Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிப்பது எங்கள் வரம்பில் இல்லை: பிசிசிஐ கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுப்பு Published : 03 Mar 2019 14:43 IST Updated : 03 Mar 2019 14:48 IST துபை பிரதிநிதித்துவப் படம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கோரிக்கையை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துவிட்டது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. …

  2. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆஷஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டோன்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் மற்றும் சர்வதேச ஒருநாள் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எலிஸ் பெரி 78 ஓட்டங்களையும் அலெக்ஸாண்ட்ரா பிளக்வெல் 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் நான்காவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இங்கிலாந்து மகளிர் பந்துவீச்சில் கத்தரின் ப்ரன்ட் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலு…

  3. சம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்! ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி இரண்டாவது லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், மென்செஸ்டர் யுனைடெட் அணியும், பார்சிலோனா அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய முதலாவது லெக் போட்டியில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆகையால் இப்போட்டியில், இரு அணிகளுமே மிகப்பெரிய வெற்றியினை நோ…

  4. இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வி…

  5. சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது. அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை …

  6. ஓய்விலிருந்து மீண்டு தென் ஆப்பிரிக்காவுக்காக மீண்டும் ஆட கிரேம் ஸ்மித் விருப்பம் முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சரணடைந்ததையடுத்து முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். 33 வயதிலேயே கிரேம் ஸ்மித் ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் (எம்.சி.எல்) கிரிக்கெட்டுக்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது: "சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப எம்.சி.எல். ஒரு சிறந்த வழியாக அமையலாம். நான் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட வேண…

  7. அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று 9 புதிய போட்டி சாதனைகள் ( நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒருவரான என். டக்சிதாக பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தில் புதிய சாதனை படைத்தார். அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டேறிதல் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டினார். 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன. போட்டியின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஏ. புவிதரன் புதிய சாதனை நிலைநாட்டிய நிலையில் அவரது கல்லூரியைச் சேர்ந்த டக்ச…

  8. பிளட்டர், பிளட்டினியின் குற்றம் உறுதியானது சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் வெளிச்செல்லும் தலைவர் செப் பிளட்டர், அதன் உப தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் தலைவருமான மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தடைக்கெதிராக மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டில், அவர்களது குற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிளட்டினிக்கு செப் பிளட்டர் வழங்கிய 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கொடுப்பனவில், அவர்களிருவருமே குற்றம் இழைத்தார்கள் என, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழு அறிவித்தது. எனினும், அவர்களு…

  9. சச்சினின் அதிவேக ஒருநாள் அரைச்சத சாதனையை முந்திய நேபாள வீரர் By Mohammed Rishad நேபாளம் கிரிக்கெட் அணியின் 15 வயதான கௌஷால் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிர்திபூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் – அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது…

  10. செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை! இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவு…

  11. இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்! மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஏக்டா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய சாம்பியனானது. …

  12. புரூம் சதம் ; நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ…

  13. பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…

  14. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வா?- டி வில்லியர்ஸ் விளக்கம் டி வில்லியர்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி வீரரரான டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ் விலகினார். காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார். ஆனால் அதேவேளையில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டி வில்லியர்ஸ் புறக்கணித்தார். வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ந…

  15. ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்? மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது. இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற…

  16. கிழக்கு மாகாண கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கிண்ணியா பாடசாலைகள் 20 வயதுக்கு கீழ் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கல்முனை வலயத்திலுள்ள மைதானங்களில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இடம்பெற்றது. இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திலும், காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு கிண்ணியா மத்திய கல்லூரியும், கிண்ணியா அரபா மகாவித்தியாலமும் தகுதிபெற்றது. இறுதிப் போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா அரபா மகா வித்தியாலயம் 1 – …

  17. குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன்; சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர். குடோ விளையாட்டில் அதிசிறந்த ஆற்றல் கொண்டவராகத் திகழும் பவிந்தரவர்சன், மாகாண மற்றும் தேசிய மட்ட குடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார். ஆனாலும், அந்தப் போட்டிக்கு அவரா…

  18. புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள் BBCCopyright: BBC பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவருடைய ரசிகர்கள், ரொனால்டோவுக்கும் அவருடைய மனைவிக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் தன் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்சுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப…

  19. டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்: வெயின் பிராவோ சாதனை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2017-18 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ 4 ஓவரில் 28 …

  20. இலங்கை வீரர்களை ஊக்கப்படுத்திய தோனி (காணொளி) இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன்போது இந்திய அணியின் முன்னாள் தலைரும் தற்போதைய விக்கட் காப்பாளருமான தோனி இலங்கை வீரர்களிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. இதில் தோனி இலங்கை வீரர்களான உபுல் தரங்க, அகில தனஞ்சய மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு சில துடுப்பாட்ட யுத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார…

  21. ஐபிஎல் போல கனடாவில் கிரிக்கெட் லீக்: தொழிலதிபர் முயற்சி கனடியன் ப்ரீமியர் லீக் தளத்திலிருந்து... இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், கனடா நாட்டில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தொழிலதிபர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். ராய் சிங் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். கனடிய ப்ரீமியர் லீகை தொடங்குவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக கனடியன் ப்ரீமியர் லீக் டி20-ஐ தொடங்கியுள்ளார். இதற்கான சோதனை ஆட்டத்தை ஏற்கெனவே மாண்ட்ரியலில் நடத்தியும் காட…

  22. “உயர்மட்ட கால்பந்தாட்டத்துக்கு உலகின் ‘அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ இன்னும் தயாராகவில்லை” 8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத் திகழும் ஜமைக்காவின் உசைன் போல்ட் ஓட்டத்திலிருந்து ஓய்வு பெற்றாலும் தன் ஓட்டத்தை கால்பந்தாட்டத்தில் காட்ட முயற்சி செய்து வருகிறார். கிரிக்கெட் ஆட்டம் மீதும் உசைன் போல்ட்டுக்கு பெரிய ஆர்வம் உண்டு என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் உயர்மட்ட கால்பந்தாட்டத்துக்கு உசைன் போல்ட் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்று பொருஸ்ஸியா டார்ட்மண்ட் தலைமைப் பயிற்சியாளர் பீட்டர் ஸ்டோஜர் தெரிவித்துள்ளார். கால்பந்தாட்டத்துக்காக உசைன…

  23. லார்ட்ஸில் டி-சர்ட்டைக் கழற்றி சுழற்றியது தவறுதான்: கங்குலி 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்தை வென்ற பிறகு தனது சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. அப்போது அது ஒரு சர்ச்சையைக் கிளப்பினாலும் அதற்கு முந்தைய தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் பயணம் செய்து ஒருநாள் தொடரை சமன் செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப் தனது சட்டையை மைதானத்திலேயே கழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயலுக்கு பதிலடியாக கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழற்றி ஆக்ரோஷமாகச் சுழற்றியதாகவே அப்போது பார்க்கப்பட்டது. இந்நிலையில், "2002-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தை வென்ற பிறகு, நான் லார்ட்ஸ் மைதானத்தின் என டி-சர்டை கழற்றி ஆக்ரோஷமாக சுழற்றியது …

  24. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உளவியல் ஆலோசகர் 2014-10-31 12:18:20 இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகரும் இங்கிலாந்தின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளருமான ஜெரெமி ஸ்னேப் என்பவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக இலங்கை வீரர்களினது ஆற்றல்களை அதிகரிக்கும் நோக்கில் ஜெரெமி ஸ்னேப்பை உளவியல் ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அஷ்லி டி சில்வா உறுதிபடத் தெரிவித்தார். இதேவேளை, இந்தியா…

  25. உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.