விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7850 topics in this forum
-
இங்கிலாந்து - பிரேசில் அணிகள் மோதிய பரபரப்பான சிநேகபூர்வ கால்பந்தாட்டம் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து - பிரேசில் அணிகளிடையே சிநேகபூர்வ சர்வதேச கால்பந்து போட்டி லண்டன் வெம்லே புதிய ஸ்ரேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கான முன்னாள் கப்டன் டேவிட் பெக்காம் களமிறங்கினார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் தங்களது அணி தோல்வி அடைந்ததால் கப்டன் பதவியிலிருந்து விலகிய பெக்காம், 11 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக தனது சொந்த அணிக்காக ஆடினார். அவரது வருகை உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஸ்ரேடியத்தில் 88 ஆயிரத்து 745 ரசிகர்கள் குவிந்திருந்தனர். பிரேசில் அணியும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது. தொடக்கம் முதல…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதிய ஒப்பந்தம் குறித்து இந்திய சிரேஷ்ட வீரர்களுடன் கிரிக்கெட் சபையின் 2 பேர் கொண்ட குழு 11 ஆம் திகதி ஆலோசிக்கவுள்ளது. உலகக் கிண்ண தோல்வியின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருந்த பழைய ஒப்பந்த முறை அடியோடு ரத்து செய்யப்பட்டது. அந்த முறையில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவாக வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு முறையே 50 இலட்சம், 35 இலட்சம், 20 இலட்சம் ரூபா ஆண்டுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக தற்போது புதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை வகுத்துள்ளது. இதன்படி பாகுபாடின்றி அனைத்து வீரர்களுக்கும் சமமாக 5 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்று கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும், ஒவ்வொரு போட்டி மற்றும் தொடர்களில் கிடைக்கும் வெற்றி அடிப்…
-
- 0 replies
- 848 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஷரபோவா, கஸ்னெட்சோபா, சபினா என ரஷ்ய வீராங்கனைகள் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பிரான்ஸின் அமெலி மவுரி ஸ்மோ அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் `நம்பர் -2' வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீராங்கனை அலா குட்ரியாவ்சேவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என எளிதாக தன்வசப்படுத்திய ஷரபோவா இரண்டாவது செட்டிலும் அசத்தினார். இதை 6-4 என கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்…
-
- 0 replies
- 854 views
-
-
கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போட்டியை நடத்தக்கூடாது எனும் அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கைவிடாவிட்டால், 2010 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2500 மீற்றர் (8200 அடி) உயரத்துக்கு மேலான பகுதிகளில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதால் வீரர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அம்மாதிரியான இடங்களில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக பிபா சமீபத்தில் அறிவித்தது. இதனால், அம்மாதிரி மலைப் பிரதேசங்களில் போட்டிகளை நடத்திவந்த நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அந்த அறிவிப்பை கைவிடக்கோரும் போராட்டத்தில் கொலம்பியாவும் குதித்துள்ளது. பெரு, ஈக்குவடோர் நாடுகளும் இந்த அறிவிப்பால் ம…
-
- 0 replies
- 827 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது. அவரது மரணம் இயற்கையானது தான் என்று ஜமேக்கா பொலிஸார் அறிவிக்கவிருக்கிறார்கள். மேற்கிந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் இறந்தார். ஜமேக்காவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது ெதாடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில், வூல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஜமேக்கா பொலிஸார் கூறினார்கள். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. இருப்பினும், கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் ந…
-
- 0 replies
- 719 views
-
-
பங்களாதேஷ் தொடரில் வெற்றி வாகை சூடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 34 இலட்சம் ரூபா அள்ளிச் செல்கின்றனர். சமீபத்தில் பங்களாதேஷ் சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் வீரர்களுக்கான சம்பள முறையை இந்திய கிரிக்கெட் சபை மாற்றியமைத்தது. வெற்றி அடிப்படையில் ஊக்கத் தொகை, போனஸ் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதன்படி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றதற்கு சம்பளமாக ஒவ்வொரு வீரருக்கும் 3 இலட்சம் ரூபா (ஒரு போட்டிக்கு 1.5 இலட்சம் ரூபா வீதம்) வழங்கப்படும். * ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபா (வெற்றி பெற்ற இரண்டு போட்டிக்கு ரூபா 2.5 இலட்சம் வீதம்) வழங்கப்படும். விளையாடாத வீரர்கள் இதில் பா…
-
- 3 replies
- 1.3k views
-
-
சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவராக (பிபா) சுவிற்சர்லாந்தின் செப் பிளாட்டர் (வயது 71) 3 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டத்தில் பிளாட்டரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. அவர் 2011 ஆம் ஆண்டு வரை இந்த பதவியிலிருப்பார். இந்தக் கூட்டத்தில் `பிபா'வின் 208 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிளாட்டர், தன் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். ஊக்க மருந்து, ஊழல், மோசடி, நிறவெறி ஆகிய நான்கும் கால்பந்து ஆட்டத்துக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இவற்றை தடுப்பதில் பிபா முழுக் கவனம் செலுத்தும் என்றார். --thinakkural--
