Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திகதி அறிவிப்பு 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13333

  2. மத்திய கல்லூரி வெற்றியைத் தழுவியது யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடத்திய 20வயதுப்பிரிவு ஆண்களுக்கான காற்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி சம்பியனானது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ் மத்திய அணியை எதிர்த்து சென். ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. முதல் பாதி முடிவில் 2:1 என்று மத்திய கல்லூரி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் மத்திய கல்லூரி மூன்றாவது கோலை பதிவு செய்து 3:1 என்ற கணக்கில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. http://onlineuthayan.com/sports/

  3. 48 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ரியல் மாட்ரிட் 48 போட்டிகளில் தொடர்ந்து கோல்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது லா லிகா புகழ் ரியல் மாட்ரிட். லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்கு கடும் எதிரியாகத் திகழ்ந்து வருவது ரியல் மாட்ரிட். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பொறுப்பேற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாம்பியன்ஸ் லீக் முதல் அரையிறுதி (First Leg) போட்டியில் மான்செஸ்டர் அணிக்கெதிராக கோல்கள் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. அதன்பின் அந்த அணி 34 வெற்றிகள், 11 …

  4. ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம் 'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்தகால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது. கோபயாஷியின் இக் கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்…

  5. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த ஐந்…

  6. ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்திய யுவான்டஸ் கோல்கீப்பர் பஃபன் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன இத்தாலியின் முன்னாள் வீரர் பஃபன் ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிக…

  7. பொதுநலவாய விளையாட்டுத் தொடர்: 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம்! பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொட…

  8. இந்தியா மீண்டும் நம்பர்–1 செப்டம்பர் 01, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு த…

  9. ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 2014-10-03 13:28:14 ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 68 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது. தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 37 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 27 பந்துகளில 33 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும…

  10. ரெட் புல் அணியின் 60 இற்கும் அதிகமான கிண்ணங்கள் திருடப்பட்டன போர்மியூலா வன் காரோட்டப் பந்தயங்களின் வெற்றிரகமான அணிகளில் ஒன்றான ரெட் புல் அணி போட்டிகளில் வென்ற பல்வேறு சம்பியன் கிண்ணங்கள், கேடயங்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டில் புரூக் நகரிலுள்ள ரெட்புல் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இப்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் வாயிலுக்கூடாக வாகனமொன்றில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இப்பொருட்களை திருடடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 இற்கும் அதிகமான கிண்ணங்களும் கேடயங்களும் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. பல வருட கால…

  11. இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டடியின் வடிவம் வருமாறு, கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது? அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு …

  12. செய்தித் துளிகள் கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, சீனா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனையும், ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும் தோற்கடித்தன. --------------------------------------------------------------------------------------------------------------------- சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்கா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தனது 100-வது போட்டியில் விளையாடிய அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு இந்த வெற்றி மறக்க முடியாததாக அமைந்துள்ளது. இதேபோல் நடப்பு சாம்பியன் உருகுவே அண…

  13. கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…

  14. ரொனால்டோவின் புதிய வீடு December 24, 2015 போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 8 படுக்கை அறை, நீச்சல் குளம், சிறிய கால்பந்து மைதானம் என தனது கனவு இல்லத்தை 8500 சதுர அடியில் கட்டி முடித்துள்ளார். இந்த அழகிய வீட்டை அவரே வீடியோ மூலம் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6613

  15. இருபத்து ஓராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தமானது நேற்றுடன் முடிவடைந்து இன்று 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பிக்கையில், விளையாட்டில் கடந்தாண்டில் பிரகாசித்த நாயகர்களை இக்கட்டுரை நோக்குகிறது. அந்தவகையில் பார்க்கப்போனால் அனைத்து விளையாட்டுக்களின் நாயகர்களையும் இந்த ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்குவது கடினமானதென்ற நிலையில், கிரிக்கெட், கால்பந்தாட்டம், டென்னிஸ், தடகளம், போர்மியுலா வண்ணின் நாயகர்களை இக்கட்டுரையில் பார்ப்போம். இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டே எமது தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் சுதேசிய விளையாட்டுக்களை விட அதிகம் பேரை தன்னை நோக்கி ஈர்த்த விளையாட்டாக இருக்கின்ற நிலையில் அதிலிருந்து கடந்தாண்டின் நாயகர்கள…

    • 0 replies
    • 781 views
  16. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் ! இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கி…

  17. இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி By Mohamed Azarudeen - கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட். பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில்…

