Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம் வஹாப் ரியாஸ். - படம். | ராய்ட்டர்ஸ். முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மைக்கேல் கிளார்க் தலைமையில் ‘அதி திறன் அணி’யாக மாற்றியே தீருவேன் என்று அவதாரபுருஷர் போல் சூளுரைத்து சர்ச்சையில் சிக்கி அங்கிருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று ஒவ்வொருவரையாக அனுப்புவது என்ற ‘திருப்பணி’யை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்டு வருகிறார். கம்ரன் அக்மல், உமர் அக்மல், மொகமது ஆமிர்... என்று இவரது களபலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹபீஸ் குறித்தும் ஆர்தர் கைவிரல்களை மூடி தாளம் போட்டுக் க…

  2. தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் "சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று மும்பைப் பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது. தோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் ம…

  3. அப்பவே அந்த மாதிரி சீட்டிங் செய்த ஆஸி அணியின் புதிய கோச் ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லங்கர், இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் சீட்டிங் செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. #JustinLanger தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண…

  4. இந்திய அணிக்கே ஸ்பின் சவாலா? 4 ஸ்பின்னர்களுடன் ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு. | ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த அணியில் இளம் முஜீப் உர் ரஹ்மான், அமீர் ஹம்சா, மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷீத் கான், ஜாகிர் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கி இந்தியப் பிட்ச்கள் பற்றி அனுபவம் பெற்றுள்ளனர், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான் க…

  5. வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா?-அப்ரிடி பதில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் சிங்கத்துடன் அவரின் மகள், தனதுவீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டும் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா என்பது குறித்து பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரும், ‘லெக் ஸ்பின்னருமான’ ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் செல்லமாக ‘பாகிஸ்தான் லயன்’(பாகிஸ்தான் சிங்கம்) என்று அழைப்பார்கள். ஆனால், அதற்கான காரணம் அவரின் வீட்டில் உண்மையான சிங்கம் வளர்த்ததால்தான் அப்படி அழைத்தார்களா என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது. கடந்த …

  6. தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்! தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹஷன் அலி 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இன்னும் சற்றுநேரத்தில் தென்னாபிரிக்க அணி 204 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.…

  7. பாகிஸ்தானுக்கு வேட்டு வைக்கும் வங்கதேசம்! வரும் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளதால், பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய தீவுகள் அணி அந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மினி உலகக் கோப்பை போட்டியாக கருதப்படும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாட்டினைத் தவிர தரவரிசையில் முதல் 7 இடங்களுக்குள் இடம் பெறும் அணி கலந்து கொள்ள முடியும். போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. தற்போது வங்கதேச அணி 93 புள்ளிகளுடன் தர வரிசையில் 7வது இடத்தை பெற்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்னேறி விட்டது. இதன் காரணமாக தரவரிசையில் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய…

  8. டக்வொர்த் லூயிஸ் முறையை புரிந்து கொள்வது எப்படி? 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் எப்போதும் கேலிக் கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு விஷயம் டக்வொர்த் லூயிஸ் முறை. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால், சில கணக்கீடு முறையால், விநோதமான இலக்கு வைக்கப்படுகிறது என்ற ஒரு விமர்சனம் உள்ளது. டக்வொர்…

  9. யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் சுற்றுப்போட்டி யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், அணிகளை தரம் பிரிப்பதற்கான சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 24 அணிகளுக்கிடையில் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது. சுற்றுப்போட்டி 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் உள்ளதுடன், அவ்வணிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் தோல்வியுறும் அணிகள் சி பிரிவில் உள்வாங்கப்படும். அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி தட்டுப்படும் அணிகள் பி பிரிவாகவும் காலிறுதி வரையில் முன்னேறும் அணிகள் சி பிரிவாகவும் தரப்படுத்தப்படும். இனிவருங்காலங்களில் ய…

  10. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்து விடாது: சானியா சர்ச்சை பேச்சு இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் 9 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1996ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடுவதால் இன்னொரு பதக்கம் பிரகாசமாகியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சானியா இததொடர்பான கேள்விக்கு பத…

  11. நாட்டை கிரிமினல்கள் வழிநடத்தலாம், ஆமீர் மீண்டும் ஆடக்கூடாதா?: இம்ரான் கேள்வி இம்ரான் கான். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையும் அனுபவித்து திருந்தி வந்த மொகமது ஆமீர் மீண்டும் அணியில் இடம்பெறுவதை எதிர்ப்பது தவறு என்று இம்ரான் கான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியவர் அணியில் இடம்பெறுவது கூடாது என்று பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபீஸ் மற்றும் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்தனர், பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களை எச்சரித்தது. இந்நிலையில் இம்ரான் கான் தெரிவிக்கும் போது, “19-வயது வீரர் தவறிழைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்…

  12. U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா? 2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்குள்…

  13. ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது! இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் போட்டிகளானது ஒத்தி வைக்கப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 13 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது காலத்துக்கு மக்…

