Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை திரும்பிய அஸ்வின்: புதிரான ட்வீட்டால் கவலையடைந்துள்ள ரசிகர்கள்! மோசமான நாள். வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். ஊரிலிருந்து கிளம்பியபிறகு நடந்த சில விஷயங்கள் சரியில்லை. பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு ட்வீட்டை அவர் வெளியிட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளார்கள். அஸ்வினின் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று மும்பையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவிருந்த அஸ்வின், சென்னைக்குத் திரும்பியுள்ளதாகக…

  2. ஆங்­கி­லேய ப்றிமியர் லீக் போட்­டியில் செல்சி கழகம் 12 ஆவது நேரடி வெற்றி 2016-12-28 10:56:27 இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் ஆங்­கி­லேய ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் செல்ஸி விளை­யாட்டுக் கழகம் தொடர்ச்­சி­யாக 12 வெற்­றி­களை ஈட்டி சாதனை நிலை­நாட்­டி­யுள்­ளது. போர்ன்மௌத் கழ­கத்­திற்கு எதி­ராக திங்­க­ளன்று நடை­பெற்ற ப்றீமியர் லீக் போட்­டியில் 3 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் இந்த சாத­னையை செல்சி கழகம் படைத்­தது. இப் போட்­டியில் ஒரு தட்டு, இரண்டு தட்­டுகள் என்ற பந்து பரி­மாற்­றங்­க­ளுடன் மிக வேக­மாக விளை­யா­டிய செல்சி கழகம் எதி­ர­ணியை மாத்­தி­ர­ம…

  3. இலங்கை நெருக்கடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல்! Jul 21, 2022 08:32AM IST இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தாமல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும். த…

  4. டி20: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வீண்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து கடைசி ஓவரை அருமையாக வீசிய பென் ஸ்டோக்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ். கார்டிப் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. மொயின் அலி 46 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ, கேப்டன் மோர்கன் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 74 ரன்களை வெளுத்துக் கட்டினார். இருவரும் இணைந்து 74 பந்துகளில் 135 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கூல்டர் நைல், கமின்ஸ் சிக்கனம் க…

  5. 14 SEP, 2023 | 10:13 AM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ரிட்ஸ்பறி 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்பநாளான புதன்கிழமை (13) 4 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் சாதனைகள் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுவர்கள் பிரிவில் 3 புதிய சாதனைகளும் சிறுமிகள் பிரிவில் ஒரு சாதனையும் நிலைநாட்டப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ரி. மெண்டிஸ…

  6. இலங்கை வீரர்களை ஊக்கப்படுத்திய தோனி (காணொளி) இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன்போது இந்திய அணியின் முன்னாள் தலைரும் தற்போதைய விக்கட் காப்பாளருமான தோனி இலங்கை வீரர்களிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. இதில் தோனி இலங்கை வீரர்களான உபுல் தரங்க, அகில தனஞ்சய மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு சில துடுப்பாட்ட யுத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார…

  7. கெய்ல் மீண்டும் விளாசல் டான்டன்: ஹாம்ஷயர் அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ரன் குவிக்க சாமர்சட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் நாட்வெஸ்ட் ‘வென்டி–20’ தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் சாமர்சட், ஹாம்ஷயர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஹாம்ஷயர் அணிக்கு கேப்டன் வின்ஸ் (64*), எர்வின் (30*) கைகொடுத்தனர். ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. கெய்ல் புயல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சாமர்சட் அணிக்கு டிரஸ்கோதிக் (1) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், டிரிகோ ஜோடி ஹாம்ஷயர் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபா…

  8. சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்? விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்கு எதிராக லெக்ஸ்பின் (ரிஸ்ட்) வீசிய அஸ்வின். - படம். | ஆர்.ரகு. இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக…

