விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
திறமையான வீரர்களை கண்டறிவதற்காக திராவிட்டுடன் விரைவில் ஆலோசனை: ரவி சாஸ்திரி தகவல் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணி பலமான அணியாக இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய ஏ அணியில் உள்ள திறமையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக அதன் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியில் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அங்கு வந்துள்ள ரவி சாஸ்திரி மேலும் கூறியதாவது: இந்திய ஏ அணியில் உள்ள சில வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவித்தாலோ அல்லது இடைவிடாது விக்கெட் வீழ…
-
- 0 replies
- 302 views
-
-
பதிவுகள் 2015: திறமையால் தெறிக்கவிட்டு தேசத்துக்குப் பெருமை சேர்த்த சானியா சானியா- ஹிங்கிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெற்ற விம்பிள்டன் கோப்பை, அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்; விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது; இந்திய கிரிக்கெட் கிளப்பில் (சிசிஐ) வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து; சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் 2015-ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தேர்வு. இவை அனைத்தும் 2015-ம் ஆண்டில் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா வசமாகி இருக்கிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் …
-
- 3 replies
- 689 views
-
-
திஸரவின் அதிரடிப் போராட்டம் வீணானது ; இங்கிலாந்து 30 ஓட்டத்தால் வெற்றி இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட இருபதுக்கு 20 தொடரினை இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தி வெற்றி கொண்டு, கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்து அணியை பணித்தது. அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கிலாந்து அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கள…
-
- 0 replies
- 328 views
-
-
தீபாவளி பரிசாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா 3:2 என்ற புள்ளிக்கணக்கில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது 2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது. தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது. இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின…
-
- 0 replies
- 287 views
-
-
தீப்பொறி பறக்கும் பார்மில் இருக்கும் ஃபகார் ஜமானை வீழ்த்துவது எப்படி? - இந்திய பவுலர்களுக்கு மைக் ஹஸ்ஸி ஆலோசனை பாகிஸ்தான் சரவெடி வீரர் ஃபகார் ஜமான். | ஏ.பி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 106 பந்துகளில் 114 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்த ஃபகார் ஜமான் சமீபத்தில் தீப்பொறி பறக்கும் பார்மில் இருந்து வருகிறார், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததோடு பல ஒருநாள் சாதனைகளை அந்தத் தொடரில் முறியடித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவரைக் கட்டுப்…
-
- 0 replies
- 408 views
-
-
தீர்க்கமான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை ஆரம்பம் ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான தீர்க்கமான தகுதிகாண் போட்டிகள் நாளை (29) தொடக்கம் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வரும் நவம்பர் 14ஆம் திகதியுடன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் முடிவடையவிருக்கும் நிலையில் இந்தப் போட்டிகள் பெரும்பாலான அணிகளுக்கு முக்கியமானதாக உள்ளன. 2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில் வரும் ஜுன் 14 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 32 தினங்கள் நடைபெறவுள்ளன. எனினும், இந்த போட்டிக்கான 32 அணிகளில் 31 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த 2015, மார்ச் 12ஆம…
-
- 0 replies
- 233 views
-
-
தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில் நடுவரின் தீர்ப்பின் ஆதிக்கம் குறைக்கப்படவுள்ளது தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவர் வழங்கும் தீர்ப்பு செலுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலுள்ளவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த குழுவின் இறுதிச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஜயவர்தனவே, தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவரின் தீர்ப்பு செலுத்துகின்ற தாக்கமானது அரைவாசியாக குறைக்கப்…
-
- 0 replies
- 234 views
-
-
தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack ஜிம்பாப்வே அணியுடனான அந்த டி20 தொடரை வென்றிருந்தது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணியைத்தான் வென்றிருந்தது. ஆனால், உலகக்கோப்பையையே வென்றதுபோல் அளவுகடந்த ஆர்ப்பரிப்பு. பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள். கோப்பையை வாங்குவதற்குமுன் பேசச் செல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. "பல்வேறு காரணங்களால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த அணியிலுள்ள பல வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை..." என்று உருக்கமாகப் பேசினார். ஆம், 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் நடந்த முதல் சர்வதேசத் தொடர் அது. ஒரேயொரு சம்பவம் அந்தத் தேச…
