Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியல்வாதி கோட்டாவின் அவலம் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:29 Comments - 0 சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்‌ஷ. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார். அதில், “தமிழ் மக்களின்…

  2. ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 -இலட்சுணனன் லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின…

  3. வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..! ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை தேர்தல் ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல் உச்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றது. இந்­த­ நி­லையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிடப் போகும் பிர­தான வேட்­பாளர் யார் என்­பதே, இப்­போது முதன்­மை­யா­னதும் பிர­தா­ன­மா­ன­து­மான கேள்­வி­யாக இருக்­கி­றது. ஏனென்றால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள், ஜ…

  4. படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 05 கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீ வ…

  5. காக்கா எச்சமா, காக்கைக் கூடா? காரை துர்க்கா / 2020 ஜூன் 16 பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் விகாரை அமைக்கப்பட்டு, அதற்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவை, கடந்த வாரப் பத்திரிகைச் செய்திகள் ஆகும். தமிழர் ஒருவர், கொழும்பில் மத்திய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதிலும், வெளி மாவட்ட மீனவர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிக் கடற்றொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை. அடுத்து, அந்நியர் ஆட்சிக் காலத்தில் கூட…

  6. ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும். தனது 90 ஆவது வயதில் கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கியூபாவைத் தலைமையேற்று வழிநடாத்திய…

  7. இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ? நாட்டில் இனவாத மதவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது சிறுபான்மை மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி குறித்த இனவாதிகள் பேரணியாகச் சென்றமை அங்கு பெரும் பதற்ற நிலைமையைத் தோற்றுவித்திருந்தது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாக சென்றனர். எனினும் இக் குழுவினர் மட்டக்களப்புக்குச் செல்வதானது அங்கு பெரும்பான்ம…

  8. விக்னேஸவரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் ஆரம்பம் - -அ.நிக்ஸன்- 01 அக்டோபர் 2013 Notes- நிர்வாக கட்டம் தேவiயில்லை தரையில் பாயை விரித்து மாகாண சபைக் கூட்டத்தை மட்டும் நடத்திக்காட்டுங்கள். Notes- தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக ஜனநாயக வழியில் அமைதியான முறையில் வீதியில் கூட இறங்காமல் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் இப்படித்தான் பாருங்கள் என்பதை வெளிப்படுத்தி 60ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாப்படுத்த முடியும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான காலம் தற்போது இல்லை என்பதை கொழும்பின் பேச்சுக்கள் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று விட்டது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அரசாங்கமும் பங்காளிக் கட்சிகளும் க…

  9. பிலிப்பைன்ஸ் - சீன பொருளாதார உறவு - ஜனகன் முத்துக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் - சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பி…

  10. உள்நாட்டுக் கடனைப் பற்றிப் பேசுவது எப்போது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வரலாற்றில், வாங்கிய வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவியலாத நிலையில், முதன்முறையாக நாடு வங்குரோத்தாகியுள்ளது. உலகளாவிய ஊடகங்களில் இது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், இவ்வாறு வங்குரோத்தான முதலாவது நாடு இலங்கையாகும். இங்கு நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, அரசுக்கெதிரான ஓர் எதிர்ப்பியக்கம் காலிமுகத்திடலில் போராடுகையில், அது சர்வதேச கவனம் பெறவில்லை; ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மரணமோ, காலிமுகத்திடலில் ஏவப்பட்ட வன்முறையோ, சர்வதேச கவனத்தைப் பெறவில்லை. ஆனால், இலங்கையால் பெற்றுக்கொண்ட …

  11. சிவப்பாகும் இலங்கை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா :- 22 செப்டம்பர் 2014 இன்று முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழ்ப்பெண் போல் உடையணிந்த சீனப்பெண் ஒருவர் பாடசாலைச் சிறுவர்களுடன் நிற்கும் படத்தைக் காண நேர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு தமிழ்ச் சமூகம் வெளி உலகுடன் நேரிடையாகத் தொடர்பாடலை நிகழ்த்தி வருகிறதென்பது வெள்ளிடை மலை. ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சீனத் தோற்றம் கொண்ட சில பிக்குகள் யாழ்நகர வீதிகளில் றாபானைத்தட்டிக் கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அவர்கள் அரசின் உளவாளிகள் எனக்கருதப்பட்டுப் போராளிகளால் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இந்தச…

  12. மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கும் முன்னாள் UNP உறுப்பினர் மதிராஜ்

  13. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் -சுபத்ரா ஜெனீ­வாவில் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காத போதிலும், இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வுகள் ஒத்­து­ழைப்­பு­களைப் பலப்­ப­டுத்­து­வதில் அமெ­ரிக்கா தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. கடந்­த­வாரம் அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யி­ருந்த செவ்­வியில், அமெ­ரிக்க - இலங்கை உற­வுகள் பல­ம­டைந்து வரு­வது பற்றிக் கூறி­யி­ருந்தார். ஜெனீ­வாவில் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் இன்­னமும் நிறை­வேற்­ற­வில்லை என்றும், அவற்றை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்…

  14. ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே? - யதீந்திரா ஆட்சிமாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த எவருமே தற்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை. இதில் சில தமிழர்களும் அடக்கம். இவர்களில் கொழும்பை மையப்படுத்தி வாழ்பவர்களும் மற்றும் கொழும்பு மைய உயர்குழாம் ஒன்றுடன் தொடர்புகளை பேணுவதை பெருமையாகக் கருதும் சில வடக்கு கிழக்கு தமிழர்களும் அடங்குவர். இவர்களில் அனேகர் அரசுசாரா நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிவருபவர்கள். அரசு சாரா நிறுவனங்களின் நிதியின் அளவுக்குத்தான் இவர்களது செயற்பாடுகளும் நீண்டு செல்லும். ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவதில்…

