Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் டேனியல் வெட்டோரி! வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சை வைத்தே காலம் கடத்தி வந்த, நியூசிலாந்து அணியில் பெயர் சொல்லக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரிதான். 1997ம் ஆண்டு தனது 18வது வயதில் வெட்டோரி நியூசிலாந்து ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார். வெட்டோரி 295 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 305 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட் 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 362 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 4531 ரன்களையும் விளாசியுள்ளார். கபில் வரிசையில் கபில்தேவ…

  2. 4 ஆவது போட்டியிலும் வெற்றி : இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து! இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) அரம்பமானது. கண்டி, பல்லேகல மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தங்கியிருந்தனர். போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் படி இலங்கை அணி முதலில் களமிறங…

  3. குதிரை பந்தயங்களில் கலக்கிய 'குயிட்டோ ஸ்டார்' மரணம்! சர்வதேச அளவில் குதிரை பந்தயங்களில் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற 'குயிட்டோ ஸ்டார்' குதிரை, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக நேற்று மரணமடைந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் பல்வேறு குதிரை பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்ற குதிரை குயிட்டோ ஸ்டார். தற்போது 15 வயதான குயிட்டோ ஸ்டார், கடந்த 2012ஆம் ஆண்டு குதிரை பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றது. ஓய்வுக்கு பின், இந்த குதிரை அதன் உரிமையாளர் ஸ்மித்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் மேய்ச்சலுக்கு போன குயிட்டோ ஸ்டார், கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குதிரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று குயிட்டோ ஸ்டார் பர…

  4. ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு! ஆஷஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் கிளார்க்கின் மோசமான பார்மும் அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களையும், மீடியாக்களையும் திருப்பி விட்டுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்சுகளில் 668 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இதில் 2 முறை சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் கிளார்க் 23 முறை, 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரானத் தொடரில்தான் கிளார்க் அறிமுகம் ஆனார். கிளார்க் அறிமுகமான இந…

  5. நேமார் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர் ஸ்பானிய அதிகாரிகள் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 05:38 PM பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமார், பார்சிலோனா கழகத்தில் இணைந்தமை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை ஸ்பானிய அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், 30 வயதான நேமார், அவரின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு எதிராக ஸ்பெய்னின் பார்சிலோனா நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோ அபராதம் ஆகியன விதிக்கப்பட வேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் முன்னர் கோரியிருந்தனர். எனினும் வியப்பளிக்கும் வக…

  6. உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய தொடர் நல்ல முன்தயாரிப்பாக அமையும்: தோனி உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சிறந்த முன் தயாரிப்பாக அமையும் என்று இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார். பிப்.14, 2015- அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை தன் முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 100 நாட்கள் கொண்டாட்டத்தில் பல அணி கேப்டன்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். தோனி கூறும்போது, “2011 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இது, அணியின் திறமையை அறிவுறுத்துகிறது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் தன்மை வீரர்களிடத்தில் இருப்ப…

  7. ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற விரும்புகிறார் நெய்மர் ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற நெய்மர் விரும்புகிறார். இதனால்தான் பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி.க்கு அவர் மாறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரரான நெய்மர் (ஜூனியர்) திகழ்ந்து வருகிறார். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பேசப்படுகிறார். ஆரம்ப கட்டத்தில் பிரேசில் நாட்டின் கிளப்பில் இருந்து புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்கு மாறினார். மெஸ்சியுடன் இணைந்து பார்சிலோனாவின் நம்பிக்கை வீரரானார். இவரை விட்டுக்கொடுக்க மனம் இல்ல…

  8. சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்­லை­யென்றால் என்­னு­டைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்­வ­ளவு தூரம் வளர்ந்­தி­ருக்­காது என்று, இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தைப் பெற்­றுத்­தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். உலகின் தலை­சி­றந்த சகலதுறை ஆட்­டக்­கா­ர­ராக கரு­தப்­படும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்­துள்ளார். மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் பார்­வை­யா­ள­ராகப் பங்­கு­பற்றிய சேர் கார்பீல்ட் சோபர்­ஸுக்கு, துறை­மு­கங்கள் கப்­பல்­துறை அமைச்­சில், அமைச்சர் அர்­ஜுன ரண­…

