விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார். புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பாஉல் ஹக் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திலெடுத்துள்ள மிஸ்பா உல் ஹக் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவுநடைமுறையை அறிவித்துள்ளார். இதனடிப்படையில் மிஸ்பா உல் ஹக் இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளிற்கு தடை விதித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்பட…
-
- 0 replies
- 639 views
-
-
2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 490 views
-
-
19வயதின் கீழ் மும்முனை ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்தை 52 ஓட்டங்களால் வென்றது இலங்கை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகள் பங்குபற்றும் மும்முனை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது முதலாவது வெற்றியை நேற்றுமுன்தினம் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக கெத்தாரம, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சிறந்த பந்துவீச்சின் உதவியுடன் 52 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இப் போட்டியில் 19 வயதின் கீழ் இங்கிலாந்து அணித் தலைவர் ப்றட் டெய்லர் 4 விக்கெட்களைக் கைப்பற்றியபோதிலும் அவ்வணியின் துடுப்பாட்ட…
-
- 0 replies
- 498 views
-
-
’’முரளிதரன் போல் ஹேரத் ஊக்குவிக்கப்படவில்லை’’ சங்கா February 17, 2016 சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் எதிரணியை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் திணறடித்தவர். இதே போன்ற திறமையை தற்போது அணியில் இருக்கும் ரங்கன ஹேரத் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஹேரத்துக்கு கிடைக்கவில்லையே என்று சங்கக்காரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு 15 வயது இருக்கும் போதில் இருந்தே ஹேரத்தை தெரியும். ஆனால் திறமை இருந்தும் அவரது கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. 2009ம் ஆண்டு கா…
-
- 0 replies
- 436 views
-
-
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செல்லக்கூடாது என பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவருமான இஷான் மணி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்தமை தவறு எனத் தான் கருதுவதாகத் தெரிவித்த இஷான் மணி, இது ஓர் அரசியல் முடிவு என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அரசியல்வாதிகளுடன் கலந்து பேசி இந்திய அணி பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய இந்திய அணியால் முடியாதுவிடின் நடுநிலையான இடமொன்றிலாவது கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற இந்திய அணியைச்…
-
- 0 replies
- 431 views
-
-
ஒலிம்பிக்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி! ரியோ ஒலிம்பிக் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளார். 3-வது சுற்றில், உக்ரைனின் எலினா, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவைத் தோற்கடித்துள்ளார். இதனால் செரீனா ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்த ஜோடி நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவா-பர்போரா…
-
- 0 replies
- 350 views
-
-
இந்திய அணியை அச்சுறுத்த இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ வருகிறார் சக்லைன் முஷ்டாக் அடில் ரஷீத்துடன் சக்லைன் முஷ்டாக். | கெட்டி இமேஜஸ் முன்னாள் பாகிஸ்தான் ‘கிரேட்’ சக்லைன் முஷ்டாக், இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் சக்லைனின் அறிவுரைகள் இங்கிலாந்து அணிக்கு உதவியது. இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ சக்லைன் முஷ்டாக் ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2-ம் தேதி முதல் இவர் இங்கிலாந்து அணியுடன் இருந்து பயிற்சி அளிப்பார். காரெத் பாட்டீ, அடில் ரஷீத், சஃபர் அன்சாரி ஆகியோர் தங்க…
-
- 0 replies
- 257 views
-
-
இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…
-
- 0 replies
- 380 views
-
-
இந்திய அணியின் வீரரான இவரது கேப்டன்சியின் கீழ் நான் விளையாட ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு விக்கெட் கீப்பராக, பினிஷராக பல ரோல்களில் சிறப்பாக விளையாடிய வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை கூறலாம். அந்த அளவிற்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை கொடுத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியான ஓய்வை அறிவித்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளுக்கும், பேச்சுகளுக்கும் இப்பொழுதும் குறையில்லை. அந்த அளவிற்கு அவரது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரு…
-
- 0 replies
- 916 views
-
-
டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் லாகூர் ஒயிட்ஸ் - இஸ்லாமாபாத் அணிகள் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத…
-
- 0 replies
- 466 views
-
-
சென்னை திரும்பிய அஸ்வின்: புதிரான ட்வீட்டால் கவலையடைந்துள்ள ரசிகர்கள்! மோசமான நாள். வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். ஊரிலிருந்து கிளம்பியபிறகு நடந்த சில விஷயங்கள் சரியில்லை. பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு ட்வீட்டை அவர் வெளியிட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளார்கள். அஸ்வினின் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று மும்பையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவிருந்த அஸ்வின், சென்னைக்குத் திரும்பியுள்ளதாகக…
-
- 0 replies
- 278 views
-
-
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக் கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக் கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் "நாயகர்களின் போர்' (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண் ஞுண்)துடுப்பாட்டப் போட்டி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி யது. நண்பகல் ஒரு மணிக்கு அணிகள் களம் இறங்கின. பூவா தலையா போட்டு வெற்றி யீட்டிய ஸ்கந்தா அணி மகாஜனா அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. மகாஜனாக் கல்லூரி அணி நேற்றைய தினம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது. மகாஜனாக் கல்லூரியின் சார்பில் பிரக லாதன் 50 ஓட்டங்களையும் மயூரன் 26 ஓட் டங்களையும் ஆகக் கூடிய ஓட்டங்களாகப் பெற்றுக் கொடுத்தனர். ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்து வீசிய நிரோஜன் 46 ஒட்டங்களுக்கு 3 …
