எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3759 topics in this forum
-
"நூல் அறுந்த பட்டம்" நிழலவன் யாழ்ப்பாணத்தின் மணல் கரையில் அமர்ந்தான், தூரத்தில் படபடக்கும் பட்டங்களை ரசித்தபடி அவன் கண்கள் பின்தொடர்ந்தன. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வானத்தில் வரைந்தன, ஒவ்வொன்றும் தனித்துவமாக வெவ்வேறு வடிவில், நிறத்தில், அளவில் இருந்தன. அவன் எண்ணங்கள் கி முன் 9500 ஆண்டுக்கு பறந்து சென்றன. பட்டம் ஆசியாவில் தோன்றினாலும், அதன் துல்லியமான தோற்றம் இதுவென எண்ணமுடிய விட்டாலும், இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசியில் உள்ள மூனா தீவில் [Muna island, southeast Sulawesi, Indonesia] கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 9500-9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் பட்டத்தின் பழமையான படம் காணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. எனினும் மற்ற சான்றுகள் கி மு 450 அளவில் சீன…
-
- 0 replies
- 358 views
-
-
"கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர்…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழீழத்திற்கான நாணயத்தாள் முதன்முதலில் 1991 இல் வரையப்பட்டது. அதனை வரைந்து தலைவரிடம் பாராட்டுப்பெற்றவர் தமிழீழத்தின் ஓவியர் திரு.சதீஸ் அவர்கள். ஆ.க.வெ. சமருக்கான முதல் மாதிரி வடிவமைப்பைக் (ஆனையிறவு) களிமண்ணில் உருவாக்கிக் கொடுத்தவரும் இவரேயாவார். இப்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். "இருபிள்ளைகளைக் கையில் பிடித்து அழைத்துச்செல்லும்" மாவீரர் குறியீட்டை வரைந்தவர் இவரது தந்தையான "அரஸ் Arts" அரசரட்ணம் ஆவார். பின்னாளில் புலிகளின் இந்த முயற்சி திரு. வரதராஜன் என்பாரின் அறுவுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டதாம்! --> Voice of Global Tamil Rights
-
- 0 replies
- 1k views
-
-
-
புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது. அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில…
-
- 0 replies
- 494 views
-
-
“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ? இங்கே இருக்கின்ற மக்களுக்கு தெரியும். பரந்து வாழும் உலகத்தமிழினம் வரைக்கும் எங்களைப்பற்றி பலதும் பேசுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் காணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ!!!!” -றெட்பானா மக்கள்..! சமாதான காலத்தின் முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளின் தளபதி ஒருவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது “ நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேணும், சிங்கள இராணுவம் தன்னுடைய மக்களை எங்களுடைய பிரதேசங்களில் குடியேற்றி அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் கொடுத்திருக்கிறது, இன்று நாம் சிங்கள இராணுவம் மட்டுமல்ல எல்லைக்கிரா…
-
- 1 reply
- 442 views
-
-
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் போரில் வெற்றி முரசம் முழங்கும் புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்" இப்படியாக உத்தேச தமிழீழத்தின் உதயத்தைப் பற்றிய பூரண நம்பிக்கையைத் தரும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைத் தனது மதுரக்குரலால் மக்களுக்கு எடுத்துக் கூறி வருபவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். 1960 களில் தமிழ்நாட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நமது கவிஞர் சாசி ஆனந்தன் அவர்கள் காலஞ்சென்ற சி. பா. ஆதித்தனார் அவர்களது தலைமையில் இயங்கிய 'நாம் தமிழர்' இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இயங்கிய காலத்தில் அவரால் இயற்றப்பட்ட கவிதைகளுக்கு தேனிசை செல்லப்பா அவர்கள் இசைவடிவம் கொடுத்து மேடைகள் தோறும் பாடி தமிழக மக்கள் மத்தியில் தமிழ் உணர்வையும் விழிப…
-
- 0 replies
- 367 views
-
-
-
- 0 replies
- 963 views
-
-
"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" / பகுதி: 01 அண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, "வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்" / "Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone " என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தம…
-
- 1 reply
- 448 views
-
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
ஓயாத அலைகள் மூன்று வடபகுதி நோக்கி திருப்பப்பட்ட போது அதன் கட்டம் மூன்று தொடங்கப்பட்டது. கட்டம் மூன்றின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் புதிய கேந்திர சமர்முனை ஒன்றைத் திறப்பதற்கான திட்டத்தை தேசியத் தலைவர் அவர்கள் கேணல் வீமன் அவர்களிடத்தில் வழங்கியிருந்தார். தலைவரின் திட்டத்தை கேணல் வீமன் (அப்போது லெப். கேணல் தரநிலையுடையவர்) போராளிகளுக்கு தெளிவாக விளக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார். தனங்கிளப்பிலிருந்த தளம் ஒன்றின் மீதான அதிரடித்தாக்குதலுக்கான திட்டத்தை கேணல் வீமன் அவர்கள் போராளிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அருகில் தினேஸ் மாஸ்டர் நிற்கின்றார் தரையிறக்கத்திற்கு முன்னர் இறுதியாக அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் வீமன் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவ…
-
- 0 replies
