சந்தீப் பாட்டீலின் பதவி காலம் …
-
- 0 replies
- 401 views
-
-
றோம் வென்றால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான போட்டியில் இத்தாலியத் தலைநகர் றோம் வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என்று இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த, பிரான்ஸின் தலைநகர் பரிஸ், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ், ஹங்கேரியின் தலைநகர் புடாபாஸ்ட் ஆகியன றோம் போட்டியிடுகின்ற நிலையில், புதிய விடுமுறைகளின்படி, போட்டியை நடாத்த வெல்லும் நகரம், அவர்கள் உள்ளடக்கலாம் என்று கருதுகின்ற ஐந்து விளையாட்டுக்களை உள்ளடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, ஒலிம்பிக்கை றோம் நடாத்தினால், கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என இத்தாலிய …
-
- 0 replies
- 327 views
-
-
ஜேர்மன் கிண்ணத்தை வென்றது டொட்டமுண்ட் ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே விலகல் முறையில் இடம்பெற்றுவந்த ஜேர்மன் கிண்ண இறுதிப் போட்டியில், பொரிசியா டொட்டமுண்ட் வெற்றிபெற்றுள்ளது. ஐன்ராட் பிராங்பேர்ட்டையே, இறுதிப் போட்டியில், டொட்டமுண்ட் வென்றுள்ளது. புண்டெலிஸ்கா தொடரில் மூன்றாமிடம் பெற்ற டொட்டமுண்ட்டுக்கு, இந்த வெற்றி ஆறுதலாய் அமைந்தது. இத்தடவையுடன் சேர்த்து, நான்கு தடவைகள், ஜேர்மன் கிண்ண இறுதிப் போட்டியை பொரிசியா டொட்டமுண்ட் வென்றுள்ளது. இப்போட்டியின் எட்டாவது நிமிடத்தில், உஸ்மன் டெம்ப்பிளி பெற்ற கோலின் மூலம் டொட்டமுண்ட் முன்னிலை பெற்றது. பின்னர் 29ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற அன்டே …
-
- 0 replies
- 323 views
-
-
ஐ.சி.சி-யின் புதிய விதிமுறை... ப்ளஸ், மைனஸ் என்ன? இந்திய அணியில் என்றுமே ரோஹித் சர்மாவின் நம்பகத்தன்மையின் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருவது வழக்கம். அவரது கன்சிஸ்டன்சி அப்படி. ஒரு ஆட்டத்தில் அபாரமாக ஆடினாலும் அடுத்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிடுவார். இந்நிலையில் காயத்தினால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்த அவர், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 91 ரன்கள் அடித்து தன் திறமையைக் காட்டினார். முதலில் மிகவும் நிதானமாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஆனாலும், கடைசியில் ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சதத்தையும் தவறவிட்டார். இங்கிலாந்து மண்ணில்…
-
- 0 replies
- 473 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள். பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன. ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 10 நாட்கள் பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து அணி தற்போது திட…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் Tamil இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர். இந்த பருவகாலத்திற்கான ப…
-
- 0 replies
- 371 views
-
-
என்னை நான் கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன்: கடந்து வந்த பாதை பற்றி மனம் திறக்கிறார் முரளி விஜய் முரளி விஜய். | படம்.| ஆர்.ரகு. குறும்புத்தனம் செய்யும் பையனாக தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் இன்றைய டெஸ்ட் தொடக்க வீரராக முன்னேறியது வரையிலான தனது பயணத்தை முரளி விஜய் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். கடினங்களிலும் கிரிக்கெட் மேல் உள்ள அந்த நேசம் மட்டுமே தன்னை நகர்த்திக் கொண்டு சென்றது என்று கூறிய விஜய், “மலையின் உச்சியைத் தொடுவது கடினம்தான், ஆனால் ஏறிய பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும் போது கடினப்பாடு பெரிதாகத் தெரியவில்லை” என்றார் விஜய். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் மிகவும்…
-
- 2 replies
- 576 views
-
-
மான்செஸ்டர் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும்: ஜோஸ் மவுரினோ நம்பிக்கை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என பயிற்சியாளர் மவுரினோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரோஸ் மவுரினோ கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை, ஐரோப்பா லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது. ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் 6-வது இடத்தையே பிடித்தது. இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து…
-
- 0 replies
- 501 views
-
-
இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்! அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இலங்கை அணி. 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள். இவை அனைத்தும், 37 நாள்களில் முடியவுள்ளன! நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 6 அன்று டெல்லி-யில் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது. தர்மசாலாவில் டிசம்பர் 10 அன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17 அன்று மூன்றாவது போட்டியுடன் ஒருநா…
-
- 0 replies
- 273 views
-
-
மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…
-
- 0 replies
- 246 views
-
-
மதுசனின் சகலதுறை ஆட்டத்தோடு யாழ். மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி 19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளான புத்தளம் புனித சேவியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் (இரண்டு நாட்கள் கொண்ட) போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு சொந்தக்காரர்களாக யாழ் வீரர்கள் மாறியுள்ளனர். வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை விருந்தினர்களான சேவியர் கல்லூரிக்கு வழங்கியிருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாடியிருந்த …
-
- 3 replies
- 433 views
-
-
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான் 2014-08-23 19:01:13 இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். …
-
- 6 replies
- 602 views
-
-
ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு ரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். நியூசிலாந்தி…
