விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
போர்முலா-1 கார் பந்தயத்தின் மொனாக்கோ போட்டியில் ஸ்பெயின் வீரர் அலோன்சா வெற்றி பெற்றார். இந்த ஆண்டுக்கான போர்முலா -1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் 5 ஆவது பந்தயமாக மொனாக்கோ கிராண்ட்பிரீக்ஸ் மாண்டி கார்லோவில் நேற்று முன்தினம் நடந்தது. 78 சுற்றுகள் கொண்ட இதன் பந்தய தூரம் 260.520 கிலோமீற்றர் ஆகும். இதில் மெக்லரன் அணி வீரர்கள் தற்போதைய சாம்பியன் ஸ்பெயினின் அலோன்சா, இங்கிலாந்தின் ஹமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு பேரும் முதலிடத்தை பிடிக்க தங்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள். முடிவில் அலோன்சா வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40 நிமிடம் 20.329 விநாடிகளில் கடந்…
-
- 0 replies
- 665 views
-
-
மேற்கிந்தியாவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 283 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய கிரிக்கெட் அணிகளிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லீயில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இனிங்ஸை விளையாடிய மேற்கிந்திய அணி 146 ஓட்டங்களுக்கு சுருண்டு `பொலோ-ஒன்' ஆனது. இதையடுத்து, 2 ஆவது இனிங்சையும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 2 ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 22 ஓட்டம் எடுத்திருந்தது. 3 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 ஆம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீட…
-
- 1 reply
- 734 views
-
-
ஐ.சி.சி.தலைவர் சொன் மரணம். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தலைவர் பெர்சி சொன் தனது 57 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள டர்பன் வில்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெருங்குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவரான பெர்சி சொன் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவராகவும் செயல்பட்டவராவார். நிறவெறியால் பாதிக்கப்பட்ட காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை ஒருங்கிணைத்ததில் பெர்சி சொன் முக்கிய இடம் வகிக்கிறார். அத்துட…
-
- 2 replies
- 1.5k views
-
-
3 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிப்பதாக சஹீர்கான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இனிங்ஸ் மற்றும் 239 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் `டிரா' ஆனதால் இந்தியா 1-0 என்ற தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்த டெஸ்டில் வாசிம் ஜாபர், தினேஷ் கார்த்திக், டெண்டுல்கர், கப்டன் டிராவிட் ஆகியோர் சதமடித்து சாதனை புரிந்தனர். சஹீர்கானின் பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டும், 2 ஆவது இனிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அவர் தேர்வு பெற்றார். இது குறித்து சஹீர்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் …
-
- 0 replies
- 861 views
-
-
சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார். இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்; அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். …
-
- 0 replies
- 861 views
-
-
பங்களாதேஷின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக் கப்டன் பதவியிலிருந்து ஹபிபுல் பஷார் ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இரு போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்களாதேஷை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பங்களாதேஷ் ஒரு நாள் போட்டி அணியின் கப்டன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஹபிபுல் பஷார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹபிபுல் பஷார் கூறியதாவது: ஒரு நாள் போட்டிக்கான அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். அதே நேரத்தில் அணியின் வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பங்களாதேஷ் அணியின் கப்டனாக இருந்தது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. …
-
- 0 replies
- 801 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் தோள்மூட்டில் காயமடைந்த மேற்கிந்திய அணிக் கப்டன் சர்வான் எஞ்சிய தொடர் முழுவதும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இங்கு இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட், இரண்டு 20/20 ஓவர்கள் கிரிக்கெட் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் `டிரா'வில் முடிந்த நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கப்டன் சர்வான் காயமடைந்தார். இங்கிலாந்து வீரர் கொலிங்வூட் பவுண்டரிக்கு அடித்த பந்தை பாய்ந்து தடுத்தபோது அவருக்கு வலது தோள் மூட்டில் காயமேற்பட்டது. இதன் பின்னர், நடந்த மருத்துவ பரிசோதனையில் அவரது தோள்மூட்டில் தசைநார் கிழிந…
-
- 0 replies
- 758 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் பயிற்சியாளருமான ஜாவிட் மியான்டாட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை அழைத்தால் தான் அதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு தருணங்களில் மூன்று முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் மியான்டாட். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின் பயிற்சியாளர் தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. மே 15 ஆம் திகதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு மியான்டாட் விண்ணப்பிக்கவில்லை. 124 டெஸ்ட் போட்டிகளில் 8832 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானி…
