விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய வந்தவரை நிராகரித்த பாக். வீரர் சர்ஃபராஸ்: அதிகாரிகளிடம் புகார் சர்ஃபராஸ் அஹம்த் | கோப்புப் படம்: ஏபி துபாயில் தன்னைத் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சர்ஃபராஸ் அஹமத் கூறியுள்ளார். பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ஃபராஸ் அஹமதை ஒருவர் அணுகி மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து பேசியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக மறுத்துள்ள சர்ஃபராஸ் சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லிய…
-
- 0 replies
- 455 views
-
-
உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்? தற்போதைய நாட்களில் கிரிக்கெட் விளையாட்டானது முழுதுமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதமாகி வருகின்ற காரணத்தினால், சகலதுறை வீரர்களுக்கான தேவை ஒவ்வொரு அணிக்கும் அத்தியவசியமாகி வருகின்றது. சகல துறை வீரர்கள் எந்தளவுக்கு பெறுமதி வாய்ந்தவர்கள் என்பதனை ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சகிப் அல் ஹஸன் மற்றும் சொஹைப் மலிக் போன்ற வீரர்கள் தங்களது அணிகளுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இதில் குறிப்பாக அஷ்வினை வைத்திருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பாட்டம் காரணமாக 5 விஷேட துடுப்பாட்ட வீரர்களுடன் மாத்திரமே களமிறங்குகின்றது. (எனினும் இந்திய அணிக்கு இந்த உத்தி சொந்த மண் அல்லாத …
-
- 0 replies
- 415 views
-
-
ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் November 16, 2018 1 Min Read 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத் துள்ள செய்திக்குறிப்பில் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு …
-
- 0 replies
- 429 views
-
-
விபத்தில் தப்பிய வங்கதேச கேப்டன் தாகா: மிர்புரில் ஏற்பட்ட விபத்தில், வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் மொர்டசா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், வங்கதேச அணியின் ‘சீனியர்’ வீரர் மொர்டசா, 30. ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார். வரும் 18ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக தயாராகி வருகிறார். இதற்கான பயிற்சிக்காக சைக்கிள் ரிக் ஷாவில், தனது வீட்டில் இருந்து மிர்புர் மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ்சின் டயர் வெடித்து, ரிக் ஷா மீது பலமாக மோதியது. கீழே குதித்தார்: இதற்குள் சுதாரித்துக் கொண்ட மொர்டசா, ரிக் ஷாவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது, இவரத…
-
- 0 replies
- 300 views
-
-
கடனில் இயங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை சேமிக்கும் நிறுவனமாக இடைக்கால சபை மாற்றியுள்ளது - சிதத் வெத்தமுனி 285 மில்லியன் ரூபா மேலதிகப் பற்றுடன் இருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை இடைக்கால நிருவாக சபை பொறுப்பேற்ற இரண்டு மாதகாலத்தில் நிதியை சேமிக்கும் உறுதியான நிறுவனமாக மாற்றியுள்ளதாக இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனி கூறினார். இடைக்கால நிருவாக சபையின் மாதாந்த முன்னேற்றகர நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் செய்தியாளர்களுட னான சந்திப்பு நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அநாவசிய செலவினங்களைக் குறைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப…
-
- 0 replies
- 330 views
-
-
ஐபிஎல் அணியை தொட்டு கெட்டவர்கள்...! துரதிர்ஷ்டம் தொடருவதால் அதிர்ச்சி! உலகிலேயே மிக கிளாமரான கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐ.பி.எல். தொடரின் அணிகளை வாங்கினால், அதன் உரிமையாளர்களுக்கு துரதிர்ஷ்டம் தொடருவதாக கூறி, பெங்களூருவை சேர்ந்த ஜிண்டால் ஸ்டீல் குழுமம், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். அணியான ஹைதராபாத் அணியை வாங்கிய மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அவர்களது ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கைமாற்றி விடப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விஜய் மல்லையா, யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்து விலக நேரிட்டது. அவரது கிங்பிஷர் நிறுவனம் திவாலானதாகவே அறிவிக்கப்பட்டது. புனே வாரியர்ஸ் அணி, ஒரு காலத்தில…
-
- 0 replies
- 357 views
-
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அதிரடி 'சஸ்பெண்ட்' மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எல்டைன் பாப்டைஸ்ட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதையடுத்து அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி மிகுவேல், சிம்மன்சுக்கு சஸ்பெண்ட் தொடர்பான தகவலை இமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு இரண்டு டெஸ்ட், 3 ஒர…
-
- 0 replies
- 201 views
-
-
மஹேலவைப் போற்றும் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றுள்ள நிலையில், அவ்வணியின் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன செயலாற்றுகிறார். 'ஜெயவர்தன மிகவும் சிறப்பானவர். இலகுவாக அணுகக்கூடியவர். அவருக்கெதிராக விளையாடிய அதிர்ஷ்டத்தையும் கொண்டிருக்கிறேன், ஆகவே என்னைப் பற்றி அவருக்குச் சிறிது தெரிந்திருந்தது. அவரது அனுபவம் மிகவும் பெறுமதியானது. எல்லா வீரர்களும் அவருடன் இணைந்து நிறை நேரத்தைச் செலவிடுகின்றனர்" என, இங்கிலாந்து அணியின் இளம் துடுப்பாட்ட…
