Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று கூறுகிறார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் தமிழின அழிப்பு என்பதே அரச படைகளின் மரபணுக்களின் உறைந்துபோன விடயம் என்பதையும் ஈழ இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முட…

  2. மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத…

  3. நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தேசியக்கட்சிகளில் குறிப்பாக ஐக்கியதேசியக்கட்சி(UNP)யிலோ அல்லது சுதந்திரக் கட்சி(SLFP)யிலோ வாக்கு கேட்டு சூறையாடப்படும் தமிழர்களின் வாக்குகள் மாற்று இன முதலமைச்சர் ஒருவரையே பெற்றுத்தரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லாத தன்மையுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நடந்து கொண்டு வருகின்றதையே அவதானிக்க முடிகின்றது. தற்போதைய நடவடிக்கைகளும் அதையே சுட்டி நிற்கின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் வறுமையைப்பயன்படுத்தி வாக்குகளைச் சூறையாட தேசியக் கட்சிகள் புறப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றது அல்லது உறங்குவது போல் நடித்துக்கொண்டு இருக்க…

  4. வணக்கம் தாய்நாடு... ஓடைக்கரை பருத்தித்துறை

  5. எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு. (ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது) வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009) “மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'த…

  6. வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு. தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது. இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது. அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை. அந்த நாட்களை நினைவு மீட்கையில் நெஞ்சம் உறைகிறது. தமிழன் குருதி உ…

  7. 2007 ஆம் ஆண்டு எனது அம்மாவை கடத்திச்சென்றார்கள் அப்போது அப்பா வீரச்சாவு அடைந்து சில காலங்களே தாண்டி இருந்தது என் தங்கைக்கு 6 வயது நானும் அக்காவும் பாடசாலை படித்துக்கொண்டு இருந்தோம். அன்று அம்மாவிற்கு அழைப்பு வந்தது. அக்கா நாங்கள் தொலைதூரம் நடந்து வந்ததால் பசியும் தாகமாகவும் இருக்கிறது எங்களுக்கு உணவு ஏதாவது எடுத்துக்கொண்டு மேல் வீதிக்கு வர முடியுமா என்று கேட்டார்கள், உடனே அம்மா குடிப்பதற்கு குளிர்பாணமும் உணவும் எடுத்துக்கொண்டு சென்றார் இது அம்மா அடிக்கடி இயக்கம் ஊருக்குள் வந்தால் செய்யும் விடையம்தான், ஆனால் மதியம் சென்ற அம்மா மாலை நேரமாகியம் வீடு வரவில்லை, நாங்கள் மாறி மாறி அழைப்பு எடுத்தோம் ஆனால் போன் நிறுத்தப்பட்டு இருந்தது, இரவு 9 மணிக்கு அழைப்பு வந்தது தம்பி உங்…

  8. 01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை…. தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர்.1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான ச…

  9. முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும். அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும். நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு) https://noolaham.net/project/121/12037/12037.pdf இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்ப…

  10. மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன் November 25, 2025 மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம். புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியா…

  11. ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரு…

  12. ஆண்டு 2009 இன் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை (வீடியோ) ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசனும் முக்கியமானவர். "சனல்-4" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் 'வீடியோ' எடுக்கவேண்டாம், படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஒளிப்பதிவுக் காட்சியை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன். அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூட்டைகள் அடுக்கி, அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா ஒளிப்பதிவுக் காட்சிகளையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப…

  13. மூலம்:- சுரேன் கார்த்திகேசு. இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு எண்டாங்கள். நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்குச் சாதாரணம். ஆனால், காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்கக்கூடாது. அந்த வலியைத் தாங்கமுடியாது. ஏற்கெனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு. கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள், முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாகச் செல்வோம். தாக்குதல் இடம்பெறும் இடத்திற்குச் சுமார் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்துவி…