-
- 0 replies
- 520 views
-
-
தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி? பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான கால்பந்து போட்டியில் விளையாடிக…
-
- 0 replies
- 189 views
-
-
துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG கிரிக்கெட்டை ரசிக்கும் எவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பிடிக்கும். எதிராளிகளை வீழ்த்தும்போதெல்லாம் பகடி செய்வார்கள்; ஆக்ரோஷம் கூட்டுவார்கள்; நடனமாடுவார்கள்; ஜெயிக்கும்போதெல்லாம் 'நாங்க தாண்டா கெத்து' எனக்காட்டும் அவர்களது ஆர்ப்பாட்டம் நிச்சயம் நம்மைக் கோபப்படுத்தாது. நாமும் அவர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவோம் அல்லது அந்தக் கொண்டாட்டத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவோம். ஏனெனில் விளையாட்டை நேசிக்கும்... வீரர்களை மதிக்கும் பண்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தானது. போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் போட்டி முடிந்த பின்னர் எதிரணி வீரர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர…
-
- 0 replies
- 407 views
-
-
இன்றைய தரவரிசைப்படி துடுப்பெடுத்தாட்டத்தில் முதலாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசியும் இரண்டாம் இடத்தில் இந்தியாவின் டோனியும் உள்ளார்கள். சிரிலங்காவை :P அண்மையில் மண் கவ்வ வைத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் டோனியின் அதிரடி ஓட்டக் குவிப்பு அவரை இரண்டாம் இடத்திற்கு ஏற்றி விட்டது. ஜானா
-
- 0 replies
- 980 views
-
-
துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம் சங்கக்கார வெளிப்படை 0 SHARES ShareTweet பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்கக்கார. இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து இலக்குகளை இழந்ததை அடுத்து ஐந்தாவது வீரராக களமிறங்கும் சந்திமல் மூன்றாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். மூன்றாவது வீரராகக் களமிறங்கும் குசல் மென்டிஸ் ஐந்தாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவருமே பெரிய…
-
- 0 replies
- 400 views
-
-
துடுப்பு மட்டைக்கு ஓட்டை போட்ட அமெரிக்கா சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014 மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர் லென்டி சிமொன்சின் துடுப்பு மட்டையில் அமெரிக்கா சுங்க அதிகாரிகள் துளையிட்டு போதைப் பொருள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்துள்ளனர். கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக அமெரிக்காவினூடாக பயணிக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷாம் தந்து டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லாத விளையாட்டு. துடுப்பு பெரியதாகவும், பாரமானதகவும் இருக்க சுங்க அதிகாரில் சந்தேகத்தின் பேரில் இந்த செயலை செய்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-…
-
- 1 reply
- 530 views
-
-
துணை அங்கத்துவ நாடுகளின் கையில் அவமானப்படும் ஐசிசி அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவமுடைய நாடுகளாகக் காணப்படுகின்றன. இவை டெஸ்ற் விளையாடும் தகுதியையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக 38 நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபையானது துணை அங்கத்துவ நாடுகளாக அங்கீகரித்துள்ளது. இந்த 38 நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹொங் கொங், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தினைக் கொண்ட துணை அங்கத்துவ நாடுகளாகக் காணப்படுகின்றன. இரண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு இட…
-
- 0 replies
- 359 views
-
-
துணைக்கண்ட சரிவுகளின் மனத்தழும்புகள் ஆஸி. வீரர்களிடமிருந்து அகலவில்லை: மைக்கேல் கிளார்க் கருத்து மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஆடும் போது பேட்டிங்கில் ஏற்பட்ட திடீர் சரிவுகள், தொடர்ச்சியாக ஆட்டமிழப்பதன் மனத்தழும்புகள் இன்னமும் ஆஸ்திரேலிய வீரர்கள் மனதை விட்டு அகலவில்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 158/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு இழந்து திடீர் சரிவு ஏற்பட்டதற்கு இந்தக் காரணத்தை மைக்கேல் கிளார்க் முன்வைத்துள்ளார். அதாவது 2013-ம் ஆண்டு இந்திய தொடர் முதல் சமீபத்த…
-
- 0 replies
- 254 views
-
-
துன்புறுத்தல் வழக்கில் ஷகாதத் ஹொசைன் கைது வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் டாக்கா நீதிமன்றில் இன்று சரணடைந்து பிணை கோரிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹொசைன், சிறைக்கு அனுப்பப்ட்டுள்ளார். டாக்காவில் உள்ள ஷகாதத் ஹொசைனின் மனைவியினது உறவினர்களின் வீடொன்றில் இருந்து அவரது மனைவி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே இவரது கைது இடம்பெற்றிருக்கிறது. மாநகர நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் யூசுஃப் ஹொசைனிடம் இன்று காலை ஷகாதத் ஹொசைன் பிணை மனுவை கையளித்திருந்தார். நீதிமன்றம் பொலிஸாரை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி அறிக்கையளிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழேயே ஷகாதத் ஹொசைன் மற்றும்…
