விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
தோனி, கில்கிறிஸ்ரின் கையுறைகள் புதிய சர்ச்சை [01 - March - 2008] அவுஸ்திரேலிய தொடரில் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கப்டன் தோனி மற்றும் கில்கிறிஸ்ரின் `கிளவுஸ்' தொடர்பாக சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. முக்கோணத் தொடரின் 10 ஆவது லீக் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் விளாசிய பந்தை, தோனி அருமையாக `டைவ்' அடித்து `கட்ச்' பிடித்தார். அப்போது நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய கீப்பர் இயன் ஹீலி, தோனியின் `கிளவுஸ்' பெரிதாக உள்ளதாக புகார் கூறினார். பொதுவாக விக்கெட் கீப்பரின் `கிளவுஸில்' கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் நன்கு இடைவெளியிருக்க வேண்டும். ஆனால் தோனியின் `கிளவுஸில்' இடைவெளி இல்லாமல…
-
- 0 replies
- 890 views
-
-
ட்வைன் பிராவோ கவலை அதிகபடியான அரசியல் அழுத்தங்களே, மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் விளையாட்டுத் துறையை சீரழிப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் வீரர் ட்வைன் ப்ராவோ இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு மேற்கிந்திய …
-
- 0 replies
- 718 views
-
-
அந்த்ரே ரஸல் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகல துறை வீரர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘ரி 10’ லீக்கில் விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ம் திகதி முதல் 24-ம்திகதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு…
-
- 0 replies
- 379 views
-
-
தலைசிறந்த கேப்டனை இழந்தது நியூசி : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மெக்குல்லம்! முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர். 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர். இவரது பேட்டில் பட்ட பந்துகள் புல்லட் ரயில்களின் வேகத்துக்கு நிகரானவை என வர்ணிக்கப்படுபவர் மெக்கல்லம் . அவரை இனிமேல் ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடியாது ஆம் இன்று நடைபெற்ற போட்டிதான் அவரது கடைசி போட்டி. முதலில் பெற செய்த நியூஸிலாந்தின் துவக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம். பட்டாசை வெடிக்க துவங்கினார் 27 பந்துகளில் 47 ரன்களை குவித்து தெறி மாஸ் காட்டினார். அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே கா…
-
- 0 replies
- 723 views
-
-
நியுசிலாந்து வீரர் லியோ காட்டர் உள்ளுர் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைபுரிந்துள்ளார். நியுசிலாந்தின் சுப்பர்ஸ்மாஸ் போட்டியில் காட்டர் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்து இந்த சாதனையை புரிந்த முதல் நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். நொதேர்ன் டிஸ்ரிக்ட் அணிக்கு எதிரான இருபதிற்கு இருபது போட்டியில் கன்டபெரி கிங்ஸ் அணிக்காக அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன் மூலம் ரி20 போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பெற்ற நான்காவது வீரராக இவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டேவ்சிச்சின் ஓவரிலேயே கார்ட்டர் 36 ஓட்டங்களை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/72572
-
- 0 replies
- 361 views
-
-
பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது: அப்ரிடியை விமர்சித்த நடிகை! கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷில் நடந்து வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து உடைத்தனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் கொடும்பாவிகளையும் எரித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப…
-
- 0 replies
- 554 views
-
-
2.2 ஓவர்களில் ஓட்டமெதுவுமின்றி 6 விக்கெட்களை வீழ்த்திய வீரர் 2016-04-12 09:55:25 இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு சாதனைகளையும் மைல்கல்களையும் அண்மைக்காலமாக நிலைநாட்டி வருகின்றனர். ஊட்டி ஜே எஸ் எஸ் இன்டர்நெஷனல் ஸ்கூலை சேர்ந்த சன்க்ருத் ஸ்ரீராம் என்ற மாணவன் 2014 ஆம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் 486 ஓட்டங்களைக் குவித்து சாதனை புரிந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மும்பை கே சி காந்தி பாடசாலை மாணவனான பிரனவ் தனவாடே ஆட்டமிழக்காமல் 1009 ஓட்டங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டினார். இ…
-
- 0 replies
- 405 views
-
-
சிம்பாப்வே செல்கிறது இந்தியா மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும். மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது. எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-2…
-
- 0 replies
- 455 views
-
-
இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், இலங்கை அணியில் தாராளமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும…
-
- 0 replies
- 492 views
-
-
மழையால் இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் டிரா: நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை டிரா செய்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் பாகிஸ்தான் அதிலேயே நீடித்திருக்கும், ஆனால் மழை இந்தியாவின் முதல் நிலையைத் தக்கவைப்பில் புகுந்து விளையாடி விட்டது. மே.இ.தீவுகளுக்கு எதிரா…
-
- 0 replies
- 230 views
-
-
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியாளர் லீமேன் எச்சரிக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியில் நான்கு வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதியில்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார். ஹோபர்ட்: கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிகரான வீரர்கள் வரவில்லை. இதனால் அந்த அணி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே நிலையான ஆட்டத்தை வ…
-
- 0 replies
- 311 views
-
-
விளையாட்டாய் சில கதைகள்: செஸ் பாதி பாக்ஸிங் பாதி செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளை யாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ் பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்து கொள்வோம். வீரர்களின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் …
-
- 0 replies
- 551 views
-
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐ.பி.எல் போட்டியிலிருந்து நீக்குவது குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் ஜூன் 10ந் தேதி கூடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஐ.பி.எல் சூதாட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இழந்ததாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அணியின் மற்றொரு உரிமையாளரும், குந்தராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கப்படும் என விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து நீக்…