-
- 0 replies
- 821 views
-
-
மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி வடக்கு கிழக்கு மாகாண அணிக்கு யாழ்.மாவட்ட வீரர் ஐவர் தெரிவு மாகாண மட்டத்தில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யின் அனுசரணையுடன் நடத்தப் படவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொள் வதற்கு வடக்கு கிழக்கு மாகாண அணியில் யாழ். மாவட்ட வீரர்கள் ஐவர் தெரிவாகியுள்ளனர். ஆர்.ஏபிரகாம் பிரசாத் (யாழ். மத்திய கல்லூரி), ப.நேசவர்மன் (பரி யோவான் கல்லூரி), வோ. இ.ஜக்ஸன்(சென் பற்றிக்ஸ் கல்லூரி), எஸ். வினோத்(மானிப்பாய் இந்துக் கல்லூரி), எம்.அமரதீசன் (யாழ்ப் பாணக் கல்லூரி) ஆகி யோரே இந்த அணிக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்கள் போட்டி களில் பங்குபற்றுவதற்கு கடந்த 23ஆம் திகதி கண் டிக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்குப் பொறுப்பாக ரி.ஜெக நாதன் கடமையாற்றுகின்றார். 20 வயதி…
-
- 0 replies
- 847 views
-
-
உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட்டாலும் இந்திய இளைஞர்கள் மட்டும் இந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த இளைஞர்களின் முகங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக களையிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள அணி அப்ரிடியால் புரட்டி எடுக்கப்படுகிறது மாலிங்கவின் ஒரு ஓவரில் 32 ஓட்டங்கள் பெறப்பட்டன 4 4 6 6 6 6 மிகுதி விபரங்கள் விரைவில்
-
- 17 replies
- 3.1k views
-
-
அபுதாபி: இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 5 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றதுள்ளது. இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கு இடையே 3 ஒரு நாள் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்போட்டி நேற்று அபுதாபியில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சளரான மகரூப் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். அவருக்கு துணையாக விளையாடிய சமர சில்வா 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்…
-
- 1 reply
- 918 views
-
-
மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார். காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானிய…
-
- 5 replies
- 1.3k views
-
-
* மனைவி கூறுகிறார் பொப் வூல்மரின் மரணம் இயற்கையானதல்ல, அவர் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி உறுதி கூறியுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியுடன் மேற்கிந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் கடந்த மாதம் 18-ஆம் திகதி ஜமேக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஜமேக்கா பொலிஸார் கூறினர். ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் நிபுணர்கள் தங்களது அறிக்கையில், வூல்மர் இயற்கையான முறையில் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இ…
-
- 1 reply
- 921 views
-
-
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி ஐ. சி. சி., யின் நிர்வாகத் திறமை மீது வீரர்களுக்கு நம்பிக்கையில்லை எனத் தெரியவந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஐ. சி. சி., யின் நிர்வாகம் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 9 நாடுகளைச் சேர்ந்த 45 வீரர்களுடைய கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 56 சதவீத வீரர்கள் ஐ. சி. சி., யின் நிர்வாகத்தன்மை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் உலகக்கிண்ணப் போட்டிகள் சுமார், சரியில்லை எனக்கருத்து தெரிவித்திருந்தனர். நன்றாக இருந்தது என மிகக்குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். இது குறித்து வீரர்கள் சங்கத்தின் தலைமை செயலர் ரிம்மே அளித…
-
- 0 replies
- 715 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து வற்மோருடன் இந்திய அணியின் முகாமையாளர் ரவிசாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சப்பல் ராஜிநாமா செய்ததையடுத்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் வற்மோருக்கு இந்த மாதத்துடன் அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிகிறது. அதன் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும் ஏற்கனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கத்தான் ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். …
-
- 0 replies
- 767 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஜோன் ரைட் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்சியாளரான ரொம் மூடி இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் இலங்கை அணி புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளசொன ஜோன் ரைட்டை புதிய பயிற்சியாளராக நியமிப்பதில் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகமும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இது குறித்து ஜோன் ரைட்டுடன் பேசவுள்ளதாகவும் அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் சபை அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேநேரம் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும்…
-
- 0 replies
- 787 views
-
-
