விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறார் கங்குலி? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்இ புதிய பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கங்குலி இந்திய அணியின் தலைவராக இருந்தபோது, சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து மிகப்பெரிய சாதனைகளை படைக்க உதவினார் என்பதுகுறிப்பிடத் தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/17/%E0…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் மேற் கொள்ளப்படும் அரச தலையீடு களை பரிசீலிக்க சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணிப்பாளர்கள் சபை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அதிகாரிகளை தேர்வுசெய்வதற்கு இருக்கும…
-
- 0 replies
- 362 views
-
-
இருபதுக்கு - 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 30 ஓவர்கள் நீக்கப்பட்டு இருபதுக்கு-20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது. எனினும் அடுத்தவருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கு முன்னாயத்தமாகவே இந்த போட்டித் தொடர் …
-
- 0 replies
- 304 views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சி.எஸ்.கே.வின் பெரிய 'தல' சென்னை: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தமிழக மக்களுக்கு ட்விட்டர் மூலம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 8வது சீசன் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் டோணி தலைமையிலான சென்னை அணி வென்றது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றி பெற்றுள்ளதால் அணி வீரர்கள் மட்டும் அல்ல பயிற்சிய…
-
- 0 replies
- 537 views
-
-
ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் உலகக் கோப்பையின் போது பாதித்தது: ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகே தான் மாறிவிட்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். இன்று இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணி ஆன்ட்டிகுவாவில் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் ஜடேஜாவுடனான சம்பவம், அதனையடுத்த விசாரணைக்குப் பிறகு தான் முன்பு இருந்த ஆக்ரோஷமான பவுலராக இருப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது என்று ஆண்டர்சன் தெரிவித்தார். டிரெண்ட் பிரிட்ஜில் அன்று, 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேள…
-
- 1 reply
- 814 views
-
-
ஆஷஸ் தொடரைக் குறிவைக்கும் கெவின் பீட்டர்சன் 170 ரன்கள் விளாசல் மீண்டும் இங்கிலாந்து அணியில் நுழைய அவருக்குப் பிடித்தமான ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தத்தையே கைவிட்ட கெவின் பீட்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அதிரடி 170 ரன்கள் விளாசினார். சர்ரே அணிக்காக அவர் நேற்று 170 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கிய பிறகு கெவின் பீட்டர்சன் பலிகடாவாக்கப்பட்டார். இவரை நீக்கியதில் ஸ்டூவர்ட் பிராட், மேட் பிரையர் பயிற்சியாளர் மூர்ஸ், கேப்டன் குக் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் மீண்டும் திரும்புவது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இங்கிலாந்துக்காக ம…
-
- 0 replies
- 567 views
-
-
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவரும் சிறந்த பந்து வீச்சாளரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட் தனது 84 ஆவது வயதில் சிட்னியில் காலமானார். சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனாட், 2013-ம் ஆண்டு கார் விபத்துக்குள்ளனார். இதில் அவருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. சிறந்த பந்து வீச்சாளரும்; அதிரடி துடுப்பாட்ட வீரருமான பெனட், டெஸ்ட் போட்டிகளில் 248 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் அணித் தலைவராக இருந்தபோது ஆஸி. அணி ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. அவர் மொத்தம் 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 1964-ல் ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த கெர்ரி பேக்கர் தொடரை கொண்டு வந்ததில் பெனடின் பங்கு அதிகம். கிரிக்கெட்…
-
- 1 reply
- 908 views
-
-
