விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இங்கிலாந்து கால்பந்து அணியில் ரூனிக்கு இடமில்லை உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லண்டன் : உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துடன் மோத இருக்கிறது. மேலும் பிரான்சுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றிலும் விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் சேர்க்கப்படவில்லை. ஆனால் …
-
- 0 replies
- 287 views
-
-
உதைபந்து,ஆபிரிக்க கோப்பையை செனகல் வென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் செனகல் எகிப்துக்கு எதிராக விளையாடியது. இறுதிவரை யாரும் கோலை போடாததால் பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
-
- 0 replies
- 638 views
-
-
கிரிக் இன்போ விருதுகள் அறிவிப்பு: சாஹல், குல்தீப் சாதனைகளுக்கு அங்கீகாரம் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ். - THE HINDU 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருதை கிரிக் இன்போ இணையதளம் அறிவித்துள்ளது. இதில் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீவ் யாதவ் ஆகியோர் விருதை தட்டிச் சென்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் சிறப்பாக பேட் செய்த இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித்தும் விருதை கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித் க…
-
- 0 replies
- 353 views
-
-
50-0 மேவெதரின் சாதனையை முறியடிப்பாரா வான்ஹெங்..? தாய்லாந்தின் குத்துச்சண்டை சென்சேஷன் குத்துச்சண்டை வீரர் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம் எப்படி இருக்கும்? நல்ல உயரம், அச்சுறுத்தும் உடற்கட்டு; மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கும் கைகள். எதிராளியைத் தாக்கி அழிக்கும் ஆகிருதி கொண்ட ஓர் ஆறு அடி உயர விளையாட்டு வீரர்தானே நம் நினைவுக்கு வருவார்? அது மட்டுமல்லாமல், குத்துச்சண்டை வீரரின் உயரமும் மிக முக்கியம். எதிராளியைத் தாக்கி அடிக்கும்போது, உங்களுடைய கைகள் எந்த அளவுக்கு நீண்டு தாக்க முடிகின்றதோ, அந்த அளவுக்குக் குத்துச்சண்டையில் நீங்கள் எளிதாக யுக்திகள் அமைத்து வெற்றி பெறவும் முடியும். ஆனால், பெரிதாக உயரமும் இல்லாமல், உடல் எடையும் இல்லாமல் ஒருவர் 49 ம…
-
- 0 replies
- 173 views
-
-
தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் டிபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே 25ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்றது. இதன்மூலம் எர்னஸ்டோ வெல்வெர்டேவின் முகாமையின் கீழ் இந்த பருவத்தில் ஆடும் பார்சிலோனா இம்முறை ஸ்பெயினின் லீக் மற்றும் கிண்ணம் இரு பட்டங்களையும் வென்றுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி செவில்லாவை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. பார்சிலோன அணி இந்த பருவத்தில் ஒரே…
-
- 0 replies
- 489 views
-
-
விராட் கோலி : சச்சினுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPHILIP BROWN விராட் கோலி இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 194 ரன்களை துரத்…
-
- 0 replies
- 323 views
-
-
இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டும் பிரெட் லீ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சு நுட்பங்களை கற்றுக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதே நேரத்தில் இப்பணியை என்னால் முழு நேரமாக ஏற்க முடியாது. எனெனில் உலகம் முழுவதும் உள்ள வேகப்பந்து வீச்சாளருக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF…
-
- 0 replies
- 360 views
-
-
மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! மும்பை: கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பந்து வீச்சு, எறிவதை போல உள்ளதாக பிசிசிஐ வார்னிங் செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 22ம்தேதி, விசாகப்பட்டிணத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான பெப்சி ஐபிஎல் 2015 போட்டியின்போது, கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பந்து வீசிய விதம், விதிமுறைகளை மீறியிருந்ததாக சந்தேகிக்கிறோம். மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! இருப்பினும் விதிமுறை அடிப்படையில், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பந்து வீச தடையில்லை. அதேநேரம், சென்னையிலுள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற, ஸ்ரீ ராமச்சந்திரா மையத்தில், ப…
-
- 0 replies
- 307 views
-
-
ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பணம் பகிர்ந்தளிப்பு ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ. 16 மில்லியன்) வெகுமதிகளை புதன்கிழமை (6) பகிர்ந்தளிக்கப்பட்டது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி,பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களினதும் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு தங்களுக்கான வெகுமதிகளை பெற்றனர். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்மு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும…
-
- 0 replies
- 370 views
-
-
