அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஈரான் மீது போர் தொடுக்குமா அமெரிக்கா? அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று அமெரிக்கா ஈரான் மீது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும் எனத் தெரிவித்தது. அவுஸ்திரேலியா ஐந்து கண்கள் என்னும் உளவுத்துறை அமைப்பின் ஓர் உறுப்பு நாடாகும். அதில் உள்ள மற்ற நாடுகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, கனடா ஆகியவையாகும். அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதல் செய்தால் தாக்குதல் செய்யப்படவேண்டிய இடங்களை இனம்காணும் பணியில் அவுஸ்திரேலியா முக்கிய பங்கு வகிக்கும். அந்த அடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு ஈரான் தொடர்பான படை நடவடிக்கைகள் பற்றி முன் கூட்டியே தகவல் அறியும் வாய்ப்பு அதிகம். அதை அந்த அவுஸ்திரேலிய ஊடகம் வேவு பார்த்து அறிந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு தாக…
-
- 0 replies
- 933 views
-
-
பானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன்! நம்ம மூதாதையர் ஒரு பழமொழி சொல்வர், ”பானைக் கரியைப் பார்த்து சட்டி கறுப்பு எண்டதாம்” என்று. எங்கடை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் இந்த வார கேள்வி பதிலைப் பார்த்ததும் எனக்கு சட்டென்று இந்தப் பழமொழிதான் மூளையில் பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா, ”மாட்டேன், மாட்டேன்”’ என்று கதற, சம்பந்தர் ஐயாவும் சுமந்திரன் ஐயாவும் விடாப்பிடியாய் குறை இழுவையாய் இழுத்துக்கொண்டுவந்து ”ஒபாமாவோடும் விளாடிமிர் புடினோடும் சரிநிகர் சமானமாகக் ஒரே மேசையில் அமரும் தகுதி பெற்றவர் இவரே!” எனத் தமிழ்மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டினர். பல தியாகங்களைச் செய்த மாவை ஐயா, இதிலும் தன்னிலும் மூத்த அரசியல்வா…
-
- 1 reply
- 689 views
-
-
தவறுகளும் தவறான புரிதல்களும் தாம் ஆட்சியில் இருந்ததால், அந்தக் காலத்தில் நடந்த தவறுகள் தமக்குத் தெரியாமல் போய் விட்டன என்ற சப்பை நியாயத்தைக் கூறி தப்பிக்க முனைந்திருக்கிறார் பசில் ராஜ பக்ஷ. அதிகாரம் உள்ள இடத்துக்கு சாதாரண மக்களின் குறைகள் சென்றடைவது அரிது தான். ஆனாலும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் தவறுகள் நடந்த போது அதனைச் சுட்டிக்காட்டியவர்களும், வெளிப்படுத்தியவர்களும், அச்சுறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர். காணாமல் போகவும் செய்யப்பட்டனர் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த தேர்தலுக்குத் தயாராகி விட்டோம் என்று கேகாலையில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பசில் ராஜப…
-
- 0 replies
- 603 views
-
-
தப்பாகிப் போகின்ற – ரணிலின் ராஜதந்திரம்!! நான் நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்திலே இருந்தேன். நான் 2010ஆம் ஆண்டிலும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தேன். 2015ஆம் ஆண்டில் இன்றைய அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அரசதலைவர் சந்திரிகா குமாரணதுங்க ஆகியோருடனும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்துள்ளேன். அன்றைய நிலமையில் எம்மீது யாழ்ப்பாண மக்கள் மத்தியில் சந்தேக உணர்வு இருந்ததை நான் உணர்ந்திருந்தேன். ஆனால் இன்று அவற்றுக்கெல்லாம் மாறானதொரு அரசியல் பார்வை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவுகிறது’’…
-
- 0 replies
- 655 views
-
-
குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? - நிலாந்தன் 05/08/2018 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அராலி அம்மன் கோவிலடியில் நடந்த சந்திப்பில் பெருந்தொகையான குடும்பத்தலைவிகள் கூடியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் புலமைப் பரிசில் பரீட்ற்சைக்குத் தோற்றும் மாணவர்களால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை என்று அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.அப்பகுதி பிதேச சபை தவிசாளர் தரும் தகவலின் ப…
-
- 0 replies
- 408 views
-
-
டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு? யதீந்திரா சில தினங்களாக இப்படியொரு விடயம் நடந்துவிடாத என்னும் அவாவுடன் சிலர், சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் சிலர் பேசியிருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நன்பர் ஒருவர் ஊடங்களின்; ஆதரவும் இதற்குத் தேவை என்றார். அதே வேளை மேற்படி மூன்று கட்சிகளும் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவதில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சொந்தத் திர்மானங்களில் இயங்கும் நிலைமை உருவாக்கியபோதுதான் அதற்குள் முரண்ப…
-
- 0 replies
- 782 views
-
-
மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன? இவ்வாரம் இலங்கை அரசியலில் அதிகமாக மக்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட பத்திரிகை செய்திகளில் மிக கவனத்தை ஈர்த்த செய்தியாக பேசப்படுவது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் உரையாடியதாக கூறப்படுகின்ற விடயம் .மற்றொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆற்றிய உரை. இன்னொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உருவாகலாம் என்ற கருத்து. பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை வடக்கு மற்றும் …
-
- 0 replies
- 478 views
-
-
வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அ…
-
- 0 replies
- 323 views
-
-
கூட்டமைப்புடன் அரசாங்கம் இருதரப்பு பேச்சு நடத்துமா? புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் பாரிய சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது. அதாவது புதிய அரசியலமைப்பு வருமா? அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படுமா? தேர்தல் முறைகள் மாற்றப்படுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா போன்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுகின்றன. காரணம் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக கூறியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது…
-
- 0 replies
- 382 views
-
-
தொடரும் அக்கறையற்ற போக்கு பி. மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான கடப்பாட்டை ஏற்றுள்ள அரசாங்கம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்று பரவலாகக் குறை கூறப்படுகின்றது. சாதாரண குறை கூறுதலாக இல்லாமல், அழுத்தமான குற்றச்சாட்டாகவே அந்த அதிருப்தி முன்வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. பொறுப்புக்கூறும் விடயத்தில் முக்கியமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்பாட்டை நிறைவேற்றுகின்ற பொறுப்பை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது என்பது முக்கியமானது. இந்தச் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கு அரசாங்கத்திற்கு…
-
- 0 replies
- 460 views
-
-
யாழ்.குடாநாட்டு மக்களுக்கு- விடிவு காலம் பிறக்காதா? யாழ் குடாநாட்டில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகப் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளதோடு அவர்களின் இருப்பையும் கேள்விக்குறியாக மாற்றிவிட்டன. வாள்வெட்டுக் குழுக்கள் எவருக்கும் அஞ்சாது சுதந்திரமாக நடமாடித் தமது அடாவடித்தனங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறித்து குடாநாட்டு மக்கள் மத்தியில் பல்வே…
-
- 0 replies
- 298 views
-
-
ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்! வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், இந்திய விடுதலைப் போர், ஜெர்மனியில் ஹிட்லரால் கையாளப்பட்ட யூத அழிப்பு என இவை அனைத்துமே வேறு எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களின் எதிரிவினைகள் தான். சமகாலத்தில் சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் நிகழ்ந்த ரெட்டை கோபுர இடிப்பு சம்பவத்தைச் சொல்லலாம். சி.ஐ.ஏ தன் சுயநலத்திற்காக பின்லாடனையும் அவர் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வளர்த்தெடுக்கும் போது, ஒருநாள் அமெரிக்காவிற்கும் அவரால் ஆபத்து வ…
-
- 0 replies
- 676 views
-
-
சர்ச்சையில் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், “சங்கக்கார நல்ல மனிதர்; திறமையான கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது; நானே, அரசியலுக்கு வந்து, ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அரசியலைக் கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்திருந்தார். இவ்வாறு கூறியிருந்தாலும், அவர் இப்போதும் கூட, அரசியலைச் சரிவரக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. …
-
- 0 replies
- 463 views
-
-
பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல் பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார். நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்ப…
-
- 10 replies
- 1.8k views
-
-
கோமாளிகளா அல்லது கொலைகாரர்களா – எங்களது தெரிவு எது? வியாத் மாவத்தை’’ என்பது ஒரு வழியையோ, பாதையையோ குறிப்பிடுவது அல்ல. மகிந்த சிந்தனை என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதலே அவ்விதம் குறிப்பி டப்படுகிறது என கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில் மகிந்த ராஜபக்ச நிகழ்வொன்றில் வைத்துக் குறிப்பிட்டிருந்தார். இரத்தினபுரியிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதி, பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்ட்) ஒருவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அது, உணர்ச்சி மிக…
-
- 0 replies
- 511 views
-
-
பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம் ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை, நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால், தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால், தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தின் அளவுகோலாக முடியுமா என்ற கேள்வி, நெடுங்காலமாக வினவப்பட்டு வந்துள்ளது. புகழ்பெற்றவர்கள் தங்கள் புகழை, அரசியல் முதலீடாக்குகின்றார்கள். அது அவர்களுக்கு, அரசியலில் வலிய கருவியாயுள்ளது. இதேவேளை, பல மூன்றாமுலக நாடுகளில், ஜனநாயகத்தின் தீர்மானகரமான சக்தியாக இராணுவம் விளங்குகிறது…
-
- 0 replies
- 592 views
-
-
சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்! அவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் கதையாக சலுகைகளைக் காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து சலுகைகளைக் கையேந்திப் பெற்றிருக்கிறார் என்ற சங்கதி அம்பலமாகியுள்ளது! மாகாண முதலமைச்சர் பதவியில் இருக்கும் எவரும் விமானத்தில் பயணம் செய்ய பணம் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர் சாட்சாத் விக்னேஸ்வரன்.. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்ப…
-
- 0 replies
- 517 views
-
-
எலும்புக்கூடுகளும் – தமிழர் தாயகமும்!! இப்போதெல்லாம் வடக்கு – கிழக்கில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் தனியார் தரப்பினராலும், கொள்ளைக்காரர்களாலும், ஏன் இராணுவத்தினராலும்கூட மேற்கொள்ளப்படு கின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதன் மூலமான கைதுகள் , புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உபகரண பறிமுதல் உத்தரவுகள் என எல்லாமே பரபரப்புச் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக, இப்போது வடக்கு…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும். 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும். மூன்று நாள்களுக்கு முன்ன…
-
- 0 replies
- 882 views
-
-
ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்? புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சீன இராணுவத்தின் 91ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் விக்ரமசிங்கவோ அல்லது மூத்த அமைச்சர்களோ …
-
- 3 replies
- 548 views
-
-
மாற்றுத் தலைமையும் முதலமைச்சர் பதவியும்…. பி.மாணிக்கவாசகம் வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது மில்லியன் டொலர் பெறுமதி மிக்க கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்த்தரப்பு அரசியல் ஓர் அரசியல் சுழலுக்குள் சிக்கி ஒரு தள்ளாட்டமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். உள்ளுராட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நடைபெற வேண்டிய மாகாணசபைத் தேர்தல், இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் திணைக்களம் தயாராக இருக்கின்ற போதிலும், அரச பங்காளிக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில்…
-
- 0 replies
- 512 views
-
-
இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது! குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்? வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு முடங்கிப் போய்க் கிடக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். அமைச்சரவை கூடவில்லை. அமைச்சரவையைத் தனது ஒப்புதலின்றி கூட்டக் கூடாது என முதலமைச்சருக்கு ஆளுநர் கூரே எழுத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்குக் கனதியான காரணம் இருக்கிறது. முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கை 5 யை மேவக் கூடாது என்பது சட்டம். ஆறுஅமைச்சர்களைக் கொண்ட…
-
- 0 replies
- 554 views
-
-
வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் -க. அகரன் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும். எனினும் வடக்கு, கிழக்கு என்பதைத் தமிழர்களின் தாயகமாகச் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நிலத்தைக் கொண்டமைந்த ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற எண்ணப்பாடுகள், ப…
-
- 0 replies
- 322 views
-
-
நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது? வரலாறு, நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா. வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய ஆளுமையும் அதன் கண்களில் இருந்து தப்பிவிட முடியாது. வெறுமனே தியாகம் மட்டும் ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாகாது. தியாகம் உயர் மதிப்புக்குரியது. ஆனால், தியாகிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அண்மையில், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நெல்சன் மண்டேலாவின் 100ஆவது பிறந்தநாள், உலகக் கவனம் பெற்றது. இதன்போது, மண்டேலாவின் அறவழ…
-
- 0 replies
- 413 views
-