விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
பிரேசில் கால்பந்து வீரர் ககா ரூ. 635 கோடிக்கு ஒப்பந்தம்? [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ககா. இவர் இத்தாலியில் உள்ள ஏ.சி.மிலன் கழகத்துக்காக விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டு வரை அவரது ஒப்பந்தம் அந்தக் கழகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியல் மாட்ரிட் கழகம் ககாவை தங்கள் கழகத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. இதற்காக ரூ.635 கோடி தர இருப்பதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. மிலன்கழகத்தில் இருந்து ரியல் மாட்ரிட் கழகத்துக்கு மாறுவது குறித்து ககா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ரியல் மாட்ரிட் கழகத்தின் ஒப்பந்தத்தில் ககா கையெழுத்திட்டால் கால்பந்து வரலாற்றில் அதிகமான பணம் பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹர்திக் பாண்டியா – கேஎல் ராகுல் மீதான தடை நீக்கம்: January 25, 2019 இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்ததனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவர்கள் மீது தடை விதித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பியிருந்ததுடன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதா…
-
- 0 replies
- 345 views
-
-
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதியில் ஜூவாலா கட்டா ஜோடி! இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில், இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி, காலியிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரும் காலிறுதிக்கு சென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி ஜோடி, ஜப்பானின் ரேய்கா- மியாகி ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் சுற்றை 21-15 என்ற செட்கணக்கில் வென்ற கட்டா ஜோடி, இரண்டாவது செட்டை 18-21 என்ற செட்டில் இழந்தது. இதைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடி இந்திய ஜோடி, 3வது செட்டை 21-19 என்று கைப்பற்றி காலியிறுத்திக்கு முன்னேறியது. முன்னதாக நடைபெற்ற…
-
- 0 replies
- 335 views
-
-
இன்று இலங்கை வருகிறார் சகலதுறை ஆட்டக்காரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் என்று போற்றப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இன்று இலங்கை வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோர்பஸ் – திஸேரா போட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தப்போட்டியை பார்வையிடுவதற்கே சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கைக்கு வருகைதருகிறார் என்று…
-
- 0 replies
- 357 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் இலகு வெற்றி By Mohamed Azarudeen - ©AFP ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தமது சுற்றுப் பயணத்தில் ஒருநாள், T20 தொடர்கள் நிறைவடைந்த பின் தற்போது ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றன. அந்தவகையில், ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இந்தியாவின் லக…
-
- 0 replies
- 655 views
-
-
இங்கிலாந்துக்கு ஓடியது ஏன்?: தென்ஆப்ரிக்காவில் பீட்டர்சனை போட்டுத் தள்ளிய இந்திய வம்சாவளி! கெவின் பீட்டர்சன்... தந்தை நாடான தென்ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி, தாய் நாடான இங்கிலாந்து அணியில் ஏன் இணைந்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளும் விஷயம் இது. கெவினின் தந்தை தென்ஆப்ரிக்காக்காரர். தாய் இங்கிலாந்து நாட்டவர். அந்தவகையில் கெவினுக்கு இங்கிலாந்துடன் தொடர்பு இருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு வாக்கின் கெவின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். சரி... இங்கிலாந்துதான் அவருக்கு பிடித்திருக்கிறது என பெற்றோர்கள் விட்டு விட்டனர். கொஞ்ச காலம் கவுண்டி கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனின் காலம் கழிந்தது. அடுத்த நான்கே ஆண்டுகளில் …
-
- 0 replies
- 520 views
-
-
(பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி) தமது சொந்த மண்ணில் பத்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி தமது தேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இலங்கைக்கு எதிராக கராச்சியில் இன்று நிறைவுபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. வல்லவர் தொடர்களை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக் கொண்டது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 212 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 16 பந்துகளில் மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் தனது எஞ்சிய 3 விக்கெட்களை இழந்து தோல்வ…
-
- 0 replies
- 466 views
-
-
சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசையை FIFA அறிவித்துள்ளது, இந்தப் பட்டியலில் ஆர்ஜண்டீனா அணி முதலிடம் பிடித்துள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் 2 ம்,3 ம் இடத்தை பிடித்துள்ள நிலையில் கொலம்பியா அணி 4 வது இடத்தையும்,5 வது இடத்தை பிரேசில் அணியும் பிடித்துள்ளன. சிலி,போர்த்துக்கல், பிரான்ஸ்,உருகுவே, வேல்ஸ் ஆகிய அணிகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன http://vilaiyattu.com/சர்வதேச-கால்பந்து-தரவரி/
-
- 0 replies
- 346 views
-
-
டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்! தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்வி…
-
- 0 replies
- 525 views
-
-
யாழ். மண்ணின் முன்னாள் வீராங்கனையும் வீரரும் தேசிய விளையாட்டு விழா தீபத்தை ஏற்றவுள்ளனர் 2016-09-26 12:10:41 (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவுக்கான தீபத்தை ஏற்றும் சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கும் வீரர் ஒருவருக்கும் கிடைத்துள்ளது. இலங்கை வலைபந்தாட்டம் மற்றும் மகளிர் கூடைபந்தாட்ட அணிகளில் இடம்பெற்றவரும் வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி மற்றும் ஆசியாவின் முன்னாள் அதி சிறந்த கோல்போடும் வீராங்கனையுமான ஜயன்தி சோமசேகரம் டி சில்வாவுக்கு விளையாட்டு விழா தீபத்தை ஏற்றும் அரிய சந்தர்ப்ப…
-
- 0 replies
- 367 views
-
-
