Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள். இம்மாதம் ஆபிரிக்காவின் ஆளுமைகள் இருவர் மரணித்துள்ளார்கள். ஒருவரை அறியும் அளவுக்கு,…

  2. எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது வட­மா­காணசபைத் தேர்­தல்? வடக்கு மாகாண சபை, தனது ஆயுள் முடி­வடைவதற்­கான நாள்­களை எண்­ணிக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்­த­வ­ருட இறு­தி­யில் அல்­லது அடுத்த வருட ஆரம்­பத்­தில் வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில், வடக்கு மாகாண சபைக்­காக நடை­பெ­றப்­போ­கும் புதிய தேர்­தலை பெரும்­பான்­மைக் கட்­சி­கள் இலக்கு வைத்து அதற்­கேற்ப காய் நகர்த்­தல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கி­றது. தென்­னி­லங்­கைக் கட்­சி­க­ளின் வடக்கு நோக்­கிய வருகை கூட்டு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்…

  3. ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள் புருஜோத்தமன் தங்கமயில் / ராஜபக்‌ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்‌ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் பிரச்சினைகளில், மொழிக்கொள்கை முக்கியமானது. ஆட்சியிலிருந்த காலத்தில் அது தொடர்பான…

  4. ஜனநாயக தேர்தல் முறை தடம்புரண்டு செல்கின்றது த. மனோகரன் ஆங்­கி­லேயர் ஜன­நா­யகம் என்ற கோட்­பாட்டு முறை­மையில் நம் நாட்டில் தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்திச் சென்­றனர். இன்று நாமோ அதி­லி­ருந்து நழுவி படிப்­ப­டி­யாக மக்­க­ளுக்காக மக்களால் தெரி­வு­செய்­யப்­பட்ட மக்­க­ளாட்சி என்ற நிலை­யி­லி­ருந்து விடு­பட்டு அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் ஆதிக்­கத்­திற்கு நம்மை உட்­ப­டுத்தி வரும் நிலைமை உரு­வா­கி­வ­ரு­வதை உண­ரா­துள்ளோம். மாகாண சபைக்­கான தேர்தல் எந்த முறையில் அதா­வது ஏற்­க­னவே நடை­மு­றை­யி­லி­ருக்கும் விகி­தா­சாரத் தேர்தல் முறை­யிலா அல்­லது தொகுதி வாரி­யாக ஐம்­பது வீதமும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­க­ளி­ன­டிப்­ப­டையில் ஐம்­பது வ…

  5. உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் எம்.எஸ்.எம். ஐயூப் / இனக் கலவரங்களின் போது குற்றமிழைப்போரை, அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தண்டிக்கப்படுவோரது பிள்ளைகள், அத்தண்டனைகளால் பாதிக்கப்பட்டு, பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதனைத் தடுக்கவும் வழிமுறைகளைக் காண வேண்டும். - இவ்வாறு கூறுகிறார், கண்டி மாவட்டத்தில் மெத மஹநுவர, அம்பால என்னும் கிராமத்தில் இருக்கும், பேரகெட்டிய ஸ்ரீ இஸிபத்தனாராமய விகாரையின் பிரதம மதகுருவான, கீனபெலெஸ்ஸே உப்பாலி ஞானிஸ்ஸர தேரர். அம்பால என்பது, கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்…

  6. கேட்டிலும் துணிந்து நில் காரை துர்க்கா / மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், சிந்திக்கத் தெரிந்த, நெஞ்சத்தில் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட விலங்கும் மனித இனமே ஆகும். ஆனாலும் மனிதஇனம், மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிருள்ளவைகள், சடப்பொருள்கள் என அனைத்தையும் வெற்றி கொள்வதில் ஆனந்தம் கொள்கின்றான்; மகிழ்ச்சி அடைகின்றான். மனங்களைக் கடந்து வெற்றி கொள்வதிலும் பார்க்க, பிணங்களைக் கடந்து வெற்றி கொள்வதில் பூரிப்பு அடைகின்றான். மனிதத்தை விதைப்பதற்குப் பதிலாக, மனிதத்தைப் புதைக்கின்றான். இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள், இலங்கைத்தமிழ் இனம் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலையற்ற, வேண்டாத …

  7. தூண்டில் இரைகள் கே.எல்.ரி.யுதாஜித் / இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. பஸ், ஓட்டோ, இனி ரயில்க் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. உணவகங்கள் எல்லாமே, தமது உற்பத்திகளுக்கு விலைகளை உயர்த்திவிட்டன. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடக்குமா, நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமா, ஜனாதிபத்தித் தேர்தல் எப்ப…

  8. ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல் -ஜனகன் முத்துக்குமார் ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக சவூதி அரேபியா, தனது பிராந்திய வல்லரசாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், துருக்கி, குர்திஸ் இன மக்களுக்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா உதவியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதிலிருந்து, ரஷ்யாவைப் புதியதொரு பங்காளராகப் பார்க்கும் மனப்பாங்கு, மத்திய கிழக்கில் உருவானது எ…