  9. வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான லோரியஸ் விருது ஜோகோவிச்சுக்கு; சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தெரிவு சேர்பியாவின் டென்னிஸ் சம்பியன் நொவாக் ஜோகோவிச் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான லோரியஸ் விருதை வென்றெடுத்துள்ளார். இதேவேளை, வருடத்தின் அதி சிறந்த வீராங்கனைக் கான லோரியஸ் விருதை ஐக்கிய அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்துள்ளார். இவ் வருடத்திற்கான லோரியஸ் விருது விழா ஜேர்மன் நாட்டின் தலைநகரான பேர்லினில் அமைந்துள்ள பலாய்ஸ் அம் ஃபன்க்டேர்ன் கோபுர மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்த நான்காவது லோரியஸ் விருது இது…

  10. திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி ஜே.பி.எல்.க்கு தகுதி யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் எனப்படும் ஜே.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தகுதிகாண் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று ஜே.பி.எல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. யாழ்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணியும் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. என்.லவகாந் அதிரடியாக ஆடி 120 ஓட்டங்களையும், எஸ்.சுரேந்திரன் 36, என்.சிவராஜ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்த…

  11. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203

  12. ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரரின் கால் முறிவு: அதிர்ச்சி வீடியோ. ரியோ: ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரரின் கால் முறிந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரர் ஒருவரின் கால் முறிந்து பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. - தற்ஸ் தமிழ் -

  13. வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது நேற்று முன்தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது இரண்டு நாட்களைக் கொண்டு நடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து …

  14. இந்தியாவில் விளையாடலாம்; ஆனால், வருவாய் யாருக்கு?- அப்ரீடி கேள்வி ஷாகித் அப்ரீடி. | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்ததாக எழுந்த ஊடகச் செய்திகளை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது பாகிஸ்தானிலோ விளையாடும் சாத்தியமில்லை என்று பிசிசிஐ நேற்று தெளிவாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் விளையாடினால் 50-50 வருவாய் பகிர்வுக்கான உத்தரவாதம் இருந்தால் விளையாடலாம் என்று அப்ரீடி கருத்து தெரிவித்துள்ளார். ஜியோ சூப்பர் சானலில் அவர் கூறியதாவது: இந்தியாவுக்குச் செ…

  15. மகளிர் ஆசிய கிண்ண இருபது - 20 கிரிக்கெட் : இலங்கையை வெற்றிகொண்டது இந்தியா By VISHNU 02 OCT, 2022 | 10:48 AM (என்.வீ.ஏ.) பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த அபார அரைச் சதம், ஹேமலதா, பூஜா, தீப்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 4 ஓவர்களுக்குள் …

  16. பந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் பந்து தாக்கியுள்ளது. இதில் சற்று நிலைத்தடுமாறிய மெக்ஸ்வெல் தரையில் விழுந்துள்ளார். மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மெக்ஸ்வெலை ஓடிவந்து கவனிக்க, அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாரிய உபாதைகளும் ஏற்படவில்லை. எனினும் பந்து தாக்கியதற்கு பிறகு மெக்ஸ்வெல் அவரது அறைக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில்,…

  17. டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர் r டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன. தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன. 22 வயதிற்குட்பட்டோர் …

  18. ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் வலுத்து வருகிறது Getty ஜியானி இண்ஃபாண்டினோ மற்றும் மிஷேல் பிளாட்டினி PA பதவி விலகும் பிளாட்டரும், அப்பதவிக்கு போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அல் ஹிசைனும் Getty தலைவர் பதவிக்கான போட்டியிலுள்ள டோக்யோ செக்ஸ்வாலே சர்வதேசக் கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தலைவர் பதவிக்கான போட்டி வலுத்து வருகிறது. ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலரும் போட்டியிடுகிறார் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார். செப் பிளாட்டர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஃபிஃபாவின் அடுத்த தலைவருக்கான போட்டி சூடுபிடித…

  19. இனவெறித்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற பிரபல வீரர்! பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ (Mendeley Kumalo) திடீர் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலில் பலத்த காயமடைந்த குமலோ (Mendeley Kumalo) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் …