கொலையா? தற்கொலையா? பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொப் வூல்மர் சில வாரங்களுக்கு முன் இறந்ததைப் பலர் அறிவர். அயர்லாந்து அணியுடன் மோதி தோற்ற பாகிஸ்தான் அணியினரின் கைகள் இந்த இறப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உலகம் பூராவும் சந்தேகக் கண்கள். தோற்ற அடுத்த நாளே வூல்மர் இறந்ததால், அது இயற்கையான மரணமல்ல என்று புலனாகிறது. ஆகவே, ஒன்று கொலையாக இருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. பொப் வூல்மரின் இறப்புக்கு அகோனைட் என்ற விஷம்தான் காரணமென்று ஜமேக்கா பொலிஸார் தகவல் வெளியிட இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் FORENSIC துறையின் முன்னாள் இயக்குநரான பி. சந்திரசேகரன் கூறும்போது, …
-
- 9 replies
- 2.9k views
-
-
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் டொம் மூடி பதவி விலகினார் இலங்கைக் கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய நாட்டவரான டொம் மூடி, இலங்கைக்கான பயிற்சியாளர் என்ற பதவியினைத் தான் தொடர்ந்தும் வகிக்கப் போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்குத்(சிறிலங்கா கிறிக்கட்) தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பினை தமிழோசையிடம் உறுதி செய்த சிறிலங்கா கிரிக்கட்டின் செயலாளர் கங்காதரன் மதிவாணன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் இலங்கை அணியுடன் முடிவடையவுள்ள இவருடனான இரண்டுவருட ஒப்பந்தத்தினை தனது குடும்ப நலன்களைக் கருத்திற் கோண்டே எடுத்தாகத் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த முடிவினை சிறிலங்கா கிரிக்கட் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாகவு…
-
- 1 reply
- 860 views
-
-
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா டோணி(93), திணேஷ் கார்த்திக்(58) அபாரம் டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி அபாரமாக ஆடி 93 ரன்களைக் குவித்தார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று டாக்காவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அந்த அணியை சந்தித்தது. மழை காரணமாக தலா 47 ஓவர்களைக் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய வங்கதேசம் பின்னர் அடித்து ஆடி விரைவாக ரன்களைக் குவித்தது. 47வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வங்கதேசம் 250 ரன்களைக் குவித்தது. ஜாவேத் ஒமர் 80 ரன்களும், சகீ…
-
- 14 replies
- 2.2k views
-
-
உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை * மத்தியஸ்தர் வெங்கட்ராகவன் "முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்". இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீ…
-
- 0 replies
- 983 views
-
-
அவுஸ்ரேலியா அணியினரின் சிம்பாவே பயணம் நிறுத்தப்பட்டது. வரும் செப்ரம்பர் மாதம் சிம்பாவேயில் அவுஸ்ரேலியா - சிம்பாவே அணிகளுக்கு இடையில் 3 ஒரு நாள் சரவதேச போட்டிகளில் நடத்துவதாக ஐசிசி திட்டமிட்டிருந்த வேளையில் திடீரென அவுஸ்ரேலியா அணியினரை சிம்பாவேக்கான இந்த சுற்று பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அவுஸ்ரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. Government stops Zimbabwe tour The Australian government has ordered the country's cricket team not to tour Zimbabwe in September. John Howard, the prime minister, said it was not fair to leave the decision up to Cricket Australia and the players. However, James Sutherland, the CA chief executive, has foreshadowed the po…
-
- 0 replies
- 936 views
-
-
இந்தியாவுக்கு பயிற்சியளிக்க தயார் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க அழைப்புவந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய அணிக்கு இரு தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்த பயிற்சியாளர் ஜோன் புச்சானன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஹெட்ரிக் சாதனையுடன் சாம்பியன் பட்டம் வென்று அசைக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ளது. அவுஸ்திரேலிய அணி யின் இந்த வெற்றிக்கு தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இருப்பது ஒருகாரணம் என்றாலும் அணியை சிறு சறுக்கல்கூட இல்லாமல் வழிநடத்திச் செல்வதில் பயிற்சியாளர் புச்சானனுக் கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் உலகக் கிண்ண வெற்றிக்குப்பின் பார்படோஸில் பேட்டியளித்த புச்சானன் அது குறித்து கூறுகையி…
-
- 23 replies
- 4.1k views
-
-
இலங்கை அணியை கௌரவப்படுத்திஇரண்டு முத்திரைகள் வெளியீடு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியை கௌரப்படுத்தும் முகமாக இலங்கை தபால் திணைக்களத்தினால் இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளில் இலங்கை வீரர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி 11 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. இதனை நினைவுகூரும் பொருட்டே மேற்படி முத்திரைகள் இரண்டும் வெளியிடப்பட்டுள்ளன. வீரகேசரி
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமில்லை இந்திய கிரிக்கெட் அணியினருக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உலகின் செல்வந்த கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் சபையில் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய நாணயப்படி 1.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 1.600 கோடி ரூபாவில் இருந்து 1.800 கோடி ரூபாவாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஏழு மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண தொடர் முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த உலகக் கிண…
-
- 0 replies
- 908 views
-