விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
விராட் கோலியின் வினோத சாதனை! இந்தச் சாதனை எந்தவொரு டெஸ்ட் கேப்டனுக்கும் இருக்கமுடியாது. அதிலும் இந்திய அணி நெ.1 அணியாக இருக்கும் இந்த நேரத்தில். இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று தொடங்கியுள்ளது. இது கோலி கேப்டனாக விளையாடும் 29-வது டெஸ்ட். இதுவரை எந்தவொரு டெஸ்டிலும் அதற்கு முன்பு விளையாடிய அதே 11 பேரை கோலி தேர்வு செய்ததில்லை! வீரர்களின் மோசமான பங்களிப்பு, காயம், ஜடேஜாவுக்கு ஏற்பட்ட தடை போன்ற இதர அம்சங்கள் என கோலியின் இந்த நடவடிக்கைக்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால் விஷயம் இதுதான்…
-
- 0 replies
- 667 views
-
-
விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத் ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் …
-
- 0 replies
- 268 views
-
-
விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் புகழாரம் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 350 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரின் அதிரடியான சதமே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. …
-
- 0 replies
- 507 views
-
-
விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார் இந்திய அணி கேப்டனான விராட் கோலியை ஜூன் மாதம் முழுவதும் விளையாட சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. #ViratKohli #Surrey இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை. கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 1…
-
- 2 replies
- 547 views
-
-
விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை ஆஸ்திரேலிய துணை கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்…
-
- 0 replies
- 1k views
-
-
விராட் கோலியைச் சீண்டி கோபப்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் டிசம்பர் 28, 2014-ல் மெல்போர்னில் சதம் எடுத்துத் துள்ளிக் குதிக்கும் கோலியை பார்க்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலியின் பண்பை சோதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். 3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி என்ற சாதனை ஆண்டை கோலி அணியின் வெற்றிகளுடன் கொண்டாடி வரும் நிலையில் பயணிக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அவரது குணாம்சத்திற்கு சோதனை கொடுப்போம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்…
-
- 0 replies
- 323 views
-
-
விராட் கோஹ்லியின் அதகளம் ஷேவாக் சாதனையை முறியடித்தது! #Kohli200 கொலைப்பசியில் இருக்கிறார் விராட் கோஹ்லி. எந்தெந்த அணிகள், எந்தந்த பவுலர்கள் மாட்டுகிறார்களோ, அத்தனை பேரையும் கதி கலங்க வைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உலகக்கோப்பையில் சொதப்பித்தள்ளியிருந்தார் கோஹ்லி. கடும் விமர்சனங்கள் எழ, அதன் பின்னர் வேற லெவல் ஆட்டம் ஆடத் துவங்கியிருக்கிறார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன் நான்காவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட்டாக இருந்தா…
-
- 0 replies
- 527 views
-
-
விராட் தலைமையிலான படையின் 72 ஆண்டுகால சாதனை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியதனூடாக 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிய, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டத்தினாலும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்டத்தினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
விராட்கோலி புதிய மைல்கல்; கேப்டன்ஷியில் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ? இங்கிலாந்துக்கு எதிராக சதம்அடித்த மகிழ்ச்சியில் விராட்கோலி - படம்உதவி: ட்விட்டர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கோலி எட்டியுள்ளார், மேலும் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் தொடங்கி நடந்து வருகிறது. …
-
- 0 replies
- 418 views
-
-
விராட்கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் - கோலி அனுஸ்கா கடும் சீற்றம் By RAJEEBAN 31 OCT, 2022 | 12:45 PM தங்கள் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து அதனை படமெடுத்து வெளியிட்ட நபரை விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் கடுமையாக சாடியுள்ளனர். தங்கள் அந்தரங்கம் மீறப்பட்டுள்ளது என இருவரும் தெரிவித்துள்ளனர். தங்களிற்கு மிகவும் பிடித்தமான வீரர் குறித்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைவதும் பரபரப்பாவதும் அவர்களை சந்திப்பதற்கு துடிப்பதும் எனக்கு தெரியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு விராட்கோலி சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார். நான் அதனை பாரட்டுவேன் ஆனால் இந்த வீடியோ பயங்கரமானது எனது அந்தரங…