  14. தோனி, சச்சின் குறித்த கருத்து: சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் கடும் கண்டனம் படம்.| கே.முரளிகுமார். தோனி, சச்சின் உள்ளிட்ட அணித் தேர்வு விவகாரங்களை வெளிப்படையாக பேசிய சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சமீபத்தில் தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்றுவது பற்றியும், சச்சின் டெண்டுல்கர் பற்றியும் கூறிய கருத்துகளுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது 2015 உலகக்கோப்பைக்கு முன்னதாக ‘தோனியின் பினிஷிங்’ பற்றியும் தோனியின் கேப்டன்சியைப் பறிப்பது பற்றியும் விவாதித்தோம் என்றும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் …

  15. கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…

  16. தோனி - யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு) தோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது. தோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார். இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ‘கிரிக்கெட் வீரராக…

  17. 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத துரதிஷ்டம் : பிரபல வீரருக்கு ஏற்பட்ட சோகம் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் மொஹமதுல்ல விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் கலீட் முஹமது தெரிவித்துள்ளார். இவர் இறுதியாக இடம்பெற்ற காலி டெஸ்ட் போட்டியில் 8 மற்றும் 0 என்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் இரண்டு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தார். இந்நிலையில் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், மொஹமதுல்ல நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி கொழும்பி…

  18. கோலியின் விக்கெட் மலிங்கவுக்கு மைல்கல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை லசித் மலிங்க கடந்துள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து லசித் மாலிங்க 300 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லைக் கடந்தார். 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை மலிங்க பிடித்துக்கொண்டார். இதேவேளை, 30 டெஸ்ட் போட்டிகளலில் விளையாடியுள்ள லசித்…

  19. கோலி 100... தோனி 100... இலங்கை 1... சாதனைத் தொடரின் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics http://www.vikatan.com/news/sports/101311-india-whitewashed-srilanka-here-are-the-stats.html

  20. இரு பிரிவுகளிலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் சம்பியன் கொழும்பு சென். ஜோசப் கல்லூரி நாடு பூராகவும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தி 5 பேர் கொண்ட “வுட்செல்” (Futsal) கால்ப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் வெற்றிபெற்று 2017 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டன. இப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி கைதானத்தில் இடம்பெற்றது. 17 வயதுப் பிரிவு போட்டியின் அரையிறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தேசிய சம்பியனான மருதானை ஸாகிரா கல்லூரி அணியைவெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. …

  21. 1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. களத்திலிருந்து ந…

  22. மைக்கேல் கிளார்க்கை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது: டேல் ஸ்டெய்ன் காட்டம் கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது தன்னை நோக்கி ஆஸ்திரேலிய கேப்டன் வசைச்சொல்லை ஏவியதை மறக்கப்போவதில்லை என்றும் இதற்காக மைக்கேல் கிளார்க்கை ஒரு போதும் தான் மன்னிக்க மாட்டேன் என்றும் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் காட்டமாகக் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆட்டக்களத்தில் தன்னை மிகவும் காயப்படுத்திய வசைச்சொல் ஒன்று உண்டென்றால் அது அன்று மைக்கேல் கிளார்க் கூறியதே என்று ஸ்டெய்ன் இப்போது கூறியுள்ளார். ஆட்டத்தை தோல்வியிலிருந்து காப்பாற்ற டேல் ஸ்டெய்ன் பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்த போது, ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னை நோக்கி ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள, …

  23. ஸ்மித், வார்னர் இல்லாததால் நல்ல வாய்ப்பு; ஆஸி.யை அதன் மண்ணில் இந்தியா வீழ்த்தும்: இயன் சாப்பல் உறுதி மும்பை நிகழ்ச்சியில் இயன் சாப்பல். - படம். | பிடிஐ மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல், ஸ்மித், வார்னருக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கோலி படை அங்கு நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. …

  24. ஆஸி.தொடருக்கு ஜடேஜாவுக்கு பதில் கரன் சர்மா, லோகேஷ் ராகுலுக்கும் ஆதரவு: திராவிட் ஆலோசனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் லோகேஷ் ராகுலையும் கரன் சர்மாவையும் சேர்க்க வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கரன் சர்மா ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர், ஆஸ்திரேலியாவில் இத்தகைய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் வேகமாகவும், கூக்ளி வீசவும் முடிந்தால் ஆஸ்திரேலியாவில் சாதிக்கலாம். ஜடேஜா அவரால் முடிந்ததைச் செய்வதில் நன்றாகவே திகழ்ந்தார். விக்கெட் டு விக்கெட் வீசுவார். பின்னால் இறங்கி பயனுள்ள ரன்களை எடுப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் தரமான ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை. க…

  25. சேனநாயக்கவிற்கு பந்து வீச ஐ.சி.சி. அனுமதி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. சச்சித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சுப் பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அதிருப்தியேற்பட்டதையடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் சேனநாயக்க மீள்பரிசோதனை க்குட்படுத்தப்பட்டார். இதன்போது பந்துவீச்சுப் பணி விதிமுறைகளுக்குட்பட்டிருந்ததையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/12/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%A…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.