Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட். தொடக்க வீரரான இவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இவர் அனல் பறக்கும் வகையில் விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலிருந்து கில்கிறிஸ்ட் ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது; தனிப்பட்ட முறையில் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன். டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கவனம் செலுத்துவேன் என்றார். 36 வயதான கில்கிறிஸ்ட் 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9038 ஓட்டங்கள் எடுத்துள்ள…

    • 0 replies
    • 725 views
  2. நாடே ஒழுங்கீனமாக இருக்கும் போது என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்வதா? என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடிவாளம் இல்லாத குதிரை போல் செயற்படக்கூடியவர் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர். இதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. ஊக்க மருந்து விவகாரம் இரவு விடுதி நடனம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித…

    • 0 replies
    • 876 views
  3. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியக் கப்டன் சர்வான், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக டேரன் கங்கா புதிய கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 ` ருவென்ரி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்த போது சர்வானுக்கு வலது தோள் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அப்போட்டியின் இரண்டு இனிங்சிலும் துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் அணி இனிங்ஸ் மற்றும் 283 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவரது காயம் குணமடைய இன்னும் 6 வாரங்களுக்கு மேலாகும் என்பதால், தொடரிலி…

    • 1 reply
    • 975 views
  4. தங்கள் அணிப் பயிற்சியாளர்களை இந்திய -பாகிஸ்தான் வீரர்கள் மதிப்பதில்லையென்று தென்னாபிரிக்க முன்னாள் வீரர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். அலன் டொனால்ட் தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்திய வீரர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சப்பலுக்கும் வீரர்களுக்கும் இடையே பல விடயங்களில் சுமுகநிலை இருந்தது. சில விடயங்களில் பிரிவு ஏற்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் பயிற்சியாளர் சொல்வதைக் கேட்க வேண்டும். இந்திய வீரர்கள் பயிற்சியாளர் கருத்தை மதிப்பதில்லை. இதனாலேயே சப்பல் விலகினார். மூத்த வீரர்கள் ப…

    • 0 replies
    • 852 views
  5. நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…

    • 0 replies
    • 986 views
  6. பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா அசத்தல் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மாரட் சபினும் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர். நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 41 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எமிலிலோயிடை எதிர்கொண்டார். அசத்தலாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர் இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7…

    • 0 replies
    • 876 views
  7. மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது. மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் ச…

    • 6 replies
    • 1.4k views
  8. போர்முலா-1 கார் பந்தயத்தின் மொனாக்கோ போட்டியில் ஸ்பெயின் வீரர் அலோன்சா வெற்றி பெற்றார். இந்த ஆண்டுக்கான போர்முலா -1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் 5 ஆவது பந்தயமாக மொனாக்கோ கிராண்ட்பிரீக்ஸ் மாண்டி கார்லோவில் நேற்று முன்தினம் நடந்தது. 78 சுற்றுகள் கொண்ட இதன் பந்தய தூரம் 260.520 கிலோமீற்றர் ஆகும். இதில் மெக்லரன் அணி வீரர்கள் தற்போதைய சாம்பியன் ஸ்பெயினின் அலோன்சா, இங்கிலாந்தின் ஹமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு பேரும் முதலிடத்தை பிடிக்க தங்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள். முடிவில் அலோன்சா வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40 நிமிடம் 20.329 விநாடிகளில் கடந்…

    • 0 replies
    • 679 views
  9. மேற்கிந்தியாவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 283 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய கிரிக்கெட் அணிகளிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லீயில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இனிங்ஸை விளையாடிய மேற்கிந்திய அணி 146 ஓட்டங்களுக்கு சுருண்டு `பொலோ-ஒன்' ஆனது. இதையடுத்து, 2 ஆவது இனிங்சையும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 2 ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 22 ஓட்டம் எடுத்திருந்தது. 3 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 ஆம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீட…

