Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன் Bharati October 21, 2020 ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன்2020-10-21T05:53:20+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் நியூயோர்க்சில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம்திகதி, ஐ.நா. மனித உரிமை சபையின் 2021ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனிதஉரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றிபெற்றுள்ளன. இவ்விடயத்திற்கு விபரமா…

  2. “I am just a small instrument. If I win, it is people’s victory. If I lose, it is people’s loss. I request people to be with me,” -Rajinikanth அரசியலுக்கு வாறேன் அரசியலுக்கு வாறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜனி அரசியலுக்கு வந்திருக்கிறார்.அரை நூற்றாண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கும் அந்த திராவிட கட்சிகளையும் இப்படி பாரம்பரிய பெரிய கட்சிகளான காங்கிரசையும் இந்து கட்சியையும் இப்ப வந்த ரஜனி எப்படி கையாளப்போகிறார்.ஊழலை ஒழித்து ஏதோ பல புதிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக கூறுகிறார். எது எப்படி இருப்பினும் முப்பது வருடத்துக்கு மேல் மாறி மாறி ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளின் முகத்தை மாற்ற முடியுமா என்பது சந்தேகமே.அவ்வளவு சீக்கிரமாக அந்த நடிகரால் மாற்றத்தை உண்டு பண்ண …

  3. முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ? எதிர்­வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­ றப்­ப­டாது விடின் அல்­லது கடந்த வருடம் நிறை­ வேற்­றப்­பட்ட பிரே­ரணை இன்னும் ஒரு வருட காலத்­திற்கு நீடிக்­கப்­ப­ டாது விடின் இலங்கை தொடர்­பான நீதிப் பொறி­ முறை விவ­காரம் அத்­ துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை­ மையே காணப்­ப­டு­வ­தாக சட்ட ஆய்­வா­ளர்கள் சுட்­ டிக்­காட்­டு­கின்­றனர் நாட்டில் இன­வாத சக்­திகள் தலை­தூக்­கு­வதை காண முடி­கின்­றது. மறு­புறம் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் அர­சியல் தீர்வு விவ­காரம், தேர்தல் முறை மாற்றம், வரவு – செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்பு என பல்­வேறு பர­ப­ரப்­பான விட­யங்கள் இடம்­பெற…

  4. இந்திய கொல்லைப்புறத்தில் அகலக் கால் பதிக்கிறது சீனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் திகதி, ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது. சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்த…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்ப்போரும் - செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள், அவர்கள்தான் சகல விடயங்களையும் கையாளுகின்றனர்- எனவே அவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு வகையில் அது சரியாக இருப்பினும் கூட, அவர்களது அனைத்து முன்னெடுப்புக்களும் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட நி…

  6. மியான்மார் தரும் பாடம் மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது மூன்றாவது இராணுவச் சதியை அரங்கேற்றியது. மியான்மாருக்கு இராணுவச் சதியும் இராணுவ ஆட்சியும் புதிதல்ல. ஆனால், மாறிவரும் உலக ஒழுங்கில், கொவிட்-19 நோயின் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவாலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த இராணுவச் சதி முக்கியத்துவம் வாய்ந்தது. பர்மா என்று பொதுவில் அறியப்பட்ட மியான்மார், பிரித்தானியா கொலனி ஆதிக்கத்திலிருந்து, 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. ஏனைய பிரித்…

  7.  சம்பூர் மீள்குடியேற்றம்: வீடற்றவர்களாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படும் மக்கள் - கந்தையா இலட்சுமணன் பெயருக்கு மண்வெட்டி, கத்தி, சமையல் உபகரணங்கள் என அடிப்படையான பொருள்களுக்காக 13 ஆயிரமும் தகரம், சீமெந்து, மண் கொள்வனவுக்கென 25 ஆயிரமும் கொடுத்துவிட்டு, முற்று முழுதாக அழிக்கப்பட்ட சம்பூரில் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று எப்படி அரசாங்கம் நினைக்க முடியும் என்பது சம்பூர் மக்களின் மிகவும் உருக்கமான கேள்வி. எதுவுமற்றவர்களாகத் தங்களது பிரதேசத்தில் இருந்து துரத்தப்பட்ட சம்பூர் மக்கள், பத்து வருடங்களாக உறுதியுடன் போராடித் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் எதுவ…

  8. தோப்பூர் பிரதேச சபை கோரிக்கை நியாயமானதா? புல்மோட்டையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் போது, இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாற்பட்ட எல்லைகளைக் கொண்ட பகுதியாகப் பிரித்து பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென்ற சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்யப்படுமாயின் இறக்கக் கண்டி பாலத்துக்கு அப்பாலுள்ள தமிழ் கிராமங்களும் அது போல் மறு எல்லைக்கு உட்பட்ட தமிழ் கிராமங்களும் பாதிப்படைவதுடன் சிறுபான்மைத் தன்மை பெற சூழ்நிலை உருவாகி விடுமென்ற கருத்தை தமிழ்த் தரப்பினர் முன்வைப்பதாகவும் தெரிய வருகிறது. தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கூடிக் குலாவி வாழும் மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள பிரதேச சபையை உடைத்து தோப்பூர் என்ன…

  9. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-11

  10. தமிழ் தேசியப் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பும் - நிர்மானுசன் பாலசுந்தரம் 01 நவம்பர் 2013 அறிமுகம் கருத்தியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர் தமிழர்களும், அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் தமிழக அரசியலும் சிக்குண்டாலும், தமிழர் தேச அரசியலில் அவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. அத்தகைய சூழலில், ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்திய புலம்பெயர் மற்றும் தமிழக அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்துமாற் போல் சில கருத்துக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு 2009 ல் நடாத்திய இனஅழிப்புப் போருக்குப் (Genocidal war) பின்னர், தமிழ…

