விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை ஜேசன் ஹோல்டரை புல் ஷாட்டில் பவுண்டரி அடிக்கும் கோலி. | படம்: ஏ.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 200 நாட் அவுட், அஸ்வின் 64 நாட் அவுட். இதன் மூலம் அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி. நேற்று 143 நாட் அவுட் என்று இன்று தொடங்கிய விராட் கோலி கண்கொள்ளாக் காட்சி கவர்டிரைவ்களை தொடர்ந்தார். நேற்று 1…
-
- 0 replies
- 373 views
-
-
ரங்கன ஹேரத்தின் புதிய பாதை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சமுக வலைத்தளமான உத்யோகப்பூர்வ டிவிட்டர் தளத்தில் நேற்று (02) இணைந்தக்கொண்டுள்ளார். இவரின் முதலாவது டுவிட்டாக மெத்தியுஸ், சந்திமல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்து பகிர்ந்துள்ளார். http://www.virakesari.lk/article/9729
-
- 0 replies
- 465 views
-
-
நல்ல வேளை ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றீர்கள்; நான் கொஞ்சம் ரன் அடிக்கலாம்: ஹெராத்திடம் கூறிய ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிராக 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தான் அவுட் ஆன ஷாட், ஹெராத்தின் அபாரப் பந்து வீச்சு குறித்து விரிவாகப் பேசினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொள்கிறேன் என்று ரங்கனா ஹெராத்திடம் நட்பு முறையில் நகைச்சுவையாகக் கூறியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் ஸ்மித் கூறியிருப்பதாவது: குறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கனா ஹெராத் இல்லை என்பதை அறிகிறேன். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில…
-
- 0 replies
- 267 views
-
-
ஓய்வின்போது மனம் திறந்த டில்ஷான் (வீடியோ இணைப்பு) இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ண டில்ஷான் கூறியுள்ளார். நேற்று (28) ஆஸி அணிக்கெதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனினும் அணியின் தலைவராக ஆறு மாதத்திற்கு மாத்திரம் …
-
- 0 replies
- 419 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் முதலிடத்தை இழக்கிறார் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் முதலிடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் முதல் நிலை வீராங்கனையான செரீனா, அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து விளை யாடினார். செரீனா தோல்வி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரை இறுதியில் விளையாடிய பிளிஸ்கோவா எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடி முதல் …
-
- 0 replies
- 276 views
-
-
கனடா வீரர் நடுவரின் கண்ணில் தாக்கியதால், பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி பிரிட்டன் மற்றும் கனடா டென்னிஸ் அணிகள் இடையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைக்கான ஆட்டத்தில், கனடா விளையாட்டு வீரர் ஒருவர், நடுவரின் கண்ணில் டென்னிஸ் பந்தை அடித்து காயமுற செய்த அசாதரணமான சூழ்நிலையால் பிரிட்டன் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகனடாவுக்காக முதல்முறைாக டேவிஸ் கோப்பையில் டெனிஸ் ஷாபோவாலோவ் விளையாடியுள்ளார் ஒட்டவாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின்போது, பிரிட்டனின் கைல் எட்மண்ட்ஸின் பந்தை 17 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷாபோவாலோவ் சந்தித்தபோது, அது கோட்டுக்கு வெளியே விழுந்த கோபத்தில…
-
- 0 replies
- 320 views
-
-
ஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம் சுவிஸ் நாட்டை சேர்ந்த யுலி ஸ்டெக் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த்தாக நேபாள சுற்றுலா அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைSCHWEIZER FERNSEHEN Image captionயூலி ஸ்டெக் விபத்தில் மரணம் "ஸ்விஸ் மெஷின்" என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார். நாற்பது வயதான ஸ்டெக், துரிதமாக மலையேறும் திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் காட்மண்டுவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "கீழ் முகாமில் இருந…
-
- 0 replies
- 370 views
-
-
21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா! ஐபிஎல் போட்டிகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம் கால்பந்து அணி சைலன்டாக ஒரு சாதனையைச் செய்துள்ளது. ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1996-ம் ஆண்டு 94-வது இடத்தை இந்திய அணி பிடித்திருந்தது. தற்போது வரை ஃபிஃபா தர வரிசையில், இந்தியாவின் சிறந்த நிலை அதுதான். கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், இந்திய அணி 101-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் மண்ணிலேயே, அந்த அணியை வீழ்த்தியது, கம்போடியா அணியைச் சாய்த்தது ஆக…
