விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசையை FIFA அறிவித்துள்ளது, இந்தப் பட்டியலில் ஆர்ஜண்டீனா அணி முதலிடம் பிடித்துள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் 2 ம்,3 ம் இடத்தை பிடித்துள்ள நிலையில் கொலம்பியா அணி 4 வது இடத்தையும்,5 வது இடத்தை பிரேசில் அணியும் பிடித்துள்ளன. சிலி,போர்த்துக்கல், பிரான்ஸ்,உருகுவே, வேல்ஸ் ஆகிய அணிகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன http://vilaiyattu.com/சர்வதேச-கால்பந்து-தரவரி/
-
- 0 replies
- 353 views
-
-
டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்! தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்வி…
-
- 0 replies
- 532 views
-
-
யாழ். மண்ணின் முன்னாள் வீராங்கனையும் வீரரும் தேசிய விளையாட்டு விழா தீபத்தை ஏற்றவுள்ளனர் 2016-09-26 12:10:41 (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவுக்கான தீபத்தை ஏற்றும் சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கும் வீரர் ஒருவருக்கும் கிடைத்துள்ளது. இலங்கை வலைபந்தாட்டம் மற்றும் மகளிர் கூடைபந்தாட்ட அணிகளில் இடம்பெற்றவரும் வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி மற்றும் ஆசியாவின் முன்னாள் அதி சிறந்த கோல்போடும் வீராங்கனையுமான ஜயன்தி சோமசேகரம் டி சில்வாவுக்கு விளையாட்டு விழா தீபத்தை ஏற்றும் அரிய சந்தர்ப்ப…
-
- 0 replies
- 372 views
-
-
இளைய சகோதரருக்காக வெற்றி வாய்ப்பை தியாகம் செய்த ஒலிம்பிக் ட்ரைஅத்லன் சம்பியன் அலிஸ்டெயார் பிறவுண்லீ 2016-09-30 15:12:21 'ட்ரைஅத்லன்” (மூவம்ச ) போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான பிரித்தானிய வீரர் அலிஸ்டெயார் பிறவுண்லீ, மெக்ஸிகோவில் அண்மையில் நடைபெற்ற உலக மூவம்ச விளையாட்டுப் போட்டியில் (வேர்ல்ட் ட்ரைஅத்லன்) தனது இளைய சகோதரர் ஜோனி படும் அவஸ்தையைக் கண்டு தனது வெற்றி வாய்ப்பை அலிஸ்டெயார் பிறவுண்லீ தியாகம் செய்த மனிதாபிமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. நீச்சல், சைக்கிளோட்டம், ஓட்டம் ஆகிய மூன்று நிகழ்ச்சிகளைக் கொண்டதே மூவம்ச விளையாட்டுப் போட்டி (ட்ரைஅத்லன்) ஆகும். மெக்ஸிகோவில் நடைபெற்ற …
-
- 0 replies
- 363 views
-
-
10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை அள்ளினார். * முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இன்னிங்சிலும் 6 வி…
-
- 0 replies
- 330 views
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம் முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத்…
-
- 0 replies
- 312 views
-
-
2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல் 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார். கொழும்பு: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்…
-
- 0 replies
- 335 views
-
-
டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர் r டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன. தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன. 22 வயதிற்குட்பட்டோர் …
-
- 0 replies
- 280 views
-
-
சுத்தம் செய்யும் வேலையை உங்கள் நாட்டிலிருந்து தொடங்குங்கள் லீ மேன்: மார்க் பவுச்சர் கடும் சாடல் மார்க் பவுச்சர். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ் ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்து தென் ஆப்பிரிக்க மைதானங்களில் ரசிகர்கள் செயல்படுகின்றனர், இது நல்லதல்ல, அவர்கள் வரம்பு மீறுகிறார்கள் என்றும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது என்றும் ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறியதற்கு தென்னாப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து மார்க் பவுச்சர் தன்…
-
- 0 replies
- 261 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி துபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐசிசியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆண்டுதோறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி ஒருநாள் அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமி, விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கும் இடம் கி…
-
- 0 replies
- 535 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது. ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீ…
-
- 0 replies
- 461 views
-
-
மூன்றாவது முறையாக தங்கம் வென்றது வடக்கு அணி ! நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாண தெரிவு அணி மற்றும் தென்மாகாண தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேரமுடிவில் வடக்கு மாகாண அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய சம்பியனாகியகியதுடன் தேசிய பொது விளையாட்டு நிகழ்வில் உதைபந்தாட்டத்தில் மூன்றாவது தங்கத்தினை தனதாக்கியிருக்கிறது. வடக்கு அணி சார்பில் தேசிய வீரரும் குருநகர் பாடும்மீன் கழக வீரருமான கீதன் இரு கோலினையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதுடன் கீதன் இத் தொடரில் 4 கோல்களை வடக்கு மாகாண அணிசார்பில் அடித்ததுடன், அக் கோல்கள் அரைய…
-
- 0 replies
- 224 views
-
-
உலக கோப்பையில் மறக்க முடியாத போட்டி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் விளையாடிய காலிறிதி ஆட்டம். குறிப்பாக Wahab Riaz பந்து வீச்சு பற்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேச ஆரம்பித்துள்ளனர். "இதுதான் கிரிக்கெட் விளையாட்டு, Watson, ஆடமிளக்காமல் நின்றது அதிஸ்டமே. இவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அபாரமான பந்து வீச்சு". என்று கூறியுள்ளார் Ricky Ponting. மற்றும் Brian Lara, "இந்த பந்து வீச்சில் Watson கிரிக்கெட் பாடசாலை மட்டதிக்கு சென்று விட்டது, Wahab Riaz ஐ நேரில் காணும் போது இவரின் அபராத தொகையை நான் செலுத்துவேன்". http://www.cricket.com.au/news/ricky-ponting-praises-wahab-riaz-and-shane-watson-as-brian-lara-hits-out-at-icc/2015-03-23