-
- 0 replies
- 748 views
-
-
இங்கிலாந்து கப்டன் வோகன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு உடனடியாக முழுக்குப் போட வேண்டும் என்று முன்னாள் வீரர் தோர்ப் வலியுறுத்தியிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கப்டன் மைக்கேல் வோகன் டெஸ்ட் போட்டியில் ஓரளவு ஜொலித்தாலும், ஒரு நாள் போட்டியில் சோபிப்பதில்லை. தவிர அடிக்கடி காயமும் அடைகிறார். இதுவரை 86 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவரது ஆட்டம் மோசமாக இருந்தது. 9 போட்டியில் 209 ரன்கள் ( சராசரி 20. 90 ) மட்டுமே எடுத்திருந்தார். இதனால் வோகன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இருந்து வோகன் ஓய்வு …
-
- 0 replies
- 847 views
-
-
பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரபெல் நாடல் அதிரடியாக வெற்றிபெற்றார். ஸ்பெயின் வீரர் மோயா, அவுஸ்திரேலியாவின் ஹெவிட் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். பெண்கள் பிரிவில் செரீனா, ஷரபோவா அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். இந்தியாவின் சானியா மிர்ஷா தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் - 2 வீரரான ஸ்பெயினின் ரபெல் நாடல், 117 ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் பிளாவியோ சிபோலாவை சந்தித்தார். இதில் அதிரடியாக விளையாடிய நாடல் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட். தொடக்க வீரரான இவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இவர் அனல் பறக்கும் வகையில் விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலிருந்து கில்கிறிஸ்ட் ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது; தனிப்பட்ட முறையில் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன். டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கவனம் செலுத்துவேன் என்றார். 36 வயதான கில்கிறிஸ்ட் 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9038 ஓட்டங்கள் எடுத்துள்ள…
-
- 0 replies
- 717 views
-
-
நாடே ஒழுங்கீனமாக இருக்கும் போது என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்வதா? என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடிவாளம் இல்லாத குதிரை போல் செயற்படக்கூடியவர் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர். இதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. ஊக்க மருந்து விவகாரம் இரவு விடுதி நடனம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித…
-
- 0 replies
- 869 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியக் கப்டன் சர்வான், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக டேரன் கங்கா புதிய கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 ` ருவென்ரி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்த போது சர்வானுக்கு வலது தோள் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அப்போட்டியின் இரண்டு இனிங்சிலும் துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் அணி இனிங்ஸ் மற்றும் 283 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவரது காயம் குணமடைய இன்னும் 6 வாரங்களுக்கு மேலாகும் என்பதால், தொடரிலி…
-
- 1 reply
- 968 views
-
-
தங்கள் அணிப் பயிற்சியாளர்களை இந்திய -பாகிஸ்தான் வீரர்கள் மதிப்பதில்லையென்று தென்னாபிரிக்க முன்னாள் வீரர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். அலன் டொனால்ட் தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்திய வீரர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சப்பலுக்கும் வீரர்களுக்கும் இடையே பல விடயங்களில் சுமுகநிலை இருந்தது. சில விடயங்களில் பிரிவு ஏற்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் பயிற்சியாளர் சொல்வதைக் கேட்க வேண்டும். இந்திய வீரர்கள் பயிற்சியாளர் கருத்தை மதிப்பதில்லை. இதனாலேயே சப்பல் விலகினார். மூத்த வீரர்கள் ப…
-
- 0 replies
- 841 views
-
-
நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…
-
- 0 replies
- 978 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா அசத்தல் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மாரட் சபினும் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர். நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 41 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எமிலிலோயிடை எதிர்கொண்டார். அசத்தலாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர் இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7…
-
- 0 replies
- 868 views
-
-
மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது. மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
போர்முலா-1 கார் பந்தயத்தின் மொனாக்கோ போட்டியில் ஸ்பெயின் வீரர் அலோன்சா வெற்றி பெற்றார். இந்த ஆண்டுக்கான போர்முலா -1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் 5 ஆவது பந்தயமாக மொனாக்கோ கிராண்ட்பிரீக்ஸ் மாண்டி கார்லோவில் நேற்று முன்தினம் நடந்தது. 78 சுற்றுகள் கொண்ட இதன் பந்தய தூரம் 260.520 கிலோமீற்றர் ஆகும். இதில் மெக்லரன் அணி வீரர்கள் தற்போதைய சாம்பியன் ஸ்பெயினின் அலோன்சா, இங்கிலாந்தின் ஹமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு பேரும் முதலிடத்தை பிடிக்க தங்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள். முடிவில் அலோன்சா வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40 நிமிடம் 20.329 விநாடிகளில் கடந்…
-
- 0 replies
- 672 views
-
-