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரர்களுக்குள் நிற வேற்றுமை? சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிப் புகைப்படம்! ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் நிற வேற்றுமை நிலவுகிறதா என்ற கேள்விகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வெற்றிப் புகைப்படம் ஒன்று எழுப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியானது ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற போதும், டெஸ்ட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த வெற்றிற்குப் பின்னர் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப…
-
- 0 replies
- 267 views
-
-
பீட்டர்சன் என்ற தலைவலியை குக்கினால் சமாளிக்க முடியாது: பாய்காட் இங்கிலாந்து அணியில் மீண்டும் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட். ஸ்போர்ட் 24 பேட்டியில் அவர் கூறும் போது, “கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு மேட்ச்-வின்னிங் ஆட்டங்களை ஆடக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் சில தலைவலிகளைக் கொடுப்பார். அதனைச் சமாளிக்க தற்போதைய கேப்டன் அலிஸ்டர் குக் லாயக்கற்றவர். முன்னாள் கேப்டன்களில் மைக்கேல் வான் போன்றவர்கள் பீட்டர்சன் போன்ற ஆளுமைகளைத் திறமையாகக் கையாள்வார். ஆனால் குக்கினால் முடியாது. ஆகவே பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்துக்காக ஆடுவது கடினமே” என்றார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் இ…
-
- 0 replies
- 503 views
-
-
விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பெண்கள் பகிர்க 2018-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியுள்ளது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பே மிகவும் பழமையான மற்றும் முக்கியமான டென்னிஸ் தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்கள் விம்பிள்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மூன்று முக்கிய வீராங்கனைகளை பார்ப்போம். மார்டினா நவ்ராட்டிலோவா படத்தின் காப்புரிமைGETTY IMAGES செக்கோஸ்லோவாக்கியா சேர்ந்த மார்டினா நவதிலொவா 1956-ம் ஆண்டு பிறந்தார். செக்கோஸ்லோவா…
-
- 0 replies
- 347 views
-
-
ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடிப்பது கடினம்: பிரையன் லாரா இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது: "மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது. அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆன…
-
- 0 replies
- 638 views
-
-
கப்டன் பொண்டிங் கூறுகிறார் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என்பதை மேற்கிந்தியாவில் நாங்கள் ஆடத் தொடங்கியதும் நீங்களே சொல்வீர்கள் என்று அந்த அணியின் கப்டன் பொண்டிங் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை அடுத்தடுத்து இழந்தது. இதனால் லேசான தடுமாற்றமடைந்துள்ள அவுஸ்திரேலிய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் புறப்பட்டது. அப்போது அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் அவுஸ்திரேல…
-
- 0 replies
- 909 views
-
-
லண்டன்: 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீரருக்கு வயது 27 ஆகும். இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான்சன். இதுகுறித்து துர்ஹாம் போலீஸார் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். தற்போது ஆடம் ஜான்சன் மீது 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக புகாரும், சந்தேகமும் வந்துள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுளளார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சன் கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுன…
-
- 0 replies
- 291 views
-
-
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும். ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராம…
-
- 0 replies
- 326 views
-
-
அலெக்சிஸ் சாஞ்செஸ் மாயஜாலம் : ஆர்சனலிடம் மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி ( வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் நேற்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை தோற்கடித்தது. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் மெசூத் ஓசில் கொடுத்த பாசை மிக அழகாக வளைக்குள் தள்ளி ஆர்சனல் அணிக்கு முன்னிலை தேடி கொடுத்தார் அலெக்சிஸ் சாஞ்செஸ். அடுத்த நிமிடம் தியாகோ வால்காட் கொடுத்த கிராசை மிக நேர்த்தியாக கோலுக்குள் அடித்தார் ஓசில். ஆட்டம் தொடங்கிய 7 நிமிடங்களுக்குள் ஆர்சனல் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. பின…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை அணியின் வீரர்கள் சொதப்பல்: நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி! இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது. கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் 22ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது, இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி…
-
- 0 replies
- 563 views
-
-
பத்து ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் புறப்பட தயாராகும் சங்கக்கார Published by J Anojan on 2019-10-23 11:41:01 லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.சி.சி.யின் தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை. இந் நிலையில் எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை ஏற்றதையடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வ…
-
- 0 replies
- 440 views
-
-
பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம் பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா காணப்படுகின்றார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது. இந்த போட்டியின் போது, ‘போல் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம…
-
- 0 replies
- 419 views
-
-
இந்துக்களின் யுத்தம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு பாருங்கோ.மேலும் யாழ்.இந்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடை யிலான "இந்துக்களின் துடுப்பாட்டம்' (Battle of The HIndus) இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகின்றது. நேரடி இணை ஒளிபரப்பில் (Live Scorecard) www.kokuvilhindu.net இன்று காலை 8 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல் லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமாகின்றது. போட்டிக்கு பிரதம விருந்தினராக "செலிங்கோ இன்சூரன்ஸ் நிறு வனத்தின் யாழ்.பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.நந்திக்குமரனும் கௌரவ விருந்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோலி அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார். இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார். சம்பவம்…
-
- 0 replies
- 832 views
-