  9. மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி சூசன் நைனன் விளையாட்டுத்துறை எழுத்தாளர் 25 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியான மாமல்லபுரம் (மகாபலிபுரம்), ஒரு வேறுபட்ட ரஷ்யா-யுக்ரேன் இடையிலான போட்டியைப் பார்க்கப் போகிறது. இந்தியா நடத்தவிருக்கும் செஸ் ஒலிம்பியாடின் பின்னணியில், சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவரை தேர்வு செய்ய 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரஷ்யாவின் முன்னாள் …

  10. அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. …

  11. ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் – அரை இறுதியில் இலங்கை தொடரும் தர்சினியின் கோல் மழை சிங்கப்பூர் ஓ சி பி சி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 நாடுகளுக்கு இடையிலான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.ஹொங்கொங் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் 62 – 51 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. போட்டியின் முதலிரண்டு ஆட்டநேர பகுதிகளில் மிகத் திறமையாகவும் வேகமாகவும் விளையாடி கோல்களை இலகுவாக குவித்த இலங்கை, கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் ஹொங்கொங்கின் கடும் சவாலை எதிர்கொண்டது. …

  12. அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம் தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது: "தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவத…

  13. தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம் தாகா: ‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர். கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது: வங்கதேசத்துக்கு எத…

  14. போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ் வெற்றி மகிழ்ச்சியில் குரேஸ்மாவை கட்டித்தழுவும் ஆட்ட நாயகன் ரெனேட்டோ சான்சேஸ்.| படம்: ஏ.எஃப்.பி. யூரோ 2016-ல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்ச்சுகல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்ச்சுகல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக விதந்தோதபடுகிறார். சான்சேஸ் தனது கால்பந்து கிளப் வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். அக்டோபர் 2014-ம் ஆண்டு ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015-ல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்று…

  15. பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 5 ஆவது வார போட்டிகள் பின்னரான முடிவுகள். பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 5 ஆவது வார போட்டிகள் பின்னரான முடிவுகள். பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் சுவாரஸ்யமான இவ்வாரம் இடம்பெற்ற 10 போட்டிகளில் மொத்தமாக 36 கோல்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 3 கோல்கள் பெனால்டி வாய்ப்பிலும் 3 கோல்கள் ஓவ்ன் கோல் முறை மூலமும் பெறப்பட்டுள்ளன. அத்துடன் 3 வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டிருந்தனர். #செல்சி 1-2 லிவர்பூல் பலம் வாய்ந்த இரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் செல்சி அணி லிவர்பூலிடம் தோல்வியடைந்துள்ளது. லிவர்பூல் சார்பாக லாவ்ரென், ஹெண்டர்சன் தலா 1 கோலும் செல்சி சார்பாக கோஸ்டா 1 கோளும் பெற்ற…

  16. லண்டன்: 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீரருக்கு வயது 27 ஆகும். இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான்சன். இதுகுறித்து துர்ஹாம் போலீஸார் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். தற்போது ஆடம் ஜான்சன் மீது 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக புகாரும், சந்தேகமும் வந்துள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுளளார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சன் கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுன…

  17. ‘‘வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை’’ – பயிற்றுநர் கிரஹம் போர்ட் 2016-09-09 10:09:55 (நெவில் அன்­தனி) அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட்டில் என்ன விலை கொடுத்­தேனும் வெற்­றி­பெற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இலங்கை அணி இருப்­ப­தாக தலைமைப் பயிற்­றுநர் க்ரஹம் போர்ட் தெரி­விக்­கின்றார். அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இலங்­கைக் கும் இடை­யி­லான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் போட்டி கெத்­தா­ராம விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்கு முன்­னோ­டி­யாக நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர்…