  9. துருக்கி ஜனாதிபதியின் துடுக்கும் நாணயத்தின் வீழ்ச்சியும் வேல் தர்மா 2018ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இருந்து 2018.-08-.10ஆம் திகதி வரை துருக்­கிய நாண­ய­மான லிராவின் பெறு­மதி 40 வீதத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அதில் மோச­மான வீழ்ச்­சி­யாக 25 வீதம் வீழ்ச்சி 2018-.08-.06ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஏற்­பட்­டது. அந்த ஆடிக் கடைசி வெள்­ளியை லிரா ஆடிய வெள்ளி என அழைக்­கலாம். லிராவின் பெறு­மதி வீழ்ச்­சிக்­கான காரணம் அமெ­ரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்­பிற்கும் துருக்­கிய ஜனாதிபதி ரெசெப் எர்­டோ­கா­னுக்கும் இடையில் ஏற்­பட்ட முறுகல் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால் அமெ­ரிக்­கா­வுடன் முறுகல் இல்­லாத பல நாடு­களின் நாண­யங்­கள் (சீனா, இந்­தியா, ஆ…

  10. போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா? அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா? ஆனால், ஏதோ துட்டகைமுனு, எல்லாளனை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் சண்டையிட்டு, வெற்றி கண்டதைப் போல், தானும், பிரபாகரனை நேரில் சந்தித்து, சண்டையிட்டு வெற்றி கண்டதாக, போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ம…

  11. இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் அகப்­பட்ட இலங்கைத் தீவு இரண்டாம் உலகப் போர் காலத்­துக்குப் பின்னர், அமெ­ரிக்க வர­லாற்றில் மிக அதி­க­மான பாது­காப்புச் செல­வி­ன­மாக அமையப் போகும், 2019ஆம் ஆண்­டுக்­கான பாது­காப்பு நிதி ஒதுக்­கீட்டு அங்­கீ­காரச் சட்­டத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அண்­மையில் கையெ­ழுத்­திட்­டி­ருந்தார். இதற்­க­மைய, 681.1 பில்­லியன் டொலர், 2019ஆம் ஆண்டில் பாது­காப்பு நிதி­யாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. சீனா­வுக்கும், ரஷ்­யா­வுக்கும் போட்­டி­யாக, அமெ­ரிக்­காவின் படை­ப­லத்தை அதி­க­ரிக்கும் நோக்­கி­லேயே டொனால்ட் ட்ரம்ப் நிர்­வாகம், பாது­காப்பு நிதி ஒதுக்­கீட்டை கணி­ச­மாக உயர்த்­தி­யி­ருக்­கி­றது. இந்த நிதி ஒத…

  12. நிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இலங்கை குறித்த இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான நிபுனரும் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விஷேட அறிக்கையிடும் ஐக்கிய நாடுகள் நிபுனரும் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தயாரித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அமர்வில் பிரஸ்தாபிக்கவுள்ள…

  13. வடக்கின் முத­ல­மைச்சர்; முடி­வில்லாப் பிரச்­சினை வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடி­வ­தற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்­கின்ற நிலையில், வடக்கின் அர­சியல் களம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. முத­லா­வது வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட 6 மாகாண சபை­க­ளுக்கும், எப்­போது தேர்தல் நடத்­தப்­படும் என்­பது நிச்­ச­ய­மற்ற நிலை­யி­லேயே இருக்­கி­றது. தேர்தல் முறை தொடர்­பாக கட்­சி­க­ளுக்­கி­டையில் இன்­னமும் கருத்­தொற்­றுமை ஏற்­ப­டாத நிலையில், தேர்­தலை எப்­படி – எப்­போது நடத்­து­வது என்று இன்­னமும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் இழு­பறி நிலை நீடிக்கும் சூ…

  14. தமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் விவாதிப்பதே மேற்படி கூட்டத்தின் முக்கிய நோக்கம். பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றனர். விக்கினேஸ்வரனையே தொடர்ந்தும் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாக இருந்திருக்கிறது. அவர்களைப் பொருத்தவரையில் விக்கினேஸ்வரன் ஒரு அணியா…

  15. நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் மக்களுடையவை. அவற்றின் மொத்தப் பெறுமதி ஐம்பது இலட்சத்துக்கும் கூடுதலானது என்று மீனவர்கள் கூறுகிறார்கள். படகுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.படகுகள் எரிக்கப்படடமை தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நிசாந்த என்பருக்குச் சொந்தமான படகுகள் நாயாற்று இறங்குதுறையிலிருந்துஅகற்றப்பட்டுள்ளன. ஆனால் நாயாற்று முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-3…

  16. தீர்வு காணப்படுமா? நாயாற்று கட­லோ­ரத்தில் வன்­மு­றை­ வெடித்து வடிந்­துள்ள போதிலும், தென்­னி­லங்கை மீன­வர்­க­ளுக்கும் முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளுக்குமிடையில் எழுந்­துள்ள முரண்­பாடு சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது எனக் கூறமுடி­யாது. அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட வன்­முறை கவ­லைக்­கு­ரி­யது. கடும் கண்­ட­னத்­துக்கும் உரி­யது. யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வுடன் கூடிய நல்­லு­ற­வையும், ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள மோச­மான சவால் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை. கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்ற மீன­வர…