முன்னணி வீரராக சங்கா இந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார பெயரிடப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை ஆண்டுதோறும் வெளியிடும் சிறந்த வீரர்களுக்கான பட்டியலிலேயே குமார் சங்கக்கார முன்னணி வீரராக பெயரிடப்பட்டுள்ளார். அதேவேளை அந்தச் சஞ்சிகையினால் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தி யூஸ்ஸும் பெயரிடப்பட்டுள்ளார். உலகின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. அதில் அஞ்சலோ மெத்தியூஸ்இ நியூசிலாந்தின் ஜீடன் பட்டேல்இ இங்கிலாந்தின் மொயீன் அலிஇ கெரி பலான்சே, அடம்லயித் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேபோல் இவ்வ…
-
- 0 replies
- 321 views
-
-
பெரிய அணிகளுடன் விளையாடுவதற்காக கதறி வருகிறோம்: அயர்லாந்து கேப்டன் 2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்: ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு …
-
- 2 replies
- 671 views
-
-
விஸ்டன்- 2015 பதிப்பின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு விஸ்டன் - 2015 பதிப்பின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மூன் அலி, கெரி பலன்ஸ், அடம் லீத், ஜீதன் பட்டேல் ஆகியோர் விஸ்டனின் இவ்வருட பதிப்பின் முன்னட்டையில் இடம்பெற்றிருந்த நான்கு சிறந்த வீரர்களாவர். - See more at: http://www.tamilmirror.lk/143697#sthash.yI4dTGIX.dpuf
-
- 0 replies
- 489 views
-
-
தனிமைப்படுத்தப்படுகிறாரா டோணி? அனுஷ்கா-கோஹ்லிக்காக கொந்தளித்தவர்கள் போனது எங்கே? சென்னை: அனுஷ்கா ஷர்மாவால் உலக கோப்பை அரையிறுதியில் விராட் கோஹ்லி சொதப்பல் ஆட்டம் வெளிப்படுத்தினார் என்ற விமர்சனங்களுக்கு உடனடியாக பாய்ந்து வந்து பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி கேப்டன் டோணியை, தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்யும் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ்சிங்கை கண்டிக்காதது ஏன் என்பது டோணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. யுவராஜ் ஒதுக்கப்பட்டது ஏன்? கடந்த டி20 உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ்சிங் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதில் இந்தியா தோற்றபிறகுதான், யுவராஜ்சிங் அணி தேர்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டார். டோணி மீது வ…
-
- 1 reply
- 678 views
-
-
இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்குக் காரணம் கேப்டன் தோனியே என்று ஏற்கெனவே கடுமையாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பிய யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனி மீது பாய்ந்துள்ளார். இந்தி செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங், “தோனி ஒன்றுமில்லாதவர், அவர் ஒன்றுமேயில்லை. ஊடகங்களினால் அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியிருக்கிறார். ஊடகங்கள் அவரை மிகப்பெரிய வீரர் என்று ஊதிப் பெருக்கியது, ஆனால் இத்தகைய பெருமைக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவர் ஒன்றுமே இல்லாத காலங்கள் இருந்தன, ஆனால் இன்று ஊடகங்களின் முன்னால் அமர்ந்து ஊடக நிருபர்களையே கேலியும் கிண்டலும் செய்கிறார். அவருக்கு துதிபாடிய ஒரு பத்திரிகையாளரையே கேலி செய்கிறார். அவர் ஒரு ரன் எடுத்தால் கைதட்டும் இந்திய ரசிகர்…
-
- 4 replies
- 892 views
-
-
டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . ராஞ்சி: உலக கோப்பை வெல்ல முடியாத விரக்தி, யுவராஜ்சிங்கின் தந்தை வசைமாறி என மாறிமாறி காயப்பட்டுவரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, அதையெல்லாம் சட்டை செய்யாமல், தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளார். 60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு டிவிட்டருக்கு தற்காலிக பிரேக் விட்டார் கேப்டன் கூல், டோணி. இந்நிலையில், இன்றுதான் மீண்டும் டிவிட்டருக்கு வந்தார் டோணி. டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . அதுவும், ஒரு புதிரோடுதான் ரீ-என்ட்ரி கொடுத்தார். பல மாத வெயிட்டிங்கிற்கு இப்போதுதான் முடிவு கிடைத்துள்ளது. இருந்தாலும், இன்ன…
-
- 1 reply
- 977 views
-
-
கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கப்பில விஜேகுணவர்த்தன நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கப்பில விஜேகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். கப்பில விஜேகுணவர்த்தன இலங்கை அணி சார்பாக 2 டெஸ்ட் போட்டிகளிலும்,26 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE…
-
- 1 reply
- 300 views
-
-
சிக்கன பந்துவீச்சில் வெலகெதர புதிய சாதனை முதல்தர இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4 ஓவர்களைப் பூர்த்தி செய்த பந்துவீச்சாளர்களில் அதி சிறந்த (0.50) சிக்கன பந்துவீச்சுப் பெறுதிக்கான (அதாவது ஓவருக்கு 0.5 ஒட்ட வீதம்) புதிய சாதனையை இலங்கையின் சானக்க வெலகெதர நிலைநாட்டியுள்ளார். எஸ். எஸ். சி. அணிக்கு எதிராக கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்தலட்டிக் கழகம் சார்பாக பந்து வீசிய சானக்க வெலகெதர 2 கன்னி ஓவர்கள் அடங்கலாக 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் பலனாக தமிழ் யூனியன் க…
-
- 0 replies
- 543 views
-
-
பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சென்.ஜோன்ஸ் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் 19 வயது பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் பாதுக்க ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியும் மோதவுள்ளன. இந்த இறுதிப்போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (08) இடம்பெறவுள்ளது. பிரிவு – 3 அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்;டிகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிகளைக் குவித்தது. இதனடிப்படையில், பிரிவு – 3 இறுதிப்போட்டியில் விளையாடும் யாழ்ப்பாணத்தின் முதல் அணியாக சென். ஜோன்ஸ் கல்லூரி அணி காணப்படுகிறது. பிரிவு – 3 போட்டிகளில் இறுதிப்போட்டி வரையில் நுழைந்தமையால் சென். ஜோன…
-
- 0 replies
- 409 views
-
-
ரொனால்டோவின் ஹெட்ரிக்குடன் ரியல் மெட்ரிட் வெற்றி நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிவேக ஹெட்ரிக் சாதனையால் கிரனேடா அணியை வீழ்த்தி ரியல் மெட்ரிட் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல்பாதியில், 8 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தினார். அதிவேக ஹொட்ரிக் கோல் சாதனையுடன் மேலும் 2 கோல்களை தலையால் முட்டி முதன் முறையாக 5 கோல்களை பெற்றார். இதனையடுத்து, லா லிகா பட்டியலில் இறுதியில் உள்ள அணியான கிரனேடாவை 9:1 என்ற கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், பார்சிலோனா அணி, மத்தியுவின் ஒரே ஒரு கோலுடன் போராடி செல்டோவிகோ அணியை, 1:0 என்ற கணக்கில் வென்று லா லிகா தரவரிசைப்பட்டியலில் 71 புள்ளிகளுடன் முன்ன…
-
- 4 replies
- 442 views
-
-
இங்கிலாந்தின் வூஸ்டர்ஷயர் அணியில் சச்சித்ர சேனநாயக்க இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவை இங்கிலாந்தின் வூஸ்டர்ஷயர் பிராந்திய அணி ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்குப் பதிலாகவே வூர்ஸ்டர்ஷயர் பிராந்திய அணிக்காக சச்சித்ர சேனாநாயக்க விளையாடவுள்ளார். நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சச்சித்ர சேனாநாயக்கவை இலங்கை அணி நிருவாகம் பெரிய அளவில் கருத்தில் கொள்ளாத போதிலும் சச்சித்ரவின் திறமையில் நம்பிக்கை கொண்டுள்ள வூஸ்டர்ஷயர் பிராந்திய அணி அவரை துணிந்து ஒப்பந்தம் செய்துள்ளது. பதினொராவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத் தில் கால் இறுதி உட்பட இலங்கை…
-
- 0 replies
- 321 views
-
-
இரட்டை சதம் எதிரொலி: நியூஸி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் கப்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்டில் இடம்பிடித் துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் உள்பட 547 ரன்கள் குவித்ததன் மூலம் மார்ட்டின் கப்டில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய கப்டில், இப்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். மார்ட்டின் கப்டில் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடை…
-
- 0 replies
- 356 views
-
-