  18. 2020 T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில்! 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண T20 போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள பதின்மூன்று விளையாட்டு அரங்கங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. http://www.virakesari.lk/article…

  19. கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை கிரிக்கெட் போட்டியில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறை கொண்டு வர வேண்டும் என்று எம்.சி.சி. பரிந்துரை செய்து உள்ளது. மும்பை: லண்டனில் உள்ளது மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) இந்த கிளப் தான் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கும். கிளப் தலைவராக மைக் பிரியர்ல…

  20. 2016 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை ஸ்ரீகாந்த். | கோப்புப் படம்: வி.கணேசன். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், “இந்தியாவில் டி20 உலகக் கோப்பை ஒரு மிகப்பெரிய நிகழ்வு. டி20 கிரிக்கெட்டில் இந்தியா நன்றாக விளையாடி வருகிறது. எனவே இம்முறையும் இந்தியா நன்றாகவே விளையாடும், யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்தியா கோப்பையையும் வென்று விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார். டெஸ்ட் வெற்றி க…

  21. இங்கிலாந்து கால்பந்து அணியில் ரூனிக்கு இடமில்லை உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லண்டன் : உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துடன் மோத இருக்கிறது. மேலும் பிரான்சுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றிலும் விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் சேர்க்கப்படவில்லை. ஆனால் …

  22. உலகக் கிண்ண வாய்ப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டமை தவறு: பீபா முன்னாள் தலைவர் பிளாட்டர் By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 11:14 AM 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டமை ஒரு தவறு என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA - பீபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார். 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் உலக கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010 ஆம் ஆண்டு ஏககாலத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றது. 2022 ஆம் ஆண்டின் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு இறுதியாக கத்…

  23. பப்புவா நியுகினியில் பசிபிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளதாக பசிபிக் விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மைக்ரோனீசிய (சமஷ்டி அரசுகள்)அணிக்கு எதிராக 38-0 என்ற வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபிஜி அணி வீரர் அட்டோனியோ துய்வுனா தனியாக 10 கோல்களை அடித்துள்ளார். 2001-ம் ஆண்டில், அமெரிக்க சமோவா அணிக்கு எதிராக, ஆஸ்திரேலியா 31-0 என்ற வெற்றியை பெற்று படைத்திருந்த உலக சாதனையே இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.com/tamil/sport/2015/07/150705_fiji_football

    • 0 replies
    • 293 views
  24. 01 DEC, 2023 | 03:30 PM ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான ஆபிரிக்கப் பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டியில் ருவாண்டாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உகாண்டா அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய ருவாண்டாவை 65 ரன்களுக்குச் சுருட்டிய உகாண்டா, வெற்றி இலக்கை 8.1 ஓவர்களில் அடைந்தது. ருவாண்டாவை வீழ்த்தியதன் மூலம் உகாண்டா அணி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்…

  25. மஹேல எதிர்ப்பு பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிகள் நடத்­து­வதால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்­ப­ரிய மர­புகள் மீறப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தி­ருக்கிறார் இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் துடுப்­பாட்ட ஜாம்­ப­வா­னு­மா­கிய மஹேல ஜய­வர்­தன. கிரிக்கெட் வர­லாற்றில் முதல் பக­லி­­ரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதா­னத்தில் நடைபெற­வுள்­ளது. டெஸ்ட் போட்­டியை காணமைதா­னத்­திற்கு ரசி­கர்கள் கூட்டத்தை அதி­க­ரிக்கும் வகையில், சில கவர்ச்­சி­யான அம்­சங்­களை புகுத்த பல ஆண்டு கால­மாக ஐ.சி.சி. முனைந்து வந்­தது. பக­லிரவு டெஸ்ட் போட்­டி­களை நடத்து­வது இதில் முக்­கி­ய­மா­னது. பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிகள் நடத்­து­வது குறித்து ஆலோ­சித்து வந்­தது. இந்­நி­லையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள சே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.