  11. இலங்கைக்கு ஜனாதிபதி முறை பொருத்தமானதா? நாடாளுமன்ற முறை பொருத்தமானதா? January 20, 2016 Photo, Selvaraja Rajasegar ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காகவன்றி சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்துவதற்காகவே ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசின் அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயகமயமாக்கும் ஓர் அரசியல் யாப்பு சீர்த்திருத்தமொன்றுக்கூடாக மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அரசியல் யாப்பு தொடர்பான உரையாடலில் தவிர்க்க முடியாத விதத்தில் எழுப்பப்பட்டு வரும் ஒரு கேள்வி ஜனாதிபதியை மையமாகக் கொண்டிருக்கும் தற்போ…

  12. 20 ஆவது திருத்தமும் கிழக்கு மாகாண சபையும் வாக்­கெ­டுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் 10 பேர் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் 7 பேர் ஐக்­கிய தேசியக் கட்சி 3 உறுப்­பினர்கள், ஐ.ம.சு.கூ (01), சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி (02), எதிர்க்­கட்சி உறுப்­பினர் (01) ஆக 24 பேர் ஆத­ர­வா­கவும் எதிர் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் எண்மர் பிரே­ர­ணைக்கு எதிர்த்து வாக்­க­ளித்­தனர். 37 பேர் கொண்ட சபையில் தவி­சாளர், தவிர ஏனைய நால்வர் சபைக்கு வருகை தர­வில்லை. சட்­டமா அதி­ப­ரினால் உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் திருத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் மாகாண சபைக்­கு­ரிய அதி­கா­ரங்­களை பறிக்­காத வகையில், 20 ஆவது சட்டத் திரு…

  13. சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் நியூயோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை வெ ளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரி‍மை பேரவை வலியுறுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் அமெ­ரிக்கா வந்­துள்ள நிலையில் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய…

  14. அரசியலமைப்பு உருவாக்கம் சொற்களை வைத்து விளையாட வேண்டாம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-7

  15. தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா? - க. அகரன் அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் களத்தில், பெரும் கட்சிகளாக வலுப்பெற்று, ஒன்றோடொ…

  16. இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி! ___________________ ஞானேஷ்வர் தயாள் ___________________ இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது. இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள…

    • 0 replies
    • 259 views
  17. சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு Dec 12, 2014 | 12:31 by நித்தியபாரதி முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு Ceylontoday ஆங்கில ஊடகத்தில் Rathindra Kuruwita எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் சிறிலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் முன்னால் போர் வலயத்தில் உள்ள காடுகள் துப்பரவு செய்யப்பட்டு செல்வாக்கு மிக்க வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலத…

  18. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன் உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை. 2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என …

  19. ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வாழாவிருத்தல் மொஹமட் பாதுஷா ஒற்றுமை பற்றி, முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாகப் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில், ‘ஒற்றுமை ஒற்றுமை’ என்று பேசிப்பேசியே, பல அடிப்படைகளில் பிரிக்கப்பட்ட இனக் குழுமங்களுள் ஒன்றாகவே, இலங்கை முஸ்லிம்கள் இன்றிருக்கின்றனர் என்பதை, திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், இப்போது புவியியல் அடிப்படையிலும் பல பிரிவுகளாக, முஸ்லிம்கள் பிரித்தாளப்படுவதைக் காணமுடிகின்றது. முக்கியமான தருணங்களில், ஒற்றுமையின் பலத்தை, முஸ்லிம்களால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. மார்க்க அடிப…

  20. கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் மார்ச் 2. 1815 ஆம் திகதி இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதே தினம் வாரியபொல சுமங்கள தேரர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி காலால் மிதித்து சிங்கக் கொடியை ஏற்றியதாக பல்லாயிரக்கணக்கான சிங்களக் கட்டுரைகளும், நூல்களும் பதிவு செய்து வந்திருக்கின்றன. பாடசாலை பாடப்புத்தங்களில் இன்றுவரை அப்படியொரு கதை எழுதப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் அதுவொரு கட்டுக்கதை என்றும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட பலர் தமது ஆய்வு…

  21. கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 04:10 Comments - 0 மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது. இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்…

  22. மிகக் கவனமாக சிந்திக்க வேண்டிய முஸ்லிம்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:51 ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னரே, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்றும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்றும் அரசியல் அரங்கில், கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தங்களது எதிர்பார்ப்புகள் எல்லாம், நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் முழுமூச்சாக நின்று, ஆட்சிபீடமேற்றிய தற்போதைய அரசாங்கமானது, அந்த எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும்…

  23. ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:52 Comments - 0 2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எ…

  24. தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா? அ. நிக்ஸன் படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில்…

  25. “இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும் August 22, 2025 5:09 am -அ.நிக்ஸன் இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் – எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு என்பது அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளின் பிரதான கடமை. செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு பற்றிய செயற்பாடுகளின் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ”பயங்கரவாத செயற்பாடுகள்” – ”பாசிசம்” என்ற கோசங்கள் மீண்டும் சிங்கள ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. இன அழிப்பு என்பதை கனடாவின் பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும், கனேடிய அரசு என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.