  14. நான் மே 15 அன்று காயமடைந்து, எனது சகாக்களால் முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்த இராணுவ வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டேன். பின்பு அவர்கள் என்னை ஆனந்தபுரம் ஊடக கைவேலி பாடசாலியில் இருந்த இன்னொரு இராணுவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்த இராணுவத்தினரும் இராணுவ வைத்தியர்களும் என்னை என்ன செய்வது என்று தொடர்பாடல் கருவி மூலம் பலருடனும் கதைத்துக்கொட்டிருந்தார்கள். நேரம் கிட்டத்தட்ட பி.ப.6.30 - 7.00 இருக்கும். ஓரளவுக்கு இருட்டி விட்டது. என்னை ஒரு இராணுவ ரக் (Truck) ஒன்றில் ஏற சொன்னார்கள். நான் ரக்கில் ஏற மிகவும் கஷ்டப்பட்டேன், எனது வலது கை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, நெஞ்சுக் காயமும் வயிற்றுக்காயமும் வலித்துக்கொண்டிருந்தது. ஒருவாறு வாகனத்தில் ஏறியபின் அங்கு ந…

  15. இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்… 1992 கார்த்திகை 23 ஆம் நாள் ஒரு பெரு வீரன் எம்மை விட்டு விதையாகிய நாள். லியோ என்றும் மலரவன் என்றும் நாமம் கொண்ட வேங்கை அந்த மகாவீரன். பசீலன் -2000 என்ற விடுதலைப்புலிகளினால் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி அணி ஒன்றின் அணித்தலைவன். யாழ்கோட்டை, மணலாறு, முல்லைத்தீவு, கொண்டச்சி, மாங்குளம் சிலாவத்துறை காரைநகர் என்று பல முகாம்களின் வெற்றிக்கு வலுச்சேர்த்த அந்த அணியின் திறன் வாய்ந்த அணித்தலைவன். யாழ் மாவட்டத்தின் மாணவரமைப்புப் பொறுப்பாளர். அப்படி பலவற்றை சொற்களால் அடுக்கி அவன் வீர வரலாற்றை மேலெழுப்பிக் கொண்டே செல்லலாம். மணலாற்றுக் காட்டில் இருந்து 1991 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பித்த மாங்குளம் முகாம் மீதான் முற்றுகை மற்றும் கை…

  16. அநீதிக்குப் பிரபலமான நாடு படுகொலை செய்யப்பட்ட தனது கணவனின் படத்தோடு நடராசா தவமணி (69) கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 26 பேர் படுகொல…

  17. என்னவென்று சொல்வது எங்கள் இனப்பெண்கள் பட்ட துன்பங்களை, இனமானம் உயிர் என கொண்ட இனத்தை, அவமானம் செய்து பாலியல் வன்முறை கொடுமைகள் செய்த ஶ்ரீலங்கா இராணுவ கஜவர்களின் நடத்தைகள் இவை: இது கதையல்ல உண்மை…!

  18. https://www.facebook.com/share/r/1Ao1i3ENjC/?mibextid=wwXIfr தலைவரின் தாய்பற்றி வாலியின் கவிதை.

  19. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள். சிங்களக்கடற்படை வந்துவிடடால் வீரத்துடன் சமர்செய்தபடியே, கரையேபொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச்சேர்ப்பர். சிலவேளைகளில் காலநிலைசீரின்மையால் கடுங்கொந்தளிப்பான அலைகளின்மத்தியிலும், சுழன்றடிக்கும் காற்றின் போதும், விவேகத்துடன் அதனை எதிர் கொள்வார்கள். கடற்புலிகள் அடையும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளில் எழுதிவிடமுடியாது.எவ்வித துன்பத்தையும் தமிழீழ விடியலுக்காக சா…