  15. முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச வெற்றிகள் என்று கொள்ளப்படும் அனைத்தும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே பெறப்பட்டவை. அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று போராட்டத்தை வழிநடத்திய முப்பது ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றவை. வடக்கு - கிழக்கின் பெரும் பகுதியில், அரச தலையீடுகள் அற்ற இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை இரண்டு தசாப்த …

  16. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 01:23 PM ரொபட் அன்டனி இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சாதகமான நிலைமை தோற்றம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இலங்கை பெற்றுள்ள 12 பில்லியன் பிணைமுறி கடன்களில் 2.4 பில்லியன் கடன் இரத்து செய்யப்படும் அதாவது ஹெயார்கட் வழங்கப்படும் சாதக நிலை தோன்றியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணை பணத்தை பெற்றுக் கொள்வது தாமதமடைந்துள்ளது. சர்வதேச கடன் மறுசீரமைப்பு தாமதமடைகின்றமையே இதற்கு முக்கிய காரணமாகவுள்ளது. இந்த பின்னணியிலேயே தற்போது கடன் மறுசீரமைப்பில் ஒரு முன்னேற்றகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்…

  17. புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தே…

  18. படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜய…

  19. தமிழர்கள் அடிமைகளாகும் அரசியல் : சபா நாவலன் தெற்காசியாவின் தென்மூலையில் உலகத்தின் வரைபடத்தில் கண்டுகொள்ளக் கடினமான தீவிலிருந்து இரத்தவாடை மனித குலத்தை அச்சம் கொள்ளச் செய்கிறது. பல்லாயிரக் கணக்கானா போராளிகள் ஈழ விடுதலைக்காக தமது உயிரைத்தியாகம் செய்திருக்கிறார்கள். மக்களின் மானசீக அங்கீகாரத்தோடு ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் எழுச்சி பெற்றது. சமூக வரம்புகளை எல்லாம் மீறி பெண்கள் கூட்டம் துப்பாக்கிகளோடும், சீருடைகளோடும் வீதிகளில் விடுதலை தேடிப் போராடியிருக்கிறது. உலக நாடுகளதும் அத்தனை அதிகார மையங்களதும் ஆதரவோடு வன்னியில் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கிறார்கள். வன்னிப் போர் நாற்பதாயிரம் ஊனமுற்ற சிறுவர்களை உருவாக்கியிருக்கிற…

  20. சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி APR 30, 2016 | 3:22 கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இரா.சம்பந்தன் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கேள்வி: தாங்கள் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த சில ந…

  21. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரு…

  22. [size=4]நாமலை ஜனாதிபதியாக்கும் நாட்டுத் தலைவரின் சூட்சுமம் [/size] [size=4][/size] [size=4]ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக்கும் திட்டத்தை நிறைவேற்ற இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மட்டுமல்லாது வேறு பல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. [/size] [size=4]இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக பதவியில் அமரவேண்டியவர் நாமல் ராஜபக்ஷவே. அவ்விதம் அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தத் தவறினால் அது நாட்டுக்குப் பெருத்த நட்டமாகவே இருக்கும்'' இது அண்மையில் தேசிய இளைஞர் மன்றத் தலைவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்தாகும். நாமல் ராஜபக்ஷக்கு அரசியல் பிரபல்யம் தேடிக்கொடுக்க முயலும் தரப்புக்களுடன், தம்மையும் இணைத்துக்கொள்ள முயலும் அதீ…

    • 0 replies
    • 961 views
  23. சமூக நீதியைப் புறந்தள்ளும் தமிழ்த் தேசியம் இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார்கள். பழைய தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே, தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் தமிழ்த் தேசியம் குறித்தான தமது கற்பிதங்களை வைத்திருக்கின்றன. ஆய்ந்து நோக்கில், இவர்கள் சொல்கின்றதும் வரையறுக்கின்றதுமான தமிழ்த் தேசியம் என்பது, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்பது விளங்கும். தமிழ்த் தேசியம், தமிழ் மக்களை எத்தகையதொரு முட்டுச் சந்திக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது பற்றி, ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை, வரலாறு தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறது. ஆனால், நாம் அதற்குத் தயாராக இருந்ததில்லை. அதற்கான விலையை, நாம் தொ…

  24. ஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François Hollande) யும் அந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த படுகொலையிலிருந்து தப்பி இன்றும் வாழும் சிலரையும் அவர்கள் சந்தித்தனர். தனது நாட்டு நாசிப்படைகள் …

  25. பன்டோரா அறிக்கை (Pandora Papers) October 16, 2021 * இலங்கையில் ஒரு புறம் மக்கள் மரணித்துக் கொண்டிருந்த வேளை இன்னொரு புறத்தில் ஒரு வம்சம் நாட்டின் செல்வத்தை வெளிநாட்டில் பதுக்கிய வரலாறு * ஒரு ஆளும்பரம்பரை தோற்றம் பெற்ற வரலாறு * சிங்கள பெருந்தேசியவாதம் என்ற பெயரில் நாடு கொள்ளையிடப்பட்ட வரலாறு — தொகுப்பு : வி.சிவலிங்கம் — இலங்கை அதிகார வர்க்கத்தின் சில குடும்பங்களைச் சேர்ந்த சிலர் ஆடம்பர வீடுகள், கலைப்படைப்புகள் மற்றும் பணங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு இரகசியக் கணக்குகளில் மறைத்து வைத்திருப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இலங்கையின் அதிகாரத்திலிருக்கும் ராஜபக்ஸ குடும்பத்தினரைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் உலக ஊடகங்களில் வெளியாகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.