  10. ஐ.சி.சி.தலைவர் சொன் மரணம். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தலைவர் பெர்சி சொன் தனது 57 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள டர்பன் வில்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெருங்குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவரான பெர்சி சொன் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவராகவும் செயல்பட்டவராவார். நிறவெறியால் பாதிக்கப்பட்ட காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை ஒருங்கிணைத்ததில் பெர்சி சொன் முக்கிய இடம் வகிக்கிறார். அத்துட…

    • 2 replies
    • 1.5k views
  11. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிப்பதாக சஹீர்கான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இனிங்ஸ் மற்றும் 239 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் `டிரா' ஆனதால் இந்தியா 1-0 என்ற தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்த டெஸ்டில் வாசிம் ஜாபர், தினேஷ் கார்த்திக், டெண்டுல்கர், கப்டன் டிராவிட் ஆகியோர் சதமடித்து சாதனை புரிந்தனர். சஹீர்கானின் பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டும், 2 ஆவது இனிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அவர் தேர்வு பெற்றார். இது குறித்து சஹீர்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் …

    • 0 replies
    • 871 views
  12. சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார். இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்; அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். …

    • 0 replies
    • 868 views
  13. பங்களாதேஷின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக் கப்டன் பதவியிலிருந்து ஹபிபுல் பஷார் ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இரு போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்களாதேஷை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பங்களாதேஷ் ஒரு நாள் போட்டி அணியின் கப்டன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஹபிபுல் பஷார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹபிபுல் பஷார் கூறியதாவது: ஒரு நாள் போட்டிக்கான அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். அதே நேரத்தில் அணியின் வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பங்களாதேஷ் அணியின் கப்டனாக இருந்தது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. …

    • 0 replies
    • 810 views
  14. இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் தோள்மூட்டில் காயமடைந்த மேற்கிந்திய அணிக் கப்டன் சர்வான் எஞ்சிய தொடர் முழுவதும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இங்கு இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட், இரண்டு 20/20 ஓவர்கள் கிரிக்கெட் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் `டிரா'வில் முடிந்த நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கப்டன் சர்வான் காயமடைந்தார். இங்கிலாந்து வீரர் கொலிங்வூட் பவுண்டரிக்கு அடித்த பந்தை பாய்ந்து தடுத்தபோது அவருக்கு வலது தோள் மூட்டில் காயமேற்பட்டது. இதன் பின்னர், நடந்த மருத்துவ பரிசோதனையில் அவரது தோள்மூட்டில் தசைநார் கிழிந…

    • 0 replies
    • 765 views
  15. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் பயிற்சியாளருமான ஜாவிட் மியான்டாட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை அழைத்தால் தான் அதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு தருணங்களில் மூன்று முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் மியான்டாட். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின் பயிற்சியாளர் தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. மே 15 ஆம் திகதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு மியான்டாட் விண்ணப்பிக்கவில்லை. 124 டெஸ்ட் போட்டிகளில் 8832 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானி…

    • 0 replies
    • 827 views
  16. மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி வடக்கு கிழக்கு மாகாண அணிக்கு யாழ்.மாவட்ட வீரர் ஐவர் தெரிவு மாகாண மட்டத்தில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யின் அனுசரணையுடன் நடத்தப் படவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொள் வதற்கு வடக்கு கிழக்கு மாகாண அணியில் யாழ். மாவட்ட வீரர்கள் ஐவர் தெரிவாகியுள்ளனர். ஆர்.ஏபிரகாம் பிரசாத் (யாழ். மத்திய கல்லூரி), ப.நேசவர்மன் (பரி யோவான் கல்லூரி), வோ. இ.ஜக்ஸன்(சென் பற்றிக்ஸ் கல்லூரி), எஸ். வினோத்(மானிப்பாய் இந்துக் கல்லூரி), எம்.அமரதீசன் (யாழ்ப் பாணக் கல்லூரி) ஆகி யோரே இந்த அணிக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்கள் போட்டி களில் பங்குபற்றுவதற்கு கடந்த 23ஆம் திகதி கண் டிக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்குப் பொறுப்பாக ரி.ஜெக நாதன் கடமையாற்றுகின்றார். 20 வயதி…

