Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது. இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு…

  2. ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன் அலி. இந்த ஆண்டு டெஸ்ட்டில் மொய்ன்அலி 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் மொய்ன்அலி சாதனை படைத்து உள்ளார். ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்க…

  3. கிரிக்கெட் தொடர் ரத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. கராச்சி: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 6 போட்டி தொடர் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் கிரிக்கெட் போட்டி தொடருக்கு இந்திய அரசு அனுமதி வழங…

  4. ஐ. சி. சி.யில் முழு அந்­தஸ்து பெற ஆப்­கா­னிஸ்தான் விருப்பம் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் முழு அந்­தஸ்து பெறு­வ­தற்­கான தனது விருப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும் இதற்­கான விண்­ணப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் இன்னும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக சமர்ப்­பிக்­க­வில்லை. ஆப்­கா­னிஸ்தான் தனது விண்­ணப்­பத்தை அடுத்த மாதம் சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதன் பின்னர் இந்த விண்­ணப்பம் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவைக் கூட்­டத்தில் கலந்­தா­லோ­சிக்­கப்­படும். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் திருப்­திக்­கு­ரிய தேவைகள் அடங்­கிய விரி­வான அறிக…

  5. தோல்விகளின் பின்னரும் இலங்கை வீர்களின் பொறுப்பற்ற செயல் - விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாமில் சுற்றித் திரியும் ஒரு காணொளி தற்சமயம் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இலங்கை இழந்துள்ள நிலையிலும், இவர்களது இந்த பொறுப்பற்ற செயற்பாடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் குறித்த காணொளியின் நம்பகத் தன்மையை சரிபார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட், அணி முகாமையாளரிடம் அறிக்கையை கோரியுள்ளது. இந்த காணொளி பதிவனை சமூக ஊடகங்களில்…

  6. புதிய மைல் கல்லை எட்டினார் வில்லியர்ஸ்! இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாபிரிக்க அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளதுடன், தென்னாபிரிக்க அணித்தலைவர் வில்லியர்ஸுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் தென்னாபிரிக்க அணித்தலைவரான வில்லியர்ஸ் இன்றைய போட்டியுடன் 100வது ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்குகின்றார். இதனால் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது. 100 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கியுள்ள வில்லியர்ஸ் 60 என்ற சராசரியில் 57 போட்டிகள…

  7. ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்! (படங்கள்) அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாலாஜி ஆகியோருடன் ஜூனியர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் வெங்கட்ராமன் கணேசன், ஜெர்மனி கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றி வரும் 32 வயது கணேசன், பணி காரணமாக 2012-ல் ஜெர்மனிக்கு மாற்றலானார். அங்குத் தொடர்ந்து கிரிக்கெட்டைத் தொடர்ந்தவர் தற்போது ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் ஐசிசி போட்டியில் பங்குபெறும் ஜெர்மனி அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்…

  8. 100 சதங்கள் அடித்தார் சங்ககரா... குவியும் வாழ்த்துகள்! இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா, 'ஃபர்ஸ்ட்- கிளாஸ் மற்றும் லிஸ்ட்- ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சங்ககரா, கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்- கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார். இந்த நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ரன்கள் ஸ்கோர் செய்து, 100-வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில், 100 சதங்கள் அடிக்கும் 37-வது நபர்தான் அவர் என்பது, இந்தச் சாதனையின் வீச்சைப் பற்றி அறியச்செய்யும். …

  9. வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்! 2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் அறிமுகமான ஏப்ரல் மாதம் இப்போது இருப்பதுபோல் அப்போது ஐபிஎல்-க்குப் பின்னால் 8, 9 என்றெல்லாம் எழுதாத காலம். ஷாருக் கான், மல்லையா, அம்பானி, சீனிவாசன் என்று பெரும் பணக்காரர்கள் பல கோடி முதலீட்டில் உதயமான அந்த கிரிக்கெட் திருவிழாவின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் மெக்கலம் 73 பந்துகளுக்கு 158 ரன்கள் எடுத்து ஐபிஎல்-ன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார். 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி, 82 ரன்களுக்கு மண்ணைக் கவ்வியது. அப்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அணிகள் விளையாட ஆரம்பித்து சில ஆ…

  10. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்.... ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்! Chennai: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று …

  11. விளையாட்டு: செய்தித்துளிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 6.30 மணிக்கு மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - வடகிழக்கு யுனைட்டெடு அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் வடகிழக்கு அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி…

  12. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...‘அம்மா’ செரீனாவின் அட்டகாச கம்பேக்! பாரிஸ் நகரம் – செரீனா வில்லியம்ஸ் கடைசிமுறை இங்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதன் பிறகு, அவருடைய வாழ்க்கை இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பெர்சனல் வாழ்வில் எவ்வளவோ மாறினாலும், விளையாட்டில் அவருடைய ஆளுமை துளியும் மாறவில்லை என சமீபத்தில் நிரூபித்தார் செரீனா. கறுப்பு நிற catsuit, இடுப்பில் சிவப்பு நிற பெல்ட் சகிதமாக ஃபிரெஞ்ச் ஓப்பன் நடந்த மைதானத்தில் அவர் நுழைந்தபோது, ஒரு சூப்பர் ஸ்டாரின் வருகைபோலவே இருந்தது அது. முதல் சுற்றில் செக் குடியரசின் கிறிஸ்டினா ப்ளிஸ்கொவாவை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியபிறகு, ``இந்த ஆடை ஒரு அடையாளமாக இன்று இருக…