-
- 0 replies
- 545 views
-
-
இந்திய அணியின் பிரிவினைக்கு காரணம் 'சென்னை'! இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்து விட்டது. நாளை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் மீண்டும் மோதவுள்ளன. தோல்வியை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து இறங்கத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் வீரர்கள் தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் இரு குழுவாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் மோதல் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தோனிக்கு எதிராக வீரர்கள் பலர் அணி திரள்வதற்கு, இரு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர் பேட்டிங் பார்மில் இல்லை என்பது முதல் காரணமாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக…
-
- 0 replies
- 239 views
-
-
முக்கிய போட்டியில் இலங்கை தோல்வி – தென்னாபிரிக்கா அபார வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. செஸ்ரர் லே பகுதியிலுள்ள ரிவர்சைட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிதனமாக துடுப்பெடுத்தாடியபோதும், ஒரு கட்டத்தில் விக்…
-
- 0 replies
- 436 views
-
-
’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவிய நிலையில் மிலிங்க மற்றும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கையை சேர்ந்த 17 வீரர்கள் உட்பட 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை இந் நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நட…
-
- 0 replies
- 437 views
-
-
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ரா…
-
- 0 replies
- 559 views
-
-
பாகிஸ்தான் , மே.தீவுகள் ஒ.நா.ச போட்டித் தொடர் -ச.விமல் இரண்டு கீழ் நிலை அணிகளுக்கிடையிலான தொடர் இது. இது கூட ஒரு விறுப்பைத் தரும் தானே? 92 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 87 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ள அல்லது தமது இடங்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இந்த இரு அணிகளும் வேற எந்த அணியையும் முந்தவும் முடியாது. இந்த அணிகளை வேறு எந்த அணிகளும் முந்தவும் முடியாது. பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தால் மாத்திரம் இந்த அணிகளில் ஒன்று முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெ…
-
- 0 replies
- 407 views
-
-
இடத்தை இழக்கப்போவது யார்? இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் உப தலைவர் சந்திமால் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர். இருவரும் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அணியிலிருந்து நீக்கப்படப்போவது யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அஞ்சலோவும் சந்திமாலும் அணியில் இணையும் பட்சத்தில் யார் நீக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர் கிரஹம் போர்ட்டிடம் கேட்டபோது, அதற்கு இப்போதே பதிலளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அண்மையில் ச…
-
- 0 replies
- 254 views
-
-
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம…
-
- 0 replies
- 374 views
-
-
"எப்படி பந்து வீசினாலும் அடித்த சேவாக்" - அஸ்வின் பகிர்ந்த சுவாரஸ்ய நினைவுகள் வீரேந்திர சேவாக் தன்னை மனம் தளரவைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இணைய நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, வலைப்பயிற்சியில் வீரேந்திர சேவாக் ஆட தான் பந்து வீசிய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் அஸ்வின். அவர் பேசியதாவது: "சேவாக் சிக்கலானவர் அல்ல. ஆனால் உண்மையில் அவர் என் மனதை தளரவைத்துள்ளார். இலங்கையின் தம்புள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியில் நான் அவருக்கு பந்து வீசினேன். ஆஃப் சைடில் பந்து வீசினேன், கட் ஷாட் அடித்தார். ஆஃப் ஸ்டம்ப்…
-
- 0 replies
- 708 views
-
-
அபார வெற்றி பெற்ற யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி புதிய சாதனை அகில இலங்கை பாடசாலை மட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் கொலன்னாவை மகளிர் வித்தியாலயத்தை வீழ்த்தி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பாடசாலை வலைப்பந்தாட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 360 பாடசாலைகள் பங்கேற்றுள்ள 2017ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று பதுளை, விச்சென்ட் டயஸ் மைதானத்தில் ஆரம்பமாகின. இதன் முதல் சுற்றின் ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும், கொலன்னாவை மகளிர் வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடத்த…
-
- 0 replies
- 428 views
-
-
19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: நடப்பு சம்பியன் இந்தியாவுடன் இலங்கையும் ‘அவுட்’ அரை இறுதிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மலேஷியாவின் கின்ராராவிலும் பயொமாஸிலும் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பு சம்பியன் இந்தியாவும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கையும் அரை இறுதி வாய்ப்புகளை இழந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளன. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடன் முற்றிலும் எதிர்பாராத நாடுகளான ஆப்கானிஸ்தானும், நேபாளமும் அரை இறுதிகளுக்கு முன்னேறியுள்ளன. பாகிஸ்தானும், பங்களாதேஷும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்புகளைப் பெற்றுவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தானும் …
-
- 0 replies
- 201 views
-
-
தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய முதல் மட்டக்களப்பு பெண் ஐடா எமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சகமான விளையாட்டாக காணப்படும் கிரிக்கெட்டில் தனது குறுகிய கால கடின பயிற்சிகள் மூலம் கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த மட்டு நகர், நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த நொபெட் ஜோன்சன் ஜடா குறித்த பார்வையே இது.
-
- 0 replies
- 371 views
-