மேற்கிந்தியாவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 283 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய கிரிக்கெட் அணிகளிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லீயில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இனிங்ஸை விளையாடிய மேற்கிந்திய அணி 146 ஓட்டங்களுக்கு சுருண்டு `பொலோ-ஒன்' ஆனது. இதையடுத்து, 2 ஆவது இனிங்சையும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 2 ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 22 ஓட்டம் எடுத்திருந்தது. 3 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 ஆம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீட…
-
- 1 reply
- 737 views
-
-
ஐ.சி.சி.தலைவர் சொன் மரணம். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தலைவர் பெர்சி சொன் தனது 57 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள டர்பன் வில்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெருங்குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவரான பெர்சி சொன் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவராகவும் செயல்பட்டவராவார். நிறவெறியால் பாதிக்கப்பட்ட காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை ஒருங்கிணைத்ததில் பெர்சி சொன் முக்கிய இடம் வகிக்கிறார். அத்துட…
-
- 2 replies
- 1.5k views
-
-
3 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிப்பதாக சஹீர்கான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இனிங்ஸ் மற்றும் 239 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் `டிரா' ஆனதால் இந்தியா 1-0 என்ற தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்த டெஸ்டில் வாசிம் ஜாபர், தினேஷ் கார்த்திக், டெண்டுல்கர், கப்டன் டிராவிட் ஆகியோர் சதமடித்து சாதனை புரிந்தனர். சஹீர்கானின் பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டும், 2 ஆவது இனிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அவர் தேர்வு பெற்றார். இது குறித்து சஹீர்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் …
-
- 0 replies
- 865 views
-
-
சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார். இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்; அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். …
-
- 0 replies
- 864 views
-
-
பங்களாதேஷின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக் கப்டன் பதவியிலிருந்து ஹபிபுல் பஷார் ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இரு போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்களாதேஷை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பங்களாதேஷ் ஒரு நாள் போட்டி அணியின் கப்டன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஹபிபுல் பஷார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹபிபுல் பஷார் கூறியதாவது: ஒரு நாள் போட்டிக்கான அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். அதே நேரத்தில் அணியின் வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பங்களாதேஷ் அணியின் கப்டனாக இருந்தது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. …
-
- 0 replies
- 805 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் தோள்மூட்டில் காயமடைந்த மேற்கிந்திய அணிக் கப்டன் சர்வான் எஞ்சிய தொடர் முழுவதும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இங்கு இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட், இரண்டு 20/20 ஓவர்கள் கிரிக்கெட் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் `டிரா'வில் முடிந்த நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கப்டன் சர்வான் காயமடைந்தார். இங்கிலாந்து வீரர் கொலிங்வூட் பவுண்டரிக்கு அடித்த பந்தை பாய்ந்து தடுத்தபோது அவருக்கு வலது தோள் மூட்டில் காயமேற்பட்டது. இதன் பின்னர், நடந்த மருத்துவ பரிசோதனையில் அவரது தோள்மூட்டில் தசைநார் கிழிந…
-
- 0 replies
- 762 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் பயிற்சியாளருமான ஜாவிட் மியான்டாட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை அழைத்தால் தான் அதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு தருணங்களில் மூன்று முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் மியான்டாட். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின் பயிற்சியாளர் தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. மே 15 ஆம் திகதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு மியான்டாட் விண்ணப்பிக்கவில்லை. 124 டெஸ்ட் போட்டிகளில் 8832 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானி…
-
- 0 replies
- 824 views
-
-
மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி வடக்கு கிழக்கு மாகாண அணிக்கு யாழ்.மாவட்ட வீரர் ஐவர் தெரிவு மாகாண மட்டத்தில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யின் அனுசரணையுடன் நடத்தப் படவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொள் வதற்கு வடக்கு கிழக்கு மாகாண அணியில் யாழ். மாவட்ட வீரர்கள் ஐவர் தெரிவாகியுள்ளனர். ஆர்.ஏபிரகாம் பிரசாத் (யாழ். மத்திய கல்லூரி), ப.நேசவர்மன் (பரி யோவான் கல்லூரி), வோ. இ.ஜக்ஸன்(சென் பற்றிக்ஸ் கல்லூரி), எஸ். வினோத்(மானிப்பாய் இந்துக் கல்லூரி), எம்.அமரதீசன் (யாழ்ப் பாணக் கல்லூரி) ஆகி யோரே இந்த அணிக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்கள் போட்டி களில் பங்குபற்றுவதற்கு கடந்த 23ஆம் திகதி கண் டிக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்குப் பொறுப்பாக ரி.ஜெக நாதன் கடமையாற்றுகின்றார். 20 வயதி…
-
- 0 replies
- 860 views
-