விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 604 views
-
-
சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…
-
- 0 replies
- 470 views
-
-
ஒலிம்பிக்கில் தடம் பதிக்கும் ஏதிலிகள் : ‘ஏதிலிகள் ஒலிம்பிக் அணி‘யும் அதன் வரலாறும் ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம்பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே ஏதிலிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமூகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே ஏதிலிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு. இந்த நிலையில் ஏதிலிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப…
-
- 0 replies
- 452 views
-
-
தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டி: மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இயன் மார்கன் சதத்தால் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்ஸ்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. கேப்டன் இயன்மோர்கன் 93 பந்தில் 107 ரன் எடுத்தார். ஹால்ஸ் 61 ரன்னும்,…
-
- 0 replies
- 332 views
-
-
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்தும் வாய்ப்பில்லை * ஐ.சி.சி. கூறுகிறது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்த வாய்ப்பில்லை என்பதை ஐ.சி.சி. தலைமை நிர்வாகி விளக்கியுள்ளார். மேற்கிந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணப் போட்டி நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டு போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடனும் உண்டு. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையாவது குறைந்த காலத்தில் நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறியதாவது; அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை (2011 ஆம் ஆண்…
-
- 0 replies
- 840 views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த் 3ஆம் திகதி சில்…
-
- 0 replies
- 469 views
-
-
கனடா- ரொறொன்ரோவில் இடம்பெற இருக்கும் Pan Am மற்றும் Parapan American விளையாட்டுகளிற்கான பதக்கங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் கோடைகாலத்தில் நடக்கும் இந்த விளையாட்டுகளில் 4,000ற்கும் மேற்பட்ட பதக்கங்கள் கையளிக்கப்படும். விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்னத்திற்காக போட்டியிடுகின்றார்கள் என்ற சிறந்த சிந்தனையை பெறக்கூடியதாக இருக்கும். அதிகார பூர்வமான மெட்டல் விநியோகஸ்தர்கள் பறிக் கோல்ட் நிறுவனத்தினர் ஆவர். கனடிய அரச கூட்டுத்தாபனமான றோயல் கனடியன் மின்ட் பதக்கங்களை வடிமைக்கும். Pan Am விளையாட்டுக்கள் எதிர்வரும் யூலை மாதம் 10-26 வரை நடைபெறும். Parapan American ஆகஸ்ட் மாதம் 7-14 வரை இடம்பெற உள்ளது. 41-நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,600 விளையாட்டு வீரர்கள் போட்டிகளி…
-
- 0 replies
- 411 views
-
-
சங்காவை முந்தினார் மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 860 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பெற்றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார 851 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கை விக்கெட் காப்பாளர் சந்திமால் (646 புள்ளிகள்) 23ஆவது இடத்திலும், திரிமான்ன 4 இடங்கள் முன்னேறி 78ஆவது இடத்தையும் பிடித்த…
-
- 0 replies
- 234 views
-
-
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=52843
-
- 0 replies
- 315 views
-
-
22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது. இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124…
-
- 0 replies
- 314 views
-
-
எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு …
-
- 0 replies
- 262 views
-
-
ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு : அடுத்த தோனி வங்கதேசத்தில் இருக்கிறார்! இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம். அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை... என தோனியின் கலவையாகத் தெரிகிறார் ரிசாப் பன்ட். அதிரடி வீரர் கில்கிரிஸ்ட்தான் நம்ம ரிசப்பிற்கும் ரோல் மாடல். அதிரடியிலும் அவரை போல்தான் என்பதை நேபாளத்திற்கு எதிராக பின்னி பிடலெடுத்தை பார்த்த போதே தெரிந்தது. நேபாளத்திற்கு எதிராக 24 பந்துகளில் 78 ரன்களை விளாசிய இந்த பன்ட் யார்? இளையோர் உலகக் கோப்பையின் விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டன்தான் இந்த பன்ட். இடது கை ஆட்டக்காரர். கூடவே விக்கெட் கீப்பர் என களத்தில் இரு கடினமான பணிகள். நமக்கு தோனியாக பன்ட் தெரிந்தாலும் அவருக்கு ஹீரோ கில்கிறிஸ்ட்தான். முதல் பந…
-
- 0 replies
- 593 views
-
-
ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…
-
- 0 replies
- 308 views
-
-
இங்கிலாந்தின் தலைவியாக ஹீதர் நைட் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது. 2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் 55…
-
- 0 replies
- 442 views
-
-
இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தோவா எல்போபஷி, நடா மீவாட் இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர். ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் …
-
- 0 replies
- 409 views
-
-
ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் காலிறுதிப் போட்டியில் சிந்து | படம்: ஏஎப்பி உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து. மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக…
-
- 0 replies
- 358 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங் களில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றிபெற்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018-ம் ஆண்டு நடை பெற உள்ளன. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஆம்ஸ் டர்டாம் நகரில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. பிரான்ஸ் அணிக்காக முன்னணி வீரர் பால் போக்பா கோல் அடித் தார். ‘ஹெச்’ பிரிவில் நடந்த போட் டியில் பெல்ஜியம் அணி 6-0 என்ற கோல்கணக்கில் கிப்ரா…
-
- 0 replies
- 200 views
-
-
முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். …
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் - இந்தியா அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ணத் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இ…
-
- 0 replies
- 324 views
-
-
பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வீனஸ் வில்லியம்ஸ்! டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்துகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளால் நிலைகுலைந்த வீனஸ், கண்ணீர்விட்டு அழுதார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால், கடும் சிக்கலில் உள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். அதனால், பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில், நேற்று வீனஸ் வ…
-
- 0 replies
- 353 views
-
-
மும்பையும் கைவிடுகிறதா.? 2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும், இதுதவிர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்படையில் தக்க வைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் லசித் மல…
-
- 0 replies
- 449 views
-
-
இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை! நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை. இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான். விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வ…
-
- 0 replies
- 530 views
-
-
2018 கால்பந்து உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் இரண்டாவது நாளான ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை. அதில், உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களுக்கு போர்ச்சுகல் மற்ற…
-
- 0 replies
- 406 views
-
-
கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத் ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுத்த பந்துவீச்சாளராகவே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது கடைசி தொடருக்கு முந்திய போட்டிகளிலும் கூட அவரது அச்சுறுத்தல் பந்துவீச்சு தொடர்கிறது. இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்துடனான போட்டிகளோடு அவர் ஓய்வு பெறுவதற்கு காத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதன் பின்னர் ரங்கன ஹேரத் இலங்கையின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக பொறுப்பேற்றது ரோலர் கொஸ்டரில் செல்வது போல சவால் மிக்கதாக இருந்தது. …
-
- 0 replies
- 401 views
-