-
- 0 replies
- 652 views
- 1 follower
-
-
விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. 208 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக…
-
- 0 replies
- 451 views
-
-
விராத் கோஹ்லி நம்பர்–1 , ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய விராத் கோஹ்லி, ‘டுவென்டி–20’ தரவரிசைப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டில் மொத்தம் 134 ரன்கள்(சராசரி 13.40) தான் எடுத்தார். நான்கு ஒருநாள் போட்டிகளில் வெறும் 54 ரன்கள்(சராசரி 26.00) எடுத்தார். இந்நிலையில், நேற்று ஐ.சி.சி., வெளியிட்ட சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசை பட்டியலில் முதன் முறையாக முதலிடம் பெற்று வியப்பு அளித்துள்ளார் கோஹ்லி. சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், இவர், 41 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 8 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற கோ…
-
- 0 replies
- 505 views
-
-
விருதும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்... புலம்பியபடி வெளியேறிய மெஸ்சி! பொதுவாகவே அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அபாரமாக ஆடுவார் என்றும் தாய்நாட்டுக்காக விளையாடும் போது சொதப்புவார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. கால்பந்து தனிநபர் போட்டி அல்ல. பார்சிலோனாவில் கையாள்வது பெரும்பாலும் ஸ்பெயினின் டிக்கி டாக்கா ஆட்டம். டிக்கி டாக்காவால் எதிரணி வீரர்களுக்கு பந்து அவ்வளவாக கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போது மிக எளிதாக கோலுக்குள் பந்து போகும். அது தவிர அங்கே சேவி, இனியஸ்டா போன்றவர்கள் மெஸ்சிக்கு பந்தை சப்ளை செய்வதில் கை தேர்ந்தவர்கள்.அர்ஜென்டினா அணியில் பார்சிலோனாவின் ஜேவியர் மச்சரானோ, பாரீஸ் செயின்ட் ஜெ…
-
- 0 replies
- 353 views
-
-
விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்று விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக …
-
- 0 replies
- 514 views
-
-
விரைவாக ரன்களை எடுக்க புஜாராவை வலியுறுத்தினோம்: விராட் கோலி படம்.| கே.பாக்யபிரகாஷ். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து தானும் அனில் கும்ப்ளேவும் புஜாராவிடம் விவாதித்து அவர் வேகமாக ரன்களை எடுக்க வேண்டியுள்ளதை வலியுறுத்தினோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான சமீபத்திய தொடரில்தான் சர்ச்சைக்குரிய முறையில் புஜாரா உட்கார வைக்கப்பட்டு ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். புஜாரா அங்கு 67 பந்துகளில் 16 ரன்களையும் பிறகு 159 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டும் கேப்டனையும், கும்ப்ளேவையும் அதிருப்திக்குள்ளாக்கியது. எந்தவொரு ‘நட்சத்திர’ வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடத்தேர…
-
- 0 replies
- 351 views
-
-
விரைவில் பிரச்சினைகள் தீரும்; மனைவியுடன் எப்போதும் போல் இருப்பேன்: மொகமது ஷமி மொகமது ஷமி மற்றும் மனைவி ஜஹான். - கோப்புப் படம். | பிடிஐ. பல பெண்களுடன் தொடர்பு உள்ளது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் வீர்ர் மொகமது ஷமி மீது அவரது மனைவி தொடுக்க, இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது, விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். “ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்தபிறகும் ஷமி என்னை தாக்கினார். அவரது கு…
-
- 7 replies
- 1.8k views
-
-
விறுவிறுப்பான போட்டியில் ஆஸி. திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் திரில் வெற்றியீட்டியுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை 7.00 மணியளவில் விசாகப்பட்டனத்தில் ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, இந்தியா முதலாவதாக ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 127 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆவுஸ்த…
-
- 0 replies
- 447 views
-
-
விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…
-
- 0 replies
