விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
சுனாமியால் அனாதையான சிறுவனை கால்பந்து வீரனாக்கிய ரொனால்டோ! கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 14 நாடுகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தனர். சுனாமியில் சின்னாபின்னமான இந்தோனேஷியாவின் ஏக் கடற்கரை பகுதியில் 21 நாட்களுக்கு பிறகு மட்டுனிஸ் என்ற 3 வயது சிறுவன் அதிருஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான். மட்டுனிசின் பெற்றோரும் 2 சகோதரரிகளும் சுனாமியில் சிக்கி உயிரை இழந்திருந்தனர். சிறுவன் மட்டுனிஸ் மட்டும் எப்படியோ உயிர் பிழைத்திருந்தான். சிறுவனை மீட்க அவன் அணிந்திருந்த போர்ச்சுகல் அணியின் ஜெர்சிதான் காரணமாக இருந்தது. போர்ச்சுகல் அணி வீரர் மனுவேல் ரய் கோஸ்ட்டாவின் ஜெர்ச…
-
- 0 replies
- 348 views
-
-
பிரெஞ்ச் பட்டத்தை 12 ஆவது முறையாகவும் தனதாக்கினார் நடால் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நடால் 12 ஆவது முறையாகவும் சம்பியனாகியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2 அம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடாலும் 4 ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மும் மோதினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12 ஆவது முறையாகவும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி சம்பியனானார். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்ட…
-
- 0 replies
- 653 views
-
-
கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த விஷபாம்பு ; அதிர்ச்சியில் ரஞ்சி வீரர்கள் கொல்கத்தாவில் மேற்கு வங்க மற்றும் விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜே.யு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2வது நாளான இன்று, விதர்பா அணி வீரர்கள் பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பந்துவீச்சாளர் ஸ்வான்பில் பண்டிவார் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் கம்பு கட்டையுடன் ஓடி வந்து பாம்பை அடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த பாம்பு அவர்களுக்…
-
- 2 replies
- 450 views
-
-
Top 25 catches of all time ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.3k views
-
-
எம்.சி.சி தலைவராக மத்தியூ பிளெமிங் தெரிவு கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 51 வயதான பிளெமிங், இவ்வாண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து, தனது தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். லோர்ட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது, தற்போதைய தலைவரான றொஜர் நைட்டினால் பிரேரிக்கப்பட்டதையடுத்தே, தலைவர் பதவியை மத்தியூ பிளெமிங் ஏற்கவுள்ளார். எம்.சி.சியின் கிரிக்கெட்டுக்கான தலைவராகத் தற்போது பதவி வகிக்கும் மத்தியூ பிளெமிங், கடந்த 36 ஆண்டுகளில், அக்கழக…
-
- 0 replies
- 387 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் புற்றுநோயிலிருந்து மீண்டு சில மாதங்களுக்கு முன்பு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சகலதுறை வீராக அசத்தினார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை யுவராஜ் சிங், இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில், டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெ…
-
- 0 replies
- 445 views
-
-
யாழில் முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழா 2016-09-22 09:38:32 49 வருட வரலாற்றைக்கொண்ட தேசிய விளையாட்டு விழா முதல் தடவையாக இவ்வருடம் வடக்கு மாகாணத்தின் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அரங்கேற்றப் படவுள்ளது. தேசிய விளையாட்டு விழா 1967இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 41 அத்தியாயங்கள் நிறைவு பெற்றுள்ளன. இம்முறை 42 ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டு விழா இம் மாதம் 29ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் ஜ…
-
- 0 replies
- 409 views
-
-
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- அஸ்வின்,ஜடேஜாவுக்கு ஓய்வு. நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- அஸ்வின்,ஜடேஜாவுக்கு ஓய்வு. ந்திய, மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. MSK பிரசாத் தலைமையிலான இந்தியாவின் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்த முதல் குழாம் இதுவென்பதால் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆரம்ப வீரர்கள் சிக்கார் தவான் ,லோகேஷ் ராகுல் ஆகியோர் உபாதையடைந்துள்ள நிலையில் இளம் வீரர் மியாங் அகர்வால், பாயிஸ் பாஸால் அனுபவ வீரர் காம்பிர் ஆகியோருக்கு வாய்ப்பு காணப்பட்டாலும் இவர்கள் எல்லோரையும் பிந்தள…
-
- 0 replies
- 337 views
-
-