  20. சமாதான காலத்தின் பின் முகமாலை முன்னரங்கில் வீரச்சா வேந்திய இராமநாதபுரத்தை சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடல் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல ஆழஊடுருவும் படையினரின் தாக்குதலில் வீரச்சாவெய்ந்திய மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடலும் இதே கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது. மகன் கட்டளைத் தளபதியாக முதன்மைச்சுடரேற்றிய அதே மேடையில் இரு மாவீரர்களின் (பிரிகேடியர் தீபன் லெப்.கேணல் கில்மன்) இந்த தந்தையாக இறுதி யுத்ததின் பின்னர் வேலாயுதபிள்ளை அவர்கள் நின்று பிரதான சுடரை ஏற்றிய வரலாறும் இதே துயிலுமில்லத்தில் நிகழ்ந்து. சிங்களப் பெண்மணியின் வாரிசுகளின் வித்துடல் முழங்காவில் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட வரலாறும் உண்டு. 1990 ஏப்ரல…

  21. இவர்களின் முழு வரலாறு எனக்குத் தெரியாது. தெரிந்ததையெல்லாம் எழுதிவைத்துச் செல்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தெரியுமென்றால் வரலாற்றை பதியுங்கள் உறவுகளே. இது நடந்தது 1997/1998 காலம் என்று நினைவு. ரத்வத்தை மீது கரும்புலித் தாக்குதல் நடத்தவெனு ஒரு மறைமுக கரும்புலிகள் அணியொன்று சென்றது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ரத்வத்தை வரும் போது அவன் மேல் தாக்குதல் நடத்த வேண்டும். ரத்வத்தையின் பாதுகாப்பு வீரர்கள் போன்று உடையணிந்து அவர்களைப் போன்றே ஒரு ஊர்தியில் ஏறி உட்புகுந்தனர் கரும்புலிகள். ஆனால் ரத்வத்தை வருவதற்கு பல நிமிடங்கள் தாமதமானதால் உள்ளே வந்தவர்கள் யார் என்ற ஐயம் எழ எல்லாம் குழம்பிப் போனது. சிங்களம் மோசமான விடயமொன்று நடைபெறயிருப்பதை எண்ணி விழித்தது. கரும்புலிகள் அங்ருந்த மண்டபத்திற்க…

  22. தமிழர் மரபுரிமை சுற்றுலா கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந…

  23. இது 1998ம் ஆண்டு யாழிலிருந்து வெளியாகும் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி. முழு விரிப்பு எனக்குத் தெரியாது. இருப்பினும் அறிந்தவற்றை இங்கே வரலாறாக எழுதி வைத்துச் செல்கிறேன். செக் குடியரசிலிருந்த (அப்படித்தான் நினைவு) ஓர் வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட தெற்காசியர்கள் வேலைசெய்து வந்ததாகவும் ஒருநாள் பின்னேரம் அவர்கள் அங்கிருந்த 4 வானூர்திகளை களவாடிச் சென்றுவிட்டனர் என்பதுதான் முக்கிய செய்தியே. அந்த வானூர்தி களவாடல் நிகழ்விற்குப் பிறகு ஒரு கிழமை கழித்து நான்கு வானூர்திகளுக்குமான உரிய பணம் காசோலையில் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிகழ்விற்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக அக்காலத்திய சிங்கள அரசாங்கம் குற்றம் சு…

  24. 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன…

  25. இத்தகவலானது வன்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகர் திருமலையிலிருந்த சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பிய தமிழீழப் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய்வுப் பிரிவில் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றிய போராளியின் வாக்குமூலம் ஆகும். இப்போராளி 2009 சனவரி மாதம் குடும்பச் சிக்கல் காரணமாக உறவினர்களாலையே காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டார். பின்னர் சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பியோடினார். இவர் 2022ம் ஆண்டு வழங்கிய ஓர் வாக்குமூலத்தின் ஒரு பகுதியிலிருந்த தகவலே இங்கு கட்டுரையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேடர் இனப் போராளியும் தமிழீழ புலனாய்வுத்துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர் ஆவார். அவரும் சூடைக்குடாவிலிருந்து தப்பிய போராளியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாவர். அவ் வேடர் இனப் போராளியை இவர் சிறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.