- 413 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு, நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி, ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன. ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில், நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அக்குழுவின் வெற்றியாளர்களாக விலகல் முறையிலான சுற்றுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது. லிவர்பூல் சார்பாக, நபி கெய்ட்டா, மொஹமட் சாலா ஆ…
-
- 0 replies
- 589 views
-
-
விலகுகிறது பெப்சி *பிரிமியர் தொடருக்கு சிக்கல் புதுடில்லி: பிரிமியர் தொடர் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில்’ இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ல் துவக்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட். உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சராக’ 2008 முதல் 2012 வரை பிரபல கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) இருந்தது. பின் 2013 முதல் 2017 வரை ரூ. 397 கோடிக்கு, பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் ஆனது. இன்னும் இரு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பெப்சி நிறுவனம், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளது. இதில்,‘ சூதாட்ட பிரச்னைகளால் பிரிமியர் தொடர் மற்றும் க…
-
- 0 replies
- 279 views
-
-
விலக்கப்பட்டார் வான் கால் மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் வான் கால், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கழகம், உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது. அவர் நீக்கப்படும் செய்தி, கடந்த சனிக்கிழமையிலிருந்து வெளிவந்த நிலையிலேயே, தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது இடத்துக்கு, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ, நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்.ஏ கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியைச் சம்பியன் ஆக்கிய பின்னரே, வான் கால் பதவி விலக்கப்பட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தெரிவாகாமை உட்பட, கழகத்தின் அண்மைக்காலப் பெறுபேறுகளில் திருப்தியடை…
-
- 1 reply
- 488 views
-
-
வில்லன் வருகிறார் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கடமையாற்ற 25 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தலா இரண்டு மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பரபரப்பாக்கிய இங்கிலாந்து மத்தியஸ்தர் ஹாவாட் வெப் பின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னும், நெதர்லாந்தும் மோதின. விறுவிறுப்பான அந்தப் போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டிய ஹாவாட் வெப் பரபரப்பாக்கினார். போட்டி முடிவடைந்ததும் நெதர்லாந்து பயிற்சியாளர் பெட்வன் மாவி ஜிக் மத்தியஸ்தரான ஹாவாட் வெப்புடன் தர்க்கம் செய்தார். நெதர்லாந்து ரசிகர்களுக்கு வில்…
-
- 2 replies
- 655 views
-
-
வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் …
-
- 0 replies
- 485 views
-
-
வில்லியம்சன் சதம்: நியூசிலாந்து அபாரம் ஜூன் 09, 2014. கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில், வில்லியம்சன் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி செல்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு புல்டன் (1) ஏமாற்றினார். பின் இணைந்த டாம் லதாம், வில்லியம்சன் ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம்பார்த்தனர். பொறுப்பாக ஆடிய லதாம் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த போது, ஷில்லிங்போர்டு ‘சுழலில்’ லதாம் …
-
- 5 replies
- 553 views
-
-
வில்லியர்ஸ்தான் வில்லன் November 22, 2015 தான் சந்தித்ததில் மிகவும் கடினமான துடுப்பாட்ட வீரர் என்றால் அது தென்னாபிரிக்காவின் வில்லியர்ஸ்தான் என்று தெரிவித்துள்ளார் ஜோன்சன். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்துடன் சர்வதேச ஆட்டங்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் ஜோன்சன். ஓய்வின் பின்னர் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதன்படி தனக்கு சவாலான வீரராக வில்லியர்ஸை குறிப்பிட்டுள்ளார். வில்லியர்ஸ் தொடர்பாக ஜோன்சன் குறிப்பிடுகையில் – ‘2012ஆம் ஆண்டு சென்சூரியன் நகரில் நடந்த ஆட்டம் எனக்கு நினைவுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் சில இலக்குகளை வீழ்த்தி, கம்பீரமாக வலம் வந்தேன். அப்போது கள…
-
- 0 replies
- 407 views
-