விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக…
-
- 0 replies
- 870 views
-
-
‘அழகிய’ ஆபத்து நவம்பர் 23, 2014. கால்பந்து களத்தில் பிரபல ‘மாடல்’ கிளாடியா, நடுவராக களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பெண் நடுவர்கள் இல்லை. இருப்பினும், சியான் மேசே–எல்லிஸ், 29, என்பவர், நீண்ட நாட்களாக ‘லைன்’ நடுவராக செயல்பட்டு வருகிறார். ஆண்கள் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக நடுவராக களமிறங்கிய பெருமை, ஜெர்மனியின் பிபியானா ஸ்டெயின்ஹாஸ், 35, என்பவருக்கு உண்டு. சமீபத்தில் பேயர்ன் முனிக், மான்சென்கிளாடுபேக் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. அப்போது கூடுதல் நேரம் வழங்குவதில் நடுவர் பிபியானாவுடன் மோதலில் ஈடுபட்டார் பேயர்ன் அணி மானேஜர் குவார்டியலோ. அப்போது, பெண் தானே என…
-
- 7 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார் சந்தேகத்திற்கிடமான முறையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசுகிறார் என்று ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி…
-
- 4 replies
- 698 views
-
-
முறையற்ற பந்துவீச்சின் மீதான நடவடிக்கை ‘சதி’ அல்ல: ஐசிசி பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை விட்டெறிவதன் மீதான ஐசிசி நடவடிக்கையில் சதி எதுவும் இல்லை என்று தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். 2015 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இத்தகைய தருணத்தில் அணிகளின் முன்னணி பவுலர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மீது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதில் ‘சதி’ நடப்பதாக கிரிக்கெட் அரங்கில் சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, “விதிமுறைகளை ‘வளைக்கும்’ (சிலேடைக்கு மன்னிக்கவும்) பவுலர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக…
-
- 0 replies
- 352 views
-
-
போர்ம்யூலா 1 சம்பியன் ஹமில்டனா? ரொஸ்பேர்கா? அபு தாபி குரோன் ப்றீ பந்தயம் தீர்மானிக்கவுள்ளது இவ் வருடம் போர்ம்யூலா 1 குரோன் ப்றீ சம்பியன் யார் என்பதை நாளை நடைபெறவுள்ள இறுதிக் கட்டமான அபுதாபி குரோன் ப்றீ காரோட்டப் போட்டி தீர்மானிக்கவுள்ளது. இறுதிக் கட்டப் போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு வழமையான புள்ளிகளுக்கு பதிலாக இரட்டிப்பு மடங்கு புள்ளிகள் வழங்கப்படுவதால் தற்போது 17 புள்ளிகள் வித்தியாசத்துடன் முதலிரு இடங்களில் உள்ள லூயிஸ் ஹமில்டனுக்கும் நிக்கோ ரொஸ்பேர்குக்கும் இடையில் சம்பியனுக்கான கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருவரும் மெர்சிடெஸ் அணி சார்பாக போட்டியிடுகின…
-
- 2 replies
- 457 views
-
-
கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…
-
- 5 replies
- 867 views
-
-
http://www.youtube.com/watch?v=lw2m-iU8gKE காணொளியை, இறுதி வரை பார்க்கவும்.