-
- 0 replies
- 356 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார். 2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார். இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட…
-
- 0 replies
- 249 views
-
-
தான் இன்னும் ஓய்வு பெறவில்லை - கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களை மறுத்துள்ள கிறிஸ் கெய்ல், மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த டி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை. நேற்றைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு உலக கிண்ணதொடரில் அதிக வயது (42) வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெள…
-
- 0 replies
- 548 views
-
-
பிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வா ( Anthony Joshua )உடன் நடைபெற்ற போட்டியில் 11ம் சுற்றில் கிளிட்ஸ்கோ தோல்வியைத் தழுவினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீளவும் கிளிட்ஸ்கோவுடன் போட்டியிட முடியும் எனவும் லோஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டியை நடத்த முடியும் எனவும் ஜொஸ்வா நம்பிக்கை வெளியிட்டிருந்தார். …
-
- 0 replies
- 340 views
-
-
தன்னை அணியிலிருந்து நீக்கிய இங்கிலாந்துக்கு நன்றி: மனம் திறக்கிறார் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன். - படம். | கெட்டி இமேஜஸ் 2014-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு எழுந்த பலவித சர்ச்சைகளில் பலிகடாவாக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை இங்கிலாந்து நீக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கெவின் பீட்டர்சன் இது குறித்து கூறியதாவது: 2014 ஆஷஸ் தொடருக்குப் பிறகு என்னை இங்கிலாந்து அணி நீக்கியதன் மூலம் எனக்கு நன்மை செய்துள்ளனர். இதனால் என் குடும்பத்தை காப்பாற்ற முடிந்தது, மனைவி குழந்தைகளுடனான உறவை மீட்டெடு…
-
- 0 replies
- 340 views
-
-
மகளிர் கிரிக்கெட் INDIA Vs WI: 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 12 மார்ச் 2022, 06:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் அடித்த தலா ஒரு சதத்தால் இந்தியா 317 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய மேற்கிந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முயன்றபோதும் 162 ரன்களிலேயே சுருண்டது. 12 ஓவர்களில் டாட்டின் மற்றும் மேத்யூஸி…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள் Source - Getty Images ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இவ்வாரம் நடைபெற்ற அதிகமான போட்டிகளில் பங்குபற்றிய அணிகள் போட்டியின் இறுதித் தருவாயிலேயே தமது வெற்றியை உறுதி செய்ததை காணக்கூடியதாக இருந்தது. நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தமது ஆதரவாளர்களுக்கு சிறந்த விளையாட்டை காட்டத் தவறவில்லை. இவ்வாரம் 16 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஓர…
-
- 0 replies
- 340 views
-
-
ஆஸி – இலங்கை அணிகள் மோதும் ...முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று! இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. https://athavannews.com/2022/1286877
-
- 0 replies
- 267 views
-
-
வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி? 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதவிருக்கின்றன. இந்த இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. வரலாறு மாறுமா? தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, ப…
-
- 0 replies
- 628 views
-
-
பாக்.டெஸ்ட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நிலையிலேயே 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலேத மெத்தியூஸ் தலைவராக செயற்படும் அதேவேளை, லகிரு திரிமன்னே உபதலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். கௌசல் சில்வா, உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, கித்துருவன் விதானகே, நிரோஷன் டிக்வெல, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, சமிந்த ஏரங்க, சுரங்க லக்மால், சங்க வெலகெதர, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை டெ…
-
- 0 replies
- 372 views
-
-
மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார் By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:07 PM (என்.வீ.ஏ.) ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய வீரர் எலியுட் கிப்சோகே தனது முன்னைய உலக சாதனையை 30 செக்கன்களால் முறியடித்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் பேர்லின் நிலைநாட்டிய 2 மணி. 01 நி. 09 செக்கன்கள் என்ற தனது சொந்த சாதனையையே கிப்சோகே முறியடித்துள்ளார். இந்த வெற்றியுடன் இதுவரை அவர் பங்குபற்றிய 17 மரதன் போட்டிகளில் 15 வெற்றிகளை ஈட்டியுள்ளார். மரதன் ஓட்டப் போட்டியின் சரி அரைவாசி தூரத்தை 5…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பிரபல தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் பிரபல தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார். இதற்கென நடந்த தேர்வின் ஐந்தாவது சுற்றில்…
-
- 0 replies
- 322 views
-
-
ஐ.சி.சி. யின் டெஸ்ட் அணித் தலைவராக மெத்தியூஸ் நடப்பாண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. டுபாயில் அமைந்துள்ள ஐ.சி.சி.யின் தலைமையகத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ளே இதனை தெரிவித்தார். அந்தவகையில் டெஸ்ட் அணித் தலைவராக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ{ம் ஒருநாள் அணித் தலைவராக இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணித் தலைவர் உட்பட குமார் சங்கக்கார, ரங்கன ஹேரத் ஆகிய மூவர் இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன் ஒருநாள் அணியில் அஜந்த மெண்டிஸ் மாத்திரம் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, கடந்த 2006 ஆம்ஆண்டு முதல் 7 முறை ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியில…
-
- 0 replies
- 432 views
-
-
சர்வதேச கால்பந்து தரவரிசை பிரேசில் அணி மீண்டும் முதலிடத்தில் [20 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதலிடத்திலுள்ளது. கோபா- அமெரிக்க வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரேசில் அணி 6 மாதத்துக்குப் பின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்ஜன்ரீனா 2 ஆம் இடத்திலும் இத்தாலி 3 ஆம் இடத்திலுமுள்ளன. தெற்காசியாவை பொறுத்தவரை மாலைதீவு அணி முதலிடத்திலுள்ளது. இதற்கடுத்ததாக இலங்கை அணி உள்ளது. இந்த உலகத் தரவரிசையில் ஓரிடம் பின்னடைவு பெற்று 162 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய…
-
- 0 replies
- 938 views
-
-
ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய அணி! சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, இத்தொடரை கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், சமநிலைப் பெற்றிருந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில், இன்றைய தினம் மெல்பேர்ன் மைதானத்தில் இரு அணிகளும் களம் கண்டன. அவுஸ்ரேலியா மைதானங்களை பொறுத்தவரை, வெற்றியை தீர்மானிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது நாணய சுழற்சியே. ஆகையால் இப்போட்டியில் முதல…
-
- 0 replies
- 798 views
-
-
60 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்திய அணி: சுவையான தகவல்கள் இலங்கை அணியை அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்த இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி. உலகக் கோப்பை 2015-ன் போது எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் (அரையிறுதி நீங்கலாக) இந்திய அணியினர் வீழ்த்தியது போல் தற்போது இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியை 6 முறை ஆல் அவுட் செய்து 60 விக்கெட்டுகளை இந்திய அணியினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றி 22 ஆண்டுகளூக்குப் பிறகு இலங்கை மண்ணில் சாதனை புரிந்துள்ளது, இந்த தொடர் சார்ந்த முக்கிய புள்ளி விவரங்கள் வருமாறு: 1988-89 நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அந…
-
- 0 replies
- 320 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் பந்துகள் போதிய வெளிச்சமில்லாதபோதும் போட்டிகளைத் தொடரும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பந்தை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (17) அபுதாபியில் முடிவடைந்த இங்கிலாந்து, பாகிஸ்தான அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது 25 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மேற்படி மைதானத்தில் மின்னொளி வசதிகள் இருந்தபோதும் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லையென தனதுஆதங்கத்தைத் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்ட்டீர் குக் தெரிவித்தையடுத்தே மேற்படி கருத்துக்…
-
- 0 replies
- 241 views
-
-
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் கஹ் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188848/
-
- 0 replies
- 370 views
-