  17. இழந்து விட்ட அரசியல் ஓர்மம் தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட…

  18. நல்­லி­ணக்­கத்­திற்கு வித்­திட்ட நல்­லாட்சி முப்­பது வரு­டத்­திற்கும் மேலாக இந்­நாட்டில் குடி­கொண்­டி­ருந்த யுத்­த­மா­னது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் மக்­களின் வாழ்க்கை நிலை படிப்­ப­டி­யாக முன்­னேற்றம் கண்­டது. எனினும், நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இருந்த சந்­தர்ப்­பத்­தினை கடந்த அர­சாங்கம் தமது கவ­ன­யீ­னத்­தினால் இழந்­தது. நாட்டின் ஆங்­காங்கே வாழ்ந்து கொண்­டி­ருந்த சிங்­களம் – தமிழ், சிங்­களம் -– முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மோதல் ஏற்­பட்­டது. அதன் உச்ச கட்­ட­மாக 2014ஆம் ஆண்டு அளுத்­கமை, பேரு­வளை நகரில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரத்­தினை நோக்­கலாம். இந்த சம்­ப­வத்­திற்கு பின்­பு­ல­மாக கடந்த ஆட்­சி­யா…

  19. தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல் “கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக - ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில், ஈழத் தமிழரின் அரசியல் என்ன, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது இங்குள்ளவர்களாலும், வெளியில் உள்ளவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. விடுதலைப் புலிகளின் காலத்தில், ஓர் அரசியல் பின்பற்றப்பட்டது…

  20. காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல் வாழ்க்கைத் தெரிவுகள் எதையும் வழங்காதபோது, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என, மக்கள் உணர்கிறார்கள். ஒருபுறம் செல்வம், சிலரது கைகளில் மலைபோல் குவிகையில், இருந்த கொஞ்சமும் மெதுமெதுவாகக் களவாடப்படுவதை அவர்கள் உணர்கையில், அவர்களுக்குப் போக்கிடம் எதுவும் இல்லை. அமைதியாக இருத்தல், பொறுமை காத்தல் போன்ற போதிக்கப்பட்ட அஹிம்சை வழிமுறைகள் எதுவுமே, பயனளிக்காது என்பதை உணர்ந்த பின்னர், மக்களால் என்ன செய்ய முடியும்? இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில், அவர்கள் செய்யக் கூடியது என்ன? தனது எதிர்காலம் மட்டுமன்றி, தனது குடும்பத்தினதும் தனது பிள்…

  21. ஈழமும் கலைஞரும்! ஷோபாசக்தி ‘`அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ - இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன். ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தார். உணர்வு நரம்புகளை மீட்டிவிடும் க…

  22. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலும் பார்த்தசாரதியின் பங்களிப்பும் இலங்கை அரசியலிலும் இனங்களுக்கிடையிலான உறவுகளிலும் ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவாத வன்செயல்களுக்கு ( கறுப்பு ஜூலை) பிறகு 35 வருடங்கள் கடந்தோடிவிட்டதை முன்னிட்டு கடந்த மாதம் கட்டுரைகளை எழுதிய அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்களில் அனேகமாக சகலருமே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாடு பூராவும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த மிலேச்சத்தனமான வன்செயல்களே இலங்கையின் இனமுரண்பாட்டுப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதையும் இறுதியில் 1987 ஜூலை 29 இந்திய --இலங்கை சமாதான உடன்படி…

  23. இன்றைய அரசாங்கத்தின் கடப்பாடு வ. திருநாவுக்கரசு [முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்] “விஜ­ய­க­லாவின் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­குதல்” என்ற தொடரில் கலா­நிதி தயான் ஜய­தி­லக்க 2018.07.05 ஆம் திகதி எழு­திய கட்­டுரை மீதான பார்வை “விஜ­ய­க­லாவின் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­குதல், வட­ப­குதி நாஸிச வாதம், தமிழ் ஹிட்லர் மற்றும் வடக்­கு –­தெற்கு அர­சியல் என்ற தலைப்பில் கலா­நிதி தயான் ஜய­தி­லக்க மேற்­கு­றித்த கட்­டு­ரையை பலர் படித்­தி­ருப்­பார்கள். சில சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை (LTTE) வெவ்­வேறு வகை­யாக இனங்­கண்­டுள்­ளனர் என்று அவர் கூறி­யுள்ளார். அதா­வது, முத­லா­வ­தாக லண்டன் (“Economist…

  24. நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள் முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒன்றரை மாதங்களுக்குள், வடக்கு கடற்கரையோரங்களில் தொழில் உபகரணங்கள், படகுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டி அழிக்கப்பட்ட, மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும…

  25. ‘தூறலும் நின்று போச்சு’ தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்...” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன். “என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டில் காணப்படுகின்ற …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.