-
- 6 replies
- 780 views
-
-
சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்…
-
- 3 replies
- 510 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையை ரத்து செய்ய வேண்டாம்: இந்தியா சிமெண்ட்ஸ் மன்றாடல் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் ஒப்பந்த்தத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடியுள்ளது. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான முத்கல் கமிட்டியின் அறிக்கை மீதான எதிர்வினையில் இந்தியா சிமெண்ட்ஸ் கோரிக்கை வைக்கும் போது, “குருநாத் மெய்யப்பன் மீது கூறப்பட்ட விவகாரங்கள் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதோ உரிமையாளர்கள் மீதோ, ஊழியர்கள் மீதோ எந்த வித அனுமானங்களும் இல்லை.” என்று கோரியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அது ஐபிஎல் கிரிக்கெட்டிற்கே பா…
-
- 1 reply
- 415 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களின் ‘மெனு கார்டு’ இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயா…
-
- 0 replies
- 710 views
-
-
ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…
-
- 0 replies
- 375 views
-
-
கௌஷாலை ஆரம்ப வீரர் ஸ்தானத்தில் அவதானிக்கவுள்ளோம்: தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் திலக்கரட்ன டில்ஷானுடன் ஆரம்ப வீரராக யாரை நிலையாக நியமிப்பது என்பதில் தெரிவாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திலக்கரட்ன டில்ஷான் மாத்திரமே ஆரம்ப வீரராக தனது அனுபவத்தைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். உப்புல் தரங்க, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருந்தனர். இந்நிலையில் இலங்கை வருகை தந்துள்ள இங்கிலாந்து அணிக்க…
-
- 0 replies
- 462 views
-
-
குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுப்பது? - செஸ் ‘ராணி’ சூசன் போல்கர் பதில் ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு முறை மகளிர் உலக செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியைச் சேர்ந்த சூசன் போல்கர். செஸ் நிபுணர், வர்ணனையாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட போல்கர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். 11 வயதுக்குட்பட்டோருக்கான புதாபெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தனது 4-வது வயதில் வென்றவர். அதிலிருந்தே அவருடைய புத்திகூர்மையையும், திறமையையும் நாம் அறிந்துகொள்ளலாம். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல்கரின் சகோதரி. ஆடவர் கோலோச்சிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் பெண் சூசன். 1990-களில் விஸ்வநாதன் ஆனந்துடன் பல போட்டிக…
-
- 0 replies
- 681 views
-
-
உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக 21 மற்றும் 23ம் திகதி இரு அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இலங்கையில் இங்கிலாந்து அணி தொடரை இழந்து விடாது என கிறிஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எல்லோரும் உலகக்கிண்ணத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் இப்போது இருக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்தினால் போதுமானது. இலங்கை சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு அடித்தளம் அம…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …
-
- 0 replies
- 485 views
-
-
மைக்கல் கிளார்க் ஓய்வுபெறவேண்டும் : அலன் போடர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் 33 வயதான மைக்கல் கிளார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையிலேயே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மைக்கல் கிளார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 2015 ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட வேண்டு…
-
- 0 replies
- 685 views
-
-
ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடிப்பது கடினம்: பிரையன் லாரா இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது: "மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது. அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆன…
-
- 0 replies
- 642 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி தோனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி. கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார் இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில…
-
- 0 replies
- 814 views
-
-
சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலிடம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சகல துறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரருக்கான நிரல்படுத்தலில் முதலிடத்தை அடைந்துள்ளார். இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்கலாக 339 ஓட்டங்களைப் பெற்ற மெத்யூஸ், 4 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இதனையடுத்து சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான நிரல்படுத்தலில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நிரல்படுத்தலுக்கான 420 படிநிலை புள்ளிகளை மெத்யூஸ் பெற்றுள்ளதுடன் பாகிஸ்தானின் மொஹமத் ஹஃவீஸ் 411 படிநிலை புள்ளிகளுடன் இரண்டாம் இ…
-
- 0 replies
- 575 views
-
-
5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி! மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி வந்துள்ளது இலங்கை. Read more at: http://tamil.oneindia.com/news/sports/sl-te…
-
- 48 replies
- 3k views
-
-
ஐசிசி தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா இலங்கை அணியை 5-0 என்று ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்பு 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விடவும் 2 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்ற இலங்கை அணி, 4ம் இடத்தில் உள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில், எந்த அணி 4-1 என்று ஜெயிக்கிறதோ அந்த அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இந்தி…
-
- 1 reply
- 374 views
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத் இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது. இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும். இலங…
-
- 0 replies
- 409 views
-
-
உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது ஆஸி கைப்பற்றும் : யுவராஜ் உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது அவுஸ்திரேலிய அணி கைப்பற்றும் என இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகக்கிண்ண இந்திய அணியில் தனக்கு இடம் கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகள் நெருங்கி வருகின்ற நிலையில் யுவராஜ்சிங் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத்தை இலங்கை அல்லது அவுஸ்திரேலிய அணிகள் கைப்பற்றும். விராட் கோலி திறமையானவர். அவரது வெற்றிகளுக்கு பின்னணி அவரது உறுதியான தீர்மானமே ஆகும். இந்திய அணிக்கு டோன…
-
- 0 replies
- 415 views
-
-
ஸிம்பாப்வேயை வெள்ளையடிப்பு செய்தது பங்களாதேஷ் ஸிம்பாப்வே அணிக்கு எதிராக சித்தாகொங், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று நிறைவுபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 186 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றியீட்டியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் ஸிம்பாப்வே அணியை 3:0 என்ற ஆட்டக் கணக் கில் பங்களாதேஷ் வெள்ளையடிப்பு செய்தது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த ஸிம்பாப்வே அணி, தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் 262 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. போட்டியின் முதலாவது பகுதியில் 35 ஓவ…
-
- 0 replies
- 511 views
-