வார்த்தைகளால் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் கோலி: பிஷன் பேடி காட்டம் வெற்றி பெற்று விட்டோம் அதற்காக அதனை நாராசமாக கொண்டாடுவதா? என்று கேட்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. | கோப்புப் படம்: வி.வி.சுப்ரமணியம். தேவையற்ற ஆக்ரோஷம் இசாந்த் சர்மாவின் தடையில் பரிதாபமாக முடிவடைந்துள்ளது என்று கூறிய முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, விராட் கோலி தனது ஆக்ரோஷம் பற்றிய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் பிஷன் சிங் பேடி கூறியதாவது: “ஆக்ரோஷம் பற்றிப் பேசிப் பேசியே கடைசியில் அது இசாந்த் சர்மாவின் தடையில் முடிந்துள்ளது. இதுதான் கிரிக்கெட் களத்திலிருந்து நாம் விரும்புவதா? இது பரிதாபமிக்க ஆக்ரோஷ வெளிப்பாடு. இன்னொன்றை…
-
- 0 replies
- 275 views
-
-
இந்திய அணித்தலைவர் விராட்கோலிக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மாவிற்கும் இடையில் விரிசல்கள் தோன்றியுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்குள் நிலைமை சுமூகமாகயில்லை சிரேஸ்ட வீரர்கள் மத்தியில் மோதல் காணப்படுகின்றது உலக கிண்ணதொடரே இதற்கு காரணம் என டைம்ஸ்ஓவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. விராட்கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஸ்கா சர்மாவின் இன்ஸ்டகிராம் தொடர்பிலிருந்து ரோகித் சர்மா விலகிக்கொண்டுள்ளதை தொடர்ந்து இரு சிரேஸ்ட வீரர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடு என்ற ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. ரோகித் சர்மா முன்னதாக விராட்கோலியையும் தனது இன்ஸ்டகிராம் தொடர்பிலிருந்து நீக்கியிருந்தார். இதேவேளை தனது இன்ஸ்டகிராமில் புகைப்பட…
-
- 0 replies
- 1k views
-
-
தோனிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்! வர்த்தக இதழ் ஒன்றில் , இந்து கடவுள் விஷ்ணு போல தோனி கையில் காலணி ஒன்றுடன் இருப்பது போன்ற அட்டைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. ‘God of Big Deals’ என்ற பெயரில் கட்டுரையையும் அந்த வர்த்தக இதழ் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போலவும் இந்து மக்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவது போலவும் இருப்பதாக கர்நாடகா, ஆந்திர மாநில நீதிமன்றங்களில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வகையில் இந்து அமைப்பை சேர்ந்த ஷ்யாம் சுந்தர் என்பவர் அனந்தப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து தோனிக்கு, ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தப்பூர் …
-
- 0 replies
- 528 views
-
-
விளையாட்டை பூரணமாக அனுபவித்து அதில் வெற்றியடைந்தவர்களில் ”வேதா” என அன்புடன் அழைக்கப்படுபவர் D.M. வேதாபரணம். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டும் அவருடைய இரண்டு கண்கள் போன்றவை. சமகாலத்தில் உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டு விளையாட்டுக்களிலும் தடம் பதித்து சாதனை செய்தவர். கரப்பந்தாட்டமும் இவரின் கரங்களுக்குக் கட்டுப்பட்டது. டானியல் முருகேசு, நகுலாம்புசம் தம்பதியின் மூத்த புதல்வனாக கரவெட்டியில் பிறந்தார். விபுலானந்தன், கற்பநாயகம்,வித்தியாதரன், மலர் தேவநாயகம், தேவாபரணம், தேவநேசன் ஆகியோர் இவரின் சகோதரர்களாவர். வேதாபரணத்தைப் போன்றே அவரது சகோதரர்களும் தடகளம்,உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சாதித்தவர்கள். பாடசாலை சார்பாகவும், ஊர் கழக அணி சார்பாகவும் விளைய…
-
- 0 replies
- 842 views
-
-
சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - ©AFPPhoto by Vipin Pawar / Sportzpics for BCCI பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு மற்றும் லெண்டில் சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியது. …
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு By Akeel Shihab இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேர் கொண்ட இன்று (03) மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்ப்பரினால் வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் இல…
-
- 0 replies
- 596 views
-
-
இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் நிக்கோ இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸில் வெற்றி பெற்ற மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் வெற்றி பெற்றார். இப்பந்தயத்தில் பெற்ற வெற்றி மூலம், தனக்கும், மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாகக் குறைத்துக் கொண்டார். இதுவரையில், இந்த வருடத்தில், ஆறு பந்தயங்களில் வென்றுள்ள ஹமில்டன் 250 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இருக்கின்ற நிலையில், ஏழு பந்தயங்களில் வென்றுள்ள றொஸ்பேர்க், 248 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டானியல் றிக்கார்டோ, 161 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்ற…
-
- 0 replies
- 427 views
-
-
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி... ஒருவர் அன்பாகக் கொடுப்பதை நாம் எப்பொழுதுமே அவர் நினைவாகப் பத்திரமாகப் பேணி வைப்பது வழமை. பொருளின் பெறுமதியை விட . அதை அன்போடு கொடுத்தவர்தான் எமக்கு முக்கியமானதாகின்றது. அதுவே எதிரியாகி விட்டால் கதை வேறு. தந்ததைத் திருப்பிக் கொடுப்பதில்தான் எம் கவனம் இருக்கும். நல்ல முறையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துஇ தந்ததிற்கு மேலாக முடிந்தால் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுக்கும்போதுதான் மனம் ஆறுதலடையும். இலங்கை விஜயம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கட் ஆட்டக்காரர்கள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி பல விமர்சனங்கள் கொ…