-
- 0 replies
- 540 views
-
-
ஐபிஎல் 2019: யாரை, எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? -சிவா ஐபிஎல் 2019 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. ஏலத்தில் நடைபெற்ற இறுதி முடிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு வீரரைத் தேர்ந்தெடுப்பதிலும் அணிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம். ஏலத்தில் முதல் வீரராக அறிவிக்கப்பட மனோஜ் திவாரி விற்கப்படாமலே போனார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடிய சத்தேஸ்வர் புஜாராவும் விற்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மியர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடியபோது அசத்திய ஷிம்ரோனின் அடிப்படை விலை ஐம்பது லட்சமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளு…
-
- 0 replies
- 720 views
-
-
பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…
-
- 0 replies
- 202 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்க முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களும் இலங்கை 263 ஓட்டங்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெ…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
மூத்த வீரர்களை தோனி சீண்டுகிறார் முன்னாள் கப்டன்கள் ஆவேசம் இந்திய அணியில் மூத்தவர்கள், இளையவர்கள் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதை கப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் மூத்த வீரர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாகக் கூறியுள்ளனர். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த `ருவென்டி - 20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மூத்த வீரர்களான சௌரவ் கங்குலி,…
-
- 0 replies
- 1k views
-
-
தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு ! இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணியின் கேப்டன் தோனி, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சன்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில், இது 100 சதவீதம் உண்மை என்றும் அவர் குறிப்…
-
- 0 replies
- 524 views
-
-
டிக்கெட் விற்பனையில் முறைகேடு: பிஃபா முன்னாள் பொதுச்செயலாளருக்கு 12 ஆண்டுகள் தடை! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக பிஃபா முன்னாள் பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கிக்கு 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவில் பெரும் ஊழல் நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஜோசப் பிளேட்டர் பதவி விலக நேரிட்டது. அத்துடன் பொதுச் செயலளாளராக இருந்த ஜெரோம் வால்கி மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்புவது குறித்த மீடியா உரிமையை வழங்குவதிலும் மற்றும் டிக்கெட் விற்பனையிலும் ஜெரோம் வால்கி, …
-
- 0 replies
- 437 views
-
-
பதவி விலகினார் வக்கார் யுனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்றுநரான வக்கார் யுனிஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவுபெறுவற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகள் உட்பட, அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணி, சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். உலக இருபதுக்கு-20 தொடர் நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் அணியின் தோல்விகள் தொடர்பாக, அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி உட்பட கிரிக்கெட் சபை, கிரிக்கெ…
-
- 0 replies
- 590 views
-
-
ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: முதலிடத்தில் அவுஸ்திரேலியா; 7ஆம் இடத்தில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) டெஸ்ட் தரப்படுத்தலில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்து, புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனது முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இரண்டாமிடத்திலுள்ள அணியுடனான தனது இடைவெளியை, ஆறாக அதிகரித்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மூன்றாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, 3 இடங்கள் பின்தங்கி, ஆறாவது இடத்துக்குப்…
-
- 0 replies
- 305 views
-
-
2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. அதைத் தொடர்ந்து 8 ஆவது இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து உயர்வடைந்து செல்கின்றமையினால் தகுதி சுற்ற…
-
- 0 replies
- 623 views
-
-
லார்ட்ஸ்...இங்கிலாந்து...6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முகமது ஆமிர்! #ThrowbackThursday ஆகஸ்ட் 2010, சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் படுதோல்வி அடைந்து திரும்பியது. தொடர் நாயகன் முகமது ஆமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வேன்டுமென்றே நோபால் வீசியது தெரிய வந்து 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் திரும்ப களம்கண்ட ஆமீர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கில்லியாகியுள்ளார். அணிக்கு திரும்பியதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். உலகின் அதி பயங்கர வீரர்களான கோலி, டிவில்லியர்ஸையே டி20 போட்டிகளில் நிலை குலைய வைத்தார். ஆசியக் கோப்பையில் இந்தியாவை அலறவிட்ட ஆமீருக்கு ஒரு பேட்டை பரிசளிப்பதாக கோலி கூறி உலகக் கோப்பையில் அதன…
-
- 0 replies
- 188 views
-
-
அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை ஜேசன் ஹோல்டரை புல் ஷாட்டில் பவுண்டரி அடிக்கும் கோலி. | படம்: ஏ.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 200 நாட் அவுட், அஸ்வின் 64 நாட் அவுட். இதன் மூலம் அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி. நேற்று 143 நாட் அவுட் என்று இன்று தொடங்கிய விராட் கோலி கண்கொள்ளாக் காட்சி கவர்டிரைவ்களை தொடர்ந்தார். நேற்று 1…
-
- 0 replies
- 372 views
-