- 784 views
-
-
"கரை சேர்த்த கல்வி" "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு" - [குறள் 841] அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது. ஆகவே அந்த அறிவு , அந்த கல்வி தான் எல்லாத்தையும் இழந்த முல்லைமலரை கரை சேர்த்தது மட்டுமல்ல, அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, ஒரு விடிவெள்ளியாக மாற்றியது! அவளின் கதைதான் "கரை சேர்த்த கல்வி"!! போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கிராமத்தில், முல்லைமலர் என்ற தமிழ்க் குடும்பம் ஒரு காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது. பரம்பரை பரம்பரையாக உழவர்கள் மண்ணை உழுது வந்த அவர்களது பூர்வீக நிலம் அவர்களின் இருப்பின் இதயமாக இருந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப் …
-
- 0 replies
- 402 views
-
-
"தனிமரம்" மாங்குளம் என்ற அமைதியான, போர் சூழல் இன்று மறக்கப்பட்ட, கிராமத்தில் ஒரு தனி ஆலமரம் நின்றது, அதன் வேர்கள், குண்டுகளாலும் ஷெல்களாலும் எரிந்த பூமியில் ஆழமாக மண்ணுக்குள் நீண்டு இருந்தது. அதன் கீழ் ஒரு தமிழ்த் தாய் சுந்தரி அமர்ந்திருந்தாள். அவளது வாழ்க்கை தன்னைச் சுற்றியுள்ள நிலத்தைப் போல வாடி, தனிமையாகி இருந்தது. போர் முடிந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுந்தரிக்கு அவள் இதயத்தில் போர் இன்னும் முடியவில்லை, ஏனென்றால் அவள் குடும்பம் - அவளது கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் - விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆனால் அதன்பின் இன்னும் திரும்பி வரவில்லை. உள்நாட்டுப் போரின் முடிவு அமைதியின் கொடூரமான சாயலைக் கொண்டு வந்தது. போர் நிறுத்…
-
-
- 2 replies
- 632 views
-
-
https://irruppu.com/2022/11/01/முல்லைத்தீவு-பூனைத்தொடு/ கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்காணிப்புத் தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனை அழித்தொழிக்க சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை வெற்றிபெறவில்லை. இருந்தும் சிங்களக் கடற்படை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடல்வழி மூலம் தரையிறங்கி தாக்குவற்காக அமெரிக்காவில் கடற்பயிற்சி பெற்று நாடுதிரும்பிய சிங்களக் கடற்படையை வைத்து சிறப்புப் படகு படை (Special Boat Squadron ) ஒன்றை உருவாக்கி அதன் முதலாவது தாக்குதலாக சிங்களக் கடற்படை முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் கடற்புலிகளின் கடற்கண்காணிப்புத்த…
-
- 1 reply
- 886 views
-
-
-
சமாதான காலத்தில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்தார் அன்னார். அப்போது தனது குடும்பத்தினருடன் இவர் வந்ததாக அறியக் கூடியதாக உள்ளது. இவரின் குடும்பத்தில் தந்தையார் ஒரு தமிழ்ப் பற்றாளர் என்று அறியப்படுகிறார். பின்னர் இவரின் தந்தையால் ஓமந்தை வழியாக வன்னிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு புலிகளின் அரசியல்துறையினரிடம் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடவென அன்னார் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய போராளிக்குச் செய்யப்படும் அடிப்படைத் தகவல்கள் இவரிடமும் எடுக்கப்பட்டு பயிற்சிமுகாமிற்கு அனுப்பட்டு போராளியானார். பின்னாளில், 2006இல் நான்காம் ஈழப்போர் வெடித்த போது இவர் மன்னார் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் (Forward Defence Li…
-
- 1 reply
- 518 views
-
-
"கல்லூரிக் காதல்" யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு…
-
-
- 2 replies
- 662 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக…
-
- 0 replies
- 279 views
-
-
"நம் பெற்றோர்களின் கதை" ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.......... என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்த…
-
- 1 reply
- 621 views
-
-
எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
-
-
- 9 replies
- 654 views
-
-
‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர்ப்பட்ட தடைகளையும் தாண்டி எத்தனையோ உயிர்விலைகளைக் கொடுத்து அன…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
"தூரத்துப் பச்சை" போரின் பின் தன்னம்பிக்கையும் வலிமையும் வளர்ச்சியும் மிக்க நகரமாக இன்று மாறி வரவேற்கும் இலங்கை வடபகுதியின் எல்லையில் இன்னும் துயரமுகத்துடன் யுத்த வடுக்களை தங்கியவண்ணம் அந்தக் கிராமம் இருக்கிறது. விரல்களற்ற கைகளை நெற்றியில் வைத்து பார்த்தபடி, முகத்தில் யுத்தம் கொடுத்த கொடும் காயங்களை வரைந்தபடி அவள் தன் மகன் கண்ணனுடன் நின்றாள். வயல்களும் பயன்தரு மரங்களும் கோயில்களும் என்று முன்னைய நீண்டகால வாழ்வை உறுதியுடன் சொல்லும் எச்சங்கள் இன்னும் அந்தக் கிராமத்தில் நிற்கின்றன. யுத்தகால மண்மேடுகளும் அழிவுகளும் மிகுந்திருப்பதுடன் பேரழிவுகளின் காட்சிகளுடன் இன்னும் அதன் எல்லைப் பகுதி காணப்படுகிறது. இந்த கிராமமும் அதனை சுற்றிய கிராமங்களும் நம்பிக்கையுடன்…
-
- 0 replies
- 376 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது. முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே. மூல வலைத்தளம்: அறியில்லை மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான் 1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கு…
-
- 7 replies
- 1.2k views
-