விராட் கோலிக்கு ஒரு விதி, டி.நடராஜனுக்கு வேறொரு விதியா?- சுனில் கவாஸ்கர் பாய்ச்சல் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம் முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன. சுனில் கவாஸ்கர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம் முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன. கபில்தேவ் முன்னதாக இது த…
-
- 2 replies
- 891 views
- 1 follower
-
-
ஆறு விக்கெட் எடுத்தாலும் டோணியிடம் திட்டு வாங்கிய சஹல்.. ஏன் தெரியுமா? பெங்களூர்: எப்போதுமே கூலாக காணப்படும் முன்னாள் கேப்டன் டோணி, நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் வெற்றி இலக்கு என்ற போதிலும், பேட்டிங்கின் சொர்க்கபுரியான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அது எட்டக்கூடிய ஒன்று என்பதால் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கிலும் அலர்ட்டாகவே இருந்தனர். பவர் பிளே ஓவர் என்றபோதிலும், ஆட்டத்தின் 2வது ஓவரை வீசும் பொறுப்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு கொடுத்தார் கேப்டன் விராட் கோஹ்லி. ச…
-
- 1 reply
- 437 views
-
-
முதலிடம் கிடைக்குமென நினைக்கவே இல்லை-இம்ரான் தாஹிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவே இல்லை என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர். இவர் சமீபத்தில் தென்னா பிரிக்காவில் இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரி சையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையிலும் அவர்தான் முதல் இடத்தில் உள்ளார். தற்போது தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு நியூசிலாந…
-
- 0 replies
- 267 views
-
-
உலகின் தலைசிறந்த வீரராக இருக்கவே விருப்பம்: வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே எப்போதும் தாம் விரும்புவதாக இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பாலி உம்ரீகர் விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த விருதை மூன்றாவது முறையாக பெற்ற வீராட் கோஹ்லி கூறுகையில், நான் எப்போதும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பதையே விருப்புகிறேன். அது சாத்தியமாக, மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் சிறப்பான செயல்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங…
-
- 0 replies
- 414 views
-
-
டோணியை பிடிக்காவிட்டால்... உங்களுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார் என அர்த்தம்... ரசிகர்கள் கலக்கல் டெல்லி: டோணி யின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை உருவாக்கி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே தோனியை அவமதிக்கும் நோக்கில் கருத்து பதிவிட்ட புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்த நிலையில் தற்போது தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளனர். புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் …
-
- 0 replies
- 182 views
-
-
முரளிதான் காரணம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஷித் கான், அந்த விருதினை தனது சகோதரருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். அதேவேளை தன்னுடைய திறமையான பந்துவீச்சுக்கு காரணம் முத்தையா முரளிதரன் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொஹாலியில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற போட்டியில்பஞ்சாப் –ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் இதில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 207 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 208 ஓட்டங்களை சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ரஷித் கான், புவனேஸ்வர் குமார் ஆகி…
-
- 0 replies
- 454 views
-
-
ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்! இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய…
-
- 0 replies
- 572 views
-
-
வீடியோ... பவுலர் மண்டையை தாக்கிய பந்து; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் மண்டையை பலமாக தாக்கியது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேல் விளையாட்டு என்ற எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வி்ளையாட்டிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் புயல்வேக பவுன்சர் பந்துகள் பேட்ஸ்மேன்கள் தலையை தாக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிந்து விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் …
-
- 0 replies
- 588 views
-
-
‘நல்ல நினைவுகளைத் தரும்’ கால்லே மைதானத்தில் 50-வது டெஸ்ட்: அஸ்வின் நெகிழ்ச்சிப் பேட்டி ஆர்.அஸ்வின் - கோப்புப் படம். கால்லே மைதானத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் அஸ்வினின் 50-வது டெஸ்ட் போட்டியாகும், இந்த மைதானத்தில் சிறப்பாக வீசிய நல்ல நினைவுகள் மகிழ்ச்சி தருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய பந்து வீச்சு சாதனைகள பலவற்றை முறியடிக்கும் நிலையில் உள்ள அஸ்வின், தனக்குப் பெருமை சேர்த்த கால்லே மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது கனவான ஒரு தருணமாகுமென்று தெரிவித்துள்ளார். “2015-ல் இந்த மைதானத்தில் அருமையாக வீசினேன், அதே மைதானத்துக்கு திரும்பி வருவது கனவு நனவாகும் தருணமாகும். நான் அப்போது …