-
- 0 replies
- 471 views
-
-
சூதாட்டத்தில் ஈடுபட்ட மொகமது ஆமீருடன் ஆட முடியாது: ஹபீஸ் திட்டவட்டம் மொகமது ஹபீஸ். | கோப்புப் படம். சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீருடன் சேர்ந்து ஆட முடியாது என்று மொகமது ஹபீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரிமியர் லீகின் சிட்டகாங் வைகிங்ஸ் அணி ஹபீஸுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை மொகமது ஹபீஸ் நிராகரித்ததாக செய்திகள் எழுந்தன. காரணம் அந்த அணியில் சூதாட்ட வீரர் ஆமீர் இருந்தார் என்பதே. “நான் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் பேசவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கவுரவம் பற்றிய விவகாரம் இது. நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நாட்டு கிரிக்கெட் அணியின் பெயரைக்…
-
- 0 replies
- 264 views
-
-
உலகில் உள்ள பெரும்பான்மையான உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில், பல ஆண்டுகள் கோலோச்சும் வீரர்கள் கூட 35, 40 வயதில் ஓய்வு அறிவித்துவிடுவார்கள். அந்த வீரர்கள் விளையாடும்போது எவ்வளவு கட்டுமஸ்தாக இருந்திருந்தாலும் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் அதீத விடுப்பினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ருக்மணி தேவி, 64 வயதிலும் தடகளப் போட்டிகளில் கலக்கி வருகிறார். அடுத்ததாக ‘மாஸ்டர்ஸ் வேர்ல்டு மீட்' என்று சொல்லப்படும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் ருக்மணி தேவியை, பயிற்சி எடுக்கும் இடத்திற்கே சென்று சந்தித்தோம். ஜாவ்லின் த்ரோ, ஹாம்மர் த்ரோ, லா…
-
- 0 replies
- 672 views
-
-
ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே Published by J Anojan on 2019-10-22 11:44:57 ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்த…
-
- 0 replies
- 459 views
-
-
6 ப்ளஸ்! ஒரு மைனஸ்! சொல்லி அடிக்குமா கில்லி இந்தியா? சிக்ஸர் பீவர் (மினி தொடர் -6) அக்ரசிவ் பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள், ஆக்ரோஷ பந்து வீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த சிறந்த கேப்டன் என டி20 போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணியாக மாறியிருக்கிறது இந்தியா. இம்முறை உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான் என ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதற்கொண்டு வரிசையாக பேட்டி தட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஐந்து டி20 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணியின் நிலை தற்போது தலைகீழ். ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசிய கோப்பை தொடர் என இந்தாண்டு இதுவரை விளையாடிய பதினோரு போட்டியில் பத்தில் வென்று அசாத்திய சாதனை புரிந்திரு…
-
- 0 replies
- 391 views
-
-
வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது. நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன…
-
- 0 replies
- 486 views
-
-
சிறைத்தண்டனை காரணமாக பார்சிலோனாவை விட்டு வெளியேற மெஸ்சி திட்டம்? மெஸ்சி குற்றமற்றவர் தொடர்ந்து பார்சிலோனா அவர் அணிக்கு விளையாட வேண்டும் ஸ்பானீஷ் லீக்கை விட்டு வெளியேறி விட கூடாது என லா லீகாத் தலைவர் ஜேவியர் டெபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக நீண்டகாலம் விளையாடி வருகிறார். அண்மையில் சுமார் 60 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பார்சிலோனா நீதிமன்றம் மெஸ்சிக்கும் அவரின் தந்தைக்கும் 21 மாத சிறைத்தண்டனையும் தலா ரூ15 கோடி அபராதமும் விதித்தது. எனினும் ஸ்பெயின் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத்தண்டனைக்குள்ளானால், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. அபராதத்தை செலுத்…
-
- 0 replies
- 211 views
-
-
மீண்டும் இலங்கை அணியுடன் இணைகிறார் சமிந்த வாஸ் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். சமிந்த வாஸ் இந்த மாத இறுதிக்குள் அணியுடன் இணைந்தக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இன்று (10) இலங்கை கிரிக்கட் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். சமிந்த வாஸ் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இலங்கை ஏ அணி, மற்றும் பிராந்திய அணிகள் என்பவற்றுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்குவதுடன், தேசிய கிரிக்கட் அணி உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிரிக்கட்…
-
- 0 replies
- 327 views
-
-
நடுவரின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் UDRS இந்தியாவிலும் அமுலுக்கு வருகின்றது நடுவரின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் UDRS இந்தியாவிலும் அமுலுக்கு வருகின்றது. கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் UDRS முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டாலும் இதுவரை இந்தியா மட்டும் UDRS முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி இதற்கு முற்றுமுழுதாக ஒத்துப்போகாத நிலையில், இந்தியக் கிரிக்கெட் சபை அதனை முற்றுமுழுதாக நிராகரித்தது. ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி தலைவர் விராட் கோஹ்லி இந்த விவாதத்தில் இருந்து சற்று மாறுபட்டு, எதிர்காலத்தில் UDRS முறையை பயன்படுத்தலாம் என்றும், முறைப்…