-
- 0 replies
- 251 views
-
-
துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கினார் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர இருக்கிறார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், டோனி வெளிநாட்டில் தொடங்க உள்ளார். இந்திய அணியின்…
-
- 1 reply
- 619 views
-
-
துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார். புதுடெல்லி: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஒருநாள் …
-
- 1 reply
- 386 views
-
-
துபாயில் சர்வதேச மாரத்தான் போட்டி: எத்தியோப்பிய வீரர் முதலிடம் துபாயில் ஸ்டாண்டர் சார்ட்ர்ட் வங்கியின் ஆதரவில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீர்ர் ஹெய்லி ஜெப்ர்செலஸ்ஸி மூன்றாவது வருடமாக தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார். முப்பத்து ஆறு வயதான இவர் 42.2. கிலோ மீட்டர் தூரத்தை (26 மைல்) இரண்டு மணி, ஆறு நிமிடம், ஒன்பது விநாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். எத்தியோப்பியாவின் சாலா டிசாஸே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.உலகெங்கிலும் பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக பல்வேறு சவால்கள் காத்திருப்பினும், துபாய் மாரத்தானில் அதன் தாக்கம் எதிரொலிக்காது பரிசுத் தொகையானது அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண…
-
- 0 replies
- 474 views
-
-
துபாயில் மனைவி, குழந்தைகள் தவிப்பு: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது தவான் குற்றச்சாட்டு தவானின் மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன் மறுத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் துபாயில் தவிப்பதால் தவான் குற்றம்சாட்டியுள்ளார். #INDvSA #EmiratesAirline இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் (27-12-2017) நள்ளிரவு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் மூலமாக துபாய் சென்றது.…
-
- 1 reply
- 399 views
-
-
துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு! ஆசியக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆசியக் கோப்பையை தொடர்ந்து நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. மேலும், ஆசியக் கோப்பைத் தொடரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் தொடர்ந்து நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள …
-
- 1 reply
- 436 views
-
-
இலங்கைப் பாடசாலைகள் துப்பாக்கி சுடும் விளையாட்டுச் சங்கத்தினால் நடாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தைப்பெற்றுக் கொண்ட யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி தாயனி ஸ்ரீசிதம்பரலிங்கம் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு மேலதிக பயிற்சிகளைப் பெறுவதற்காக ஜக்கிய அமெரிக்கா செல்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசியரீதியில் தெரிவு செய்யப்பட்ட 6 பேர் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள் அணியில் இடம்பெறும் ஒரே ஒரு தமிழ் மாணவ வீராக்கனை இவராவார். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறவுள்ள தேசிய அணி வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்காக இவருக்கான பயிற்சி…
-
- 0 replies
- 933 views
-
-
துப்பாக்கி முனை தோட்டாவாய் ரொனால்டோ... புல்லட் புரூஃப் ஜாக்கெட்டாய் யுவென்டஸ்! #ChampionsLeagueFinal #RealMadridvsJuventus `பாகுபலி 2' க்ளைமாக்ஸில் பிரபாஸும் ராணாவும் மோதிக்கொண்டபோது தியேட்டர் அதிர்ந்ததுபோல் இன்று இரவு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள க்ளப் சாம்பியன்களான ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மோதும்போது கால்பந்து உலகமே அதிரும். இது கார்டிஃப்பில் நடக்கப்போகும் சாம்பியன்களின் சாம்பியனுக்கான யுத்தம்; ஒரு வருடத் தவம். ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பு எகிறப்போகும் அந்த ஆட்டத்தின் முன்னோட்டம் இங்கே... சுவாரஸ்யமான இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதைக் கணிப்பது சிரமம். ஏனெனில், மோதப்போவது தலைகள் அல்ல... ம…
-
- 4 replies
- 834 views
-
-
துயரம் தரும் கணங்கள்: உலகக் கோப்பை தோல்வியை அசைபோடும் டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம். 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்…
-
- 0 replies
- 647 views
-
-
துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி உலக பாடசாலைகள் பங்கேற்கும் துரித சதுரங்க (fast chess) போட்டியில் இலங்கையின் விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷா மிச்சலா பல்லி என்ற மாணவி 9 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். துரித சதுரங்க போட்டிகள் ரஸ்யாவின் சொச்சி நகரில் இடம்பெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் பங்குகொண்ட போதே இவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரானில் இடம்பெற்ற 9 வயதுக்குற்பட்ட ஆசிய சதுரங்க போட்டியில் ஹேஷா ஒரு தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1437…
-
- 0 replies
- 328 views
-