-
- 1 reply
- 517 views
-
-
“அடிடா மச்சா“ Jaffna Kings அணியின் உத்தியோகப்பூர்வ பாடல் வெளியானது! https://athavannews.com/2021/1256112
-
- 2 replies
- 616 views
-
-
‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்!’’ - விஜய் சங்கர் #VikatanExclusive #INDvSL ‘‘கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கர் எண்டில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த மாதிரியான சூழலில் யார் பெளலராக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ ‘‘வேர்ல்டுலயே யார் பெஸ்ட் பெளலரோ, அவர்தான் வேணும். அவரோட பந்துல சிக்ஸ் அடிச்சி வின் பண்ணணும். அந்த பெளலர் பந்தை அடிச்சாத்தான், எனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்’’ என்றார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர். அந்த நம்பிக்கைதான் அவர் 18 மாத காயத்திலிருந்து மீண்டு வரக் காரணம்; இன்று முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம். இலங்கைக்…
-
- 0 replies
- 589 views
-
-
கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico ‘எல் கிளாசிகோ’ – கால்பந்து உலகின் சென்ஷேசன் வார்த்தை. நார்கோலெப்சி பிரச்னை இருப்பவரையும் நடுநிசி வரை கண் உறங்காமல் வைத்திருக்கும் மந்திர வார்த்தை. சீரான இதயத்தை சி.பி.ஆர் இன்ஜின் போல் அலறவைக்கக்கூடிய வார்த்தை. அப்படி என்ன இந்த கிளாசிகோவில் ஸ்பெஷல்? ரியல் மாட்ரிட், பார்சிலோனா என்னும் மாபெரும் இரு அணிகள் தங்கள் கௌரவத்திற்காகப் போராடும் 90 நிமிட யுத்தமே இந்த எல்-கிளாசிகோ. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை விட கிளாசிகோ மேட்ச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல். மொத்தக் கால்பந்து உலகமும் காத்துக்கிடக்கிறது. #ElClasico …
-
- 3 replies
- 399 views
-
-
2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை 2017 இல் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுத் தோல்விகளை மாத்திரமே கண்ட இலங்கை கிரிக்கெட் அணி, புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹவின் கீழ் புதிய மாற்றங்களுடன் 2018 இல் களமிறங்கவுள்ளது. ஐ.சி.சி இன் எதிர்கால போட்டி அட்டவணையின்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி 30 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) இதுவரை உறுதி செய்யப்பட்ட அடுத்த வருடத்துக்கான கிரிக்கெட் தொடர்களின்படி இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 போட்டிகள் பங்களாதேஷ் அணியுடனும், 3 போட்டிகள்…
-
- 0 replies
- 344 views
-
-
நம்பமுடியாத ரன் அவுட்கள், ஸ்டம்பிங்குகள்: மேட்ச் ஃபிக்ஸிங்கா என பதறிய ஐசிசி! (விடியோ) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் டி20 போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஆச்சயத்துடன் கருத்து தெரிவித்திருப்பதும் போட்டியின் தன்மை மேட்ச் ஃபிக்ஸிங்குக்கு உகந்ததா என்று ஐசிசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் நடைபெற்ற அஜ்மன் ஆல் ஸ்டார்ஸ் லீக் என்கிற தனியார் டி20 போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதில் துபாய் ஸ்டார் மற்றும் ஜார்ஜா வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் புதிரான முறையில் …
-
- 0 replies
- 372 views
-
-
ரொனால்டோ ‘100’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ‘ரவுண்டு–16’ போட்டியில், ரொனால்டோ 2 கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி, 3–1 என, பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான ‘ரவுண்டு–16’ சுற்றின், முதல் போட்டியில், ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் மோதின. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பாரிஸ் அணியின் ராபியாட், முதல் கோல் அடித்தார். இதற்கு, 45வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனா…
-
- 0 replies
- 222 views
-
-
இளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ICCRankings ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 1…
-
- 1 reply
- 414 views
-
-
அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எதிர்க்கட்சிகள் கண்டனம் இலங்கை கிரிக்கட் அணி மீது அரச தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் அணியின் உப தலைவர் மஹெல ஜயவர்தன மற்றும் முன்னணி வீரர் திலான் சமரவீர ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், குறித்த ஊடகம் கிரிக்கட் வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது…
-
- 1 reply
- 846 views
-