  13. காத்திருக்கும் பலோன் டிஓ விருதுகள் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 விளையாட்டு மைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ, லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி வீரருக்கான போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார். சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிற‌து பீபா. 1956ஆம் ஆண்டு பலோன் டிஓ விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்டான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12ஆம் திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும். சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாக செயற்பட 23 …

  14. Boxing Day Tests: மூன்று டெஸ்ட் போட்டிகள் ஒரு பார்வை 25-12-2014 04 நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட். தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட். இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று நாளைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன. ஆனால், கிரைச்ட்சேர்ச்சில் நாளை ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கையின…

  15. அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது. அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே. அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே…

  16. சென்னை சூப்பர் கிங்ஸை கை மாற்றி விட சீனிவாசன் முடிவு? சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை விட மனம் இல்லாத சீனிவாசன், அதற்கு இடையூறாக உருவெடுத்துள்ள ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்று விட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மேட்ச்பிக்ஸிங்கில் சீனிவாசனுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரிய பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சீனிவாசன் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறி விட்டது. மேலும் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருக்கும்வரை சீனிவாசன் வாரிய பதவிக்குப் போட்டியிடவும் அது தடை விதித்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸை கை மாற்ற…

  17. யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர். வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர். முதுநிலைப்பிரிவில் முதலாமிடத்தை எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன…

  18. முதல் நாள் பதக்க வரிசை: Country G S B Total CHN 2 0 0 2 GBR 0 1 1 2 USA 0 1 1 2 AUS 1 0 0 1 KOR 0 1 0 1 KAZ 0 0 1 1

  19. ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள் இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது. டிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு…

  20. ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்.சி! இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் அரையிறுதில் நடப்பு சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கட்டா அணியை வீழ்த்தி, சென்னையின் எஃப்.சி அணி இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. இன்று கொல்கத்தாவில் நடந்த அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. ஆனால், முதல் சுற்றில் 3 கோல்கள் முன்னிலை பெற்றிருந்ததால் சென்னை அணி 4-2 என்ற இறுதி கோல் கணக்கில் கொல்கத்தாவை வென்று முதன் முதலாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த அரையிறுதியில் சென்னை அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றிருந்தது. சென்னை அணியின் ஜீஜே, பெலிசாரி …

  21. மதுபோதையில் வாகனம் ஓடியதற்காக 1996ம் ஆண்டு ஒலிம்பிகில் நூறு மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், 9.84 வினாடிகளில் நூறு மீற்றரை ஓடி அப்போது உலக சாதனை படைத்தவருமான கனடாவை சேர்ந்த Donovan Bailey இன்று Torontoஇல் கைது செய்யப்பட்டார். தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி சம்மந்தமான செயற்பாடுகளில் கனடா நாட்டுக்காக அவர் ஈடுபட்டுள்ளதால் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளார். முன்பும் கடுகதி பாதையில் வாகனத்தை மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் ஓடியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓடியதற்காகவும் காவல்துறையினால் Donovan Bailey இரண்டு தடவைகள் குற்றம் சாட்டப்பட்டார். தகவல்: http://www.theglobea...content=2433037

  22. யாசீர் ஷாவுக்கு 3 மாதத் தடை ஊக்கமருந்துப் பாவனை காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷாவுக்கு, 3 மாதத் தடை விதிக்கப்படுவதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இவருக்கான தண்டனைக் காலம், டிசெம்பர் 27ஆம் திகதி ஆரம்பித்து, இவ்வாண்டு மார்ச் 27ஆம் திகதியுடன் நிறைவடையுமென அறிவிக்கப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் சுப்பர் லீக், ஆசியக் கிண்ணப் போட்டிகள், உலக இருபதுக்கு-20 தொடர் ஆகியவற்றில் பங்குபற்ற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப் -பட்டிருந்தாலும், அதிக உயர் அழுத்தம் காரணமாக, மனைவிக்காக வழங்கப்பட்டிருந்த மாத்…

  23. இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக யாழ் பல்கலைக்கழக மாணவன் February 12, 2016 இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பல்கலைக்கழங்களிலுள்ள சிறந்த விளையாட்டு வீரரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற இணைய வாக்கெடுப்பிலேயே சிறந்த வீரராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக http://sports.moraspirit.com என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு ஆரம்பமான நாளிலிருந்து முதலிடம்…

  24. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 122 ரன்கள் அடித்தனர். இதில் ரோகித் சர்மா 63 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இத…

  25. <p>Your browser does not support iframes.</p> ரங்கன ஹேரத் ஓய்வு ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=79013

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.