  17. உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட்டாலும் இந்திய இளைஞர்கள் மட்டும் இந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த இளைஞர்களின் முகங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக களையிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து எ…

  18. சிங்கள அணி அப்ரிடியால் புரட்டி எடுக்கப்படுகிறது மாலிங்கவின் ஒரு ஓவரில் 32 ஓட்டங்கள் பெறப்பட்டன 4 4 6 6 6 6 மிகுதி விபரங்கள் விரைவில்

    • 17 replies
    • 3.1k views
  19. அபுதாபி: இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 5 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றதுள்ளது. இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கு இடையே 3 ஒரு நாள் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்போட்டி நேற்று அபுதாபியில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சளரான மகரூப் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். அவருக்கு துணையாக விளையாடிய சமர சில்வா 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்…

    • 1 reply
    • 927 views
  20. மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார். காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானிய…

  21. * மனைவி கூறுகிறார் பொப் வூல்மரின் மரணம் இயற்கையானதல்ல, அவர் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி உறுதி கூறியுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியுடன் மேற்கிந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் கடந்த மாதம் 18-ஆம் திகதி ஜமேக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஜமேக்கா பொலிஸார் கூறினர். ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் நிபுணர்கள் தங்களது அறிக்கையில், வூல்மர் இயற்கையான முறையில் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இ…

    • 1 reply
    • 929 views
  22. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி ஐ. சி. சி., யின் நிர்வாகத் திறமை மீது வீரர்களுக்கு நம்பிக்கையில்லை எனத் தெரியவந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஐ. சி. சி., யின் நிர்வாகம் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 9 நாடுகளைச் சேர்ந்த 45 வீரர்களுடைய கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 56 சதவீத வீரர்கள் ஐ. சி. சி., யின் நிர்வாகத்தன்மை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் உலகக்கிண்ணப் போட்டிகள் சுமார், சரியில்லை எனக்கருத்து தெரிவித்திருந்தனர். நன்றாக இருந்தது என மிகக்குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். இது குறித்து வீரர்கள் சங்கத்தின் தலைமை செயலர் ரிம்மே அளித…

    • 0 replies
    • 728 views
  23. இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து வற்மோருடன் இந்திய அணியின் முகாமையாளர் ரவிசாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சப்பல் ராஜிநாமா செய்ததையடுத்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் வற்மோருக்கு இந்த மாதத்துடன் அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிகிறது. அதன் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும் ஏற்கனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கத்தான் ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். …

    • 0 replies
    • 782 views
  24. இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஜோன் ரைட் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்சியாளரான ரொம் மூடி இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் இலங்கை அணி புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளசொன ஜோன் ரைட்டை புதிய பயிற்சியாளராக நியமிப்பதில் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகமும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இது குறித்து ஜோன் ரைட்டுடன் பேசவுள்ளதாகவும் அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் சபை அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேநேரம் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும்…

    • 0 replies
    • 796 views
  25. கொலையா? தற்கொலையா? பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொப் வூல்மர் சில வாரங்களுக்கு முன் இறந்ததைப் பலர் அறிவர். அயர்லாந்து அணியுடன் மோதி தோற்ற பாகிஸ்தான் அணியினரின் கைகள் இந்த இறப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உலகம் பூராவும் சந்தேகக் கண்கள். தோற்ற அடுத்த நாளே வூல்மர் இறந்ததால், அது இயற்கையான மரணமல்ல என்று புலனாகிறது. ஆகவே, ஒன்று கொலையாக இருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. பொப் வூல்மரின் இறப்புக்கு அகோனைட் என்ற விஷம்தான் காரணமென்று ஜமேக்கா பொலிஸார் தகவல் வெளியிட இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் FORENSIC துறையின் முன்னாள் இயக்குநரான பி. சந்திரசேகரன் கூறும்போது, …

    • 9 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.