    • 0 replies
    • 1.1k views
  18. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராக் கோலி, டிம் சவுதி பந்தில் மோசமான ரன்களுடன் அவுட் ஆனார். நிலைமைகளை இன்னும் மோசமாக்க, விராட் கோலி ரிவ்யூவையும் பயன்படுத்தி வீணாக்கினார். பந்து வீசிய டிம் சவுதிக்கு அந்த பந்து பேடில் பட்டதால் அவுட் என்று தெரிந்தது. ஆனாலும், புஜாராவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, ரிவ்யூ கேட்டார். சவுதி வீசிய பந்து, பேட்டில் படாமல், நேராக பேடில் பட்டதால் அவர் அவுட்டானார். உடனே ரசிகர்கள், ரிவ்யூவை வீணடித்த விராட் கோலியை கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் அதிகபடியாக 51 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, டிம் சவுதி பந்தில் அவுட்டாவதற்கு முன்பு மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலி, ஏழாவது முறையாக …

    • 0 replies
    • 419 views
  19. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என…

  20. ரோயல் லண்டன் ஒருநாள் தொடரில் மஹேல லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார். சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். http://www.virakesari.lk/article/8892

  21. சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களுமான சங்கா, மஹேல இருவரும் ஒன்றாக ஒரே அணியில் விளையாடுவதை காணும் சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. எதிர்வரும் நவமபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில்தான் இருவரும் ஒரே அணியில் விளையாடவுள்ளனர். டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக சங்கா, மஹேல இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர், அத்தோடு இலங்கையின் 7 வீரர்களும் இந்தப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். டஸுன் சாணக்க, திஸ்ஸர பெரேரா, நுவான் க…

  22. இந்திய பந்துவீச்சாளரான இவரை தவிர வேறுயாரும் எனக்கு இவ்வளவு தொல்லை கொடுத்ததில்லை – ஸ்மித் பேட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் தற்போதைய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஸ்மித் குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு சதம் விளாசி அவர் இந்திய அணிக்கு பெரும் தொந்தரவு கொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவர் ஒருநாள் போட்டிகளிலேயே அபாரமான ஃபார்மில் இருந்ததால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுப்பார் என்று …

  23. பிரசவத்துக்குப் பின்னர் முதல் தடவையாக அபுதாயில் களமிறங்குகிறார் செரீனா உலகின் முன்­னிலை டென்னிஸ் நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரான செரீனா வில்­லியம்ஸ், பிர­ச­வத்­திற்கு பின் மீண்டும் இவ்­வாரம் போட்­டி­க­ளுக்குத் திரும்­பு­கிறார். அபு­தா­பியில் நாளை மறு­தினம் ஆரம்­ப­மாகும் முபா­தலா உலக வல்­லவர் டென்னிஸ் கண்­காட்சித் தொடரின் பங்­கு­பற்­று­வதன் மூலம் டென்னிஸ் களத்தில் தனது மீள்­பி­ர­வே­சத்தை ஆரம்­பிக்­கிறார் 36 வய­தான செரீனா வில்­லியம். உலகின் முதல் நிலை வீராங்­க­னை­யாக விளங்­கிய செரீனா வில்­லியம்ஸ், கடந்த வருடம் கர்ப்­பி­ணி­யான நிலையில் போட்­டி­க­ளி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்தார். கடந்த செப்­டெம்பர் மாதம் அவ­ருக்குப் பெண் குழந்தை பிறந்­தது. அதன்பின், தனத…

  24. ஆஸி. தொடருக்கு முன் சில சோதனை முயற்சிகளைச் செய்ய தோனி முடிவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை (புதன்கிழமை) கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடிவெடுத்திருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இன்று போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “நாம் மிகப்பெரிய முன்புலத்தை பார்க்க விரும்புகிறோம். ஆகவே இந்தத் தொடரில் சில புதிய முயற்சிகளை முயற்சி செய்து பார்க்கவுள்ளோம். இப்போது செய்யாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிறகு இதனை அப்பொழுதே செய்திருக்கலாம் என்று நினைப்பதைவிட இப்போதே சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நம் வீரர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதையும் என்ன…

  25. "அணியும் ஆடைகளே உறவுகளை அந்நியமாக்கிவிட்டன" - சமூக சங்கிலிகளை உடைத்த பெண் பாடி பில்டர் கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2023 "உடல் எடையை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். ஆனால், நட்புகள், உறவுகளின் புறக்கணிப்பு தந்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் என்னை ஜிம்மே கதியென கிடக்கச் செய்தது. அதுவே, என்னை இன்று சர்வதேச அரங்கில் கால் பதிக்கச் செய்துள்ளது" என்கிறார் மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி, பெண்கள் நுழையவே தயங்கும் பாடி பில்டிங் துறையில் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.