விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சிட்னி: விராட் கோஹ்லி உலக கிரிக்கெட்டின் ராஜாவாகிவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது: விளையாட்டு உலகிலேயே கஷ்டமான விஷயம் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதாகத்தான் இருக்கும். உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் உலக கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த நாடு இந்தியா. பணக்கார கிரிக்கெட் வாரிய…
-
- 0 replies
- 432 views
-
-
சங்கக்கார, மஹேல ஜயவர்தன இல்லாதது அணிக்கு பேரிழப்பு இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகிய இருவரும் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக விளங்கிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரோடு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றனர். இந்நிலையில் இலங்கை அணியில் இவர்களின் இழப்பை ஈடுசெய்ய நீண்ட காலம் எடுக்கும் என்று இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கூறியுள்ளார். தற்போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் மெத்தியூஸ், இது தொடர்பாக கூறுகையில், சங்கக்கார மற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
14 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி:11 ஆவது தடவையாக ஆஸி. சம்பியன் 14 ஆவது உலக கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனாகியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா கடும் சவாலுக்கு மத்தியில் 58 க்கு 55 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று பதினோறாவது தடவையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. 16,752 இரசிகர்கள் நேரில் கண்டு களித்த இப்போட்டி இரண்டாவது கால் பகுதியிலிருந்து விறுவிறுப்பைத் தோற்றுவித்தது. மேலும், அரங்கில் குழுமியிருந்த இரசிகர்கள்…
-
- 0 replies
- 309 views
-
-
ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கூக்கபுரா அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 720 views
-
-
உலகக்கிண்ணத் தொடருக்கு என்ன வடிவில் தலைமுடியை அழகுபடுத்தலாம் என்று விவாதிக்கும் டோனி January 10, 2016 T 20 உலகக்கிண்ணத் தொடருக்காக இந்திய அணித்தலைவர் டோனி நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. T 20 உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ணப் போட்டியின் போது ’ஸ்டார் ஸ்போர்ஸ்’ வெளியிட்ட ”மோக்கா.. மோக்கா” விளம்பரம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த ஒளிபரப்பு நிறுவனம் T 20 உலகக்கிண்ணப் போட்டிக்காக டோனியை வைத்து ஒரு விளம்பரத்தை தயாரித்துள்ளது. இதில் டோனியும், அவருடையை முடி ஒப்பனைய…
-
- 0 replies
- 401 views
-
-
ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்! வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் …
-
- 0 replies
- 360 views
-
-
உலகக் கிண்ண மகளிர் இறுதி ஆட்டம் 2017 லோர்ட் விளையாட்டரங்கில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 2017 இறுதி ஆட்டம் லோர்ட் விளையாட்டரங்கில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் டார்பிஷயர், க்ளொஸ்டர்ஷயர், லெஸ்டர்ஷயர், சமர்செட் ஆகிய விளையாட்டரங்குகளிலும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் உலகக் கிண்ண கிரிக்ெகட் போட்டிகள் இங்கிலாந்தில் அடுத்த வருடம் ஜூன் 26 முதல் ஜூலை 23 வரை நடைபெறவுள்ளன. எட்டு நாடுகளின் அணிகள் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்…
-
- 0 replies
- 367 views
-
-
Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது ம…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
லா லிகா பட்டம்: இருமுனைப் போட்டியாகிய மும்முனைப் போட்டி ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் பட்டத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி, இத்தொடரின் இறுதி வாரம் வரை சென்றுள்ளபோதும், கடந்த வாரம் வரை பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையே மும்முனைப் போட்டியாக இருந்தது இந்த வாரத்தில் பரம வைரிகளான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிவற்றுக்கிடையேயான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இறுதியாக உள்ள லெவண்டேயுடன் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்த நிலையிலும் எஸ்பன்யோலை பார்சிலோனாவும் வலென்சியாவை றியல் மட்ரிட்டும் வென்றுள்ள நிலையிலேயே மும்முனைக் களமாக இருந்த லா ல…
-
- 0 replies
- 361 views
-
-
மேலாடையை தூக்கியதால் சர்ச்சையில் சிக்கிய தாஹீர் ; ஐ.சி.சி எச்சரிக்கை (காணொளி இணைப்பு) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது அவர் அணிந்திருந்த அணியின் சீருடைக்குள் தனிப்பட்ட நபரொருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அணிந்திருந்த சீருடைக்குள் இருந்த புகைப்படத்தை அவர் போட்டியின் போது வெளிக்காட்டியதால் தாஹீரை ஐ.சி.சி எச்சரித்துள்ளது. இம்ரான் தாஹீர் தனது அணி மேலாடைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர் ஜுனைட் ஜேம்சாட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உள்ளாடையினை அணிந்திருந்தமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 371 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட்டின் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்கா கிளப் செல்கிறார் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ ஃபையர் அணிக்குச் செல்கிறார். ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். பிரேசில் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை ஜெர்மனி அணி வாங்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கடந்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 32 வயதாகும் இவர் கிளப் போட்டிகளில் விளையாடி …
-
- 0 replies
- 201 views
-
-
இரண்டு நாட்கள் கூட நீடிக்காத சந்தோஷம்! சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் நேர் செட்டில் தோற்று இரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் மரியா ஷெரபோவா. ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி போட்டிகளில் ஆடத் தடை செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் மீள் பிரவேசம் செய்த அவர், தான் இன்னமும் ஒரு வெற்றி வீராங்கனைதான் என்று நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் டென்னிஸ் களமிறங்கிய ஷரபோவா, ‘தியான்ஜின் ஓப்பன்’ தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. …
-
- 0 replies
- 522 views
-
-