-
- 0 replies
- 299 views
-
-
199 ரன்களில் ஆட்டம் இழந்த வீரர்கள் விவரம் 139 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த சில முக்கியமான வீரர்களை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். * கர்நாடகாவைச் சேர்ந்த 24 வயதான லோகேஷ் ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் 199 ரன்களில் கேட்ச் ஆனார். இது, டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த 2-வது இந்தியர் லோகேஷ் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை நழுவ விட்டிருக்கிறார். அது தான் அசாருதீனின் அதிகபட்ச ஸ்கோராக நீடிக்கிறது. * லோகேஷ் ராகுல் 200…
-
- 0 replies
- 398 views
-
-
ஒருநாள் தொடரில் ஸ்மித்துதான் என் இலக்கு: இர்பான் சொல்கிறார் ஆஸ்திரேலியாவின் ஆடுகளத்தை பயன்படுத்தி நல்ல பாஃர்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே என் இலக்கு என பாகிஸ்தான் வீரர் இர்பான் சொல்கிறார். பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 13-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மொகமது இர்பான் கூறுகையில் ‘‘நான்தான் மிகவும் அதிக உயரம் கொண்…
-
- 0 replies
- 234 views
-
-
மிஸ்டர் ஐ.பி.எல் தினேஷ் கார்த்திக்… இந்திய அணிக்கு திரும்புவாரா? 2018-2019 காலகட்டத்தில் இந்தியாவுக்கு 6 ஆவது ஆர்டரில் களத்தில் இறங்கி 56.5 சராசரியை வைத்திருந்தவர் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரேட் 161.4 வைத்திருந்தார். witter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வ…
-
- 0 replies
- 298 views
-
-
ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை - இந்திய 'வேகப் பெண்' சாதித்தது என்ன? வந்தனா பிபிசி 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயத…
-
- 0 replies
- 212 views
-
-
தலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் அபாயகரமானவர்கள், இவரைப்போன்றவர்கள் தலைமுறைக்கு ஒரு முறையே உருவாகக் கூடியவர்கள்” என்றார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது, அங்கு இந்திய அணியின் வாய்ப்புகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்திய அணியின் இப்போதைய வீரர்கள் நிச்சயம் திறமை மிக்கவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் ஆதி…
-
- 0 replies
- 375 views
-
-
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர கேட்சை அனுமதித்தது ஏன்? - ஐசிசி விளக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திர கேட்ச் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. கடைசி ஓவரில் 2 ரன்களை எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, பாகிஸ்தான் தோற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ரன்கள் வெற்றி இலக்கத் துரத்தி வந்தது. அப்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் சேவியர் டோஹெர்ட்டி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் இடது கை பேட்ஸ்மென் பவாத்…
-
- 0 replies
- 515 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி தோனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி. கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார் இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில…
-
- 0 replies
- 816 views
-
-
‘உன் வழியில் செய், அவர்கள் வழியில் செய்யாதே’- ஸ்லெட்ஜிங் குறித்து தோனியின் அணுகுமுறை படம். | ஏ.பி. கேப்டன் கூல் தோனி அவ்வளவு கூல் அல்ல என்பதற்கு மேலும் ஓரு உதாரணமாகவும், எதையும் தனித்துவமாகச் செய்வதில் தோனியின் பாணி கவனத்துக்குரியதும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதுமானது என்பதை பரத் சுந்தரேசன் என்பவர் தனது புதிய புத்தகமான The Dhoni Touch என்பதில் விவரித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்துள்ள சுவையான தகவல்கள் சில: 2008-ல் காமன்வெல்த் பேங்க் ஒருநாள் தொடரில் பாண்டிங் தலைமை ஆஸ்திரேலியா 159 ரன்களுக்கு மடிந்தது, இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு எனும்போது வெற்றி பெற இன்னும் 10 ரன்கள் உள்ள …
-
- 0 replies
- 296 views
-
-
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு 4வது இடம்: ஜெர்மனி சாம்பியன் டிசம்பர் 14, 2014. புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. பைனலில் அசத்திய ஜெர்மனி அணி 10வது முறையாக கோப்பை வென்றது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், ஆண்களுக்கான 35வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில், ஜெர்மனி, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஜெர்மனியின் வெஸ்லே கிறிஸ்டோபர் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு 58வது நிமிடத்தில் புளோரியன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பா…
-
- 0 replies
- 352 views
-