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இரண்டாவது தடவையாக தர்மசேன அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்ற இலங்கையின் நடுவர் குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டி ஒன்றில் நடுவராக கடமையாற்றும் முதலாமவர் குமார் தர்மசேன என்பது குறிப்பிடத்தக்கது. 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக சம்பியன் ஆகிய வேளை, இலங்கை அணியில் குமார் தர்மசேன விளையாடி இருந்தார். 43 வயதான குமார் தர்மசேன, 19 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டி ஒன்றில் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார். 2011ஆம் ஆண்டு சிறந்த நடுவர் விருதைப் பெற்ற இவர், கடந்த இ…
-
- 2 replies
- 548 views
-
-
சுனில் நரைனுக்கு மீள் பரீட்சை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நில…
-
- 0 replies
- 416 views
-
-
கிரிக்கெட் துறையில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இதுவே தருணம் முரளிதரன், மஹேலவும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுத்தலைவர் சிதத் வெத்தமுனி கூறுகிறார் ''கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று பல்லாண்டுகளாக மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்துவரும் என்னிடம் இடைக்கால நிர்வாக சபைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அமைச்சர் கேட்டபோது நான் சற்று தயங்கினேன். ஆனால் கிரிக்கெட் விளையாட்டின்மீது அவர் கொண்டுள்ள அக்கறையானது என்னை மிகவும் கவர்ந்தது. அவரது தந்தையைப் போன்றே (முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி திசாநாயக்க) அவரிடம் கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் மீது காணப்படும் அக்கறை என்னை மிகவும் கவர்ந்தது. கிரிக்…
-
- 1 reply
- 398 views
-
-
வருகிறது மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் புதுடில்லி: மழையால் போட்டிகள் தடைபடாமல் இருக்க, மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் உருவாகிறது. வரும் 2019 உலக கோப்பை தொடரில் இது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. கிரிக்கெட் நடக்கும் போது மழை வந்தால் போட்டியை முழுமையாக நடத்த முடியாது. அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு குறித்து நிர்ணயம் செய்ய ‘டக்–வொர்த் லீவிஸ்’ விதி பின்பற்றப்படுகிறது. இதனால், பல போட்டிகளின் முடிவுகள் அப்படியே தலைகீழாகி விடும். 1992 உலக கோப்பை தொடரில் சிட்னி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இலக்கு மாற்றப்பட, தென் ஆப்ரிக்க அணி (1 பந்து, 22 ரன்) பரிதாபமாக வீழ்ந்தது. சமீபத்திய உலக கோப்பை தொடரிலும், மழை வந்து தென் ஆப்…
-
- 3 replies
- 496 views
-
-
நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் ஓய்வு நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்துப் பேசிய அவர், “கடந்த 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளை யாடியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். இனிமேல் விளையாட முடியாது என்பது மிகப் பெரிய இழப்புதான். அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். நான் நேசித்த கிரிக்கெட்டை நான் விளையாடுவதற்காக எனது குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்” என்றார். 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ள மில்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவ…
-
- 0 replies
- 331 views
-
-
மோசமான உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்து நியூஸி. இணையதளம் வேடிக்கை உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் ஐசிசி ஒரு சிறந்த உலகக் கோப்பை அணியை அறிவிக்க நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக் கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அணிக்குத் தலைவர் இயன் மோர்கன் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'Not First XI' என்ற பெயரில் நியூசி. இணையதளம் ஒன்று இந்த அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு முதல் சுற்றில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனை கேப்டனாக அறிவித்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சரியாக செயல்படாத வீரர்கள் கொண்ட அணியை வேடிக்கையாக அறிவித்துள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம்…
-
- 2 replies
- 340 views
-