கடந்த கால சம்பவங்களை கிளற விரும்பிவில்லை: திசர பெரேரா 2014-09-01 10:50:27 கடந்த கால சம்பவங்களைக் கிளற விரும்பவில்லை என பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகனாக தெரிவான திசர பெரேரா தெரிவிக்கின்றார். தம்புளையில் சனிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிலகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானுடான தொடருக்கு அழைக்கப்பட்ட திசர பேரேரா, தான் விளையாடி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகனானமை குறிப்பிடத்தக்கது. சில காலம் இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனமைக்கு சில கருத்துமுரண்பாடுகளா காரணம் எனவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக எனவும் அவரிடம் கேட்கப்படபோது, 'கட…
-
- 0 replies
- 564 views
-
-
கவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணிக்கு விளையாடி வரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் புஜாரா விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார். லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லீஷயர் அணி முதலில் டெர்பியை பேட் செய்ய அழைத்தது. 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 28 நிமிடங்கள் ஆடினார், 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா பந்தைக் கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்…
-
- 0 replies
- 716 views
-
-
டி20 போட்டியில் 172 ரன்கள் குவித்து ஆரோன் பிஞ்ச் உலக சாதனை ஜிம்பாப்வேயிற்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலக சாதனைப் படைத்துள்ளார். #AaronFinch #ZIMvAUS ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டி'ஆர்கி ஷார்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெ…
-
- 0 replies
- 416 views
-
-
விமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர் ஆட்டத்திறன் மோசமாக இருக்கிறது என முகப் புத்தகத்தில் விமர்சித்த ரசிகரை மோசமான வார்த்தையால் திட்டி மிரட்டிய பங்களாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளார். அண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோசமாகவே ஆடி வருவதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோசமான ஆட்டம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிக ரின் நண்பர் ஷபீருக்கு அத னைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசிகரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்குதல் தொடுப்பதாகவும் மிரட்டியுள்ளார். இவ் விவகாரம் அந் …
-
- 0 replies
- 512 views
-
-
இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவிக்கு டிரெவர் பேலிஸ், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரிடையே போட்டி நிலவி வந்த நிலையில் இப்போது பேலிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக இங்கி லாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ டிரெவர் பேலிஸ், பயிற்சி யாளராக நிறைய சாதித்துள்ளார். கிரிக்…
-
- 0 replies
- 509 views
-
-
13.4 ஓவரிலேயே போட்டியை முடித்த மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 106 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்…
-
- 0 replies
- 989 views
-
-
மோர்னி மோர்கெலை ஹூக்கில் சிக்ஸ் அடித்து சதம்: சச்சினுக்குக் ஏற்பட்ட முன்-காட்சி அனுபவம் சச்சின் டெண்டுல்கர் ஹூக் ஷாட். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் மோர்னி மோர்கெல் பந்தை ஹூக் செய்து சிக்ஸ் அடித்து சதம் எடுத்தார் சச்சின். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னரே தனக்கு அந்தக் காட்சி மனக்கண் முன் தோன்றியது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். deja vu என்பது பலரும் அறிந்ததே. முதல் முறையே அனுபவிக்கும் ஒரு நிகழ்வு, ஒரு விஷயம் ஏற்கெனவே நாம் கண்டது போலவே இருப்பதை உணர்த்தும் நிலை. இது நம்மில் பலருக்கு பொது அனுபவம். ஒரு இடத்துக்கு அப்போதுதான் முதல் முறையாகச் சென்றிருப்போம், ஆனால் ஏற்கெனவே அங்கு வந்து புழங்கியது போன்ற நினைவு ஒன…
-
- 0 replies
- 431 views
-
-
சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் அமெரிக்காவில் விளையாடி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய…
-
- 0 replies
- 454 views
-
-
நானும் ரவுடி தான்! - மிரட்டல் அடி அடித்த ஆப்கானிஸ்தான் சமீபகாலமாக இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸி , நியூசி என பெரிய நாடுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் 'ஒன்சைடு கேம்' ஆக சுவாரஸ்யமின்றி முடிந்து விடுகிறது. ஆனால் இன்னும் 'கத்துக்குட்டி'யாகவே அறியப்படும் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடிய ஒரு நாள் தொடரை, போராடி வென்று 'திரில்' வெற்றியை ருசித்திருக்கிறது. ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடந்த இத்தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடர் - ஒரு பார்வை... ம…
-
- 0 replies
- 624 views
-
-
ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க ஒரு அணிதான் இருக்கு: புதிர் போட்ட மைக்கேல் வான் இங்கிலாந்து வீரர் மைக்கலே வான் : கோப்புப்படம் லண்டன், ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியி…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு புறப்பட்டது இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள சஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷிகலா சிறிவர்தன (அணித் தலைவர்), சமரி அத்தப்பத்து (உப தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரணசிங்க, டிலானி மனோதரா, பிரசாதனி வீரக்கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்குசூரிய, உதேஷிகா பிரபோதனி, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, நிபுணி ஹன்சிகா, ஹர்ஷிதா மாதவி ஆகியோர் இடம்பெறுகின்றனர். http://www.virakesari.lk/article/3069
-
- 0 replies
- 351 views
-
-
கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தாரா மலிங்க? இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தினால் கிரிக்கெட் வீரர்களுடன் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த ஒப்பந்தத்தை லசித் மலிங்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையி லான 17 பேர் கொண்ட முதல் பிரிவுக்கு வருடாந்த ஒப்பந்தம் ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஏனைய வீரர்களுக்கான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க கிரிக்கெட் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 245 views
-