    • 0 replies
    • 281 views
  20. வார்த்தைகளால் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் கோலி: பிஷன் பேடி காட்டம் வெற்றி பெற்று விட்டோம் அதற்காக அதனை நாராசமாக கொண்டாடுவதா? என்று கேட்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. | கோப்புப் படம்: வி.வி.சுப்ரமணியம். தேவையற்ற ஆக்ரோஷம் இசாந்த் சர்மாவின் தடையில் பரிதாபமாக முடிவடைந்துள்ளது என்று கூறிய முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, விராட் கோலி தனது ஆக்ரோஷம் பற்றிய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் பிஷன் சிங் பேடி கூறியதாவது: “ஆக்ரோஷம் பற்றிப் பேசிப் பேசியே கடைசியில் அது இசாந்த் சர்மாவின் தடையில் முடிந்துள்ளது. இதுதான் கிரிக்கெட் களத்திலிருந்து நாம் விரும்புவதா? இது பரிதாபமிக்க ஆக்ரோஷ வெளிப்பாடு. இன்னொன்றை…

  21. 12 FEB, 2025 | 12:02 PM (நெவில் அன்தனி) இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ம…

  22. விலகுகிறது பெப்சி *பிரிமியர் தொடருக்கு சிக்கல் புதுடில்லி: பிரிமியர் தொடர் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில்’ இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ல் துவக்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட். உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சராக’ 2008 முதல் 2012 வரை பிரபல கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) இருந்தது. பின் 2013 முதல் 2017 வரை ரூ. 397 கோடிக்கு, பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் ஆனது. இன்னும் இரு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பெப்சி நிறுவனம், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளது. இதில்,‘ சூதாட்ட பிரச்னைகளால் பிரிமியர் தொடர் மற்றும் க…

  23. பாகிஸ்தான் செல்வது ஆபத்து சிம்பாப்வேயை எச்சரிக்கிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்­தா­னுக்கு செல்­வது ஆபத்­தா­னது என்றும் அங்கு போதி­ய­ளவு பாது­காப்பு இல்லை என்றும் சிம்­பாப்வே அணிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது சர்­வ­தேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் சென்று விளை­யாட சிம்­பாப்வே அணி அண்­மையில் ஒப்­புதல் கொடுத்­தது. ஆனால், இந்த ஒப்­பு­தலை மீள் பரி­சீ­லனை செய்­யுங்கள் என்று சிம்­பாப்­வேக்கு ஆலோ­சனை தெரி­வித்­துள்­ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்­தினர். இந்த சம்­ப­வத்­துக்குப் பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளை­யாட தயக்கம்…

  24. முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ணத் தொடர் எதிர்­வரும் 7ஆம் திகதி ஆரம்­பிக்­கி­றது. 2012ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆ­வது முறை­யாக நடை­பெறும் முரளி ஹார்­மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணி­களும், 8 பெண்கள் அணி­களும் பங்­கு­பற்­று­கின்­றன. இந்தப் போட்­டிகள் அனைத்தும் வடக்குப் பகு­தி­யி­லுள்ள மைதா­னங்­களில் நடை­பெ­றுகின்­றமை விசேட அம்­ச­மாகும். யாழ்ப்­பாணம், ஒட்­டுச்­சுட்டான், மாங்­குளம், கிளி­நொச்சி ஆகிய பிர­தேச மைதா­னங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்­லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூரி, மலி­ய­தேவ கல்­லூரி, மொனரா­கலை ஆகிய அணி­கள…

  25. பெடரருக்கு அதிர்ச்சியளித்த டெல் போட்ரோ: அரையிறுதியில் நடாலைச் சந்திக்கிறார் யு.எஸ். ஓபன் காலிறுதியில் டெல் போட்ரோவிடம் தோல்வியடைந்த பெடரர். - படம்.| ஏ.பி. யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்டின் டெல் போட்ரோ தகுதி பெற்றார், இன்று நடந்த காலிறுதியில் ரோஜர் பெடரரை 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். ரபேல் நடால் தான் பெடரருக்காகக் காத்திருப்பதாக பேட்டி அளித்திருக்கும் சமயத்தில் யுவான் டெல் போட்ரோ அபாரமான ஆட்டத்தில் பெடரரை வெளியேற்றி நடாலைச் சந்திக்க தயாராகியுள்ளார். யுவான் டெல் போட்ரோ 2009-ல் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.