-
- 0 replies
- 351 views
-
-
யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு லோரியஸ் விருது விழாவில் உயரிய விருதுகள் மோனாக்கோவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற லோரியஸ் உலக விளையாட்டுத்துறை விருது விழாவில் 2016ஆம் ஆண்டுக்கான அதி உயர் விருதுகளை யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகிய இருவரும் தமதாக்கிக்கொண்டனர். யூசெய்ன் போல்ட் - சிமோன் பைல்ஸ் எட்டுத் தடவைகள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சம்பியனான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தனர். …
-
- 0 replies
- 275 views
-
-
மாங்குளத்தில் சிறப்புற இடம்பெற்ற சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி! 8 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சிறப்புற இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பானது, வடக்கு கிழக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் உள்வாங்கி தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரது வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு…
-
- 0 replies
- 574 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும். தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP செய்திச் சேவையிடம், "அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். 2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிர…
-
- 0 replies
- 288 views
-
-
ஆஸ்திரியா பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் போட்டாஸ் முதலிடம் ஆஸ்திரியா பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். ஸ்பைல்பெர்க் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்…
-
- 0 replies
- 441 views
-
-
2022 இருபது - 20 உலகக் கிண்ணத்திலும் இலங்கைக்கு போராட்டமே ! (துபாயிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியிலும் இலங்கை முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்திலுள்ளதாலேயே அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடத்தைப் போன்று முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பின்னர் சுப்பர் 12 சுற்றில் பங…
-
- 0 replies
- 372 views
-
-
சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார். நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் டீன் எல்கர், ஹெய்னோ குன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 18 ஆக இருக்கும்போது டீன் எல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில்…
-
- 0 replies
- 621 views
-
-
சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்! கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை எடுத்துள்ளார். 29 வயது கோலி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து மேலும் 350 இன்னிங்ஸ்களை விளையாடி, தற்போது உள்ளதுபோல ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடுகிறபட்சத்தில் சர்வதேச க…
-
- 0 replies
- 439 views
-
-
டேரன் சமிதான் சூப்பர்ஸ்டார்... பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் என்னதான் நடக்கிறது? சத்தமே இல்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது பாகிஸ்தான் சூப்பர் லீக். இந்தியாவின் ஐ.பி.எல் வெற்றியைப் பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஆரம்பித்ததுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக். மூன்றாவது சீசனான இந்த ஆண்டுக்கான போட்டிகள் துபாயிலும், ஷார்ஜாவிலும் நடக்க குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை (மார்ச் 25) கராச்சியில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும், டூமினி தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் 2016-ல் இஸ்லாமாபாத் யுனைடெட் …
-
- 0 replies
- 175 views
-
-
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வழி நடத்த மிஸ்பாவே சரியான நபர்: அப்ரிதி அந்தர் பல்டி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வழி நடத்த மிஸ்பா உல் ஹக்கே சரியான நபர். அவருக்கு எனது முழு ஆதரவையும் அளிப்பேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டரான ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய கேப்டனான மிஸ்பா உல் ஹக், தன்னால் ரன் குவிக்க முடியாததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட அப்ரிதி, போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு தலைமை வகிக்க தனக்கு வாய்ப்புள்ளதாக…
-
- 0 replies
- 307 views
-
-
உலக பெண்கள் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை செரீனா வெற்றி உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளும் முடிவடைந்த பிறகு ஆண்டின் இறுதியில் உலக சாம்பியன் ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீராங்கனைகளும் ‘ரெட்’, ‘ஒயிட்’ என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ரெட்’ ப…
-
- 0 replies
- 372 views
-
-
கிரிக்கெட்டை விடுத்து டென்னிசை பிடிக்கும் கேரள அரசு... ஏன்? திருவனந்தபுரம்: கேரள சுற்றுலா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான விளம்பர தூதராக புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முடிவு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அ…
-
- 0 replies
- 348 views
-
-
'எல்.பி.டபிள்யூ' ஷேன் வாட்சனுக்கு சிக்கல் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்சனை வீழ்த்த அப்பீல் செய்யும் இங்கி. பவுலர் மார்க் உட். | படம்: ராய்ட்டர்ஸ். ஷேன் வாட்சன். | படம்: கெட்டி தொடர்ந்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நோட்டீஸ் பீரியடில் இருப்பதாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். 19 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 14 முறை ஷேன் வாட்சன் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறியுள்ளார். இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் இந்த 14 முறைகளில் 9 முறை அவர் மேல்முறையீடு செய்ததில் ஒருமுறைதான் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமைந்த்து. 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 109 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை மட்டுமே எடுத்துள்ளார், 74 விக்கெட்டுகளைக் கைப்பற்…
-
- 0 replies
- 408 views
-