இளைய சகோதரருக்காக வெற்றி வாய்ப்பை தியாகம் செய்த ஒலிம்பிக் ட்ரைஅத்லன் சம்பியன் அலிஸ்டெயார் பிறவுண்லீ 2016-09-30 15:12:21 'ட்ரைஅத்லன்” (மூவம்ச ) போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான பிரித்தானிய வீரர் அலிஸ்டெயார் பிறவுண்லீ, மெக்ஸிகோவில் அண்மையில் நடைபெற்ற உலக மூவம்ச விளையாட்டுப் போட்டியில் (வேர்ல்ட் ட்ரைஅத்லன்) தனது இளைய சகோதரர் ஜோனி படும் அவஸ்தையைக் கண்டு தனது வெற்றி வாய்ப்பை அலிஸ்டெயார் பிறவுண்லீ தியாகம் செய்த மனிதாபிமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. நீச்சல், சைக்கிளோட்டம், ஓட்டம் ஆகிய மூன்று நிகழ்ச்சிகளைக் கொண்டதே மூவம்ச விளையாட்டுப் போட்டி (ட்ரைஅத்லன்) ஆகும். மெக்ஸிகோவில் நடைபெற்ற …
-
- 0 replies
- 357 views
-
-
10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளினார். * முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இன்னிங்சிலும் 6 வி…
-
- 0 replies
- 322 views
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம் முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத்…
-
- 0 replies
- 307 views
-
-
2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல் 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார். கொழும்பு: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்…
-
- 0 replies
- 329 views
-
-
டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர் r டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன. தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன. 22 வயதிற்குட்பட்டோர் …
-
- 0 replies
- 274 views
-
-
சுத்தம் செய்யும் வேலையை உங்கள் நாட்டிலிருந்து தொடங்குங்கள் லீ மேன்: மார்க் பவுச்சர் கடும் சாடல் மார்க் பவுச்சர். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ் ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்து தென் ஆப்பிரிக்க மைதானங்களில் ரசிகர்கள் செயல்படுகின்றனர், இது நல்லதல்ல, அவர்கள் வரம்பு மீறுகிறார்கள் என்றும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது என்றும் ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறியதற்கு தென்னாப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து மார்க் பவுச்சர் தன்…
-
- 0 replies
- 253 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி துபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐசிசியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆண்டுதோறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி ஒருநாள் அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமி, விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கும் இடம் கி…
-
- 0 replies
- 531 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது. ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீ…
-
- 0 replies
- 458 views
-
-
மூன்றாவது முறையாக தங்கம் வென்றது வடக்கு அணி ! நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாண தெரிவு அணி மற்றும் தென்மாகாண தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேரமுடிவில் வடக்கு மாகாண அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய சம்பியனாகியகியதுடன் தேசிய பொது விளையாட்டு நிகழ்வில் உதைபந்தாட்டத்தில் மூன்றாவது தங்கத்தினை தனதாக்கியிருக்கிறது. வடக்கு அணி சார்பில் தேசிய வீரரும் குருநகர் பாடும்மீன் கழக வீரருமான கீதன் இரு கோலினையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதுடன் கீதன் இத் தொடரில் 4 கோல்களை வடக்கு மாகாண அணிசார்பில் அடித்ததுடன், அக் கோல்கள் அரைய…
-
- 0 replies
- 216 views
-
-
உலக கோப்பையில் மறக்க முடியாத போட்டி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் விளையாடிய காலிறிதி ஆட்டம். குறிப்பாக Wahab Riaz பந்து வீச்சு பற்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேச ஆரம்பித்துள்ளனர். "இதுதான் கிரிக்கெட் விளையாட்டு, Watson, ஆடமிளக்காமல் நின்றது அதிஸ்டமே. இவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அபாரமான பந்து வீச்சு". என்று கூறியுள்ளார் Ricky Ponting. மற்றும் Brian Lara, "இந்த பந்து வீச்சில் Watson கிரிக்கெட் பாடசாலை மட்டதிக்கு சென்று விட்டது, Wahab Riaz ஐ நேரில் காணும் போது இவரின் அபராத தொகையை நான் செலுத்துவேன்". http://www.cricket.com.au/news/ricky-ponting-praises-wahab-riaz-and-shane-watson-as-brian-lara-hits-out-at-icc/2015-03-23
-
- 0 replies
- 532 views
-
-
ஐபிஎல் 2019: யாரை, எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? -சிவா ஐபிஎல் 2019 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. ஏலத்தில் நடைபெற்ற இறுதி முடிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு வீரரைத் தேர்ந்தெடுப்பதிலும் அணிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம். ஏலத்தில் முதல் வீரராக அறிவிக்கப்பட மனோஜ் திவாரி விற்கப்படாமலே போனார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடிய சத்தேஸ்வர் புஜாராவும் விற்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மியர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடியபோது அசத்திய ஷிம்ரோனின் அடிப்படை விலை ஐம்பது லட்சமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளு…
-
- 0 replies
- 716 views
-
-
பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…
-
- 0 replies
- 195 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்க முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களும் இலங்கை 263 ஓட்டங்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெ…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
மூத்த வீரர்களை தோனி சீண்டுகிறார் முன்னாள் கப்டன்கள் ஆவேசம் இந்திய அணியில் மூத்தவர்கள், இளையவர்கள் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதை கப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் மூத்த வீரர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாகக் கூறியுள்ளனர். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த `ருவென்டி - 20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மூத்த வீரர்களான சௌரவ் கங்குலி,…
-
- 0 replies
- 1k views
-