-
- 0 replies
- 617 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆவேசமாக வீசுவேன்: வஹாப் ரியாஸ் உறுதி நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த தொடரில் பவுலிங் செய்யும் வஹாப் ரியாஸ். | படம்.| ஏஎஃப்பி. ஆஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் விளையாடாத பாகிஸ்தான் தற்போது விளையாடவுள்ள நிலையில் வஹாப் ரியாஸ் ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 2015 உலகக்கோப்பையின் போது ஷேன் வாட்சனுக்கும் இவருக்கும் நடந்த அந்தச் சவாலான போட்டி மறக்க முடியாததாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதை விடவும் ஆவேசமாக வீசுவேன் என்கிறார் பாகிஸ்தான் வேகப்பட்ந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ். “நான் வீசியதிலேயே சிறந்த மேட்ச் அது (2015 உ.கோ.…
-
- 0 replies
- 238 views
-
-
லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார! (Highlights) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி துடுப்பெடுத்தாடிய போதே சங்கக்கார சதம் விளாசியுள்ளார். இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்து சரே அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் ச…
-
- 0 replies
- 845 views
-
-
`முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை!’ - பி.சி.சி.ஐ விளக்கம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை எனப் பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது. முகமது ஷமிமீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ…
-
- 0 replies
- 369 views
-
-
8 வருடங்களின் பின் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி அறிவிப்பு (நெவில் அன்தனி) வெளிநாட்டு கால்பதாட்ட அணி ஒன்றின் விளையாட்டுத்திறனைக் காணும் வாய்ப்பு எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை இரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக லிதுவேனிய அணியுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. லிதுவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியில் சிரேஷ்ட அனுபவம்வாய்ந்த ஏழு வீரர்களே இடம்பெறுகின்றனர். முன்னாள் தலைவர்களான சுஜான் ப…
-
- 0 replies
- 681 views
-
-
பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசன் முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைகழுவுகிறார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சரும், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் ஜேட்லியை சீனிவாசன் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டுள்ளார். பிசிசிஐ பதவியில், ஐபிஎல் அணி உரிமையாளராக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீதிமன்றத்தால் தற்காலி கமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார். த…
-
- 0 replies
- 306 views
-
-
கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிலையான கட்டமைப்பு அவசியம் - மஹேல ‘‘இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு உயரிய நிலையை அடைவதற்கு நிலையானதும் காத்திரமானதுமான கட்டமைப்பு ஒன்று அவசியம். நிருவாகம் மாறும்போது கிரிக்கெட் விளையாட்டின் கட்டமைப்பு மாறக்கூடாது. அவ்வாறு மாறும்போது அது வீழ்ச்சியை நோக்கி செல்லும்’’ என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இடைக்கால கிரிக்கட் நிருவாகசபையின் கௌரவ ஆலோசகருமான மஹேல ஜயவர்தன தெரிவித்தார். சிதத் வெத்தமுனி தலைமையிலான லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக சபை அதன் திட்டங்கள் குறித்து கிரிக்கட் தலைமையக கேட்போர் கூடத்தில் ஊடகங்களுக்கு நேற்று விளக்கியபோது மஹேல ஜயவர்தன மேற்கண்டவாறு கூறி…
-
- 0 replies
- 395 views
-
-
சங்கக்கார - மஹேல மோதல்! இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பிராந்தி யப் போட்டியில் சசெக்ஸ் பிராந்திய அணிக் காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன விளையாடவு ள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலுள்ள உள்ளூர் அணியொன்றான சசெக்ஸ் பிராந்திய அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்ப ட்டார். இதன்படி அந்த அணிக்காகக் களமிறங்கவுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் சகவீரரான குமார் சங்கக்கார சரே பிராந்திய அணி சார்பில் விளையாடி வருகின்றார். இதனால் சங்கக்காரா விளையாடும் அணிக்கு எதிராக ஜயவர்தன விளையாடவு…
-
- 0 replies
- 449 views
-
-
5 ஆண்டுகளுக்குப் பிறகு பாக். டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் ஷோயிப் மாலிக் ஷோயப் மாலிக். | கோப்புப் படம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷோயிப் மாலிக் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 13-ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. அதில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் 16-வது வீரராக மாலிக் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் மாலிக் இடம்பெறவில்லை. ஆனால் ஷோயிப் மாலிக் நல்ல பார்மில் இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த வீரரும்கூட. அதனால் அவரை அணியில் சேர்க்குமாறு அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததைத் தொட…
-
- 0 replies
- 188 views
-